< சகரியா 9 >
1 ஒரு இறைவாக்கு: யெகோவாவின் வார்த்தை ஹதெராக் நாட்டுக்கு விரோதமாய் இருக்கிறது. அவரது தண்டனை தமஸ்கு நகரத்தின்மேல் வரும். ஏனெனில் எல்லா மக்களினுடைய, இஸ்ரயேல் வம்சம் முழுவதினுடைய கண்கள் யெகோவாவையே நோக்கிக் கொண்டிருக்கின்றன.
၁ထာဝရဘုရား ၏ဗျာဒိတ် နှုတ်ကပတ် တော်သည် ဟာဒရက် ပြည် နှင့် ဒမာသက် မြို့၌ သင့် ရောက်ပေ၏။ ထာဝရဘုရား သည် လူမျိုးကို၎င်း၊ ဣသရေလ အမျိုး အနွယ်အပေါင်း တို့ကို၎င်းကြည့်ရှု လျက် ရှိတော်မူ၏။
2 தமஸ்குவின் எல்லையாக உள்ள ஆமாத்தின்மேலும், தீரு, சீதோன் பட்டணங்கள் திறமைமிக்கதாய் இருந்தபோதும், அவற்றின்மேலும் அவரது தண்டனை வரும்.
၂ထိုပြည်နှင့် နီးစပ် သော ဟာမတ် ပြည်၌ ၎င်း ၊ တုရု မြို့သည် လိမ္မာ သောကြောင့် ထိုမြို့ နှင့် ဇိဒုန် မြို့၌၎င်း သင့်ရောက်ပေ၏။
3 தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும், தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள்.
၃တုရု မြို့သည် မိမိ အဘို့ ရဲတိုက် ကို တည်ဆောက် ၍ ၊ ငွေ ကို မြေမှုန့် ကဲ့သို့ ၎င်း ၊ ရွှေစင် ကိုလမ်း ၌ရှိသောရွံ့ ကဲ့သို့ ၎င်း စုပုံ သော်လည်း ၊
4 ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார். கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்துப்போடுவார். அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள்.
၄ထာဝရ ဘုရားသည် သူတပါး လက်သို့ သူ့ ကိုအပ် ၍ ၊ သူ့ ခွန်အား ကို ပင်လယ် ထဲသို့ ချ တော်မူသဖြင့် ၊ မြို့ သည် မီး ဖြင့် ကျွမ်းလောင် လိမ့်မည်။
5 அஸ்கலோன் பட்டணம் அதைக்கண்டு அஞ்சும்; காசா பட்டணமும் வேதனையால் துடிக்கும். எக்ரோன் பட்டணத்தின் எதிர்பார்ப்பும் அற்றுப்போகும். காசா தன் அரசனை இழப்பாள். அஸ்கலோன் பாழாய்ப்போகும்.
၅ထိုအမှုကို အာရှကေလုန် မြို့သည် မြင် ၍ ကြောက် လိမ့်မည်။ ဂါဇ မြို့သည် မြင်၍ အလွန် တုန်လှုပ် လိမ့်မည်။ ဧကြုန် မြို့လည်း မြော်လင့် ၍ အရှက်ကွဲ သောကြောင့် ထိုအတူဖြစ်လိမ့်မည်။ ဂါဇ မင်းကြီး သည် ဆုံး လိမ့်မည် ။ အာရှကေလုန် မြို့သည်လည်း အစိုး မ ရ။
6 வெளிநாட்டவர் அஸ்தோத்தில் குடியிருப்பார்கள். நான் பெலிஸ்தியரின் அகந்தையை இல்லாமல் ஒழிப்பேன்.
၆အာဇုတ် မြို့၌ တကျွန်း တနိုင်ငံသားတို့သည် နေ ကြလိမ့်မည်။ ဖိလိတ္တိ အမျိုး၏ မာန ကိုလည်း ငါချိုးဖဲ့ မည်။
7 இரத்தம் வடியும் உணவை அவர்கள் வாயிலிருந்தும் அருவருப்பான உணவை அவர்களின் பற்களின் இடையிலிருந்தும் நீக்குவேன்; மீதியான பெலிஸ்தியரோ நம் இறைவனுக்கு உரியவராவார்கள். அவர்கள் யூதாவின் தலைவர்களாவார்கள். எக்ரோன் எபூசியரைப்போல் ஆகும். எனவே பெலிஸ்திய நாடு இஸ்ரயேலில் ஒரு பங்காகும்.
