< 1 நாளாகமம் 25 >

1 மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது:
וַיַּבְדֵּ֣ל דָּוִיד֩ וְשָׂרֵ֨י הַצָּבָ֜א לַעֲבֹדָ֗ה לִבְנֵ֤י אָסָף֙ וְהֵימָ֣ן וִֽידוּת֔וּן הנביאים בְּכִנֹּר֥וֹת בִּנְבָלִ֖ים וּבִמְצִלְתָּ֑יִם וַֽיְהִי֙ מִסְפָּרָ֔ם אַנְשֵׁ֥י מְלָאכָ֖ה לַעֲבֹדָתָֽם׃
2 ராஜாவுடைய கட்டளையின்படித் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பினிடத்திலிருக்கிற, ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
לִבְנֵ֣י אָסָ֗ף זַכּ֧וּר וְיוֹסֵ֛ף וּנְתַנְיָ֥ה וַאֲשַׂרְאֵ֖לָה בְּנֵ֣י אָסָ֑ף עַ֚ל יַד־אָסָ֔ף הַנִּבָּ֖א עַל־יְדֵ֥י הַמֶּֽלֶךְ׃
3 யெகோவாவைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனினிடம் சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் மகன்களாகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
לִידוּת֑וּן בְּנֵ֣י יְדוּת֡וּן גְּדַלְיָ֡הוּ וּצְרִ֡י וִֽ֠ישַׁעְיָהוּ חֲשַׁבְיָ֨הוּ וּמַתִּתְיָ֜הוּ שִׁשָּׁ֗ה עַל֩ יְדֵ֨י אֲבִיהֶ֤ם יְדוּתוּן֙ בַּכִּנּ֔וֹר הַנִּבָּ֕א עַל־הֹד֥וֹת וְהַלֵּ֖ל לַיהוָֽה׃ ס
4 கொம்பைத் தொனிக்கச்செய்ய, தேவனுடைய காரியத்தில் ராஜாவுக்கு தீர்க்கதரிசியான வாலிபனாகிய ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.
לְהֵימָ֑ן בְּנֵ֣י הֵימָ֡ן בֻּקִּיָּ֡הוּ מַתַּנְיָ֡הוּ עֻ֠זִּיאֵל שְׁבוּאֵ֨ל וִֽירִימ֜וֹת חֲנַנְיָ֣ה חֲנָ֗נִי אֱלִיאָ֤תָה גִדַּ֙לְתִּי֙ וְרֹמַ֣מְתִּי עֶ֔זֶר יָשְׁבְּקָ֣שָׁה מַלּ֔וֹתִי הוֹתִ֖יר מַחֲזִיאֽוֹת׃
5 இவர்கள் எல்லோரும் ஏமானின் மகன்களாக இருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினான்கு மகன்களையும் மூன்று மகள்களையும் கொடுத்தார்.
כָּל־אֵ֨לֶּה בָנִ֜ים לְהֵימָ֗ן חֹזֵ֥ה הַמֶּ֛לֶךְ בְּדִבְרֵ֥י הָאֱלֹהִ֖ים לְהָרִ֣ים קָ֑רֶן וַיִּתֵּ֨ן הָאֱלֹהִ֜ים לְהֵימָ֗ן בָּנִ֛ים אַרְבָּעָ֥ה עָשָׂ֖ר וּבָנ֥וֹת שָׁלֽוֹשׁ׃
6 இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.
כָּל־אֵ֣לֶּה עַל־יְדֵי֩ אֲבִיהֶ֨ם בַּשִּׁ֜יר בֵּ֣ית יְהוָ֗ה בִּמְצִלְתַּ֙יִם֙ נְבָלִ֣ים וְכִנֹּר֔וֹת לַעֲבֹדַ֖ת בֵּ֣ית הָאֱלֹהִ֑ים עַ֚ל יְדֵ֣י הַמֶּ֔לֶךְ ס אָסָ֥ף וִידוּת֖וּן וְהֵימָֽן׃
7 யெகோவாவைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, திறமைவாய்ந்தவர்கள் தங்களுடைய சகோதரர்களோடு அவர்கள் எண்ணிக்கைக்கு இருநூற்று எண்பத்தெட்டுப்பேர்களாக இருந்தார்கள்.
