< 1 கொரிந்தியர் 11 >

1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள்.
హే భ్రాతరః, యూయం సర్వ్వస్మిన్ కార్య్యే మాం స్మరథ మయా చ యాదృగుపదిష్టాస్తాదృగాచరథైతత్కారణాత్ మయా ప్రశంసనీయా ఆధ్బే|
2 சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன்.
తథాపి మమైషా వాఞ్ఛా యద్ యూయమిదమ్ అవగతా భవథ,
3 ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
ఏకైకస్య పురుషస్యోత్తమాఙ్గస్వరూపః ఖ్రీష్టః, యోషితశ్చోత్తమాఙ్గస్వరూపః పుమాన్, ఖ్రీష్టస్య చోత్తమాఙ్గస్వరూప ఈశ్వరః|
4 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான்.
అపరమ్ ఆచ్ఛాదితోత్తమాఙ్గేన యేన పుంసా ప్రార్థనా క్రియత ఈశ్వరీయవాణీ కథ్యతే వా తేన స్వీయోత్తమాఙ్గమ్ అవజ్ఞాయతే|
5 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே.
అనాచ్ఛాదితోత్తమాఙ్గయా యయా యోషితా చ ప్రార్థనా క్రియత ఈశ్వరీయవాణీ కథ్యతే వా తయాపి స్వీయోత్తమాఙ్గమ్ అవజ్ఞాయతే యతః సా ముణ్డితశిరఃసదృశా|
6 பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
అనాచ్ఛాదితమస్తకా యా యోషిత్ తస్యాః శిరః ముణ్డనీయమేవ కిన్తు యోషితః కేశచ్ఛేదనం శిరోముణ్డనం వా యది లజ్జాజనకం భవేత్ తర్హి తయా స్వశిర ఆచ్ఛాద్యతాం|
7 ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள்.
పుమాన్ ఈశ్వరస్య ప్రతిమూర్త్తిః ప్రతితేజఃస్వరూపశ్చ తస్మాత్ తేన శిరో నాచ్ఛాదనీయం కిన్తు సీమన్తినీ పుంసః ప్రతిబిమ్బస్వరూపా|
8 ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள்.
యతో యోషాతః పుమాన్ నోదపాది కిన్తు పుంసో యోషిద్ ఉదపాది|
9 ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள்.
అధికన్తు యోషితః కృతే పుంసః సృష్టి ర్న బభూవ కిన్తు పుంసః కృతే యోషితః సృష్టి ర్బభూవ|
10 ௧0 ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
ఇతి హేతో ర్దూతానామ్ ఆదరాద్ యోషితా శిరస్యధీనతాసూచకమ్ ఆవరణం ధర్త్తవ్యం|
11 ௧௧ ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை.
తథాపి ప్రభో ర్విధినా పుమాంసం వినా యోషిన్న జాయతే యోషితఞ్చ వినా పుమాన్ న జాయతే|
12 ௧௨ பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது.
యతో యథా పుంసో యోషిద్ ఉదపాది తథా యోషితః పుమాన్ జాయతే, సర్వ్వవస్తూని చేశ్వరాద్ ఉత్పద్యన్తే|
13 ௧௩ பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
యుష్మాభిరేవైతద్ వివిచ్యతాం, అనావృతయా యోషితా ప్రార్థనం కిం సుదృశ్యం భవేత్?
14 ௧௪ ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும்,
పురుషస్య దీర్ఘకేశత్వం తస్య లజ్జాజనకం, కిన్తు యోషితో దీర్ఘకేశత్వం తస్యా గౌరవజనకం
15 ௧௫ பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
యత ఆచ్ఛాదనాయ తస్యై కేశా దత్తా ఇతి కిం యుష్మాభిః స్వభావతో న శిక్ష్యతే?
16 ௧௬ ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.
అత్ర యది కశ్చిద్ వివదితుమ్ ఇచ్ఛేత్ తర్హ్యస్మాకమ్ ఈశ్వరీయసమితీనాఞ్చ తాదృశీ రీతి ర్న విద్యతే|
17 ௧௭ உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே.
యుష్మాభి ర్న భద్రాయ కిన్తు కుత్సితాయ సమాగమ్యతే తస్మాద్ ఏతాని భాషమాణేన మయా యూయం న ప్రశంసనీయాః|
18 ௧௮ முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
ప్రథమతః సమితౌ సమాగతానాం యుష్మాకం మధ్యే భేదాః సన్తీతి వార్త్తా మయా శ్రూయతే తన్మధ్యే కిఞ్చిత్ సత్యం మన్యతే చ|
19 ௧௯ உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
యతో హేతో ర్యుష్మన్మధ్యే యే పరీక్షితాస్తే యత్ ప్రకాశ్యన్తే తదర్థం భేదై ర్భవితవ్యమేవ|
20 ௨0 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான்.
