< 1 பேதுரு 3 >

1 அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
ⲁ̅ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ⲡⲉ ⲛⲓⲕⲉϩⲓ⳿ⲟⲙⲓ ⲉⲩϭⲛⲟ ⳿ⲛϫⲱⲟⲩ ⳿ⲛⲛⲟⲩϩⲁⲓ ⲓⲥϫⲉ ⲟⲩⲟⲛ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⳿ⲛⲥⲉϯⲙⲁϯ ⲁⲛ ⲛⲉⲙ ⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲙⲡⲓϫⲓⲛⲙⲟϣⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓϩⲓ⳿ⲟⲙⲓ ⳿ⲛⲧⲟⲩϫⲉⲙϩⲏⲟⲩ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲁϭⲛⲉ ⲥⲁϫⲓ.
2 போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
ⲃ̅ⲉⲩⲛⲁⲩ ⳿ⲉⲡⲉⲧⲉⲛϫⲓⲛⲙⲟϣⲓ ⲉⲧⲧⲟⲩⲃⲏⲟⲩⲧ ϧⲉⲛ ⲟⲩϩⲟϯ.
3 முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல்,
ⲅ̅ϧⲉⲛ ⲛⲁⲓ ⲙⲁⲣⲉϥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲥⲟⲗⲥⲉⲗ ⲁⲛ ⲉⲧⲥⲁⲃⲟⲗ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲉⲃ ⳿ⲛϩⲱⲗⲕ ⳿ⲛⲧⲉ ⲛⲓϥⲱⲓ ⲛⲉⲙ ⲛⲓⲓⲉⲃ ⳿ⲛⲛⲟⲩⲃ ⲓⲉ ϧⲉⲛ ⲟⲩϩⲉⲃⲥⲱ ⳿ⲛϯϩⲓⲱⲧⲟⲩ ⲉⲥⲥⲉⲗⲥⲱⲗ.
4 அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.
ⲇ̅ⲁⲗⲗⲁ ⲡⲓⲣⲱⲙⲓ ⲉⲧϩⲏⲡ ϧⲉⲛ ⲡⲓϩⲏⲧ ϧⲉⲛ ⲡⲓⲁⲧⲧⲁⲕⲟ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲧϩⲟⲩⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲣⲉⲙⲣⲁⲩϣ ⲫⲏⲉⲧⲉ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ ⳿ⲛⲟⲩⲑⲟ ⳿ⲛⲣⲏϯ.
5 இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
ⲉ̅ⲡⲁⲓⲣⲏϯ ⲅⲁⲣ ⲡⲉ ⳿ⲛⲟⲩⲥⲏⲟⲩ ⳿ⲛⲛⲓϩⲓ⳿ⲟⲙⲓ ⲉⲑⲟⲩⲁⲃ ⲛⲁⲩⲉⲣϩⲉⲗⲡⲓⲥ ⳿ⲉⲫϯ ⲡⲉ ⲛⲁⲩⲥⲟⲗⲥⲉⲗ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲉⲩϭⲛⲟ ⳿ⲛϫⲱⲟⲩ ⳿ⲛⲛⲟⲩϩⲁⲓ.
6 அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
ⲋ̅⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲅⲁⲣ ⳿ⲛⲥⲁⲣⲣⲁ ⲉⲥⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲁ ⲁⲃⲣⲁⲁⲙ ⲉⲥⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲁ⳪ ⲑⲏ ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛⲉⲣϣⲉⲣⲓ ⲛⲁⲥ ⲉⲣⲉⲧⲉⲛ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲡⲉⲑⲛⲁⲛⲉϥ ⲟⲩⲟϩ ⲉⲣⲉⲧⲉⲛⲉⲣϩⲟϯ ⲁⲛ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲛ⳿ϩⲗⲓ ⳿ⲛϩⲟϯ.
7 அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.
