< 1 கொரிந்தியர் 7 >
1 ௧ நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது.
ⲁ̅ⲉⲑⲃⲉ ⲛⲏ ⲇⲉ ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛ⳿ⲥϧⲏⲧⲟⲩ ⲛⲏⲓ ⲛⲁⲛⲉⲥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙϭⲓ ⲛⲉⲙ ⳿ⲥϩⲓⲙⲓ.
2 ௨ ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும்.
ⲃ̅ⲉⲑⲃⲉ ⲛⲓⲡⲟⲣⲛⲓⲁ ⲇⲉ ⲙⲁⲣⲉ ⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⲭⲁ ⲧⲉϥ⳿ⲥϩⲓⲙⲓ ⲛⲁϥ ⲟⲩⲟϩ ⲙⲁⲣⲉ ϯⲟⲩ⳿ⲓ ϯⲟⲩ⳿ⲓ ⲭⲁ ⲡⲉⲥϩⲁⲓ ⲛⲁⲥ.
3 ௩ கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும்.
ⲅ̅ⲡⲓϩⲁⲓ ⲙⲁⲣⲉϥϯ ⳿ⲙⲡⲉⲧⲉⲣⲟϥ ⳿ⲛϯ⳿ⲥϩⲓⲙⲓ ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⲙⲁⲣⲉⲥϯ ⳿ⲙⲡⲉⲧⲉⲣⲟⲥ ⳿ⲙⲡⲉⲥϩⲁⲓ.
4 ௪ மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
ⲇ̅ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲙⲙⲟⲛⲧⲉⲥ ⲉⲣϣⲓϣⲓ ⳿ⲙⲡⲉⲥⲥⲱⲙⲁ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟⲥ ⲁⲗⲗⲁ ⲡⲓϩⲁⲓ ⲡⲉ ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ⲡⲓⲕⲉϩⲁⲓ ⳿ⲙⲙⲟⲛⲧⲉϥ ⲉⲣϣⲓϣⲓ ⳿ⲙⲡⲉϥⲥⲱⲙⲁ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲁⲗⲗⲁ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⲧⲉ.
5 ௫ உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள்.
ⲉ̅⳿ⲙⲡⲉⲣϥⲉϫ ⲛⲉⲧⲉⲛⲉⲣⲏⲟⲩ ⳿ⲉⲃⲏⲗ ⲁⲣⲏⲟⲩ ϧⲉⲛ ⲟⲩϯⲙⲁϯ ⳿ⲡⲣⲟⲥ ⲟⲩⲥⲏⲟⲩ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ⲥⲣⲱϥⲧ ⳿ⲉϯ⳿ⲡⲣⲟⲥⲉⲩⲭⲏ ⲟⲩⲟϩ ⲡⲁⲗⲓⲛ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ⲓ ⲉⲩⲙⲁ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ⳿ϣⲧⲉⲙ ⳿ⲡⲥⲁⲧⲁⲛⲁⲥ ⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⲉⲑⲃⲉ ⲧⲉⲧⲉⲛⲙⲉⲧⲁⲧⲑⲱⲧ⳿ⲛϩⲏⲧ.
6 ௬ இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன்.
ⲋ̅ⲫⲁⲓ ⲇⲉ ϯϫⲱ ⳿ⲙⲙⲟϥ ⲕⲁⲧⲁ ⲟⲩⲥⲩⲛ⳿ⲅⲛⲱⲙⲏ ⲕⲁⲧⲁ ⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⲁⲛ.
7 ௭ எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது.
ⲍ̅ϯⲟⲩⲱϣ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⲣⲱⲙⲓ ⲛⲓⲃⲉⲛ ϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲁⲣⲏϯ ⲁⲗⲗⲁ ⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⲟⲩⲛⲟⲧⲉϥ ⲟⲩ⳿ϩⲙⲟⲧ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲫϯ ⲡⲓⲟⲩⲁⲓ ⲙⲉⲛ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲕⲉⲟⲩⲁⲓ ⲇⲉ ⳿ⲙⲡⲁⲓⲕⲉⲣⲏϯ.
8 ௮ திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.
ⲏ̅ϯϫⲱ ⲇⲉ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲛⲏ ⲉⲧⲉ⳿ⲙⲡⲟⲩϭⲓ ⲛⲉⲙ ⲛⲓⲭⲏⲣⲁ ϫⲉ ⲛⲁⲛⲉⲥ ⲛⲱⲟⲩ ⲁⲩϣⲁⲛϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲁⲣⲏϯ.
