< 1 கொரிந்தியர் 14 >
1 ௧ அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
ଜିଉନନାକା ଇଟ୍କାଡ଼୍ କିୟାଟ୍, ଆରେ ଆତ୍ମିକ୍ ଦାନ୍ସବୁ ପାୟାନି କାଜିଂ, ବେସି ଇନେସ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ନାଦେର୍, ଇଦାଂ କାଜିଂ ରବେ ସେସ୍ଟା କିୟାଟ୍ ।
2 ௨ ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
ଇନାକିଦେଂକି ଇନେନ୍ ଲକାର୍ ବାସା କାତା ଇନାନ୍, ହେୱାନ୍ ମାନାୟ୍ତିଙ୍ଗ୍ ବେଣ୍ ଇନୁନ୍, ମତର୍ ଇସ୍ୱର୍ତିଂ ଇନାନ୍, ଲାଗିଂ ଇନେର୍ ହେଦାଂ ବୁଜାଆଉନ୍, ମତର୍ ହେୱାନ୍ ଜିବୁନ୍ ହୁଦାଂ ଟିକିନିକି ବିସ୍ରେ ଇନାନ୍ ।
3 ௩ தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
ମତର୍ ଇନେନ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍ କିନାନ୍ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ପର୍ଚାର୍ କିନାନ୍, ହେୱାନ୍ ହେଦାଂ ମାନାୟାରିଂ ଇନାନ୍, ତାପାଚେ ହେୱାରିଂ ରଚ୍ନାସ୍, ୱାରିକିୟ୍ କିନାକାନ୍ ଆରି ଦୁକ୍ସାରାୟ୍ ବେଣ୍ ଇନାନ୍ ।
4 ௪ அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான்.
ଇନେନ୍ ଲକାର୍ ବାସାତ କାତା ଇନାନ୍, ହେୱାନ୍ ନିଜାର୍ତି ହାର୍ଦାକା ହପ୍ନାନ୍, ମତର୍ ଇନେନ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍ ଇନାନ୍, ହେୱାନ୍ ମଣ୍ଡ୍ଲିନି ହାର୍ଦାକା ହପ୍ନାନ୍ ।
5 ௫ நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன்.
ଏପେଙ୍ଗ୍ ୱିଜ଼ାଦେର୍ ଜେ ବିନ୍ ବାସାତ କାତା ଇନାଦେର୍, ଇଦାଂ ନା ଇଚା, ମାତର୍ ଏପେଙ୍ଗ୍ ଜେ ବେଣ୍ବାକାଣ୍ୟ୍ ଇନାଦେର୍, ଇଦାଂ ନାଦି ଆଦିକ୍ ଇଚା; ଇନେନ୍ ବିନ୍ ବାସାତ କାତା ଇନାନ୍, ହେୱାନ୍ ଜଦି ମଣ୍ଡ୍ଲି ରଚ୍ନାନ୍ ପାୟାନି କାଜିଂ ବାସାନି ଅରତ୍ କିଉନ୍, ୱାଟିଙ୍ଗ୍ ହେଦାଂ ବାଟା ଜେ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍ କିନାନ୍, ହେୱାନ୍ ଗାଜାକାନ୍ ।
6 ௬ மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன?
ଏପେଙ୍ଗ୍ ଇବେ ଏ ଟଣ୍ଡାର୍, ଆନ୍ ଜଦି ମି ଲାଗାଂ ହାଲ୍ଜି ହତି ବଚନ୍, କି ବୁଦି, କି ବେଣ୍ବାକ୍ଣାୟ୍ କିନାକା, କି ହିକ୍ୟାନି କାତା ଇନ୍ୱାଦାଂ କେବଲ୍ ବିନ୍ବାସାତ କାତା ଇନାନ୍, ଲାଗିଂ ହେବେ ଆନ୍ ମିଦାଙ୍ଗ୍ ଇନାକା ଉପ୍କାର୍ କିଦ୍ନାଙ୍ଗ୍?
7 ௭ அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்?
