< 1 கொரிந்தியர் 15 >
1 ௧ அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
ཧེ བྷྲཱཏརཿ, ཡཿ སུསཾཝཱདོ མཡཱ ཡུཥྨཏྶམཱིཔེ ནིཝེདིཏོ ཡཱུཡཉྩ ཡཾ གྲྀཧཱིཏཝནྟ ཨཱཤྲིཏཝནྟཤྩ ཏཾ པུན ཪྻུཥྨཱན྄ ཝིཛྙཱཔཡཱམི།
2 ௨ நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே.
ཡུཥྨཱཀཾ ཝིཤྭཱསོ ཡདི ཝིཏཐོ ན བྷཝེཏ྄ ཏརྷི སུསཾཝཱདཡུཀྟཱནི མམ ཝཱཀྱཱནི སྨརཏཱཾ ཡུཥྨཱཀཾ ཏེན སུསཾཝཱདེན པརིཏྲཱཎཾ ཛཱཡཏེ།
3 ௩ நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
ཡཏོ྅ཧཾ ཡད྄ ཡཏ྄ ཛྙཱཔིཏསྟདནུསཱརཱཏ྄ ཡུཥྨཱསུ མུཁྱཱཾ ཡཱཾ ཤིཀྵཱཾ སམཱརྤཡཾ སེཡཾ, ཤཱསྟྲཱནུསཱརཱཏ྄ ཁྲཱིཥྚོ྅སྨཱཀཾ པཱཔམོཙནཱརྠཾ པྲཱཎཱན྄ ཏྱཀྟཝཱན྄,
4 ௪ அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
ཤྨཤཱནེ སྠཱཔིཏཤྩ ཏྲྀཏཱིཡདིནེ ཤཱསྟྲཱནུསཱརཱཏ྄ པུནརུཏྠཱཔིཏཿ།
5 ௫ கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.
ས ཙཱགྲེ ཀཻཕཻ ཏཏཿ པརཾ དྭཱདཤཤིཥྱེབྷྱོ དརྴནཾ དཏྟཝཱན྄།
6 ௬ அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள்.
ཏཏཿ པརཾ པཉྩཤཏཱདྷིཀསཾཁྱཀེབྷྱོ བྷྲཱཏྲྀབྷྱོ ཡུགཔད྄ དརྴནཾ དཏྟཝཱན྄ ཏེཥཱཾ ཀེཙིཏ྄ མཧཱནིདྲཱཾ གཏཱ བཧུཏརཱཤྩཱདྱཱཔི ཝརྟྟནྟེ།
7 ௭ பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார்.
ཏདནནྟརཾ ཡཱཀཱུབཱཡ ཏཏྤཤྩཱཏ྄ སཪྻྭེབྷྱཿ པྲེརིཏེབྷྱོ དརྴནཾ དཏྟཝཱན྄།
8 ௮ எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
སཪྻྭཤེཥེ྅ཀཱལཛཱཏཏུལྱོ ཡོ྅ཧཾ, སོ྅ཧམཔི ཏསྱ དརྴནཾ པྲཱཔྟཝཱན྄།
9 ௯ நான் அப்போஸ்தலர்கள் எல்லோரையும்விட குறைந்தவனாக இருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் தகுதியற்றவன்.
ཨཱིཤྭརསྱ སམིཏིཾ པྲཏི དཽརཱཏྨྱཱཙརཎཱད྄ ཨཧཾ པྲེརིཏནཱམ དྷརྟྟུམ྄ ཨཡོགྱསྟསྨཱཏ྄ པྲེརིཏཱནཱཾ མདྷྱེ ཀྵུདྲཏམཤྩཱསྨི།
10 ௧0 ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது.
ཡཱདྲྀཤོ྅སྨི ཏཱདྲྀཤ ཨཱིཤྭརསྱཱནུགྲཧེཎཻཝཱསྨི; ཨཔརཾ མཱཾ པྲཏི ཏསྱཱནུགྲཧོ ནིཥྥལོ ནཱབྷཝཏ྄, ཨནྱེབྷྱཿ སཪྻྭེབྷྱོ མཡཱདྷིཀཿ ཤྲམཿ ཀྲྀཏཿ, ཀིནྟུ ས མཡཱ ཀྲྀཏསྟནྣཧི མཏྶཧཀཱརིཎེཤྭརསྱཱནུགྲཧེཎཻཝ།
11 ௧௧ ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள்.
