< 1 பேதுரு 2 >

1 இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
ଆମ୍ୱେଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ବନ୍‌ଡ୍ରାବନ୍‌, କନଣ୍ଡାୟନ୍‌, ସନଙ୍ଗତ୍ତାନ୍‍, ଆନ୍ନାମରନ୍‌ ଅନବ୍‌ଡୋସାନ୍‌, ବନର୍‌ଡୋଙନ୍‌, ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ
2 எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
ରଙ୍‍କୋଡ୍‍ ରେସାସିଜନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅମ୍ମେନାବା, ଆରି ଡିତାନ୍‌ ପୁରାଡ଼ାଡାଗୋ ଆଡ଼ୁବ୍‍ ଗାବା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ସୋଡ଼ାତବେନ୍‌ ଆରି ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ଲେ ଏରପ୍ତିତେ ।
3 நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
ଆରି ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌, “ପ୍ରବୁନ୍‌ ଏଙ୍ଗାଲେ ସାୟୁମ୍‌ଲଙ୍‌ତନ୍‌, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ମାୟ୍‌ମାୟ୍‌ଲେ ଗିୟ୍‌ବା ।”
4 மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
ପ୍ରବୁନ୍‌ ଆମେଙ୍‌ ଅରେଙନ୍‌ ଅନ୍ତମ୍‌, ଆଜାଡ଼ିଡମ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ତିଆତେ ବାସ୍ସେଏଞ୍ଜି, ବନ୍‌ଡ ଇସ୍ୱରନ୍‌ ତିଆତେ ସେଡାଏନ୍‌ ଆରି ତିଆତେ ଗୋଗୋୟ୍‌ ମଡ଼ଗାଡମ୍‌ ।
5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
ପୁରାଡ଼ାଡାଗୋ ଆ ସରେବାସିଂ ତୁବ୍‌ତୁବନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆମେଙ୍‌ ଅରେଙନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଜିରାୟ୍‌ବା, ତି ଆ ସରେବାସିଂଲୋଙ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆଜ୍ରାଜାଲଙ୍‌ତନ୍‌ ପୁରାଡ଼ାଡାଗୋ ଅନମଙନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ମଡ଼ିର୍‌ ରାଓଡ଼ାନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଏଲୁମ୍‌ତେ ।
6 அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌, “ଗିୟ୍‌ବା, ଞେନ୍‌ ଅବୟ୍‌ ମଡ଼ଗାଡମ୍‌ ଆରେଙ୍‌ ସେଡାଲାୟ୍‌; ତିଆତେ ଞେନ୍‌ ସିଓନନ୍‌ ଆ କୁନେଅର୍‌ ଅନ୍ତମ୍‌ ତମ୍ମିୟ୍‌ତାୟ୍‌, ଆନା ତି ଆରେଙ୍‌ଲୋଙ୍‌ ଡର୍ତନେ ଆନିନ୍‌ ଆଙ୍ଗିୟ୍‌ ଅଃମ୍ମୁସୁକ୍କାଏ ।”
7 ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
ଆମ୍ୱେଞ୍ଜି ଏଡର୍ତନେ, ତିଆସନ୍‌ ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ମଡ଼ଗାଡମ୍‌, ବନ୍‌ଡ ଆନାଜି ଅଃଡ୍ଡର୍ନେଜି, ଗୁସିଂମରଞ୍ଜି ଅଙ୍ଗା ଅରେଙ୍‌ ବାସ୍ସେଏଞ୍ଜି, ତିଆତେ କୁନେନ୍‌ ଆ ମୁଡ଼ଅର୍‌ ଡେଏନ୍‌ ।
8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
ଆରି ମଡ଼ିର୍‌ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌ ଡକୋ, “କେନ୍‌ ଆରେଙ୍‌ଲୋଙ୍‌ ଜବ୍ର ମନ୍‌ରା ତୁଡ୍ଡୁବ୍‍ତଜି, ଆରି କେନ୍‌ ଆରେଙ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ଅକୁଡ୍‌ତଜି ।” ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି, ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ତୁଡ୍ଡୁବେଞ୍ଜି, କେନ୍‌ଆତେ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ମା ଗବ୍‌ରିଏନ୍‌ ।
9 நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