၇သူ စားသော အသွေး ကို သူ ၏ပါးစပ် ထဲမှ ၎င်း ၊ သူ ကိုက်သော ရွံ့ရှာဘွယ် တို့ကို သူ ၏သွား ကြား မှ ၎င်း ငါနှုတ်ပယ် မည်။ ကျန်ကြွင်းသောသူသည်လည်း ငါ တို့ ဘုရား သခင်အဘို့ ကျန်ကြွင်း ၍ ၊ ယုဒ ပြည်၌ မင်း ကဲ့သို့ နေလိမ့်မည်။ ဧကြုန် မြို့သားလည်း ယေဗုသိ လူကဲ့သို့ ဖြစ် လိမ့်မည်။
8 ஆனால் நான் கொள்ளையர்களை எதிர்த்து, என் ஆலயத்தைப் பாதுகாப்பேன்; நான் என் மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால், ஒடுக்குவோர் யாரும் திரும்பவும் ஒருபோதும் என் மக்களை மேற்கொள்ளமாட்டார்கள்.
၈အဘယ်ရန်သူ မျှ မထွက် မဝင်စေခြင်းငှါ၊ ငါ့ အိမ် တော်ပတ်လည်၌ တပ်ချ မည်။ ညှဉ်းဆဲ သောသူသည် ငါ့ လူတို့ကို နောက် တဖန် မ နှိပ်နင်း ရ။ အကြောင်း မူကား၊ ငါ သည် ယခု ကိုယ်တိုင်ကြည့် ၍ မြင် ပြီ။
9 சீயோன் மகளே, நீ மிகவும் களிகூரு. எருசலேம் மகளே, நீ ஆர்ப்பரி. இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவராய் இரட்சிப்புடன் வருகிறார், தாழ்மையுள்ள அவர், கழுதையின்மேலும், கழுதைக் குட்டியான மறியின்மேலும் ஏறி வருகிறார்.
၉အိုဇိအုန် သတို့သမီး ၊ အလွန် ဝမ်းမြောက် လော့။ အိုယေရုရှလင် မြို့သတို့သမီး ၊ ကြွေးကြော် ကြလော့။ တရား သဖြင့် စီရင်၍ ကယ်တင် ခြင်းသို့ ရောက်သော သခင် ၊ သင် ၏အရှင် မင်းကြီးသည် မြည်းမ နှင့် မြည်း ကလေး ကို စီး ၍ နူးညံ့ သိမ်မွေ့သောစိတ် နှင့် သင် ရှိရာသို့ ကြွ လာတော်မူသည်ကို ကြည့်ရှု လော့။
10 எப்பிராயீமிலிருந்து தேர்களையும், எருசலேமிலிருந்து போர்க் குதிரைகளையும் அகற்றிவிடுவேன். யுத்த வில்லும் முறிக்கப்படும். உன் அரசர் நாடுகளுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் தொடங்கி, மறுகடல் வரையும், ஐபிராத்து நதிதொடங்கி, பூமியின் எல்லைகள் வரைக்கும் பரந்திருக்கும்.
၁၀ငါသည် ဧဖရိမ် ပြည်၌ ရထား ကို၎င်း၊ ယေရုရှလင် မြို့၌ မြင်း ကို၎င်း ပယ်ဖြတ် မည်။ စစ် လေး ကိုလည်း ပယ်ဖြတ် မည်။ တပါးအမျိုးသား တို့သည် စစ်ငြိမ်း မည် အကြောင်း ကို ထို အရှင်သည် မိန့် တော်မူမည်။ အာဏာ တော်လည်း ပင်လယ် တပါးမှ သည် ပင်လယ် တပါးတိုင်အောင် ၎င်း ၊ မြစ် မှ သည် မြေကြီး စွန်း တိုင်အောင် ၎င်း တည်လိမ့်မည်။
11 சீயோனே உனக்கோவெனில், உன்னுடன் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையின் இரத்தத்தின் நிமித்தம், தண்ணீரில்லாத குழியில் அடைபட்டுள்ள உன் கைதிகளை விடுதலை செய்வேன்.
၁၁သင် ၏အမှုမူကား ၊ ချုပ်ထား လျက်ရှိသောသင် ၏လူတို့ကို၊ ရေ မ ရှိသော မြေတွင်း ထဲက ၊ သင် နှင့် ဖွဲ့သော ပဋိညာဉ် အသွေး ကြောင့် ငါကယ်လွှတ် မည်။
12 நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் கோட்டைக்குத் திரும்புங்கள். நீங்கள் இழந்தவற்றை இரண்டு மடங்காகத் திரும்பவும் தருவேன் என நான் இப்பொழுதும் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
၁၂အချုပ် ခံ၍ မြော်လင့် သောသူတို့ ၊ ရဲတိုက် သို့ ပြန်လာ ကြလော့။ ငါသည် နှစ်ဆ သော ကျေးဇူး ကို ပြုဦးမည်ဟု ယနေ့ ပင် ပြော ထား၏။
13 நான் எனது வில்லை வளைப்பது போல், யூதாவை வளைத்து, எப்பிராயீமை அதன் அம்பாக வைப்பேன்; சீயோனே, உன் மகன்களை நான் எழுப்புவேன். கிரேக்க நாடே, அவர்களை உன் மகன்களுக்கு விரோதமாய் அனுப்புவேன். என் மக்களைப் போர்வீரனின் வாளைப்போல் ஆக்குவேன்.
