< சகரியா 1 >

1 தரியு அரசனின் ஆட்சியில், இரண்டாம் வருடத்தின் எட்டாம் மாதத்தில், இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்தச் சகரியா இத்தோவின் மகனான பெரகியாவின் மகன்.
Ын луна а опта, ын анул ал дойля ал луй Дариус, кувынтул Домнулуй а ворбит пророкулуй Захария, фиул луй Берекия, фиул луй Идо, астфел:
2 “யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் கடுங்கோபம் கொண்டிருந்தார்.
„Домнул С-а мыният фоарте таре пе пэринций воштри.
3 ஆதலால் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே; ‘என்னிடம் திரும்புங்கள்,’ அப்பொழுது நானும் உங்களிடத்தில் திரும்புவேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
Спуне-ле дар: ‘Аша ворбеште Домнул оштирилор: «Ынтоарчеци-вэ ла Мине», зиче Домнул оштирилор, «ши Мэ вой ынтоарче ши Еу ла вой», зиче Домнул оштирилор.
4 நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கவேண்டாம். முந்தைய இறைவாக்கினர்களும் அவர்களிடம், ‘உங்கள் பொல்லாத வழிகளையும், பொல்லாத செயல்களையும் விட்டுத் திரும்புங்கள்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவுமில்லை, என்னைப் பொருட்படுத்தவுமில்லை என யெகோவா அறிவிக்கிறார்.
«Ну фиць ка пэринций воштри, кэрора ле ворбяу пророчий де май ынаинте, зикынд: ‹Аша ворбеште Домнул оштирилор: „Ынтоарчеци-вэ де ла кэиле воастре челе реле, де ла фаптеле воастре челе реле!”› Дар н-ау аскултат ши н-ау луат аминте ла Мине», зиче Домнул.
5 இப்பொழுது உங்கள் முற்பிதாக்கள் எங்கே? இறைவாக்கினர் எங்கே? அவர்கள் இறந்துபோனார்களே.
«Унде сунт акум пэринций воштри? Ши путяу пророчий сэ трэяскэ вешник?
6 ஆனால் என் அடியவர்களான இறைவாக்கினருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளின்படியும், என் ஒழுங்குவிதிகளின்படியுமே உங்கள் முற்பிதாக்களுக்கு நடந்தது. “அதன்பின் அவர்கள் மனந்திரும்பி, ‘சேனைகளின் யெகோவா எங்கள் வழிகளுக்கும், செயல்களுக்கும் ஏற்றவாறு எங்களுக்குச் செய்திருக்கிறார். தாம் தீர்மானித்தபடி நீதியாகவே நமக்குச் செய்தார் என்றார்கள்.’”
Тотушь кувинтеле Меле ши порунчиле пе каре ле дэдусем служиторилор Мей, пророчий, ка сэ ле вестяскэ, н-ау атинс еле пе пэринций воштри? Ши атунч ей с-ау ынторс ши ау зис: ‹Домнул оштирилор не-а фэкут кум хотэрысе сэ не факэ, дупэ кэиле ши фаптеле ноастре!›»’”
7 தரியு அரசன் ஆட்சி செய்த இரண்டாம் வருடத்தின் சேபாத் என்னும் பதினோராம் மாதம் இருபத்து நான்காம் தேதி, இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்த சகரியா இத்தோவின் மகனான பெரெகியாவின் மகன்.
Ын а доуэзечь ши патра зи а луний а унспрезечя, каре есте луна Шебат, ын анул ал дойля ал луй Дариус, кувынтул Домнулуй а ворбит пророкулуй Захария, фиул луй Берекия, фиул луй Идо, астфел:
8 நான் இரவிலே ஒரு தரிசனம் கண்டேன்; எனக்கு முன்னால் ஒரு மனிதர் சிவப்புக் குதிரைமீது சவாரி செய்துகொண்டிருந்தார். அவர் பள்ளத்தாக்கில் உள்ள நறுமண மரங்களுக்கு இடையில் நின்றார். அவருக்குப் பின் சிவப்பு நிறமும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன. அவற்றின்மேலும் சவாரி செய்வோர் இருந்தனர்.
М-ам уйтат ноаптя ши ятэ кэ ун ом ера кэларе пе ун кал рошу ши стэтя ынтре мирць ынтр-ун умбрар; ын урма луй ерау ниште кай роший, мурӂь ши албь.
9 அப்பொழுது நான், “ஐயா, இவைகள் என்ன?” என்று கேட்டேன். என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம், “இவைகள் என்ன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” எனப் பதிலளித்தான்.
Ам ынтребат: „Че ынсямнэ каий ачештя, домнул меу?” Ши ынӂерул каре ворбя ку мине мь-а зис: „Ыць вой арэта че ынсямнэ каий ачештя!”
10 அப்பொழுது நறுமண மரங்களின் இடையில் நின்றவர், “இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்து வரும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவர்கள்” என எனக்கு விளக்கினார்.
Омул каре стэтя ынтре мирць а луат кувынтул ши а зис: „Ачештя сунт ачея пе каре й-а тримис Домнул сэ кутреере пэмынтул!”
11 அவர்கள் நறுமண மரங்கள் மத்தியில் நின்ற யெகோவாவின் தூதனிடம் போய், “நாங்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்தோம். முழு உலகமும் சமாதானமாயும், அமைதியாயும் இருப்பதைக் கண்டோம்” என்றார்கள்.