ཨཏཨེཝ མཡཱ བྷཝེཏ྄ ཏཻ ཪྻཱ བྷཝེཏ྄ ཨསྨཱབྷིསྟཱདྲྀཤཱི ཝཱརྟྟཱ གྷོཥྱཏེ སཻཝ ཙ ཡུཥྨཱབྷི ཪྻིཤྭཱསེན གྲྀཧཱིཏཱ།
12 ௧௨ கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
མྲྀཏྱུདཤཱཏཿ ཁྲཱིཥྚ ཨུཏྠཱཔིཏ ཨིཏི ཝཱརྟྟཱ ཡདི ཏམདྷི གྷོཥྱཏེ ཏརྷི མྲྀཏལོཀཱནཱམ྄ ཨུཏྠིཏི རྣཱསྟཱིཏི ཝཱག྄ ཡུཥྨཱཀཾ མདྷྱེ ཀཻཤྩིཏ྄ ཀུཏཿ ཀཐྱཏེ?
13 ௧௩ மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே.
མྲྀཏཱནཱམ྄ ཨུཏྠིཏི ཪྻདི ན བྷཝེཏ྄ ཏརྷི ཁྲཱིཥྚོ྅པི ནོཏྠཱཔིཏཿ
14 ௧௪ கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண்.
ཁྲཱིཥྚཤྩ ཡདྱནུཏྠཱཔིཏཿ སྱཱཏ྄ ཏརྷྱསྨཱཀཾ གྷོཥཎཾ ཝིཏཐཾ ཡུཥྨཱཀཾ ཝིཤྭཱསོ྅པི ཝིཏཐཿ།
15 ௧௫ மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
ཝཡཉྩེཤྭརསྱ མྲྀཥཱསཱཀྵིཎོ བྷཝཱམཿ, ཡཏཿ ཁྲཱིཥྚ སྟེནོཏྠཱཔིཏཿ ཨིཏི སཱཀྵྱམ྄ ཨསྨཱབྷིརཱིཤྭརམདྷི དཏྟཾ ཀིནྟུ མྲྀཏཱནཱམུཏྠིཏི ཪྻདི ན བྷཝེཏ྄ ཏརྷི ས ཏེན ནོཏྠཱཔིཏཿ།
16 ௧௬ மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை.
ཡཏོ མྲྀཏཱནཱམུཏྠིཏི ཪྻཏི ན བྷཝེཏ྄ ཏརྷི ཁྲཱིཥྚོ྅པྱུཏྠཱཔིཏཏྭཾ ན གཏཿ།
17 ௧௭ கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள்.
ཁྲཱིཥྚསྱ ཡདྱནུཏྠཱཔིཏཿ སྱཱཏ྄ ཏརྷི ཡུཥྨཱཀཾ ཝིཤྭཱསོ ཝིཏཐཿ, ཡཱུཡམ྄ ཨདྱཱཔི སྭཔཱཔེཥུ མགྣཱསྟིཥྛཐ།
18 ௧௮ கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே.
ཨཔརཾ ཁྲཱིཥྚཱཤྲིཏཱ ཡེ མཱནཝཱ མཧཱནིདྲཱཾ གཏཱསྟེ྅པི ནཱཤཾ གཏཱཿ།
19 ௧௯ இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்.
ཁྲཱིཥྚོ ཡདི ཀེཝལམིཧལོཀེ ྅སྨཱཀཾ པྲཏྱཱཤཱབྷཱུམིཿ སྱཱཏ྄ ཏརྷི སཪྻྭམརྟྱེབྷྱོ ཝཡམེཝ དུརྦྷཱགྱཱཿ།
20 ௨0 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார்.