ⲍ̅ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ⲛⲓⲕⲉϩⲱⲟⲩⲧ ⲉⲣⲉⲧⲉⲛϣⲟⲡ ⲛⲉⲙⲱⲟⲩ ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲟⲩ⳿ⲥⲕⲉⲩⲟⲥ ⳿ⲛⲁⲥⲑⲉⲛⲏ ⲥ ⲡⲉ ⲛⲓϩⲓ⳿ⲟⲙⲓ ⲉⲣⲉⲧⲉⲛϯⲧⲁⲓⲟ ⲛⲱⲟⲩ ϩⲱⲥ ⲉⲩⲟⲓ ⳿ⲛ⳿ϣⲫⲏⲣ ⳿ⲛ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ⳿ⲉⲡⲓ⳿ϩⲙⲟⲧ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲱⲛϧ ⳿ⲛⲟⲩⲑⲟ ⳿ⲛⲣⲏϯ ϩⲓⲛⲁ ϫⲉ ⳿ⲛⲛⲉⲧⲉⲛⲧⲁϩⲛⲟ ϧⲉⲛ ⲛⲉⲧⲉⲛ⳿ⲡⲣⲟⲥⲉⲩⲭⲏ.
8 மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து,
ⲏ̅⳿ⲡϫⲱⲕ ⲇⲉ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲓ ⳿ⲛⲟⲩⲙⲉⲩⲓ ⳿ⲛⲟⲩⲱⲧ ⲧⲏⲣⲟⲩ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲓ ⳿ⲛ⳿ϣⲫⲏⲣ ⳿ⲛϭⲓϧⲓⲥⲓ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲓ ⳿ⲙⲙⲁⲓⲥⲟⲛ ⳿ⲛϣⲁⲛ⳿ⲑⲙⲁϧⲧ ⲉⲣⲉⲧⲉⲛⲑⲉⲃⲓⲏ ⲟⲩⲧ.
9 தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.
ⲑ̅⳿ⲛⲧⲉⲧⲉⲛϯ ⳿ⲛⲟⲩⲡⲉⲧϩⲱⲟⲩ ⲁⲛ ϧⲁ ⲟⲩⲡⲉⲧϩⲱⲟⲩ ⲟⲩⲇⲉ ⲟⲩϩⲱⲟⲩϣ ϧⲁ ⲟⲩϩⲱⲟⲩϣ ⲡⲉⲧⲟⲩⲃⲏϥ ⲇⲉ ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲥⲙⲟⲩ ϫⲉ ⲉⲧⲁⲩⲑⲁϩⲉⲙ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲡⲁⲓϩⲱⲃ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲕⲗⲏ ⲣⲟⲛⲟⲙⲓⲛ ⳿ⲙⲡⲓ⳿ⲥⲙⲟⲩ.
10 ௧0 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
ⲓ̅ⲫⲏ ⲅⲁⲣ ⲉⲑⲟⲩⲱϣ ⳿ⲉⲙⲉⲛⲣⲉ ⲟⲩⲱⲛϧ ⲟⲩⲟϩ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉϩⲁⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲉⲛⲁⲛⲉⲩ ⲙⲁⲣⲉϥⲧⲁⲗϭ ⲟ ⳿ⲙⲡⲉϥⲗⲁⲥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⲡⲓⲡⲉⲧϩⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲛⲉϥ⳿ⲥⲫⲟⲧⲟⲩ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙⲥⲁϫⲓ ⳿ⲛⲟⲩ⳿ⲭⲣⲟϥ.
11 ௧௧ தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும்.
ⲓ̅ⲁ̅ⲙⲁⲣⲉϥⲣⲓⲕⲓ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲡⲓⲡⲉⲧϩⲱⲟⲩ ⲙⲁⲣⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲁⲅⲁⲑⲟⲛ ⲙⲁⲣⲉϥⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲟⲩϩⲓⲣⲏⲛⲏ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥϭⲟϫⲓ ⳿ⲛⲥⲱⲥ.
