< 1 பேதுரு 3 >

1 அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
ហេ យោឞិតះ, យូយមបិ និជស្វាមិនាំ វឝ្យា ភវត តថា សតិ យទិ កេចិទ៑ វាក្យេ វិឝ្វាសិនោ ន សន្តិ តហ៌ិ
2 போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
តេ វិនាវាក្យំ យោឞិតាម៑ អាចារេណាត៌្ហតស្តេឞាំ ប្រត្យក្ឞេណ យុឞ្មាកំ សភយសតីត្វាចារេណាក្រឞ្ដុំ ឝក្ឞ្យន្តេ។
3 முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல்,
អបរំ កេឝរចនយា ស្វណ៌ាលង្ការធារណោន បរិច្ឆទបរិធានេន វា យុឞ្មាកំ វាហ្យភូឞា ន ភវតុ,
4 அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.
កិន្ត្វីឝ្វរស្យ សាក្ឞាទ៑ ពហុមូល្យក្ឞមាឝាន្តិភាវាក្ឞយរត្នេន យុក្តោ គុប្ត អាន្តរិកមានវ ឯវ។
5 இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
យតះ បូវ៌្វកាលេ យាះ បវិត្រស្ត្រិយ ឦឝ្វរេ ប្រត្យាឝាមកុវ៌្វន៑ តា អបិ តាទ្ឫឝីមេវ ភូឞាំ ធារយន្ត្យោ និជស្វាមិនាំ វឝ្យា អភវន៑។
6 அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
តថៃវ សារា ឥព្រាហីមោ វឝ្យា សតី តំ បតិមាខ្យាតវតី យូយញ្ច យទិ សទាចារិណ្យោ ភវថ វ្យាកុលតយា ច ភីតា ន ភវថ តហ៌ិ តស្យាះ កន្យា អាធ្វេ។
7 அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.
ហេ បុរុឞាះ, យូយំ ជ្ញានតោ ទុព៌្ពលតរភាជនៃរិវ យោឞិទ្ភិះ សហវាសំ កុរុត, ឯកស្យ ជីវនវរស្យ សហភាគិនីភ្យតាភ្យះ សមាទរំ វិតរត ច ន ចេទ៑ យុឞ្មាកំ ប្រាត៌្ហនានាំ ពាធា ជនិឞ្យតេ។
8 மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து,
វិឝេឞតោ យូយំ សវ៌្វ ឯកមនសះ បរទុះខៃ រ្ទុះខិតា ភ្រាត្ឫប្រមិណះ ក្ឫបាវន្តះ ប្រីតិភាវាឝ្ច ភវត។
9 தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.
អនិឞ្ដស្យ បរិឝោធេនានិឞ្ដំ និន្ទាយា វា បរិឝោធេន និន្ទាំ ន កុវ៌្វន្ត អាឝិឞំ ទត្ត យតោ យូយម៑ អាឝិរធិការិណោ ភវិតុមាហូតា ឥតិ ជានីថ។
10 ௧0 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
អបរញ្ច, ជីវនេ ប្រីយមាណោ យះ សុទិនានិ ទិទ្ឫក្ឞតេ។ បាបាត៑ ជិហ្វាំ ម្ឫឞាវាក្យាត៑ ស្វាធរៅ ស និវត៌្តយេត៑។
11 ௧௧ தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும்.
ស ត្យជេទ៑ ទុឞ្ដតាមាគ៌ំ សត្ក្រិយាញ្ច សមាចរេត៑។ ម្ឫគយាណឝ្ច ឝាន្តិំ ស និត្យមេវានុធាវតុ។
12 ௧௨ கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”
លោចនេ បរមេឝស្យោន្មីលិតេ ធាម៌្មិកាន៑ ប្រតិ។ ប្រាត៌្ហនាយាះ ក្ឫតេ តេឞាះ តច្ឆ្រោត្រេ សុគមេ សទា។ ក្រោធាស្យញ្ច បរេឝស្យ កទាចារិឞុ វត៌្តតេ។
