< 1 யோவான் 2 >

1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்தால் நீதிபரராக இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.
हे मेरे ट्लारे बच्चव, अवं इना गल्लां तुसन एल्हेरेलेइ लिखताईं, कि तुस पाप न केरा, ते अगर कोई पाप केरे, त बाजी परमेशरे कां इश्शो अक मद्दतगारे, मतलब धर्मी यीशु मसीह।
2 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார்.
तै इश्शे पापां केरो छुटकारेरे लेइ बलिदान भोव, ते सिर्फ इश्शे लेइ नईं, बल्के सैरी दुनियारे पापां केरे लेइ भी।
3 அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம்.
अगर अस तैसेरे हुक्मन मन्नम, त इस सेइं अस समझ़े गाले कि अस तैस ज़ानतम।
4 அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை.
ज़ै कोई इन ज़ोते, “कि अवं तैस ज़ानताईं,” ते तैसेरे हुक्मन न मन्ने, तै झूठोए, ते तैस मां सच़ नईं।
5 அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
पन ज़ै कोई तैसेरे वचने पुड़ च़लते, त तैस मां सच़्च़े परमेशरेरो प्यार सिद्ध भोरोए, असन इस सेइं पतो च़लते, कि अस तैस मां आम।
6 அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
ज़ै कोई इन ज़ोते, कि अवं तैस मां बनोरो राताईं, त तैनी तेन्च़रे ज़ीयोरू लोड़े ज़ेन्च़रे यीशु मसीहे ज़ीयोरूए।
7 சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே.
ट्लारव, अवं तुसन कोई नंव्वो हुक्म न लिखी, पन तैए पुरानो हुक्म ज़ै पेइलो तुसन मैल्लो; ई पुरानो हुक्म तैन वचने, ज़ैखन तुसेईं मसीह पुड़ विश्वास कियूं।
8 மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
फिरी भी अवं तुश्शे लेइ नंव्वो हुक्म लिखताईं, किजोकि एन सच़ आए, ज़ैन मसीह मां ते तुसन मां भी लेइहोवं, किजोकि अन्धकार मिटतो गाते ते सच़्च़ेरी लौ हुनी चमकने लोरीए।
9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
ज़ै इन ज़ोते, कि अवं लोई मां आईं ते विश्वासी ढ्लाए सेइं बैर रखते, तै हेजू तगर आंधरे मां आए।
10 ௧0 தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை.
ज़ै कोई अपने ढ्लाए सेइं प्यार केरते, तै लोई मांए, तैसेरेलेइ पाप केरनेरे लेइ कोई वजा नईं।
11 ௧௧ தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் எங்கேயென்று தெரியாமல் இருக்கிறான்.
पन ज़ै कोई अपने ढ्लाए सेइं बैर रखते, तै आंधरे मांए, ते तै आंधरे मां च़लते; ते न ज़ांने, कि कोरां गाते, किजोकि आंधरे तैसेरी एछ़्छ़ी कैनी केररिन।
12 ௧௨ பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
हे बच्चाव अवं तुसन एल्हेरेलेइ लिखताईं, कि यीशु मसीहेरे नंव्वे सेइं तुश्शे पाप माफ़ भोए।
13 ௧௩ பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபர்களே, சாத்தானை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
हे बुज़ुर्गव अवं तुसन एल्हेरेलेइ लिखताईं, कि ज़ै शुरू करां आए तुस तैस ज़ानथ, हे जवानव, अवं तुसन एल्हेरेलेइ लिखताईं कि तुसेईं तैस शैताने पुड़ ज़ींत हासिल केर्रीए, हे बच्चाव अवं तुसन एल्हेरेलेइ लिखताईं कि तुसेईं बाजी परमेशर पिशानो।
14 ௧௪ பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபர்களே, நீங்கள் பலவான்களாக இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தானை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
हे बाजव, अवं तुसन एल्हेरेलेइ लिखताईं, कि ज़ै पेइलोए तुसेईं पिशानो, हे जवानव, अवं तुसन एल्हेरेलेइ लिखताईं, कि तुस मज़बूतथ, ते परमेशरेरू वचन तुसन मां बनोरू रहते, ते तुस शैताने करां ज़ींतोरेथ।
15 ௧௫ உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை.
तुस न दुनियाई सेइं ते न दुनियारी चीज़न सेइं प्यार केरा, अगर कोई दुनियाई सेइं प्यार केरते, त तैस मां बाजी परमेशरेरो प्यार नईं।
16 ௧௬ ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.
