< 1 கொரிந்தியர் 11 >

1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள்.
जेड़ा आऊँ मसीह री जी चाल चलूँआ, तुसे मेरी जी चाल चलो।
2 சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன்.
आऊँ तुसा खे सराऊँआ कि सबी गल्ला रे तुसे माखे याद करोए और जो शिक्षा मैं तुसा खे देई राखी, तिजी रा सावदानिया साथे पालण करदे रओ।
3 ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
पर आऊँ चाऊँआ कि तुसे एसा गल्ला खे जाणी लो कि हर एकी मर्दो रा सिर मसीह ए और जवाणसा रा सिर मर्द ए और मसीह रा सिर परमेशर ए।
4 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான்.
जो मर्द सिर टकी की प्रार्थना और भविष्यबाणी करोआ, से मसीह री बेज्जती करोआ जो कि तेसरा सिर ए।
5 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே.
पर जो जवाणस क्वाड़े सिरे प्रार्थना या भविष्यबाणी करोई, से आपणे लाड़े री बेज्जती करोई जो कि तेसा रा सिर ए, कऊँकि से गँजी ऊणे रे बराबर ए।
6 பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
जे जवाणस चादरु नि टखो, तो बाल़ बी कटाई लो, जे जवाणसा खे बाल़ कटवाणा या सिर गँजा करना शर्मा री गल्ल ए, तो चादरु टखो।
7 ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள்.
आ, मर्दो खे आपणा सिर टकणा ठीक निए, कऊँकि मर्द परमेशरो रे रूपो रे बणाई राखेया और से तेसरी महिमा ए, ईंयां ई जवाणस बी मर्दो री महिमा खे दखाओई।
8 ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள்.
कऊँकि पईला मर्द आदम जवाणसा ते नि ऊआ, पर पईली जवाणस हव्वा मर्दो ते ऊई।
9 ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள்.
और मर्द जवाणसा खे नि बणाया, पर जवाणस मर्दो री तंईं बणाई राखी।
10 ௧0 ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
इजी री खातर इजी बजअ ते और स्वर्गदूता री बजअ ते जवाणसा खे ठीक ए कि से आपणी अधीनता दखाणे खे आपणे सिरो खे टकी की राखो।
11 ௧௧ ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை.
तेबे बी प्रभुए रे ना तो जवाणस बिना मर्दो ते और ना मर्द बिना जवाणसा ते ए।
12 ௧௨ பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது.
कऊँकि जिंयाँ जवाणस मर्दो ते आई, तिंयाँ ई एबे हर मर्द रा जन्म जवाणसा ते ओआ और सब चीजा परमेशरो ते आओईया।
13 ௧௩ பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
तुसे आपू ई सोचो कि क्या जवाणसा खे क्वाड़े सिरे परमेशरो ते प्रार्थना करना खरी गल्ल ए?
14 ௧௪ ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும்,
क्या कुदरती तौरो पाँदे तुसे नि जाणदे कि जे मांणू लांबे बाल़ राखो, तो तेसखे बेज्जतिया री गल्ल ए।
15 ௧௫ பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
पर जे जवाणस लांबे बाल़ राखो तो तेसा खे शोभा ए, कऊँकि बाल़ तेसा खे टखणे खे देई राखे।
16 ௧௬ ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.
पर जे कोई बईस करना चाओ, तो ये जाणी लो कि ना म्हारी और ना परमेशरो री मण्डल़िया री एड़ी रवाज ए।
17 ௧௭ உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே.
ये आज्ञा देंदे ऊए आऊँ तुसा खे नि सरांदा, कऊँकि आराधना सभा रे तुसा रे कट्ठे ऊणे ते पलाई निए, पर नुकशाण ओआ।
18 ௧௮ முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
कऊँकि पईले तो आऊँ ये सुणूँ था कि जेबे तुसे मण्डल़िया रे आराधना खे कट्ठे ओए, तो तुसा रे फूट ओई और आऊँ कुछ-कुछ विश्वास बी करूँआ।
19 ௧௯ உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
तुसा लोका रे फूट ऊणा तो एकी तरअ ते जरूरी ए ताकि ये साफ ऊई जाओ कि तुसा बीचे कुण लोक खरे चाल-चलणो रे चलोए।
20 ௨0 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான்.