9 ௯ ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது.
ⲑ̅ⲓⲥϫⲉ ⲇⲉ ⲥⲉⲛⲁ⳿ϣⲉⲣⲉⲅⲕⲣⲁⲧⲉⲩⲉⲥⲑⲉ ⲁⲛ ⲙⲁⲣⲟⲩϭⲓ ⲛⲁⲛⲉⲥ ⲅⲁⲣ ⳿ⲉϭⲓ ⲉϩⲟⲧⲉ ⳿ⲛⲥⲉϭⲓ ⳿ⲭⲣⲱⲙ.
10 ௧0 திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
ⲓ̅ⲛⲏ ⲇⲉ ⲉⲧⲁⲩϭⲓ ϯϩⲟⲛϩⲉⲛ ⲛⲱⲟⲩ ⳿ⲁⲛⲟⲕ ⲁⲛ ⲁⲗⲗⲁ Ⲡ⳪ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲛⲧⲉⲥ⳿ϣⲧⲉⲙⲫⲱⲣϫ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲡⲉⲥϩⲁⲓ.
11 ௧௧ பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.
ⲓ̅ⲁ̅ⲕⲁⲛ ⲉϣⲱⲡ ⲁⲥϣⲁⲛⲫⲱⲣϫ ⲙⲁⲣⲉⲥⲟϩⲓ ⳿ⲛⲟⲩⲉϣⲉⲛ ϭⲓ ⳿ⲙⲙⲟⲛ ⲙⲁⲣⲉⲥϩⲱⲧⲡ ⳿ⲉⲡⲉⲥϩⲁⲓ ⲟⲩⲟϩ ⲡⲓϩⲁⲓ ⳿ⲛⲧⲉϥ⳿ϣⲧⲉⲙⲭⲁ ϯ⳿ⲥϩⲓⲙⲓ.
12 ௧௨ மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
ⲓ̅ⲃ̅⳿ⲡⲥⲉⲡⲓ ⲇⲉ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ⳿ⲁⲛⲟⲕ Ⲡ⳪ ⲁⲛ ϫⲉ ⲉϣⲱⲡ ⳿ⲉⲟⲩⲟⲛ ⲟⲩⲥⲟⲛ ⳿ⲉⲟⲩⲟⲛⲧⲉϥ ⲟⲩ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲛⲁⲑⲛⲁϩϯ ⳿ⲙⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⲑⲁⲓ ⲉⲥϯ ⲙⲁϯ ⳿ⲉϣⲱⲡⲓ ⲛⲉⲙⲁϥ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉϥⲭⲁⲥ ⳿ⲛⲥⲱϥ.
13 ௧௩ அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
ⲓ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲟⲩ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲉⲟⲩⲟⲛⲧⲁⲥ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲟⲩϩⲁⲓ ⳿ⲛⲁⲑⲛⲁϩϯ ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲉϥϯⲙⲁϯ ⳿ⲉϣⲱⲡⲓ ⲛⲉⲙⲁⲥ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉⲥⲭⲁ ⲡⲓϩⲁⲓ ⳿ⲛⲥⲱⲥ.
14 ௧௪ ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள்.
ⲓ̅ⲇ̅ⲁϥⲧⲟⲩⲃⲟ ⲅⲁⲣ ⳿ⲛϫⲉ ⲡⲓϩⲁⲓ ⳿ⲛⲁⲑⲛⲁϩϯ ϧⲉⲛ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⲟⲩⲟϩ ⲁⲥⲧⲟⲩⲃⲟ ⳿ⲛϫⲉ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲛⲁⲑⲛⲁϩϯ ϧⲉⲛ ⲡⲓⲥⲟⲛ ⳿ⲙⲙⲟⲛ ϩⲁⲣⲁ ⲛⲉⲧⲉⲛϣⲏⲣⲓ ⲥⲉϭⲁϧⲉⲙ ϯⲛⲟⲩ ⲇⲉ ⲥⲉⲟⲩⲁⲃ.