ཨིདཱནཱིཾ ཁྲཱིཥྚོ མྲྀཏྱུདཤཱཏ ཨུཏྠཱཔིཏོ མཧཱནིདྲཱགཏཱནཱཾ མདྷྱེ པྲཐམཕལསྭརཱུཔོ ཛཱཏཤྩ།
21 ௨௧ மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது.
ཡཏོ ཡདྭཏ྄ མཱནུཥདྭཱརཱ མྲྀཏྱུཿ པྲཱདུརྦྷཱུཏསྟདྭཏ྄ མཱནུཥདྭཱརཱ མྲྀཏཱནཱཾ པུནརུཏྠིཏིརཔི པྲདུརྦྷཱུཏཱ།
22 ௨௨ ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
ཨཱདམཱ ཡཐཱ སཪྻྭེ མརཎཱདྷཱིནཱ ཛཱཏཱསྟཐཱ ཁྲཱིཥྚེན སཪྻྭེ ཛཱིཝཡིཥྱནྟེ།
23 ௨௩ அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
ཀིནྟྭེཀཻཀེན ཛནེན ནིཛེ ནིཛེ པཪྻྱཱཡ ཨུཏྠཱཏཝྱཾ པྲཐམཏཿ པྲཐམཛཱཏཕལསྭརཱུཔེན ཁྲཱིཥྚེན, དྭིཏཱིཡཏསྟསྱཱགམནསམཡེ ཁྲཱིཥྚསྱ ལོཀཻཿ།
24 ௨௪ அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
ཏཏཿ པརམ྄ ཨནྟོ བྷཝིཥྱཏི ཏདཱནཱིཾ ས སཪྻྭཾ ཤཱསནམ྄ ཨདྷིཔཏིཏྭཾ པརཱཀྲམཉྩ ལུཔྟྭཱ སྭཔིཏརཱིཤྭརེ རཱཛཏྭཾ སམརྤཡིཥྱཏི།
25 ௨௫ எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும்.
ཡཏཿ ཁྲཱིཥྚསྱ རིཔཝཿ སཪྻྭེ ཡཱཝཏ྄ ཏེན སྭཔཱདཡོརདྷོ ན ནིཔཱཏཡིཥྱནྟེ ཏཱཝཏ྄ ཏེནཻཝ རཱཛཏྭཾ ཀརྟྟཝྱཾ།
26 ௨௬ அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம்.
ཏེན ཝིཛེཏཝྱོ ཡཿ ཤེཥརིཔུཿ ས མྲྀཏྱུརེཝ།
27 ௨௭ எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது.
ལིཁིཏམཱསྟེ སཪྻྭཱཎི ཏསྱ པཱདཡོ ཪྻཤཱིཀྲྀཏཱནི། ཀིནྟུ སཪྻྭཱཎྱེཝ ཏསྱ ཝཤཱིཀྲྀཏཱནཱིཏྱུཀྟེ སཏི སཪྻྭཱཎི ཡེན ཏསྱ ཝཤཱིཀྲྀཏཱནི ས སྭཡཾ ཏསྱ ཝཤཱིབྷཱུཏོ ན ཛཱཏ ཨིཏི ཝྱཀྟཾ།
28 ௨௮ அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
སཪྻྭེཥུ ཏསྱ ཝཤཱིབྷཱུཏེཥུ སཪྻྭཱཎི ཡེན པུཏྲསྱ ཝཤཱིཀྲྀཏཱནི སྭཡཾ པུཏྲོ྅པི ཏསྱ ཝཤཱིབྷཱུཏོ བྷཝིཥྱཏི ཏཏ ཨཱིཤྭརཿ སཪྻྭེཥུ སཪྻྭ ཨེཝ བྷཝིཥྱཏི།
29 ௨௯ மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
ཨཔརཾ པརེཏལོཀཱནཱཾ ཝིནིམཡེན ཡེ མཛྫྱནྟེ ཏཻཿ ཀིཾ ལཔྶྱཏེ? ཡེཥཱཾ པརེཏལོཀཱནཱམ྄ ཨུཏྠིཏིཿ ཀེནཱཔི པྲཀཱརེཎ ན བྷཝིཥྱཏི ཏེཥཱཾ ཝིནིམཡེན ཀུཏོ མཛྫནམཔི ཏཻརངྒཱིཀྲིཡཏེ?