וַיְהִ֤י מִסְפָּרָם֙ עִם־אֲחֵיהֶ֔ם מְלֻמְּדֵי־שִׁ֖יר לַיהוָ֑ה כָּל־הַ֨מֵּבִ֔ין מָאתַ֖יִם שְׁמוֹנִ֥ים וּשְׁמוֹנָֽה׃
8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணவனும், சரிசமமாக முறைவரிசைக்காக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
וַיַּפִּ֜ילוּ גּוֹרָל֣וֹת מִשְׁמֶ֗רֶת לְעֻמַּת֙ כַּקָּטֹ֣ן כַּגָּד֔וֹל מֵבִ֖ין עִם־תַּלְמִֽיד׃ פ
9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
וַיֵּצֵ֞א הַגּוֹרָ֧ל הָרִאשׁ֛וֹן לְאָסָ֖ף לְיוֹסֵ֑ף גְּדַלְיָ֙הוּ֙ הַשֵּׁנִ֔י הֽוּא־וְאֶחָ֥יו וּבָנָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
10 ௧0 மூன்றாவது சக்கூர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הַשְּׁלִשִׁ֣י זַכּ֔וּר בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
11 ௧௧ நான்காவது இஸ்ரி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הָרְבִיעִי֙ לַיִּצְרִ֔י בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
12 ௧௨ ஐந்தாவது நெதானியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הַחֲמִישִׁ֣י נְתַנְיָ֔הוּ בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
13 ௧௩ ஆறாவது புக்கியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הַשִּׁשִּׁ֣י בֻקִּיָּ֔הוּ בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
14 ௧௪ ஏழாவது எசரேலா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הַשְּׁבִעִ֣י יְשַׂרְאֵ֔לָה בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
15 ௧௫ எட்டாவது எஷாயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הַשְּׁמִינִ֣י יְשַֽׁעְיָ֔הוּ בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
16 ௧௬ ஒன்பதாவது மத்தனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הַתְּשִׁיעִ֣י מַתַּנְיָ֔הוּ בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
17 ௧௭ பத்தாவது சிமேயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הָעֲשִׂירִ֣י שִׁמְעִ֔י בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
18 ௧௮ பதினோராவது அசாரியேல், அவனுடைய மகன்கள் அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
עַשְׁתֵּֽי־עָשָׂ֣ר עֲזַרְאֵ֔ל בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
19 ௧௯ பன்னிரண்டாவது அஷாபியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
הַשְּׁנֵ֤ים עָשָׂר֙ לַחֲשַׁבְיָ֔ה בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
20 ௨0 பதின்மூன்றாவது சுபவேல், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לִשְׁלֹשָׁ֤ה עָשָׂר֙ שֽׁוּבָאֵ֔ל בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
21 ௨௧ பதினான்காவது மத்தித்தியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לְאַרְבָּעָ֤ה עָשָׂר֙ מַתִּתְיָ֔הוּ בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
22 ௨௨ பதினைந்தாவது எரேமோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לַחֲמִשָּׁ֤ה עָשָׂר֙ לִֽירֵמ֔וֹת בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
23 ௨௩ பதினாறாவது அனனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לְשִׁשָּׁ֤ה עָשָׂר֙ לַחֲנַנְיָ֔הוּ בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
24 ௨௪ பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לְשִׁבְעָ֤ה עָשָׂר֙ לְיָשְׁבְּקָ֔שָׁה בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
25 ௨௫ பதினெட்டாவது அனானி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לִשְׁמוֹנָ֤ה עָשָׂר֙ לַחֲנָ֔נִי בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
26 ௨௬ பத்தொன்பதாவது மலோத்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לְתִשְׁעָ֤ה עָשָׂר֙ לְמַלּ֔וֹתִי בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
27 ௨௭ இருபதாவது எலியாத்தா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לְעֶשְׂרִים֙ לֶֽאֱלִיָּ֔תָה בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
28 ௨௮ இருபத்தோராவது ஒத்திர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לְאֶחָ֤ד וְעֶשְׂרִים֙ לְהוֹתִ֔יר בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
29 ௨௯ இருபத்திரண்டாவது கிதல்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לִשְׁנַ֤יִם וְעֶשְׂרִים֙ לְגִדַּ֔לְתִּי בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
30 ௩0 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
לִשְׁלֹשָׁ֤ה וְעֶשְׂרִים֙ לְמַ֣חֲזִיא֔וֹת בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃
31 ௩௧ இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.
לְאַרְבָּעָ֤ה וְעֶשְׂרִים֙ לְרוֹמַ֣מְתִּי עָ֔זֶר בָּנָ֥יו וְאֶחָ֖יו שְׁנֵ֥ים עָשָֽׂר׃ פ

< 1 நாளாகமம் 25 >