15 ௧௫ ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
ⲓ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲓⲥϫⲉ ⲡⲓⲁⲑⲛⲁϩϯ ⲛⲁⲫⲱⲣϫ ⲙⲁⲣⲉϥⲫⲱⲣϫ ⳿ⲛ⳿ϥⲟⲓ ⳿ⲙⲃⲱⲕ ⲁⲛ ⳿ⲛϫⲉ ⲡⲓⲥⲟⲛ ⲓⲉ ϯⲥⲱⲛⲓ ϧⲉⲛ ⲛⲁⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲫϯ ⲇⲉ ⲁϥⲑⲁϩⲉⲙ ⲑⲏⲛⲟⲩ ϧⲉⲛ ⲟⲩϩⲓⲣⲏⲛⲏ.
16 ௧௬ மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்?
ⲓ̅ⲋ̅ⲁⲣⲉ⳿ⲉⲙⲓ ⲅⲁⲣ ⲑⲱⲛ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ϫⲉ ⲁⲣⲏⲟⲩ ⲧⲉⲣⲁ⳿ϣⲛⲟϩⲉⲙ ⳿ⲙⲡⲉϩⲁⲓ ⲓⲉ ⲁⲕⲥⲱⲟⲩⲛ ⲑⲱⲛ ⲡⲓⲣⲱⲙⲓ ϫⲉ ⲁⲣⲏⲟⲩ ⳿ⲭⲛⲁ⳿ϣⲛⲟϩⲉⲙ ⳿ⲛⲧⲉⲕ⳿ⲥϩⲓⲙⲓ.
17 ௧௭ தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன்.
ⲓ̅ⲍ̅⳿ⲓⲙⲏϯ ⳿ⲉⲡⲓⲣⲏϯ ⲉⲧⲁ Ⲡ⳪ ⲑⲁϣϥ ⳿ⲙⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲁ ⲫϯ ⲑⲁϩⲉⲙ ⳿ⲫⲟⲩⲁⲓ ⳿ⲫⲟⲩⲁⲓ ⲡⲁⲓⲣⲏϯ ⲙⲁⲣⲉϥⲙⲟϣⲓ ⳿ⲛϧⲏⲧϥ ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ⳿ⲉϯⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ϧⲉⲛ ⲛⲓⲉⲕ⳿ⲕⲗⲏⲥⲓⲁ ⲧⲏⲣⲟⲩ.
18 ௧௮ ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.
ⲓ̅ⲏ̅ⲁⲩⲑⲁϩⲉⲙ ⲟⲩⲁⲓ ⲉϥⲥⲟⲩⲃⲏⲧ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉϥⲥⲉⲕ ϯⲙⲉⲧⲁⲧⲥⲉⲃⲓ ⲛⲁϥ ⲁⲩⲑⲁϩⲉⲙ ⲟⲩⲁⲓ ϧⲉⲛ ϯⲙⲉⲧⲁⲧⲥⲉⲃⲓ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉϥⲥⲟⲩⲃⲏⲧϥ.
19 ௧௯ விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம்.
ⲓ̅ⲑ̅⳿ⲡⲥⲉⲃⲓ ⲅⲁⲣ ⳿ϩⲗⲓ ⲡⲉ ⲟⲩⲟϩ ϯⲙⲉⲧⲁⲧⲥⲉⲃⲓ ⳿ϩⲗⲓ ⲧⲉ ⲁⲗⲗⲁ ⲡⲓⲁⲣⲉϩ ⳿ⲉⲛⲓⲉⲛⲧⲟⲗⲏ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
20 ௨0 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும்.
ⲕ̅ⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ϧⲉⲛ ⲡⲓⲑⲱϩⲉⲙ ⲉⲧⲁⲩⲑⲁϩⲙⲉϥ ⳿ⲛϧⲏⲧϥ ⲙⲁⲣⲉϥϣⲱⲡⲓ ⳿ⲛϧⲏⲧϥ.
21 ௨௧ அடிமையாக நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால், அதை செய்.
ⲕ̅ⲁ̅ⲁⲩⲑⲁϩⲙⲉⲕ ⲉⲕⲟⲓ ⳿ⲙⲃⲱⲕ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉⲥⲉⲣⲙⲉⲗⲓ ⲛ ⲛⲁⲕ ⲁⲗⲗⲁ ⲓⲥϫⲉ ⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟⲕ ⳿ⲉⲉⲣⲣⲉⲙϩⲉ ⲙⲁⲗⲗⲟⲛ ⲁⲣⲓⲟⲩ⳿ⲓ.