जेबे तुसे लोक एकी जगा रे कट्ठे ओए तो सच्ची तुसा री दिलचस्पी प्रभु भोजो रे नि ऊँदी।
21 ௨௧ இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே.
कऊँकि खाणे रे बखते एकी-दूजे ते पईले केसी खे न्याल़े बगैर आपणी रोटी खाई लओआ, तो कोई तो पूखा रओआ और कोई मतवाल़ा ऊई जाओआ।
22 ௨௨ சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன்.
क्या खाणे-पीणे खे तुसा रे कअर निए? या परमेशरो री मण्डल़िया खे तुच्छ जाणोए और जिना गे अया नि तिना खे शर्मिंदा करोए? आऊँ तुसा खे क्या बोलूँ? क्या एते गल्ला रे तुसा री तारीफ करुँ? ना! आऊँ एसा गल्ला रे तुसा री बिल्कुल बी तारीफ नि करदा।
23 ௨௩ நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
जो शिक्षा मैं तुसा खे दित्ती थी ये सेई शिक्षा ए जो माखे प्रभुए ते मिली री और मैं तुसा गे बी पऊँछाई ती कि प्रभु यीशुए, जेस राती पकड़वाऊआ, रोटी लयी
24 ௨௪ ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
और धन्यवाद करी की तोड़ी और बोलेया, “ये मेरा शरीर ए, जो तुसा खे ए, मेरी यादा रे येई करेया करो।”
25 ௨௫ போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
ईंयां ई तिने रोटिया ते बाद कटोरा बी लया और बोलेया, “ये कटोरा मेरे खूनो रे जरिए कित्ती री नयी वाचा ए, जेबे कदी पियो, तो मेरी यादा रे येई करेया करो।”
26 ௨௬ ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
कऊँकि जेबे कदी तुसे ये रोटी खाओए और एस कटोरे बीचा ते पियोए, तो प्रभुए री मौता खे, जदुओ तक से नि आओ, प्रचार करोए।
27 ௨௭ இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான்.
इजी री खातर जो कोई अनुचित रीतिया ते प्रभुए री रोटी खाओआ या तेसरे कटोरे बीचा ते पियोआ, से प्रभुए रे शरीर और खूनो रा अपराधी ठईरना।
28 ௨௮ எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும்.
इजी री खातर मांणू आपणे आपू खे परखी लो और इजी रीतिया ते इजी कटोरे ते खाओ और इजी कटोरे ते पियो।
29 ௨௯ ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான்.
कऊँकि जो खांदे-पींदे बखते प्रभुए रे शरीरो खे नि पछयाणो, से एस खाणे और पीणे ते आपू पाँदे दण्ड ल्याओआ।
30 ௩0 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள்.
इजी बजअ ते तुसा बीचा ते बऊत कमजोर और रोगी ए और बऊत सारे तो मरी बी गये।
31 ௩௧ நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம்.
जे आसे आपणे आपू खे परखदे, तो परमेशरो आसा खे दण्ड नि देणा।
32 ௩௨ நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
पर प्रभु आसा खे दण्ड देई की आसा री ताड़ना करोआ, ताकि आसे दुनिया साथे दोषी नि ठईरूँ।
33 ௩௩ ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
इजी री खातर ओ मेरे साथी विश्वासियो, जेबे तुसे प्रभु भोज खाणे खे कट्ठे ओए, तो एकी-दूजे खे रुकेया करो
34 ௩௪ நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.
जे कोई पूखा ओ, तो आपणे कअरे खाई लो, जेते साथे तुसा रा कट्ठा ऊणा दण्डो री बजअ नि बणो और बाकि गल्ला आऊँ आयी की ठीक करी देऊँगा।

< 1 கொரிந்தியர் 11 >