30 ௩0 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாக இருக்கிறோம்?
ཝཡམཔི ཀུཏཿ པྲཏིདཎྜཾ པྲཱཎབྷཱིཏིམ྄ ཨངྒཱིཀུརྨྨཧེ?
31 ௩௧ நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன்.
ཨསྨཏྤྲབྷུནཱ ཡཱིཤུཁྲཱིཥྚེན ཡུཥྨཏྟོ མམ ཡཱ ཤླཱགྷཱསྟེ ཏསྱཱཿ ཤཔཐཾ ཀྲྀཏྭཱ ཀཐཡཱམི དིནེ དིནེ྅ཧཾ མྲྀཏྱུཾ གཙྪཱམི།
32 ௩௨ நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர்கள் வழக்கமாகச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
ཨིཕིཥནགརེ ཝནྱཔཤུབྷིཿ སཱརྡྡྷཾ ཡདི ལཽཀིཀབྷཱཝཱཏ྄ མཡཱ ཡུདྡྷཾ ཀྲྀཏཾ ཏརྷི ཏེན མམ ཀོ ལཱབྷཿ? མྲྀཏཱནཱམ྄ ཨུཏྠིཏི ཪྻདི ན བྷཝེཏ྄ ཏརྷི, ཀུརྨྨོ བྷོཛནཔཱནེ྅དྱ ཤྭསྟུ མྲྀཏྱུ རྦྷཝིཥྱཏི།
33 ௩௩ மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
ཨིཏྱནེན དྷརྨྨཱཏ྄ མཱ བྷྲཾཤདྷྭཾ། ཀུསཾསརྒེཎ ལོཀཱནཱཾ སདཱཙཱརོ ཝིནཤྱཏི།
34 ௩௪ நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
ཡཱུཡཾ ཡཐོཙིཏཾ སཙཻཏནྱཱསྟིཥྛཏ, པཱཔཾ མཱ ཀུརུདྷྭཾ, ཡཏོ ཡུཥྨཱཀཾ མདྷྱ ཨཱིཤྭརཱིཡཛྙཱནཧཱིནཱཿ ཀེ྅པི ཝིདྱནྟེ ཡུཥྨཱཀཾ ཏྲཔཱཡཻ མཡེདཾ གདྱཏེ།
35 ௩௫ ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால்,
ཨཔརཾ མྲྀཏལོཀཱཿ ཀཐམ྄ ཨུཏྠཱསྱནྟི? ཀཱིདྲྀཤཾ ཝཱ ཤརཱིརཾ ལབྡྷྭཱ པུནརེཥྱནྟཱིཏི ཝཱཀྱཾ ཀཤྩིཏ྄ པྲཀྵྱཏི།
36 ௩௬ புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே.
ཧེ ཨཛྙ ཏྭཡཱ ཡད྄ བཱིཛམ྄ ཨུཔྱཏེ ཏད྄ ཡདི ན མྲིཡེཏ ཏརྷི ན ཛཱིཝཡིཥྱཏེ།
37 ௩௭ நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
ཡཡཱ མཱུརྟྟྱཱ ནིརྒནྟཝྱཾ སཱ ཏྭཡཱ ནོཔྱཏེ ཀིནྟུ ཤུཥྐཾ བཱིཛམེཝ; ཏཙྩ གོདྷཱུམཱདཱིནཱཾ ཀིམཔི བཱིཛཾ བྷཝིཏུཾ ཤཀྣོཏི།
38 ௩௮ அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
ཨཱིཤྭརེཎེཝ ཡཐཱབྷིལཱཥཾ ཏསྨཻ མཱུརྟྟི རྡཱིཡཏེ, ཨེཀཻཀསྨཻ བཱིཛཱཡ སྭཱ སྭཱ མཱུརྟྟིརེཝ དཱིཡཏེ།
39 ௩௯ எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு.