ହୁର୍ଡ଼ି ଆଏତ୍ କି ଗମଣ୍ ଆଏତ୍, ଜିବୁନ୍ହିଲ୍ୱି ବାଜା ଆଡ଼୍ତିସ୍ ପା ଜଦି କାଟ୍ତ ସମାନ୍ ମାନ୍ଗୁତ୍, ଲାଗିଂ ହୁର୍ଡ଼ିତ ଇନାକା ଆଡ଼୍ନାତା କି ଗମଣ୍ ଇନାକା ଆଡ଼୍ନାତା, ହେଦାଂ ଇନେସ୍ ପୁନ୍ୟାଆନାତ୍?
8 ௮ அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்?
ଆରେ, ମରି ଜଦି ବୁଜାଆୱି କାଟ୍, ଲାଗିଂ ଇନେନ୍ ଜୁଜ୍ କାଜିଂ ରଞ୍ଜ୍ନାନ୍?
9 ௯ அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே.
ହେ ଲାକେ ଏପେଙ୍ଗ୍ ପା ଜଦି ୱେନ୍ଦୁଲ୍ ହୁକେ ଆଡ଼୍ୱା ଇନି କାତା ଇନୁସ୍, ଲାଗିଂ ଇନାକା ଇନାଦେରା, ହେଦାଂ ଇନେସ୍ ପୁନ୍ୟାଆନାତ୍? ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍ ୱାରାକାଦ୍ଲିଂ ଇନାକା ଲାକେ ଆନାତ୍ ।
10 ௧0 உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
ପୁର୍ତିତ ବେସି ବାନି ବାସା ମାନାତ୍, ଆରେ ଇମ୍ଣି ସବଦ୍ ଅରତ୍ ୱାରାକା ଆକାୟ୍ ।
11 ௧௧ ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான்.
ଲାଗିଂ ଆନ୍ ଜଦି ହେ ସବଦ୍ନି ଅରତ୍ ବୁଜାଆୱିତିସ୍, ଲାଗିଂ ଇନେନ୍ ଇନାର୍, ଆନ୍ ତା କାଜିଂ ବିଦେସି ଲାକେ ଆନାଙ୍ଗ୍, ଆରେ ହେୱାନ୍ ନା ଲାଗାଂ ଅଚିନା ଲାକେ ଆନାନ୍ ।
12 ௧௨ நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்;
ହେ ମାନାୟ୍ ଏପେଙ୍ଗ୍ ପା ଆତ୍ମିକ୍ ଦାନ୍ ସବୁ ପାୟାଦେଂ ର ସେସ୍ଟା କିଜ଼ି ମାଚିଲେ ମଣ୍ଡ୍ଲି ରଚ୍ନାସ୍ ପାର୍ତି କିନାକାନ୍ କାଜିଂ ହେ ସବୁ ବେସି ପାୟା ଆଦେଂ ସେସ୍ଟା କିୟାଟ୍ ।
13 ௧௩ அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும்.
ଲାଗିଂ, ଇନେନ୍ ଲକାର୍ ବାସାତ କାତା ଇନାନ୍, ହେୱାନ୍ ଇନେସ୍ ଅରତ୍ କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ନାନ୍, ଇଦାଂ କାଜିଂ ପାର୍ତାନା କିଏନ୍ ।
14 ௧௪ எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும்.
ଇନାକିଦେଂକି ଆନ୍ ଜଦି ବିନ୍ ବାସାତ ପାର୍ତାନା କିନାଙ୍ଗ୍, ଲାଗିଂ ନା ଜିବୁନ୍ ପାର୍ତାନା କିନାତ୍, ମତର୍ ନା ବୁଦି ପାଡ଼୍ ଆହ୍ୱାକା ଆନାତ୍ ।
15 ௧௫ இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
ଲାଗିଂ ନା କିନାକା ଇନାକା? ଆନ୍ ଜିବୁନ୍ ହୁକେ ପାର୍ତାନା କିନାଙ୍ଗ୍; ଆରେ ବୁଦି ଲାହାଙ୍ଗ୍ ପା ପାର୍ତାନା କିନାଙ୍ଗ୍; ଜିବୁନ୍ ହୁକେ କେର୍ନାଙ୍ଗ୍, ଆରେ ବୁଦି ଲାହାଙ୍ଗ୍ ପା କେର୍ନାଙ୍ଗ୍ ।
16 ௧௬ இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே.