၁၃ယုဒ လေးကို ငါ တင် ၍ ၊ ဧဖရိမ် လေး ကို ဆွဲငင် လျက်၊ ဇိအုန် သား တို့ကို ဟေလသ သား တို့တဘက် ၌ နှိုးဆော် ၍ ၊ သင့် ကို သူရဲ ၏ထား ကဲ့သို့ ဖြစ် စေမည်။
14 அப்பொழுது யெகோவா தமது மக்களுக்கு மேலாகக் காட்சியளிப்பார்; அவரது அம்பு மின்னலைப்போல் விரையும். ஆண்டவராகிய யெகோவா எக்காளத் தொனியை எழுப்புவார். அவர் தென்திசைச் சுழல் காற்றில் கெம்பீரமாய் வருவார்.
၁၄ထာဝရဘုရား သည် သူ တို့အပေါ် မှာ ထင်ရှား တော်မူ၍ ၊ မြှား တော်သည် လျှပ်စစ်ပြက် သကဲ့သို့ ပြေး လိမ့်မည်။ အရှင် ထာဝရဘုရား သခင်သည် တံပိုး မှုတ် ၍ ၊ တောင် လေဘွေ တို့နှင့် ကြွ သွားတော်မူလိမ့်မည်။
15 சேனைகளின் யெகோவா தன் மக்களின் கேடகமாய் நின்று பாதுகாப்பார். அவர்கள் தமது பகைவர்களை அழித்து, கவண் கற்களால் தாக்கி வெற்றி பெறுவார்கள். அப்பொழுது அவர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டவர்களைப்போல் ஆரவாரிப்பார்கள். பலிபீடத்தின் மூலைகளில் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் கிண்ணத்தைப்போல் அவர்கள் நிரம்பியிருப்பார்கள்.
၁၅ကောင်းကင်ဗိုလ်ခြေ အရှင် ထာဝရဘုရား သည် သူ တို့ကို ကွယ်ကာ တော်မူသဖြင့် ၊ သူတို့သည် ကိုက်စား ၍ လက် လွှဲကျောက် တို့ကို ကျော်နင်း ကြလိမ့်မည်။ သောက် ပြီးလျှင် ၊ စပျစ်ရည် နှင့် ဝသကဲ့သို့ ကြွေးကြော် ကြလိမ့်မည်။ အင်တုံ ကဲ့သို့ ၎င်း ၊ ယဇ် ပလ္လင်ထောင့် ကဲ့သို့ ၎င်း ပြည့်ဝ ကြ လိမ့်မည်။
16 தமது மக்களின் மந்தையைப்போல, அந்த நாளில், அவர்களுடைய இறைவனாகிய யெகோவா அவர்களைப் பாதுகாப்பார். கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப்போல, அவரது நாட்டில் அவர்கள் மின்னுவார்கள்.
၁၆ထို နေ့၌ သူ တို့၏ဘုရား သခင်ထာဝရဘုရား သည် မိမိ လူ တို့ကို သိုးစု ကဲ့သို့ ကယ်တင် တော်မူလိမ့်မည်။ သူ တို့သည် မြေ တော်၌ ထင်ရှား သော သရဖူ မျက်မွန် ကဲ့သို့ဖြစ်ကြလိမ့်မည်။
17 அவர்கள் எவ்வளவு கவர்ச்சியும் அழகுமாய் இருப்பார்கள்! தானியமும், புதிய திராட்சை இரசமும் வாலிபரையும் இளம்பெண்களையும் ஊக்கமாய் வளர்க்கும்.
၁၇ကျေးဇူး တော်သည် အလွန်ကြီးစွတကား။ ဂုဏ် အသရေတော်လည်း အလွန် ကြီးစွတကား။ ဆန် စပါးသည် လုလင် တို့ကို၎င်း၊ စပျစ်ရည် သစ်သည် အပျိုမ တို့ကို၎င်း တိုးပွား များပြားစေလိမ့်မည်။