སཪྻྭཱཎི པལལཱནི ནཻཀཝིདྷཱནི སནྟི, མནུཥྱཔཤུཔཀྵིམཏྶྱཱདཱིནཱཾ བྷིནྣརཱུཔཱཎི པལལཱནི སནྟི།
40 ௪0 வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு;
ཨཔརཾ སྭརྒཱིཡཱ མཱུརྟྟཡཿ པཱརྠིཝཱ མཱུརྟྟཡཤྩ ཝིདྱནྟེ ཀིནྟུ སྭརྒཱིཡཱནཱམ྄ ཨེཀརཱུཔཾ ཏེཛཿ པཱརྠིཝཱནཱཉྩ ཏདནྱརཱུཔཾ ཏེཛོ྅སྟི།
41 ௪௧ சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
སཱུཪྻྱསྱ ཏེཛ ཨེཀཝིདྷཾ ཙནྡྲསྱ ཏེཛསྟདནྱཝིདྷཾ ཏཱརཱཎཱཉྩ ཏེཛོ྅ནྱཝིདྷཾ, ཏཱརཱཎཱཾ མདྷྱེ྅པི ཏེཛསསྟཱརཏམྱཾ ཝིདྱཏེ།
42 ௪௨ மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;
ཏཏྲ ལིཁིཏམཱསྟེ ཡཐཱ, ‘ཨཱདིཔུརུཥ ཨཱདམ྄ ཛཱིཝཏྤྲཱཎཱི བབྷཱུཝ,’ ཀིནྟྭནྟིམ ཨཱདམ྄ (ཁྲཱིཥྚོ) ཛཱིཝནདཱཡཀ ཨཱཏྨཱ བབྷཱུཝ།
43 ௪௩ மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும்.
ཡད྄ ཨུཔྱཏེ ཏཏ྄ ཏུཙྪཾ ཡཙྩོཏྠཱསྱཏི ཏད྄ གཽརཝཱནྭིཏཾ; ཡད྄ ཨུཔྱཏེ ཏནྣིརྦྦལཾ ཡཙྩོཏྠཱསྱཏི ཏཏ྄ ཤཀྟིཡུཀྟཾ།
44 ௪௪ சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.
ཡཏ྄ ཤརཱིརམ྄ ཨུཔྱཏེ ཏཏ྄ པྲཱཎཱནཱཾ སདྨ, ཡཙྩ ཤརཱིརམ྄ ཨུཏྠཱསྱཏི ཏད྄ ཨཱཏྨནཿ སདྨ། པྲཱཎསདྨསྭརཱུཔཾ ཤརཱིརཾ ཝིདྱཏེ, ཨཱཏྨསདྨསྭརཱུཔམཔི ཤརཱིརཾ ཝིདྱཏེ།
45 ௪௫ அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.
ཏཏྲ ལིཁིཏམཱསྟེ ཡཐཱ, ཨཱདིཔུརུཥ ཨཱདམ྄ ཛཱིཝཏྤྲཱཎཱི བབྷཱུཝ, ཀིནྟྭནྟིམ ཨཱདམ྄ (ཁྲཱིཥྚོ) ཛཱིཝནདཱཡཀ ཨཱཏྨཱ བབྷཱུཝ།
46 ௪௬ ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
ཨཱཏྨསདྨ ན པྲཐམཾ ཀིནྟུ པྲཱཎསདྨཻཝ ཏཏྤཤྩཱད྄ ཨཱཏྨསདྨ།
47 ௪௭ முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
ཨཱདྱཿ པུརུཥེ མྲྀད ཨུཏྤནྣཏྭཱཏ྄ མྲྀཎྨཡོ དྭིཏཱིཡཤྩ པུརུཥཿ སྭརྒཱད྄ ཨཱགཏཿ པྲབྷུཿ།
48 ௪௮ மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
མྲྀཎྨཡོ ཡཱདྲྀཤ ཨཱསཱིཏ྄ མྲྀཎྨཡཱཿ སཪྻྭེ ཏཱདྲྀཤཱ བྷཝནྟི སྭརྒཱིཡཤྩ ཡཱདྲྀཤོ྅སྟི སྭརྒཱིཡཱཿ སཪྻྭེ ཏཱདྲྀཤཱ བྷཝནྟི།
49 ௪௯ மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
མྲྀཎྨཡསྱ རཱུཔཾ ཡདྭད྄ ཨསྨཱབྷི རྡྷཱརིཏཾ ཏདྭཏ྄ སྭརྒཱིཡསྱ རཱུཔམཔི དྷཱརཡིཥྱཏེ།
50 ௫0 சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை.