ହେଦାଂ ଆୱିତିସ୍ ଏପେଙ୍ଗ୍ ଜଦି ମି ଜିବୁନ୍ ହୁକେ ଜୁୱାର୍ ହିୟାଟ୍, ଲାଗିଂ ସାଦାସିଦା ମାନାୟ୍ ମି କାତା ବୁଜା ଆୱିତିସ୍ ଇନେସ୍ ମି ଦନ୍ୟବାଦ୍ତ ଆମେନ୍ ଇନାଦେର୍?
17 ௧௭ நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே.
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍ ହାର୍ ଲାକେ ଜୁୱାର୍ ହିନାଦେରା ସତ୍, ମତର୍ ହେ ବିନ୍ନିକାନ୍ତି ହାର୍ ଆମାଟ୍ ।
18 ௧௮ உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ଆନ୍ ମି ୱିଜ଼ାଦେର୍ ତାଙ୍ଗ୍ ଆଦିକ୍ ଲାକେ ଲକାର୍ ବାସାତ କାତା ଇନାଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ଇସ୍ୱର୍ତିଂ ଜୁୱାର୍ ହିନାଙ୍ଗା;
19 ௧௯ அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும்.
ଆତିସ୍ପା ଆନ୍ ଇନେସ୍କି ବିନ୍ନିକାରିଂ ପା ହିକ୍ୟା ହିଦେଂ ଆଡ୍ନାଙ୍ଗ୍, ଇଦାଂ କାଜିଂ ମଣ୍ଡ୍ଲିତ ଲକାର୍ ବାସାତ ଦସ୍ ହାଜାର୍ ବେଣ୍ ଇନି ବାଟା ଇଚିସ୍ ବୁଦି ଲାହାଙ୍ଗ୍ ପାଞ୍ଚ୍ଗଟା ବେଣ୍ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ମାନ୍ କିନାଙ୍ଗ୍ ।
20 ௨0 சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.
ଏ ଟଣ୍ଡାର୍, ବୁଦିତ ହିମ୍ଣା ଲାକେ ଆମାଟ୍, ଇଚିସ୍ ବାନ୍ୟା ବିସ୍ରେ ହିରୁହିମ୍ଣା ଲାକେ ଆଡୁ, ମତର୍ ବୁଦିତ ଏପେଙ୍ଗ୍ ଗାଜାକାର୍ ଆଡୁ ।
21 ௨௧ மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
ମସାତି ବିଦିତ ଲେକାମାନାତ୍, ମାପ୍ରୁ ଇନାନ୍, ବିଦେସ୍ନି ବେଣ୍ଇନାକାର୍ ହୁକେ ଆରି ବିଦେସ୍ନିକାର୍ତି ୱେୟ୍ ହୁକେ ଆସେଙ୍ଗ୍ ଇ ମାନାୟାରିଂ କାତା ଇନାସ୍, ତା ଆତିସ୍ ପା ହେୱାର୍ ମା କାତା ୱେଞ୍ଜୁର୍ ।
22 ௨௨ அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது.
ଲାଗିଂ ଲକାର୍ ବାସାତ କାତା ଇନାକା ପାର୍ତିନିକାର୍ତି କାଜିଂ ଚିନ୍ ଲାକେ ଆକାୟ୍, ମତର୍ ପାର୍ତିକିୱାକାର୍ତି କାଜିଂ ଚିନ୍ ଲାକେ; ବିନ୍ ପାକ୍ୟାତ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକା ଇନାକା ପାର୍ତିକିୱାକାର୍ତି କାଜିଂ ଚିନ୍ ଲାକେ ଆକାୟ୍, ମତର୍ ପାର୍ତି କିନାକାର୍ତି କାଜିଂ ଚିନ୍ ଲାକେ ।
23 ௨௩ ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா?
ଆରେ ପା ସବୁ ମଣ୍ଡ୍ଲିଂ ଜଦି ମେହା ଆନିକ୍ ଆରି ୱିଜ଼ାର୍ ଲକାର୍ ବାସାତ ବେଣ୍ ଇନାର୍, ଆରେ ସଲ୍କେ କି ପାର୍ତିକିୱି ମାନାୟାର୍ ୱାନାର୍, ତା ଆତିସ୍ ଏପେଙ୍ଗ୍ ପାଗ୍ଲା ଇଞ୍ଜି ଇନାକା ହେୱାର୍ ଇନୁର୍?
