< சகரியா 2 >

1 அதன்பின் நான் பார்த்தபோது, தன் கையில் அளவுநூலைப் பிடித்திருக்கும் ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான்.
Ам ридикат окий ши м-ам уйтат, ши ятэ кэ ера ун ом каре циня ын мынэ о фуние де мэсурат.
2 “நீ எங்கே போகிறாய்?” என நான் கேட்டேன். அதற்கு அவன், “எருசலேமின் நீளமும், அகலமும் என்ன என்று அறிவதற்காக அதை அளப்பதற்குப் போகிறேன் எனப் பதிலளித்தான்.”
Л-ам ынтребат: „Унде те дучь?” Ши ел мь-а зис: „Мэ дук сэ мэсор Иерусалимул, ка сэ вэд че лэциме ши че лунӂиме аре.”
3 என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னைவிட்டுப் போனான். அப்பொழுது அவனைச் சந்திக்க வேறொரு தூதன் வந்தான்.
Ши ынӂерул каре ворбя ку мине а ынаинтат, ши ун алт ынӂер й-а ешит ынаинте.
4 வந்தவன் அவனிடம், “நீ ஓடிப்போய் அந்த இளைஞனிடம் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் மதில்களற்ற பட்டணமாயிருக்கும். ஏனெனில், அங்கு மக்களும் அவர்களின் ஆடுமாடுகளும் திரளாகப் பலுகி நகரத்திற்கு வெளியேயும் இருப்பார்கள்.
Ел й-а зис: „Аляргэ де ворбеште тынэрулуй ачестуя ши спуне-й: ‘Иерусалимул ва фи о четате дескисэ дин причина мулцимий оаменилор ши вителор каре вор фи ын мижлокул луй;
5 நானே அதைச் சுற்றி அக்கினி சுவராயிருந்து, நானே அதற்குள்ளே அதன் மகிமையாகவும் இருப்பேன்’ என யெகோவா அறிவிக்கிறார்” என்றான்.
Еу Ынсумь’, зиче Домнул, ‘вой фи ун зид де фок де жур ымпрежурул луй ши вой фи слава луй ын мижлокул луй!’”
6 “வானத்தின் நான்கு திசைகளிலும் நான் உங்களைச் சிதறடித்தேன். ஆனால் இப்போது வாருங்கள்! வாருங்கள்! வடநாட்டிலிருந்து ஓடி வாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
„Фуӂиць, фуӂиць дин цара де ла мязэноапте!”, зиче Домнул. „Кэч в-ам ымпрэштият ын челе патру вынтурь але черурилор”, зиче Домнул.
7 “இப்பொழுது வா! பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, தப்பி வா”
„Скапэ, Сиоане, ту каре локуешть ла фийка Бабилонулуй!”
8 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர் என்னைக் மகிமைப்படுத்திய பின், உங்களைச் சூறையாடின பிற மக்களுக்கு எதிராக என்னை அனுப்பியிருக்கிறார். ஏனெனில் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
Кэч аша ворбеште Домнул оштирилор: „Дупэ славэ м-а тримис Ел ла нямуриле каре в-ау жефуит; кэч чел че се атинӂе де вой се атинӂе де лумина окилор Луй.
9 நான் நிச்சயமாய் என் கையை அவர்களுக்கு எதிராக உயர்த்துவேன். அவர்களின் அடிமைகள் அவர்களைச் சூறையாடுவார்கள். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
Ятэ, Ымь ридик мына ымпотрива лор”, зиче Домнул, „ши еле вор фи прада челор че ле ерау супушь, ка сэ штиць кэ Домнул оштирилор м-а тримис.
10 “சீயோன் மகளே, சத்தமிட்டு களிகூரு; இதோ, நான் வருகிறேன். உன் மத்தியில் வாழ நான் வருகிறேன்” என யெகோவா அறிவிக்கிறார்.
Стригэ де веселие ши букурэ-те, фийка Сионулуй! Кэч, ятэ, Еу вин ши вой локуи ын мижлокул тэу”, зиче Домнул.
11 “அந்நாளிலே அநேக நாடுகள் யெகோவாவிடம் இணைந்துகொள்வார்கள். அவர்களும் என் மக்களாவார்கள். அப்பொழுது நான் உன் நடுவில் வாழ்வேன். சேனைகளின் யெகோவாவே என்னை உன்னிடம் அனுப்பினார் என்பதை அப்பொழுது நீ அறிந்துகொள்வாய்.
„Мулте нямурь се вор алипи де Домнул ын зиуа ачея ши вор фи попорул Меу. Еу вой локуи ын мижлокул тэу ши вей шти кэ Домнул оштирилор м-а тримис ла тине.”
12 யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவை தம் உரிமைப் பங்காக்கி, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
Домнул ва луа ын стэпынире пе Иуда, ка партя Луй де моштенире ын пэмынтул сфынт, ши ва алеӂе ярэшь Иерусалимул.
13 மனுக்குலமே, நீங்கள் யாவரும் யெகோவா முன்பாக அமைதியாய் இருங்கள். ஏனெனில் அவர் தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எழுந்திருக்கிறார்.”
Орьче фэптурэ сэ такэ ынаинтя Домнулуй, кэч Ел С-а ши скулат дин Локашул Луй чел Сфынт!

< சகரியா 2 >