22 ௨௨ கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான்.
ⲕ̅ⲃ̅ⲡⲓⲃⲱⲕ ⲅⲁⲣ ⲉⲧⲁⲩⲑⲁϩⲙⲉϥ ϧⲉⲛ Ⲡ⳪ ⲟⲩⲁⲡⲉⲗⲉⲩⲑⲉⲣⲟⲥ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ ⲡⲉ ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ⲡⲓⲣⲉⲙϩⲉ ⲉⲧⲁⲩⲑⲁϩⲙⲉϥ ⲟⲩⲃⲱⲕ ⳿ⲛⲧⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲡⲉ.
23 ௨௩ நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமைகளாகாமல் இருங்கள்.
ⲕ̅ⲅ̅ⲁⲩϣⲉⲡ ⲑⲏⲛⲟⲩ ϧⲁ ⲟⲩⲧⲓⲙⲏ ⳿ⲙⲡⲉⲣⲉⲣⲃⲱⲕ ⳿ⲛⲛⲓⲣⲱⲙⲓ.
24 ௨௪ சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும்.
ⲕ̅ⲇ̅ⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⲛⲁ⳿ⲥⲛⲏⲟⲩ ϧⲉⲛ ⲫⲏ ⲉⲧⲁⲩⲑⲁϩⲙⲉϥ ⳿ⲛϧⲏⲧϥ ϧⲉⲛ ⲫⲁⲓ ⲙⲁⲣⲉϥϣⲱⲡⲓ ϧⲁⲧⲉⲛ ⲫϯ.
25 ௨௫ அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
ⲕ̅ⲉ̅ⲉⲑⲃⲉ ⲛⲓⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⲇⲉ ⳿ⲙⲙⲟⲛϯ ⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲧⲉⲛ Ⲡ⳪ ⲟⲩ⳿ⲅⲛⲱⲙⲏ ⲇⲉ ⲡⲉϯϯ ⳿ⲙⲙⲟⲥ ϩⲱⲥ ⳿ⲉⲁⲩⲛⲁⲓ ⲛⲏⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ Ⲡ⳪ ⲉⲑⲣⲓϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲓⲥⲧⲟⲥ.
26 ௨௬ அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ⲕ̅ⲋ̅ϯⲙⲉⲩ⳿ⲓ ⲟⲩⲛ ϫⲉ ⲛⲁⲛⲉ ⲫⲁⲓ ⳿ⲛⲧⲉϥϣⲱⲡⲓ ⲉⲑⲃⲉ ϯⲁⲛⲁⲅⲕⲏ ⲉⲧϣⲟⲡ ϫⲉ ⲛⲁⲛⲉⲥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⲉⲑⲣⲉϥϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ.
27 ௨௭ நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே.
ⲕ̅ⲍ̅⳿ⲕⲥⲟⲛϩ ⳿ⲉ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲙⲡⲉⲣⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲃⲟⲗⲕ ⳿ⲕⲃⲏⲗ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϯ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲙⲡⲉⲣⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⳿ⲥϩⲓⲙⲓ.
28 ௨௮ நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன்.
ⲕ̅ⲏ̅ⲕⲁⲛ ⲉϣⲱⲡ ⲁⲕϣⲁⲛϭⲓ ⳿ⲙⲡⲉⲕⲉⲣⲛⲟⲃⲓ ⲟⲩⲟϩ ⲉϣⲱⲡ ⲁⲥϣⲁⲛϭⲓ ⳿ⲛϫⲉ ϯⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⳿ⲙⲡⲉⲥⲉⲣⲛⲟⲃⲓ ⲉⲩ⳿ⲉϭⲓ ⲇⲉ ⳿ⲛⲟⲩϩⲟϫϩⲉϫ ⳿ⲛⲧⲟⲩⲥⲁⲣⲝ ⳿ⲛϫⲉ ⲛⲁⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ. ⳿.