24 ௨௪ எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான்.
ମତର୍ ଜଦି ୱିଜ଼ାର୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକା ଇନାର୍, ଆରେ ରୱାନ୍ ପାର୍ତି କିୱାକାନ୍ କି ସଲ୍କେନି ଲକ୍ ୱାନାନ୍, ଲାଗିଂ ହେୱାନ୍ ୱିଜ଼ାର୍ତି ହୁକେ ଦସି ଇଞ୍ଜି ପାର୍ମାଣ୍ ଆନାତ୍, ୱିଜ଼ାର୍ତି ହୁକେ ବିଚାର୍ ଆନାତ୍,
25 ௨௫ அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.
ତା ୱାସ୍କିନି ଡ଼ୁକ୍ତି ବିସ୍ରେ ସବୁ ହନାତ୍; ହେବେ ହେୱାନ୍ ମୁମ୍ ତାରେନ୍ କିନାନ୍ ଆରି ଇସ୍ୱର୍ ଜେ ହାତ୍ପା ମି ବିତ୍ରେ ମାନାନ୍, ଇଦାଂ ମାନି କିଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜୁୱାର୍ କିନାଦେର୍ ।
26 ௨௬ நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நிய மொழியைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் விளக்கம் சொல்லுகிறான். சகோதரர்களே, இது என்ன? அனைத்தும் பக்திவளர்ச்சிக்கேதுவாகச் செய்யப்படவேண்டும்.
ଏ ଟଣ୍ଡାର୍, ଆରେ ତଣ୍ଦେକ୍ ତେବେ କାମାୟ୍ ଇନାକା? ଏପେଙ୍ଗ୍ ମେହାଆନି ସମୁତ କେର୍କଣ୍, କି ହିକ୍ୟା, କି ହତି ବଚନ୍, କି ପରବାସା କି ବାସାନି ଅରତ୍, ଏଲେଙ୍ଗ୍ ୱିଜ଼ାର୍ତି ଇନାକା କି ଇନାକା ମାନାତ୍ । ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ରଚ୍ନି କାଜିଂ କିୟାଆୟେତ୍ ।
27 ௨௭ யாராவது அந்நிய மொழியிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டும் அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டும் பேசவும், அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவும், இன்னொருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
ଜଦି ଇନେର୍ ଲକାର୍ ବାସାତ କାତା ଇନାନ୍, ଲାଗିଂ ରିୟାର୍ ନଲେ ଆଦିକ୍ ଆତିସ୍ ତିନ୍ ଜାଣ୍ ପାଲି ଇସାପ୍ତାଂ ଇନାର୍, ଆରେ ରୱାନ୍ ଅରତ୍ କିଏନ୍ ।
28 ௨௮ அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும்.
ମତର୍ ଜଦି ଇମ୍ଣି ଅରତ୍ ଇନାକାନ୍ ମାନୁନ୍, ତା ଆତିସ୍ ହେୱାନ୍ ମଣ୍ଡ୍ଲିତ ଚିମ୍ରା ମାନେନ୍ ଆରି ମାନେମାନେ ଇସ୍ୱର୍ତିଂ ଇନେନ୍ ।
29 ௨௯ தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கவேண்டும்.
ଆରେ, ରିୟାର୍ କି ତିନ୍ ଜାଣ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକା ଇନେର୍, ଆରେ ବିନ୍ନିକାର୍ ବିଚାର୍ କିଏର୍ ।
30 ௩0 அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும்.
ମତର୍ କୁଚ୍ଚାକାର୍ ବିନେ ଇନେର୍ କାଜିଂ ଜଦି ଇମ୍ଣି ବଚନ୍ ହନାତ୍, ତା ଆତିସ୍ ପର୍ତୁମ୍ ନିକାନ୍ ଚିମ୍ରା ଆୟେନ୍ ।
31 ௩௧ எல்லோரும் கற்கிறதற்கும் எல்லோரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனம் சொல்லலாம்.