12 ௧௨ கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”
ⲓ̅ⲃ̅ϫⲉ ⲛⲉⲛⲃⲁⲗ ⳿ⲙⲠ⳪ ⲥⲉϫⲟⲩϣⲧ ⳿ⲉϫⲉⲛ ⲛⲓ⳿ⲑⲙⲏⲓ ⲟⲩⲟϩ ⲛⲉϥⲙⲁϣϫ ⲥⲉⲣⲁⲕⲓ ⳿ⲛⲥⲁ ⲡⲟⲩⲧⲱⲃϩ ⳿ⲡϩⲟ ⲇⲉ ⲙⲠ⳪ ⳿ⲉϫⲉⲛ ⲛⲏⲉⲧ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲡⲉⲧϩⲱⲟⲩ.
13 ௧௩ நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
ⲓ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲛⲓⲙ ⲉⲑⲛⲁ⳿ϣϯ⳿ⲙⲕⲁϩ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉϣⲱⲡ ⲁⲣⲉⲧⲉⲛϣⲁⲛⲉⲣⲣⲉϥⲭⲟϩ ⳿ⲉⲡⲓⲡⲉⲑⲛⲁⲛⲉϥ.
14 ௧௪ நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
ⲓ̅ⲇ̅ⲁⲗⲗⲁ ⲓⲥϫⲉ ⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲡⲕⲉϭⲓ⳿ⲙⲕⲁϩ ⲉⲑⲃⲉ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲧⲟⲩϩⲟϯ ⲇⲉ ⳿ⲙⲡⲉⲣⲉⲣϩⲟϯ ϧⲁⲧⲉⲥϩⲏ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲉⲣ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ.
15 ௧௫ கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.
ⲓ̅ⲉ̅Ⲡ⳪ ⲇⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲙⲁⲧⲟⲩⲃⲟϥ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲛⲉⲧⲉⲛϩⲏⲧ ⲉⲣⲉⲧⲉⲛⲥⲟⲃϯ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲛⲥⲏ ⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ⲉⲩⲁⲡⲟⲗⲟⲅⲓⲁ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲛⲁⲉⲣⲉⲧⲓⲛ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲛⲟⲩⲥⲁϫⲓ ⲉⲑⲃⲉ ϯϩⲉⲗⲡⲓⲥ ⲉⲧϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
16 ௧௬ கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள்.
ⲓ̅ⲋ̅ⲁⲗⲗⲁ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲣⲉⲙⲣⲁⲩϣ ⲛⲉⲙ ⲟⲩϩⲟϯ ⳿ⲉⲟⲩⲟⲛ ⳿ⲛⲧⲱⲧⲉⲛ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲟⲩⲥⲩⲛⲏ ⲇⲉⲥⲓⲥ ⳿ⲉⲛⲁⲛⲉⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲟⲩϭⲓϣⲓⲡⲓ ⳿ⲛϫⲉ ⲛⲏⲉⲧⲥⲁϫⲓ ϧⲁⲣⲱⲧⲉⲛ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛϩⲁⲛⲥⲁⲙⲡⲉⲧϩⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲉⲧϭⲓⲁⲟⲩⲱ ⳿ⲙⲡⲉⲧⲉⲛϫⲓⲛⲙⲟϣⲓ ⲉⲑⲛⲁⲛⲉϥ ϧⲉⲛ Ⲡⲭ̅ⲥ̅.
17 ௧௭ தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும்.
ⲓ̅ⲍ̅ⲛⲁⲛⲉⲥ ⲅⲁⲣ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲡⲉⲑⲛⲁⲛⲉϥ ⲓⲥϫⲉ ⳿ϥⲟⲩⲱϣ ⳿ⲛϫⲉ ⲡⲓⲑⲉⲗⲏⲙⲁ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⳿ⲛⲧⲉⲧⲉⲛϭⲓ⳿ⲙⲕⲁϩ ⳿ⲉϩⲟⲧⲉ ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲡⲉⲧϩⲱⲟⲩ.