ཧེ བྷྲཱཏརཿ, ཡུཥྨཱན྄ པྲཏི ཝྱཱཧརཱམི, ཨཱིཤྭརསྱ རཱཛྱེ རཀྟམཱཾསཡོརདྷིཀཱརོ བྷཝིཏུཾ ན ཤཀྣོཏི, ཨཀྵཡཏྭེ ཙ ཀྵཡསྱཱདྷིཀཱརོ ན བྷཝིཥྱཏི།
51 ௫௧ இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம்.
པཤྱཏཱཧཾ ཡུཥྨབྷྱཾ ནིགཱུཌྷཱཾ ཀཐཱཾ ནིཝེདཡཱམི།
52 ௫௨ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
སཪྻྭཻརསྨཱབྷི རྨཧཱནིདྲཱ ན གམིཥྱཏེ ཀིནྟྭནྟིམདིནེ ཏཱུཪྻྱཱཾ ཝཱདིཏཱཡཱམ྄ ཨེཀསྨིན྄ ཝིཔལེ ནིམིཥཻཀམདྷྱེ སཪྻྭཻ རཱུཔཱནྟརཾ གམིཥྱཏེ, ཡཏསྟཱུརཱི ཝཱདིཥྱཏེ, མྲྀཏལོཀཱཤྩཱཀྵཡཱིབྷཱུཏཱ ཨུཏྠཱསྱནྟི ཝཡཉྩ རཱུཔཱནྟརཾ གམིཥྱཱམཿ།
53 ௫௩ அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.
ཡཏཿ ཀྵཡཎཱིཡེནཻཏེན ཤརཱིརེཎཱཀྵཡཏྭཾ པརིཧིཏཝྱཾ, མརཎཱདྷཱིནེནཻཏེན དེཧེན ཙཱམརཏྭཾ པརིཧིཏཝྱཾ།
54 ௫௪ அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
ཨེཏསྨིན྄ ཀྵཡཎཱིཡེ ཤརཱིརེ ྅ཀྵཡཏྭཾ གཏེ, ཨེཏསྨན྄ མརཎཱདྷཱིནེ དེཧེ ཙཱམརཏྭཾ གཏེ ཤཱསྟྲེ ལིཁིཏཾ ཝཙནམིདཾ སེཏྶྱཏི, ཡཐཱ, ཛཡེན གྲསྱཏེ མྲྀཏྱུཿ།
55 ௫௫ மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs )
མྲྀཏྱོ ཏེ ཀཎྚཀཾ ཀུཏྲ པརལོཀ ཛཡཿ ཀྐ ཏེ༎ (Hadēs )
56 ௫௬ மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
མྲྀཏྱོཿ ཀཎྚཀཾ པཱཔམེཝ པཱཔསྱ ཙ བལཾ ཝྱཝསྠཱ།
57 ௫௭ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ཨཱིཤྭརཤྩ དྷནྱོ བྷཝཏུ ཡཏཿ སོ྅སྨཱཀཾ པྲབྷུནཱ ཡཱིཤུཁྲཱིཥྚེནཱསྨཱན྄ ཛཡཡུཀྟཱན྄ ཝིདྷཱཔཡཏི།
58 ௫௮ ஆகவே, எனக்குப் பிரியமான சகோதரர்களே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாக இருக்காதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக.
ཨཏོ ཧེ མམ པྲིཡབྷྲཱཏརཿ; ཡཱུཡཾ སུསྠིརཱ ནིཤྩལཱཤྩ བྷཝཏ པྲབྷོཿ སེཝཱཡཱཾ ཡུཥྨཱཀཾ པརིཤྲམོ ནིཥྥལོ ན བྷཝིཥྱཏཱིཏི ཛྙཱཏྭཱ པྲབྷོཿ ཀཱཪྻྱེ སདཱ ཏཏྤརཱ བྷཝཏ།