< 1 கொரிந்தியர் 7 >

1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது.
အပရဉ္စ ယုၐ္မာဘိ ရ္မာံ ပြတိ ယတ် ပတြမလေခိ တသျောတ္တရမေတတ်, ယောၐိတော'သ္ပရ္ၑနံ မနုဇသျ ဝရံ;
2 ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும்.
ကိန္တု ဝျဘိစာရဘယာဒ် ဧကဲကသျ ပုံသး သွကီယဘာရျျာ ဘဝတု တဒွဒ် ဧကဲကသျာ ယောၐိတော 'ပိ သွကီယဘရ္တ္တာ ဘဝတု၊
3 கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும்.
ဘာရျျာယဲ ဘရ္တြာ ယဒျဒ် ဝိတရဏီယံ တဒ် ဝိတီရျျတာံ တဒွဒ် ဘရ္တြေ'ပိ ဘာရျျယာ ဝိတရဏီယံ ဝိတီရျျတာံ၊
4 மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
ဘာရျျာယား သွဒေဟေ သွတွံ နာသ္တိ ဘရ္တ္တုရေဝ, တဒွဒ် ဘရ္တ္တုရပိ သွဒေဟေ သွတွံ နာသ္တိ ဘာရျျာယာ ဧဝ၊
5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள்.
ဥပေါၐဏပြာရ္ထနယေား သေဝနာရ္ထမ် ဧကမန္တြဏာနာံ ယုၐ္မာကံ ကိယတ္ကာလံ ယာဝဒ် ယာ ပၖထက္သ္ထိတိ ရ္ဘဝတိ တဒနျော ဝိစ္ဆေဒေါ ယုၐ္မန္မဓျေ န ဘဝတု, တတး ပရမ် ဣန္ဒြိယာဏာမ် အဓဲရျျာတ် ၑယတာန် ယဒ် ယုၐ္မာန် ပရီက္ၐာံ န နယေတ် တဒရ္ထံ ပုနရေကတြ မိလတ၊
6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன்.
ဧတဒ် အာဒေၑတော နဟိ ကိန္တွနုဇ္ဉာတ ဧဝ မယာ ကထျတေ,
7 எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது.
ယတော မမာဝသ္ထေဝ သရွွမာနဝါနာမဝသ္ထာ ဘဝတွိတိ မမ ဝါဉ္ဆာ ကိန္တွီၑွရာဒ် ဧကေနဲကော ဝရော'နျေန စာနျော ဝရ ဣတ္ထမေကဲကေန သွကီယဝရော လဗ္ဓး၊
8 திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.
အပရမ် အကၖတဝိဝါဟာန် ဝိဓဝါၑ္စ ပြတိ မမဲတန္နိဝေဒနံ မမေဝ တေၐာမဝသ္ထိတိ ရ္ဘဒြာ;
9 ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது.
ကိဉ္စ ယဒိ တဲရိန္ဒြိယာဏိ နိယန္တုံ န ၑကျန္တေ တရှိ ဝိဝါဟး ကြိယတာံ ယတး ကာမဒဟနာဒ် ဝျူဎတွံ ဘဒြံ၊
10 ௧0 திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
ယေ စ ကၖတဝိဝါဟာသ္တေ မယာ နဟိ ပြဘုနဲဝဲတဒ် အာဇ္ဉာပျန္တေ၊
11 ௧௧ பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.
ဘာရျျာ ဘရ္တ္တၖတး ပၖထက် န ဘဝတု၊ ယဒိ ဝါ ပၖထဂ္ဘူတာ သျာတ် တရှိ နိရွိဝါဟာ တိၐ္ဌတု သွီယပတိနာ ဝါ သန္ဒဓာတု ဘရ္တ္တာပိ ဘာရျျာံ န တျဇတု၊
12 ௧௨ மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
ဣတရာန် ဇနာန် ပြတိ ပြဘု ရ္န ဗြဝီတိ ကိန္တွဟံ ဗြဝီမိ; ကသျစိဒ် ဘြာတုရျောၐိဒ် အဝိၑွာသိနီ သတျပိ ယဒိ တေန သဟဝါသေ တုၐျတိ တရှိ သာ တေန န တျဇျတာံ၊
13 ௧௩ அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
တဒွတ် ကသျာၑ္စိဒ် ယောၐိတး ပတိရဝိၑွာသီ သန္နပိ ယဒိ တယာ သဟဝါသေ တုၐျတိ တရှိ သ တယာ န တျဇျတာံ၊
14 ௧௪ ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள்.