18 ௧௮ ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
ⲓ̅ⲏ̅ϫⲉ ⲟⲩⲏⲓ ϩⲱϥ Ⲡⲭ̅ⲥ̅ ⲁϥⲙⲟⲩ ⳿ⲛⲟⲩⲥⲟⲡ ⲉⲑⲃⲉ ⳿ⲫⲛⲟⲃⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱⲛ ⲡⲓ⳿ⲑⲙⲏⲓ ⲇⲉ ⳿ⲉϫⲉⲛ ⲛⲓⲟϫⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥⲉⲛⲧⲉⲛ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲙⲫϯ ⳿ⲉⲁϥⲙⲟⲩ ⲙⲉⲛ ϧⲉⲛ ⳿ⲧⲥⲁⲣⲝ ⳿ϥⲟⲛϧ ⲇⲉ ϧⲉⲛ ⲡⲓⲡ͞ⲛⲁ̅.
19 ௧௯ அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார்.
ⲓ̅ⲑ̅ϧⲉⲛ ⲫⲁⲓ ⲛⲓⲕⲉⲡ͞ⲛⲁ̅ ⲉⲧϧⲉⲛ ⲡⲓ⳿ϣⲧⲉⲕⲟ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⲁϥϩⲓϣⲉⲛⲛⲟⲩϥⲓ ⲛⲱⲟⲩ.
20 ௨0 அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள்.
ⲕ̅ⲛⲏⲉⲧⲁⲩⲉⲣⲁⲧⲑⲱⲧ ⳿ⲛϩⲏⲧ ⳿ⲛⲟⲩⲥⲏⲟⲩ ϩⲟⲧⲉ ⲉⲧⲁⲥϭⲓϩⲟ ⳿ⲛϫⲉ ϯⲙⲉⲧⲣⲉϥⲱⲟⲩ ⳿ⲛϩⲏⲧ ⳿ⲛⲧⲉ ⲫϯ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲛⲱ⳿ⲉ ⲉⲧⲁϥⲑⲁⲙⲓⲟ ⳿ⲛⲟⲩⲕⲩⲃⲱⲧⲟⲥ ⲑⲏ ⲉⲧⲁ ϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⲛⲟϩⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧⲥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲙⲱⲟⲩ ⲉⲧⲉ ⲏ̅ ⳿ⲙⲯⲩⲭⲏ ⲛⲉ.
21 ௨௧ அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
ⲕ̅ⲁ̅ⲡⲁⲓⲣⲏϯ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲱⲧⲉⲛ ϯⲛⲟⲩ ⳿ϥⲛⲁⲛⲁϩⲉⲙ ⲑⲏⲛⲟⲩ ϧⲉⲛ ⲟⲩⲧⲩⲡⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲱⲙⲥ ⳿ⲛⲟⲩⲭⲱ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⲁⲛ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲑⲱⲗⲉⲃ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲥⲁⲣⲝ ⲁⲗⲗⲁ ϧⲉⲛ ⲟⲩⲥⲩⲛⲏⲇⲉⲥⲓⲥ ⳿ⲉⲛⲁⲛⲉⲥ ⳿ⲉ⳿ⲡϫⲓⲛⲧⲱⲃϩ ⳿ⲙⲫϯ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⳿ⲡⲧⲱⲛϥ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅.
22 ௨௨ அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
ⲕ̅ⲃ̅ⲫⲏⲉⲧⲭⲏ ⲥⲁⲟⲩ⳿ⲓⲛⲁⲙ ⳿ⲙⲫϯ ⳿ⲉⲁϥϣⲉ ⲛⲁϥ ⳿ⲉ⳿ⲧⲫⲉ ⲁⲩϭⲛⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ϩⲁⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲛⲉⲙ ϩⲁⲛⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲛⲉⲙ ϩⲁⲛϫⲟⲙ

< 1 பேதுரு 3 >