ఏకత్ర సమాగతై ర్యుష్మాభిః ప్రభావం భేజ్యం భుజ్యత ఇతి నహి;
21 ௨௧ இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே.
యతో భోజనకాలే యుష్మాకమేకైకేన స్వకీయం భక్ష్యం తూర్ణం గ్రస్యతే తస్మాద్ ఏకో జనో బుభుక్షితస్తిష్ఠతి, అన్యశ్చ పరితృప్తో భవతి|
22 ௨௨ சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன்.
భోజనపానార్థం యుష్మాకం కిం వేశ్మాని న సన్తి? యుష్మాభి ర్వా కిమ్ ఈశ్వరస్య సమితిం తుచ్ఛీకృత్య దీనా లోకా అవజ్ఞాయన్తే? ఇత్యనేన మయా కిం వక్తవ్యం? యూయం కిం మయా ప్రశంసనీయాః? ఏతస్మిన్ యూయం న ప్రశంసనీయాః|
23 ௨௩ நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
ప్రభుతో య ఉపదేశో మయా లబ్ధో యుష్మాసు సమర్పితశ్చ స ఏషః|
24 ௨௪ ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
పరకరసమర్పణక్షపాయాం ప్రభు ర్యీశుః పూపమాదాయేశ్వరం ధన్యం వ్యాహృత్య తం భఙ్క్త్వా భాషితవాన్ యుష్మాభిరేతద్ గృహ్యతాం భుజ్యతాఞ్చ తద్ యుష్మత్కృతే భగ్నం మమ శరీరం; మమ స్మరణార్థం యుష్మాభిరేతత్ క్రియతాం|
25 ௨௫ போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
పునశ్చ భేజనాత్ పరం తథైవ కంసమ్ ఆదాయ తేనోక్తం కంసోఽయం మమ శోణితేన స్థాపితో నూతననియమః; యతివారం యుష్మాభిరేతత్ పీయతే తతివారం మమ స్మరణార్థం పీయతాం|
26 ௨௬ ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
యతివారం యుష్మాభిరేష పూపో భుజ్యతే భాజనేనానేన పీయతే చ తతివారం ప్రభోరాగమనం యావత్ తస్య మృత్యుః ప్రకాశ్యతే|
27 ௨௭ இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான்.
అపరఞ్చ యః కశ్చిద్ అయోగ్యత్వేన ప్రభోరిమం పూపమ్ అశ్నాతి తస్యానేన భాజనేన పివతి చ స ప్రభోః కాయరుధిరయో ర్దణ్డదాయీ భవిష్యతి|
28 ௨௮ எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும்.
తస్మాత్ మానవేనాగ్ర ఆత్మాన పరీక్ష్య పశ్చాద్ ఏష పూపో భుజ్యతాం కంసేనానేన చ పీయతాం|
29 ௨௯ ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான்.
యేన చానర్హత్వేన భుజ్యతే పీయతే చ ప్రభోః కాయమ్ అవిమృశతా తేన దణ్డప్రాప్తయే భుజ్యతే పీయతే చ|
30 ௩0 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள்.
ఏతత్కారణాద్ యుష్మాకం భూరిశో లోకా దుర్బ్బలా రోగిణశ్చ సన్తి బహవశ్చ మహానిద్రాం గతాః|
31 ௩௧ நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம்.
అస్మాభి ర్యద్యాత్మవిచారోఽకారిష్యత తర్హి దణ్డో నాలప్స్యత;
32 ௩௨ நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
కిన్తు యదాస్మాకం విచారో భవతి తదా వయం జగతో జనైః సమం యద్ దణ్డం న లభామహే తదర్థం ప్రభునా శాస్తిం భుంజ్మహే|
33 ௩௩ ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
హే మమ భ్రాతరః, భోజనార్థం మిలితానాం యుష్మాకమ్ ఏకేనేతరోఽనుగృహ్యతాం|
34 ௩௪ நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.
యశ్చ బుభుక్షితః స స్వగృహే భుఙ్క్తాం| దణ్డప్రాప్తయే యుష్మాభి ర్న సమాగమ్యతాం| ఏతద్భిన్నం యద్ ఆదేష్టవ్యం తద్ యుష్మత్సమీపాగమనకాలే మయాదేక్ష్యతే|

< 1 கொரிந்தியர் 11 >