< 1 யோவான் 1 >

1 ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ଆଗେତାଂ ଇନେର୍‌ ମାଚାନ୍‌, ଇନେର୍‌ତି ବଚନ୍‌ ଆସେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‌ଚାସ୍‍ନା, ଇନେରିଂ ନିଜ୍‌ କାଣ୍‍କୁତାଙ୍ଗ୍ ହୁଡ଼୍‌ତାପ୍‌ନା, ଇନେରିଂ ଇଟ୍‌କାଡ଼୍‌ କିତାପ୍‌ନା ଆରି ଜାର୍‌ କେଇଦାଙ୍ଗ୍ ଡୁତାପ୍‌ନା, ହେ ଜିବୁନ୍‌ ଲାକେ ବଚନ୍‌ ବିସ୍ରେ ଜାଣାୟ୍‌କିଦ୍‌ନାପା ।
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
ହେ ଜିବୁନ୍‌ ଚଞ୍ଜ୍‌ୟାତାନ୍‌, ଆରେ ଆପେଂ ହୁଡ଼୍‌ତାପ୍‍ନା ଆରି ସାକି ହିନାପା; ଇମ୍‌ଣି ୱିଜ଼୍‌ୱି ଜିବୁନ୍ ଆବା ଲାହାଙ୍ଗ୍‌ ନିତ୍ରେ ମାଚାନ୍‌ ଆରେ ମା କଚଣ୍ ହତ୍‍ତାକା, ହେୱାନ୍ତି ବିସ୍ରେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚ୍‍ଚାନାପା । (aiōnios g166)
3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
ଇନାକା ଆପେଂ ହୁଡ଼୍‌ତାପ୍‍ନା ଆରି ୱେଚାପ୍‌ନା, ହେଦାଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପା ୱେଚ୍‍ଚାନାପା, ଇନେସ୍‌କି ଏପେଙ୍ଗ୍‍ ପା ମା ଲାହାଙ୍ଗ୍‌ ମେହାଆଦେଂ ଆଡ଼୍‌ଦାନାଦେର୍‌; ଆରେ ମା ମେହାଆନାକାନ୍ ଆବା ଇସ୍ୱର୍‌ ଆରି ତା ମାଜ଼ି ଜିସୁ କ୍ରିସ୍ଟ ଲାହାଙ୍ଗ୍‌ ମାନାତ୍‌ ।
4 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
ମା ୱାରି ଇନେସ୍‌କି ପୁରା ଆନାତ୍‌, ଇଦାଂ କାଜିଙ୍ଗ୍‌ ଆପେଂ ଇ ୱିଜ଼ୁ ଲେକିକିନାପା ।
5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
ଆପେଂ ତା ତାକେଣ୍ଡାଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ନେକ୍ରିକାବୁର୍‌ ୱେଚ୍‌ଚାତାପ୍‌ନା ଆରି ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‌ଚାନାପା, ହେଦାଂ ଇସ୍ୱର୍‌ତି ଅଜଡ଼୍‌ ଆରେ ତା ତାକେ ମାଜ୍‌ଗା ହିଲୁତ୍‌ ।
6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
ତା ଲାହାଙ୍ଗ୍‌ ଆସେଙ୍ଗ୍‌ ମେହାଆନାକା ମାନାତ୍‌, ଇଦାଂ ଇଞ୍ଜି ଜଦି ଆସେଙ୍ଗ୍‌ ମାଜ୍‌ଗାନି ବେବାର୍‍ କିନାସ୍‌, ତା ଆତିସ୍‌ ଆସେଙ୍ଗ୍‌ କାତାତ ଆରି କାମାୟ୍‌ତ ମିଚ୍‍ୱାକାସ୍‍, ଆରେ ହାତ୍‌ପା ବେବାର୍‌ କିଜ଼ିମାନୁସ୍‌ ।
7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
ମାତର୍‌ ହେୱେନ୍ ଇନେସ୍‌କି ଅଜଡ଼୍‍ନିକାନ୍‌ ଆସେଙ୍ଗ୍‌ ଜଦି ହେ ଲାକେ ଅଜଡ଼୍‌ନି ବେବାର୍‍ କିନାସ୍‌, ଲାଗିଂ ମାଦାଂ ହାରି ମେହାଣ୍‍ ମାନାତ୍‌, ଆରେ ହେୱାନ୍ତି ମାଜ଼ି ଜିସୁତି ନେତେର୍‌ ୱିଜ଼ୁ ପାପ୍‌ତାଂ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ସକଟ୍‌ କିଦ୍‍ନାତ୍‌ ।
8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
ମାଦାଂ ପାପ୍‌ ହିଲୁତ୍‌, ଇଦାଂ ଜଦି ଇନାସ୍‌, ତା ଆତିସ୍‌ ଜାର୍‌ ଜାର୍‍ତିଙ୍ଗ୍ ମିଚ୍‌ ଇନାସା, ଆରେ ମା ତାକେ ସତ୍‌ ଆକାୟ୍‌ ।
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
ଜଦି ଆସେଙ୍ଗ୍‌ ଜାର୍‌ ଜାର୍‍ତିଙ୍ଗ୍ ପାପ୍‌ ମାନି କିନାସ୍‌, ଲାଗିଂ ହେୱାନ୍ ମା ପାପ୍ କେମା କିଦେଙ୍ଗ୍‌ ଆରି ୱିଜ଼ୁ ଅଦାର୍ମିତାଂ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ସକଟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ପାର୍ତି ଆରି ନ୍ୟାୟ୍‌କାରିୟାର୍‌ ଆତାନ୍ନା ।
10 ௧0 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
ଆପେଂ ପାପ୍‌ କିୱାତାପ୍‌ନା, ଇଦାଂ ଜଦି ଇନାସ୍‌, ତା ଆତିସ୍‌ ଆସେଙ୍ଗ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ମିଚ୍‍ୱା ଇନାସ୍‌, ଆରେ ତା ବଚନ୍‌ ମା ତାକେ ହିଲୁତ୍‌ ।

< 1 யோவான் 1 >