ယတော'ဝိၑွာသီ ဘရ္တ္တာ ဘာရျျယာ ပဝိတြီဘူတး, တဒွဒဝိၑွာသိနီ ဘာရျျာ ဘရ္တြာ ပဝိတြီဘူတာ; နောစေဒ် ယုၐ္မာကမပတျာနျၑုစီနျဘဝိၐျန် ကိန္တွဓုနာ တာနိ ပဝိတြာဏိ သန္တိ၊
15 ௧௫ ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
အဝိၑွာသီ ဇနော ယဒိ ဝါ ပၖထဂ် ဘဝတိ တရှိ ပၖထဂ် ဘဝတု; ဧတေန ဘြာတာ ဘဂိနီ ဝါ န နိဗဓျတေ တထာပိ ဝယမီၑွရေဏ ၑာန္တယေ သမာဟူတား၊
16 ௧௬ மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்?
ဟေ နာရိ တဝ ဘရ္တ္တုး ပရိတြာဏံ တွတ္တော ဘဝိၐျတိ န ဝေတိ တွယာ ကိံ ဇ္ဉာယတေ? ဟေ နရ တဝ ဇာယာယား ပရိတြာဏံ တွတ္တေ ဘဝိၐျတိ န ဝေတိ တွယာ ကိံ ဇ္ဉာယတေ?
17 ௧௭ தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன்.
ဧကဲကော ဇနး ပရမေၑွရာလ္လဗ္ဓံ ယဒ် ဘဇတေ ယသျာဉ္စာဝသ္ထာယာမ် ဤၑွရေဏာဟွာယိ တဒနုသာရေဏဲဝါစရတု တဒဟံ သရွွသမာဇသ္ထာန် အာဒိၑာမိ၊
18 ௧௮ ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.
ဆိန္နတွဂ် ဘၖတွာ ယ အာဟူတး သ ပြကၖၐ္ဋတွက် န ဘဝတု, တဒွဒ် အဆိန္နတွဂ် ဘူတွာ ယ အာဟူတး သ ဆိန္နတွက် န ဘဝတု၊
19 ௧௯ விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம்.
တွက္ဆေဒး သာရော နဟိ တဒွဒတွက္ဆေဒေါ'ပိ သာရော နဟိ ကိန္တွီၑွရသျာဇ္ဉာနာံ ပါလနမေဝ၊
20 ௨0 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும்.
ယော ဇနော ယသျာမဝသ္ထာယာမာဟွာယိ သ တသျာမေဝါဝတိၐ္ဌတာံ၊
21 ௨௧ அடிமையாக நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால், அதை செய்.
ဒါသး သန် တွံ ကိမာဟူတော'သိ? တန္မာ စိန္တယ, တထာစ ယဒိ သွတန္တြော ဘဝိတုံ ၑက္နုယာသ္တရှိ တဒေဝ ဝၖဏု၊
22 ௨௨ கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான்.
ယတး ပြဘုနာဟူတော ယော ဒါသး သ ပြဘော ရ္မောစိတဇနး၊ တဒွဒ် တေနာဟူတး သွတန္တြော ဇနော'ပိ ခြီၐ္ဋသျ ဒါသ ဧဝ၊
23 ௨௩ நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமைகளாகாமல் இருங்கள்.
ယူယံ မူလျေန ကြီတာ အတော ဟေတော ရ္မာနဝါနာံ ဒါသာ မာ ဘဝတ၊
24 ௨௪ சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும்.
ဟေ ဘြာတရော ယသျာမဝသ္ထာယာံ ယသျာဟွာနမဘဝတ် တယာ သ ဤၑွရသျ သာက္ၐာတ် တိၐ္ဌတု၊
25 ௨௫ அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
အပရမ် အကၖတဝိဝါဟာန် ဇနာန် ပြတိ ပြဘေား ကော'ပျာဒေၑော မယာ န လဗ္ဓး ကိန္တု ပြဘောရနုကမ္ပယာ ဝိၑွာသျော ဘူတော'ဟံ ယဒ် ဘဒြံ မနျေ တဒ် ဝဒါမိ၊
26 ௨௬ அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ဝရ္တ္တမာနာတ် က္လေၑသမယာတ် မနုၐျသျာနူဎတွံ ဘဒြမိတိ မယာ ဗုဓျတေ၊
27 ௨௭ நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே.
တွံ ကိံ ယောၐိတိ နိဗဒ္ဓေါ'သိ တရှိ မောစနံ ပြာပ္တုံ မာ ယတသွ၊ ကိံ ဝါ ယောၐိတော မုက္တော'သိ? တရှိ ဇာယာံ မာ ဂဝေၐယ၊
28 ௨௮ நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன்.