29 ௨௯ மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும்,
ⲕ̅ⲑ̅⳿ⲁⲛⲟⲕ ⲇⲉ ϯϯ⳿ⲁⲥⲟ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⲫⲁⲓ ⲇⲉ ϯϫⲱ ⳿ⲙⲙⲟϥ ⲛⲁ⳿ⲥⲛⲏⲟⲩ ϫⲉ ⳿ⲡⲥⲏⲟⲩ ⳿ⲙⲡⲱⲣϥ ⲡⲉ ⲧⲟⲗⲟⲓⲡⲟⲛ ϩⲓⲛⲁ ⲛⲏ ⲉⲧⲉ ⲟⲩⲟⲛⲧⲟⲩ ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲥⲉⲉⲣ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛ ⲛⲏ ⲉⲧⲉ ⳿ⲙⲙⲟⲛⲧⲱⲟⲩ.
30 ௩0 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும்,
ⲗ̅ⲛⲏ ⲉⲧⲣⲓⲙⲓ ϩⲱⲥ ⳿ⲛⲥⲉⲣⲓⲙⲓ ⲁⲛ ⲛⲏ ⲉⲧⲣⲁϣⲓ ϩⲱⲥ ⳿ⲛⲥⲉⲣⲁϣⲓ ⲁⲛ ⲛⲏ ⲉⲧϣⲱⲡ ϩⲱⲥ ⳿ⲛⲥⲉ⳿ⲁⲙⲟⲛⲓ ⲁⲛ.
31 ௩௧ இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
ⲗ̅ⲁ̅ⲛⲏ ⲉⲧⲉⲣ⳿ⲭⲣⲁⲥⲑⲉ ⳿ⲙⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ϩⲱⲥ ⳿ⲛⲥⲉⲉⲣⲕⲁⲧⲁ⳿ⲭⲣⲁⲥⲑⲉ ⲁⲛ ⳿ϥⲛⲁⲥⲓⲛⲓ ⲅⲁⲣ ⳿ⲛϫⲉ ⲡⲓ⳿ⲥⲭⲏⲙⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓⲕⲟⲥⲙⲟⲥ.
32 ௩௨ நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
ⲗ̅ⲃ̅ϯⲟⲩⲉϣ ⲑⲏⲛⲟⲩ ⲇⲉ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲓ ⳿ⲛⲁⲧⲣⲱⲟⲩϣ ⲫⲏ ⲉⲧⲉ⳿ⲙⲡⲉϥϭⲓ ⲁϥϥⲓⲣⲱⲟⲩϣ ϧⲁ ⲛⲁ Ⲡ⳪ ϫⲉ ⲡⲱⲥ ⳿ϥⲣⲁⲛⲁϥ ⳿ⲙⲠ⳪.
33 ௩௩ திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
ⲗ̅ⲅ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲧⲁϥϭⲓ ⲁϥϥⲓⲣⲱⲟⲩϣ ϧⲁ ⲛⲁ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ϫⲉ ⲡⲱⲥ ⳿ϥⲛⲁⲣⲁⲛⲁⲥ ⳿ⲛⲧⲉϥ⳿ⲥϩⲓⲙⲓ.
34 ௩௪ அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.
ⲗ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⳿ϥⲫⲏϣ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⲉⲧⲁⲥϭⲓ ⲛⲉⲙ ϯⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⲑⲏ ⲉⲧⲉ ⳿ⲙⲡⲉⲥϭⲓ ⲁⲥϥⲓⲣⲱⲟⲩϣ ϧⲁ ⲛⲁ Ⲡ⳪ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲥϣⲱⲡⲓ ⲉⲥⲟⲩⲁⲃ ϧⲉⲛ ⲡⲉⲥⲥⲱⲙⲁ ⲛⲉⲙ ⲡⲉⲥⲡⲛ̅ⲁ̅ ⲑⲏ ⲇⲉ ⲉⲧⲁⲥϭⲓ ⲁⲥϥⲓⲣⲱⲟⲩϣ ϧⲁ ⲛⲁ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ϫⲉ ⲡⲱⲥ ⳿ⲥⲛⲁⲣⲁⲛⲁϥ ⳿ⲙⲡⲉⲥϩⲁⲓ.