ଇନାକିଦେଂକି ଇନେସ୍ ୱିଜ଼ାର୍ ହିକ୍ୟା ପାୟାନାର୍, ଆରେ ୱିଜ଼ାର୍ ଗିୟାନ୍ ପାୟା ଆନାର୍, ଇଦାଂ କାଜିଂ ଏପେଙ୍ଗ୍ ୱିଜ଼ାଦେର୍ ରୱାନ୍ ରୱାନ୍ ଜିସୁ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକା ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ନାଦେର୍ ।
32 ௩௨ தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.
ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାନ୍ ଜିବୁନ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ମେହାଣ୍ ।
33 ௩௩ தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ରାଟୁନି ଇସ୍ୱର୍ ଆକାୟ୍, ମତର୍ ହେୱାନ୍ ସୁସ୍ତା ୱାରିନି ଇସ୍ୱର୍ । ଇସ୍ୱର୍ତି ବିନ୍ବିନ୍ ସାଦୁର୍ ପାର୍ତାନା ମଣ୍ଡ୍ଲିତ ଇନେସ୍ ।
34 ௩௪ சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
ସାଦୁର୍ତି ୱିଜ଼ୁ ମଣ୍ଡ୍ଲିତ ଇନେସ୍ ଆଜ଼ି ମାନାତ୍, ହେ ଲାକେ କଗ୍ଲେହିମ୍ଣାଂ ମଣ୍ଡ୍ଲିତ ଚିମ୍ରା ଆଜ଼ି ମାନେକ୍, ଲାଗିଂ ବେଣ୍ ଇନି କାଜିଂ ହେୱେକ୍ ହେଲ ପାୟାୱିତିକ୍ନା, ଇଚିସ୍ ବିଦିନି ନିତି ଇସାପ୍ତାଂ ହେୱେକ୍ ମେହାଜ଼ି ମାନେକ୍ ।
35 ௩௫ அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.
ହେୱେକ୍ ଜଦି ଇମ୍ଣି ବିସ୍ରେ ବୁଜାଆଦେଂ ମାନ୍କିନିକ୍, ତେବେ ଇଞ୍ଜ ଜାର୍ ଜାର୍ ଆଣ୍ଡ୍ରାକାଂ ୱେନ୍ବେକ୍, ଇନାକିଦେଂକି ମଣ୍ଡ୍ଲି ବିତ୍ରେ ବେଣ୍ ଇନାକା କଗ୍ଲେକ୍ ପାକ୍ୟାତ ଲାଜୁ ।
36 ௩௬ தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது?
ଇନାକା? ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ କି ମିତାକେଣ୍ଡାଙ୍ଗ୍ ହତ୍ତାତ୍ନା? କି କେବଲ୍ ମିଦାଙ୍ଗ୍ ଲାଗାଂ ୱାତାତ୍ନା?
37 ௩௭ ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ଇନେର୍ ଜଦି ଜାର୍ତିଂ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାନ୍ କି ଆତ୍ମିକ୍ ଦାନ୍ ପାୟାତାଙ୍ଗ୍ନା ଇଞ୍ଜି ମାନେ କିତାର୍, ତା ଆତିସ୍ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନା ଇନାକା ଲେକିକିନାଙ୍ଗା, ହେ ସବୁ ଜେ ମାପ୍ରୁତି ବଲ୍, ଇଦାଂ ହେୱାନ୍ ପୁନେନ୍ ।
38 ௩௮ ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.
ମତର୍ ଜଦି ହେୱାନ୍ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡୁନ୍, ତେବେ ହେୱାନ୍ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ୱାକାନ୍ ମାନେନ୍ ।
39 ௩௯ இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள்.
ଲାଗିଂ ଏ ନା ଟଣ୍ଡାର୍, ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକା ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ହାତ୍ପା ସେସ୍ଟା କିୟାଟ୍; ଆରେ, ଲକାର୍ ବାସାତ ବେଣ୍ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ମୁନା କିମାଟ୍ ।
40 ௪0 அனைத்து காரியங்களும் நல்லொழுக்கமாகவும், முறையாகவும் செய்யப்படவேண்டும்.
ମତର୍ ୱିଜ଼ୁ ହାତ୍ପା ବାବ୍ରେ ହାର୍ ଇସାବ୍ରେ କିୟାଆଏତ୍ ।