ဝိဝါဟံ ကုရွွတာ တွယာ ကိမပိ နာပါရာဓျတေ တဒွဒ် ဝျူဟျမာနယာ ယုဝတျာပိ ကိမပိ နာပရာဓျတေ တထာစ တာဒၖၑော် ဒွေါ် ဇနော် ၑာရီရိကံ က္လေၑံ လပ္သျေတေ ကိန္တု ယုၐ္မာန် ပြတိ မမ ကရုဏာ ဝိဒျတေ၊
29 ௨௯ மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும்,
ဟေ ဘြာတရော'ဟမိဒံ ဗြဝီမိ, ဣတး ပရံ သမယော'တီဝ သံက္ၐိပ္တး,
30 ௩0 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும்,
အတး ကၖတဒါရဲရကၖတဒါရဲရိဝ ရုဒဒ္ဘိၑ္စာရုဒဒ္ဘိရိဝ သာနန္ဒဲၑ္စ နိရာနန္ဒဲရိဝ ကြေတၖဘိၑ္စာဘာဂိဘိရိဝါစရိတဝျံ
31 ௩௧ இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
ယေ စ သံသာရေ စရန္တိ တဲ ရ္နာတိစရိတဝျံ ယတ ဣဟလေကသျ ကော်တုကော ဝိစလတိ၊
32 ௩௨ நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
ကိန္တု ယူယံ ယန္နိၑ္စိန္တာ ဘဝေတေတိ မမ ဝါဉ္ဆာ၊ အကၖတဝိဝါဟော ဇနော ယထာ ပြဘုံ ပရိတောၐယေတ် တထာ ပြဘုံ စိန္တယတိ,
33 ௩௩ திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
ကိန္တု ကၖတဝိဝါဟော ဇနော ယထာ ဘာရျျာံ ပရိတောၐယေတ် တထာ သံသာရံ စိန္တယတိ၊
34 ௩௪ அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.
တဒွဒ် ဦဎယောၐိတော 'နူဎာ ဝိၑိၐျတေ၊ ယာနူဎာ သာ ယထာ ကာယမနသေား ပဝိတြာ ဘဝေတ် တထာ ပြဘုံ စိန္တယတိ ယာ စောဎာ သာ ယထာ ဘရ္တ္တာရံ ပရိတောၐယေတ် တထာ သံသာရံ စိန္တယတိ၊
35 ௩௫ இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
အဟံ ယဒ် ယုၐ္မာန် မၖဂဗန္ဓိနျာ ပရိက္ၐိပေယံ တဒရ္ထံ နဟိ ကိန္တု ယူယံ ယဒနိန္ဒိတာ ဘူတွာ ပြဘေား သေဝနေ'ဗာဓမ် အာသက္တာ ဘဝေတ တဒရ္ထမေတာနိ သရွွာဏိ ယုၐ္မာကံ ဟိတာယ မယာ ကထျန္တေ၊
36 ௩௬ ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும்.
ကသျစိတ် ကနျာယာံ ယော်ဝနပြာပ္တာယာံ ယဒိ သ တသျာ အနူဎတွံ နိန္ဒနီယံ ဝိဝါဟၑ္စ သာဓယိတဝျ ဣတိ မနျတေ တရှိ ယထာဘိလာၐံ ကရောတု, ဧတေန ကိမပိ နာပရာတ္သျတိ ဝိဝါဟး ကြိယတာံ၊
37 ௩௭ ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான்.
ကိန္တု ဒုးခေနာက္လိၐ္ဋး ကၑ္စိတ် ပိတာ ယဒိ သ္ထိရမနောဂတး သွမနော'ဘိလာၐသာဓနေ သမရ္ထၑ္စ သျာတ် မမ ကနျာ မယာ ရက္ၐိတဝျေတိ မနသိ နိၑ္စိနောတိ စ တရှိ သ ဘဒြံ ကရ္မ္မ ကရောတိ၊
38 ௩௮ இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.
အတော ယော ဝိဝါဟံ ကရောတိ သ ဘဒြံ ကရ္မ္မ ကရောတိ ယၑ္စ ဝိဝါဟံ န ကရောတိ သ ဘဒြတရံ ကရ္မ္မ ကရောတိ၊
39 ௩௯ மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள்.
ယာဝတ္ကာလံ ပတိ ရ္ဇီဝတိ တာဝဒ် ဘာရျျာ ဝျဝသ္ထယာ နိဗဒ္ဓါ တိၐ္ဌတိ ကိန္တု ပတျော် မဟာနိဒြာံ ဂတေ သာ မုက္တီဘူယ ယမဘိလၐတိ တေန သဟ တသျာ ဝိဝါဟော ဘဝိတုံ ၑက္နောတိ, ကိန္တွေတတ် ကေဝလံ ပြဘုဘက္တာနာံ မဓျေ၊
40 ௪0 ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.
တထာစ သာ ယဒိ နိၐ္ပတိကာ တိၐ္ဌတိ တရှိ တသျား က္ၐေမံ ဘဝိၐျတီတိ မမ ဘာဝး၊ အပရမ် ဤၑွရသျာတ္မာ မမာပျန္တ ရွိဒျတ ဣတိ မယာ ဗုဓျတေ၊

< 1 கொரிந்தியர் 7 >