किजोकि ज़ैन किछ दुनियाई मां आए, मतलब जिसमेरी खुवैइश, ते एछ़्छ़ी केरि खुवैइश ते ज़िन्दगरू घमण्ड, तैन बाजी परमेशरेरे तरफां नईं पन दुनियारे तरफांए।
17 ௧௭ உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
दुनिया ते तैसेरी खुवैइश दुइये मिटती गैतिन, पन ज़ै परमेशरेरे मेर्ज़ी पुड़ च़लते, तै सदा बनोरो रालो। (aiōn g165)
18 ௧௮ பிள்ளைகளே, இது கடைசி காலமாக இருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
हे बच्चव, ई आखरी वक्ते कि मसीह वापस एजनोए, ते ज़ेन्च़रे तुसेईं शुनोरूए, कि मसीहेरी खलाफत केरनेबालो एजनेबालोए, तैसेरे मुताबिक हुना भी बड़े मसीहेरी खलाफत केरनेबाले उठोरेन, इस सेइं अस ज़ानतम, कि ई आखरी वक्ते कि मसीह वापस एजनोए।
19 ௧௯ அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடையவர்களாக இருக்கவில்லை; நம்முடையவர்களாக இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லோரும் நம்முடையவர்கள் இல்லை என்று வெளிப்படுத்துவதற்காகவே பிரிந்துபோனார்கள்.
तैना मसीहेरी खलाफत केरनेबाले लोक निस्से त असने मरां, पन तैना असन मरां न थिये, किजोकि अगर असन मरां भोथे, त असन सेइं साथी राथे, पन निस्से एल्हेरेलेइ कि इन बांदू भोए कि तैना सब असन मरां नईं।
20 ௨0 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.
पन मसीहेरे ज़िरिये तुसन पवित्र आत्मा दित्तोरोए, तैसेरे वजाई सेइं तुस सब सच़ ज़ानतथ।
21 ௨௧ சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
मीं तुसन एल्हेरेलेइ नईं लिखोरू, कि तुस सच़्च़े न ज़ानथ, पन एल्हेरेलेइ, कि तैस ज़ानतथ, ते एल्हेरेलेइ कोई झूठ, सच़्च़ेरे पासेरां नईं।
22 ௨௨ இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
झूठो कौने? सिर्फ तै, ज़ै यीशुएरू मसीह भोनेरो इन्कार केरते, ते मसीहेरी खलाफत केरनेबालो तैए आए, ज़ै बाजी परमेशरेरी ते कने मट्ठेरो यानी यीशुएरो इन्कार केरते।
23 ௨௩ குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான்.
ज़ै मट्ठेरो इन्कार केरते तैस कां बाजी परमेशर भी नईं, ज़ै मट्ठे मन्ते, तैस कां बाजी परमेशर भी आए।
24 ௨௪ ஆகவே, ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
ज़ैखन तुसेईं यीशु मसीह पुड़ विश्वास कियूं, तुसेईं ज़ै सच़्च़ी शिक्षा शुरू करां शुनोरोए, तैए तुसन मां बनोरी राए, त तुस भी मट्ठे मां, ते बाजी परमेशरे मां बनोरे राले।
25 ௨௫ நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
ते ज़ेसेरो वादो परमेशरे कियोरोए, तै हमेशारी ज़िन्दगीए। (aiōnios g166)
26 ௨௬ உங்களை ஏமாற்றுகிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
मीं इना गल्लां तुसन तैन करां खबरदार रानेरे लेइ लिखी, ज़ैना लोक तुसन झूठी शिक्षारे ज़िरिये टपलातन।
27 ௨௭ நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
ते तुश्शू तैन अभिषेक, ज़ैन तैसेरे तरफां केर्रूए, तुसन मां बनोरू रहते; ते तुसन एल्हेरी ज़रूरत नईं, कि कोई तुसन शिखाले। बल्के ज़ेन्च़रे तैन अभिषेक ज़ैन तैसेरे तरफां कियोरूए, तुसन सब गल्लां शिखालते, ते इन सच़्च़े, ते झूठ नईं, ते ज़ेन्च़रे तैने तुसन शिखालोरूए, तेन्च़रे तुस तैस मां बनोरे रातथ।
28 ௨௮ இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் தைரியமுள்ளவர்களாக இருப்பதற்காகவும் அவர் வரும்போது நாம் வெட்கப்பட்டுப்போகாமல் இருக்கவும் அவரில் நிலைத்திருப்போம்.
हे बच्चव, तैस मां बनोरे राथ, कि ज़ैखन इन बांदू भोए, त असन दिलेरी भोए ते अस तैसेरे एजने पुड़ तैसेरे सामने शरमिनदे न भोंम।
29 ௨௯ அவர் நீதியுள்ளவராக இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவன் எவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
अगर तुस ज़ानतथ, कि मसीह धर्मीए, त इन भी ज़ानतथ, कि ज़ैना धार्मिकतारां कम्मां केरतन, तैना परमेशरेरे बच्चेन।

< 1 யோவான் 2 >