13 ௧௩ நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
អបរំ យទិ យូយម៑ ឧត្តមស្យានុគាមិនោ ភវថ តហ៌ិ កោ យុឞ្មាន៑ ហិំសិឞ្យតេ?
14 ௧௪ நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
យទិ ច ធម៌្មាត៌្ហំ ក្លិឝ្យធ្វំ តហ៌ិ ធន្យា ភវិឞ្យថ។ តេឞាម៑ អាឝង្កយា យូយំ ន ពិភីត ន វិង្ក្ត វា។
15 ௧௫ கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.
មនោភិះ កិន្តុ មន្យធ្វំ បវិត្រំ ប្រភុមីឝ្វរំ។ អបរញ្ច យុឞ្មាកម៑ អាន្តរិកប្រត្យាឝាយាស្តត្ត្វំ យះ កឝ្ចិត៑ ប្ឫច្ឆតិ តស្មៃ ឝាន្តិភីតិភ្យាម៑ ឧត្តរំ ទាតុំ សទា សុសជ្ជា ភវត។
16 ௧௬ கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள்.
យេ ច ខ្រីឞ្ដធម៌្មេ យុឞ្មាកំ សទាចារំ ទូឞយន្តិ តេ ទុឞ្កម៌្មការិណាមិវ យុឞ្មាកម៑ អបវាទេន យត៑ លជ្ជិតា ភវេយុស្តទត៌្ហំ យុឞ្មាកម៑ ឧត្តមះ សំវេទោ ភវតុ។
17 ௧௭ தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும்.
ឦឝ្វរស្យាភិមតាទ៑ យទិ យុឞ្មាភិះ ក្លេឝះ សោឍវ្យស្តហ៌ិ សទាចារិភិះ ក្លេឝសហនំ វរំ ន ច កទាចារិភិះ។
18 ௧௮ ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
យស្មាទ៑ ឦឝ្វរស្យ សន្និធិម៑ អស្មាន៑ អានេតុម៑ អធាម៌្មិកាណាំ វិនិមយេន ធាម៌្មិកះ ខ្រីឞ្ដោ ៜប្យេកក្ឫត្វះ បាបានាំ ទណ្ឌំ ភុក្តវាន៑, ស ច ឝរីរសម្ពន្ធេ មារិតះ កិន្ត្វាត្មនះ សម្ពន្ធេ បុន រ្ជីវិតោ ៜភវត៑។
19 ௧௯ அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார்.
តត្សម្ពន្ធេ ច ស យាត្រាំ វិធាយ ការាពទ្ធានាម៑ អាត្មនាំ សមីបេ វាក្យំ ឃោឞិតវាន៑។
20 ௨0 அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள்.
បុរា នោហស្យ សមយេ យាវត៑ បោតោ និរមីយត តាវទ៑ ឦឝ្វរស្យ ទីគ៌្ហសហិឞ្ណុតា យទា វ្យលម្ពត តទា តេៜនាជ្ញាគ្រាហិណោៜភវន៑។ តេន បោតោនាល្បេៜរ្ថាទ៑ អឞ្ដាវេវ ប្រាណិនស្តោយម៑ ឧត្តីណ៌ាះ។
21 ௨௧ அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
តន្និទឝ៌នញ្ចាវគាហនំ (អត៌្ហតះ ឝារីរិកមលិនតាយា យស្ត្យាគះ ស នហិ កិន្ត្វីឝ្វរាយោត្តមសំវេទស្យ យា ប្រតជ្ញា សៃវ) យីឝុខ្រីឞ្ដស្យ បុនរុត្ថានេនេទានីម៑ អស្មាន៑ ឧត្តារយតិ,
22 ௨௨ அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
យតះ ស ស្វគ៌ំ គត្វេឝ្វរស្យ ទក្ឞិណេ វិទ្យតេ ស្វគ៌ីយទូតាះ ឝាសកា ពលានិ ច តស្យ វឝីភូតា អភវន៑។

< 1 பேதுரு 3 >

A Dove is Sent Forth from the Ark
A Dove is Sent Forth from the Ark