Ши ей ау ворбит Ынӂерулуй Домнулуй, каре стэтя ынтре мирць, ши ау зис: „Ам кутреерат пэмынтул ши ятэ кэ тот пэмынтул есте ын паче ши лиништит!”
12 அப்பொழுது யெகோவாவின் தூதன், “சேனைகளின் யெகோவாவே, எருசலேமின்மேலும், யூதாவின் நகரங்கள் மேலும் இன்னும் எவ்வளவு காலம் இரங்காதிருப்பீர்? எழுபது ஆண்டுகளாய் நீர் அவற்றின்மேல் கோபமாயிருந்தீரே” எனக் கேட்டான்.
Атунч Ынӂерул Домнулуй а луат кувынтул ши а зис: „Доамне ал оштирилор, пынэ кынд ну вей авя милэ де Иерусалим ши де четэциле луй Иуда, пе каре Те-ай мыният ын ачешть шаптезечь де ань?”
13 அதற்கு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், யெகோவா அன்பும் ஆறுதலுமான வார்த்தைகளால் பேசினார்.
Домнул а рэспунс ку ворбе буне, ку ворбе де мынгыере, ынӂерулуй каре ворбя ку мине.
14 அதன்பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன், “இந்த வார்த்தைகளை அறிவி: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் எருசலேமிலும், சீயோனிலும் வைத்த அதிக அன்பினால் வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
Ши ынӂерул каре ворбя ку мине мь-а зис: „Стригэ ши зи: ‘Аша ворбеште Домнул оштирилор: «Сунт плин де о маре ӂелозие пентру Иерусалим ши пентру Сион
15 ஆனால் பாதுகாப்புடன் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கும், பிற மக்கள்மீது நான் கடுங்கோபம் கொண்டுள்ளேன்; ஏனெனில் நான் எனது மக்கள்மேல் சிறிதளவு மட்டுமே கோபமாயிருந்தேன். அப்போது, பிற நாடுகளோ அவர்கள்மேல் பேராபத்தை அதிகரித்து எனது மக்களை அழிக்கப் பார்த்தார்கள்.’
ши сунт плин де о маре мыние ымпотрива нямурилор ынгымфате, кэч Мэ мыниясем нумай пуцин, дар еле ау ажутат спре ненорочире.»
16 “ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் இரக்கத்தோடு எருசலேமுக்குத் திரும்புவேன்; அங்கே எனது ஆலயம் மறுபடியும் கட்டப்படும். எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்படும்’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
Де ачея аша ворбеште Домнул: «Мэ ынторк ку ындураре кэтре Иерусалим; Каса Мя ва фи зидитэ ярэшь ын ел ши фуния де мэсурат се ва ынтинде асупра Иерусалимулуй.»’
17 “மேலும் அறிவிக்க வேண்டியதாவது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘என் நகரங்கள் மீண்டும் செல்வச் செழிப்பினால் பொங்கி வழியும்; யெகோவா மறுபடியும் சீயோனைத் தேற்றி எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்றான்.’”
Стригэ дин ноу ши зи: ‘Аша ворбеште Домнул оштирилор: «Четэциле Меле вор авя ярэшь белшуг де бунэтэць, Домнул ва мынгыя ярэшь Сионул, ва алеӂе ярэшь Иерусалимул.»’”
18 அதன்பின்பு நான் பார்த்தபோது அங்கே எனக்கு முன்னால் நான்கு கொம்புகள் இருந்தன.
Ам ридикат окий ши м-ам уйтат, ши ятэ кэ ерау патру коарне.
19 நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவைகள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன், “யூதாவையும், இஸ்ரயேலையும், எருசலேமையும் சிதறடித்த வல்லமையான நாடுகள் இவைகளே” என்று பதிலளித்தான்.
Ам ынтребат ынӂерул каре ворбя ку мине: „Че ынсямнэ коарнеле ачестя?” Ши ел мь-а зис: „Ачестя сунт коарнеле каре ау рисипит пе Иуда, пе Исраел ши Иерусалимул.”
20 அதன்பின் யெகோவா எனக்கு கைவினைஞர் நால்வரைக் காண்பித்தார்.
Домнул мь-а арэтат патру ферарь.
21 “இவர்கள் என்ன செய்ய வருகிறார்கள்?” என நான் கேட்டேன். அதற்கு அவர், “யூதாவில், ஒருவனும் தன் தலையைத் தூக்காதவாறு, யூதாவைச் சிதறடித்த பிற மக்களான இந்த கொம்புகளை வெட்டி முறிக்கவும், அவர்களைப் பயமுறுத்தவுமே இந்தக் கைவினைஞர் வருகின்றார்கள். பிறநாடுகள் யூதா நாட்டு மக்களைச் சிதறடிப்பதற்காக, தங்கள் வல்லமையைப் பயன்படுத்த வந்தார்கள் என்றார்.”
Еу ам ынтребат: „Че вор сэ факэ ачештя?” Ши ел а зис: „Ачештя вин сэ сперие коарнеле каре ау рисипит пе Иуда, де н-а май путут ридика нимень капул; ферарий ачештя ау венит сэ сперие ши сэ тае коарнеле нямурилор каре ау ридикат корнул ымпотрива цэрий луй Иуда ка сэ-й рисипяскэ локуиторий.”

< சகரியா 1 >