ବନ୍‌ଡ ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନେଡାମରଞ୍ଜି, ରାଓଡ଼ାଜି, ମଡ଼ିର୍‌ କେଜ୍ଜାମର୍‌ଜି ଆରି ଇସ୍ୱରନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଡେଲବେନ୍‌ । ଇସ୍ୱରନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଲୋଙଡନ୍‌ ସିଲଡ୍‌ ସନାଆର୍‌ଗଡନ୍‌ ଓଡ୍ଡେଲଙ୍‌ଲନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ସରାନ୍ନିଡାନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ସନେଙ୍କେନ୍‌ ଆସନ୍‌ ସେଡାଲବେନ୍‌ ।
10 ௧0 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
ଆମ୍ମୁଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ମନ୍‌ରା ଅଃଡ୍ଡକୋଲବେନ୍‍, ବନ୍‌ଡ ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ମନ୍‌ରା ଡେଲବେନ୍‌; ଆମ୍ମୁଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ଏଃଞାଙ୍‌ଲୋ, ବନ୍‌ଡ ନମି ଆ ସନାୟୁମନ୍‌ ଏଞାଙେନ୍‌ ।
11 ௧௧ பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ମନ୍‌ରାଞେଞ୍ଜି, କେନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ବଡେସାବାଜି ଆରି ଜିର୍ଜିରିୟ୍‌ମର୍‌ଜି ଅନ୍ତମ୍‌ ଏଡକୋତନ୍‌, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଡଅଙ୍‌ଡାଗୋ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଏଲୁମ୍‌ଡଙ୍‌, ତିଆତେଜି ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଜୁଜ୍ଜେତନେ ।
12 ௧௨ யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ଆମ୍ୱେଞ୍ଜି ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ମନଙ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନାବା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଆର୍‌ଲୁମ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଗାମ୍‌ଲେ ନିଣ୍ଡୟ୍‌ଲବେଞ୍ଜି ଜନଙ୍‌ଡେନ୍‌, ମନଙ୍‌ ଲନୁମ୍‌ବେଞ୍ଜି ଗିୟ୍‍ଲେ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆଜିର୍ତାଞନ୍‌ ଆ ଡିନ୍ନା ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେତଜି ।
13 ௧௩ நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
ପ୍ରବୁନ୍‌ ଆସନ୍‌ ଗାମ୍‌ଲେ ସୋଡ଼ାମରଞ୍ଜି ଆ ବର୍ନେ ମାନ୍ନେଲେ ଡକୋନାବା ।
14 ௧௪ மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
ଡେସାନ୍‌ ଆ ରାଜା ଡେଏତୋ କି ସୋଡ଼ାମର୍‌ ଡେଏତୋ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେବା; ଡୋସାନ୍‌ ଆର୍‌ଲୁମ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଆସନ୍‌ ଡ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଆର୍‌ଲୁମ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ସନେଙ୍କେନ୍‌ ଆସନ୍‌ ରାଜାନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ତବ୍‌ନଙେଞ୍ଜି ।
15 ௧௫ நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଗାମ୍‌ତେ, ଆମ୍ୱେଞ୍ଜି ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ଲେ ଏର୍‌ବୁଡ୍ଡିମରଞ୍ଜି ଆ ଅଗିଆନବର୍‌ ଅବ୍‌ରିଙ୍‌ରିଙ୍‌ବା ।
16 ௧௬ சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
ଆମ୍ୱେଞ୍ଜି ଇନ୍‌ସୟ୍‌ଲୁମ୍‌ମର୍‌ଜି ଡେଲବେନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌, ଇନ୍‌ସୟ୍‌ଲୁମ୍‌ବେନ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍‌ଲୁମନ୍‌ ଆସନ୍‌ ଏଞଣ୍ଡ୍ରମ୍‌ଡଙ୍‌ନେ, ଆର୍ପାୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ କମ୍ବାରି ଅନ୍ତମ୍‌ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ବା ।