35 ௩௫ இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
ⲗ̅ⲉ̅ⲫⲁⲓ ⲇⲉ ϯϫⲱ ⳿ⲙⲙⲟϥ ⲉⲑⲃⲉ ⲡⲉⲧⲉⲣⲛⲟϥⲣⲓ ⲛⲱⲧⲉⲛ ⲟⲩⲭⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲁϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲛⲟⲩϩⲁϫⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲁⲗⲗⲁ ϫⲉ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧⲉⲛ⳿ⲥⲭⲏⲙⲁ ϣⲱⲡⲓ ⲉϥⲥⲟⲩⲃⲏⲧ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ⲙⲧⲟⲛ ⳿ⲙⲙⲟⲩⲛ ⳿ⲉⲠ⳪ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧ ⲁⲧϭⲓ⳿ϩⲣⲁϥ.
36 ௩௬ ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும்.
ⲗ̅ⲋ̅ⲓⲥϫⲉ ⲇⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲁⲓ ⲙⲉⲩ⳿ⲓ ⳿ⲉϭⲓϣⲓⲡⲓ ⳿ⲉϫⲉⲛ ⲧⲉϥⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⲉϣⲱⲡ ⲁϥϣⲁⲛⲉⲣⲁⲕⲙⲏ ⳿ⲛϩⲟⲩⲟ ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲡⲉⲧⲉ⳿ⲙ⳿ⲡϣⲁ ⳿ⲛⲧⲉϥϣⲱⲡⲓ ⲡⲉⲧⲉϩⲛⲁϥ ⲙⲁⲣⲉϥⲁⲓϥ ⳿ⲛ⳿ϥⲉⲣⲛⲟⲃⲓ ⲁⲛ ⲙⲁⲣⲟⲩϭ ⲓ.
37 ௩௭ ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான்.
ⲗ̅ⲍ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲧ⳿ⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ϧⲉⲛ ⲡⲉϥϩⲏⲧ ⲉϥⲧⲁϫⲣⲏⲟⲩⲧ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲁⲛⲁⲅⲕⲏ ⲧⲟⲓ ⳿ⲉⲣⲟϥ ⲟⲩⲟⲛⲧⲉϥ ⲉⲣϣⲓϣⲓ ⳿ⲙⲙⲁⲩ ⲉⲑⲃⲉ ⲡⲉⲧⲉϩⲛⲁϥ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲁϥϯϩⲁⲡ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ϧⲉⲛ ⲡⲉϥϩⲏⲧ ⳿ⲉⲁⲣⲉϩ ⳿ⲉⲧⲉϥⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⲕⲁⲗⲱⲥ ⳿ϥⲛⲁⲁⲓⲥ.
38 ௩௮ இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.
ⲗ̅ⲏ̅ϩⲱⲥⲧⲉ ⲫⲏⲉⲧϯ ⳿ⲛⲧⲉϥⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⲉⲩⲅⲁⲙⲟⲥ ⲕⲁⲗⲱⲥ ⳿ϥⲣⲁ ⳿ⲙⲙⲟⲥ ⲟⲩⲟϩ ⲫⲏ ⲉⲧⲉ⳿ⲛ⳿ϥϯ ⳿ⲛⲑⲱϥ ⲁⲛ ⲟⲩϩⲟⲩ⳿ⲟ ⲕⲁⲗⲱⲥ ⲡⲉⲧⲉ⳿ϥⲛⲁⲁⲓϥ.
39 ௩௯ மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள்.
ⲗ̅ⲑ̅ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⲉⲥ ⲥⲱⲛϩ ⳿ⲉⲡⲉⲥϩⲁⲓ ⳿ⲉⲫⲟⲥⲟⲛ ⳿ⲭⲣⲟⲛⲟⲛ ⲉϥⲟⲛϧ ⳿ⲛϫⲉ ⲡⲉⲥϩⲁⲓ ⲉϣⲱⲡ ⲇⲉ ⲁϥϣⲁⲛⲉⲛⲕⲟⲧ ⳿ⲛϫⲉ ⲡⲉⲥϩⲁⲓ ⲟⲩⲣⲉⲙϩⲏ ⲧⲉ ⳿ⲉϭⲓ ⳿ⲙⲡⲉⲧⲉϩⲛⲁⲥ ⲙⲟⲛⲟⲛ ϧⲉⲛ Ⲡ⳪.
40 ௪0 ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.
ⲙ̅ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲥ ⲇⲉ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ ⲁⲥϣⲁⲛⲟϩⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲕⲁⲧⲁ ⲧⲁ⳿ⲅⲛⲱⲙⲏ ϯⲙⲉⲩ⳿ⲓ ⲇⲉ ϩⲱ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲡⲛ̅ⲁ̅ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧ.