< 1 யோவான் 4 >
1 ௧ பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.
Улю́блені, — не кожному духові вірте, але випробо́вуйте духів, чи від Бога вони, бо неправдивих пророків багато з'явилося в світ.
2 ௨ தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
Духа Божого цим пізнавайте: кожен дух, який ви́знає, що Ісус Христос прийшов був у тілі, той від Бога.
3 ௩ சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
А кожен дух, який не визнає́ Ісуса, той не від Бога, але́ він анти́христів, про якого ви чули, що йде, а тепер уже він у світі.
4 ௪ பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர்.
Ви від Бога, дітки́, і ви перемогли їх, — більший бо Той, Хто в вас, аніж той, хто в світі.
5 ௫ அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
Вони від світу, тому́ то говорять від світу, а світ слухає їх.
6 ௬ நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.
Ми від Бога, — хто знає Бога, той слухає нас, хто не від Бога, той не слухає нас. Цим пізнає́мо Духа правди та духа обмани.
7 ௭ பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
Улю́блені, — любім один о́дного, бо від Бога любов, і кожен, хто любить, родився від Бога та ві́дає Бога!
8 ௮ அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
Хто не любить, той Бога не пізнав, бо Бог є любов!
9 ௯ தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
Любов Божа до нас з'явилася тим, що Бог Сина Свого Одноро́дженого послав у світ, щоб ми через Нього жили́.
10 ௧0 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
Не в то́му любов, що ми полюбили Бога, а що Він полюбив нас, і послав Свого Сина вблага́нням за наші гріхи.
11 ௧௧ பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம்.
Улю́блені, — коли Бог полюбив нас отак, то повинні любити і ми один о́дного!
12 ௧௨ தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
Бога не бачив ніко́ли ніхто. Коли один о́дного любимо, то Бог в нас пробуває, а любов Його в нас удоскона́лилась.
13 ௧௩ அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
Що ми пробуваємо в Ньому, а Він у нас, пізнає́мо це тим, що Він дав нам від Духа Свого́.
14 ௧௪ பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம்.
І ми бачили й сві́дчимо, що Отець послав Сина Спасителем світу.
15 ௧௫ இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
Коли хто визнає́, що Ісус — то Син Божий, то в нім Бог пробува́є, а він у Бозі.
16 ௧௬ தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
Ми пізнали й увірували в ту любов, що Бог її має до нас. Бог є любов, і хто пробуває в любові, пробуває той в Бозі, і в нім Бог пробуває!
17 ௧௭ நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.
Любов удоскона́люється з нами так, що ми маємо відвагу на день судний, бо який Він, такі й ми на цім світі.
18 ௧௮ அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை.
Стра́ху немає в любові, але досконала любов проганяє страх геть, бо страх має му́ку. Хто ж боїться, той не досконалий в любові.
19 ௧௯ அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்.
Ми любимо Його, бо Він перше нас полюбив.
20 ௨0 தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்?
Як хто скаже: „Я Бога люблю́“, та нена́видить брата свого́, той неправдомо́вець. Бо хто не любить брата свого, якого бачить, як може він Бога любити, Якого не бачить?
21 ௨௧ தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம்.
І ми оцю заповідь маємо від Нього, щоб, хто любить Бога, той і брата свого любив!