17 ௧௭ எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେବାଜି, ବୋଞାଙ୍‌ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ବାଜି, ଇସ୍ୱରନ୍‌ ବତଙ୍‌ବା, ରାଜାନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେବା ।
18 ௧௮ வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
ଏ କମ୍ବାରିମର୍‍ଜି, ସାଉକାରବେନ୍‌ ସନାୟୁମ୍‌ମର୍‌ ଡେଏତୋ କି ଲବଡ୍ଡିମର୍‌ ଡେଏତୋ କି ପେଲ୍ଲାମର୍‌ ଡେଏତୋ, ବନ୍ତଙନ୍‌ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେବା ।
19 ௧௯ ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଆଡର୍ତନେନ୍‌ ଆସନ୍‌, ଆନିନ୍‌ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଞାଙ୍‌ତେ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦନ୍‌ ତିୟ୍‌ତେ ।
20 ௨0 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
ଆମ୍ୱେନ୍‌ ଡୋସାନ୍‌ ଏର୍‌ଲୁମେନ୍‌ ଆସନ୍‌ ତନିଡନ୍‌ ଏଞାଙେନ୍‌ ଡେନ୍‌, ଏଙ୍ଗାଲେ ଆରି ଆମ୍ୱେନ୍‌ ସନେଙ୍କେନ୍‌ ଏଞାଙ୍‌ତେ? ବନ୍‌ଡ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ଲେ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଏଞାଙେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦତବେନ୍‌ ।
21 ௨௧ இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
ତିଆସନ୍‌ ମା ଇସ୍ୱରନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲବେନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ ଆନଡ଼ିଜଙ୍‌ଗଡ୍‌ ଏତଙିୟ୍‌ତନ୍‌, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ନିୟ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଞାଙ୍‌ଲେ ଅବୟ୍‌ ଅନବ୍‌ଜଙନ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଲବେନ୍‌ ।
22 ௨௨ அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
ଆନିନ୍‌ ଆଙ୍ଗିୟ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଆ ଇର୍ସେ ଅଃଲ୍ଲୁମ୍‌ଲୋ, ଆରି ଆନିନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଇସ୍କତ୍ତାବରନ୍‌ ଅଃବ୍ବର୍ରନ୍‌ ।
23 ௨௩ அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆର୍‌ନିଣ୍ଡୟେଞ୍ଜି ଆଡିଡ୍‌, ଆନିନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ଆଡଙ୍‌ ଅଃନ୍ନିଣ୍ଡୟ୍‌ଲୋ; ଡନଣ୍ଡାୟନ୍‌ ଆଞ୍ରାଙେନ୍‌ ଆଡିଡ୍‌, ଆନ୍ନିଙ୍‌ଆଡଙ୍‌ ଅଃବ୍ବବ୍‍ତଙ୍‍ଲୋ, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଡମ୍‌ଲନ୍‌ ।
24 ௨௪ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇର୍ସେନ୍‌ ଆସନ୍‌ ରବୁଡାଲେ ଡରମ୍ମଗଡନ୍‌ ଆସନ୍‌ ଅମେଙ୍‌ଲଙ୍‌ନେ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଆ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ଲେନ୍‌ ଆ ଇର୍ସେ ବୋୟ୍‌ଲେ ପାଙେନ୍‌; ଆନିନ୍‌ ତନିଡନ୍‌ ଆଞ୍ରାଙେନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ମନଙ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ।
25 ௨௫ சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ମେଣ୍ଡାଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଆଡ଼ଆୟ୍‌ଲବେନ୍‌, ବନ୍‌ଡ ନମି ପୁରାଡ଼ାବେନ୍‌ ଆ ତନୁର୍‍ତୁର୍‍ମର୍‍ ଡ ଡନେମରନ୍‍ ଆମଙ୍‌ ଏୟର୍ରନାୟ୍‍ ।

< 1 பேதுரு 2 >