< தீத்து 3 >

1 ஆளுகை செய்கிறவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணிந்திருக்கும்படி மக்களுக்கு ஞாபகப்படுத்து. அவர்களுக்கு கீழ்ப்படியவும், எல்லா நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாயும்,
လူ တို့သည် အထွဋ်အမြတ်အာဏာစက် ၏ အုပ်စိုး ခြင်းကို ဝန်ခံ စေခြင်းငှာ၎င်း၊ မင်း၏စကားကို နားထောင် စေခြင်းငှာ၎င်း၊ ကောင်း သောအမှု အမျိုးမျိုး တို့ကို ပြု၍ အသင့် ဖြစ် စေခြင်းငှာ၎င်း
2 ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கு முன்பாகவும் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்று ஞாபகப்படுத்து.
အဘယ်သူ ကိုမျှမကဲ့ရဲ့ ၊ ရန်တွေ့ ခြင်းကိုမပြု၊ ဖြည်းညှင်း သော သဘောရှိ၍၊ ခပ်သိမ်း သောသူ တို့၌ အလွန်နူးညံ့ သိမ်မွေ့စွာ ပြု စေခြင်းငှာ၎င်း သတိပေး လော့။
3 ஒருகாலத்தில் நாமும்கூட மூடர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருந்தோம். இதனால் ஏமாந்து, பலவித தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்தோம். தீங்குசெய்யும் எண்ணமுடையவர்களாயும், பொறாமையுடையவர்களாயும், ஒருவரிலொருவர் வெறுக்கப்படுகிறவர்களாயும், ஒருவரையொருவர் வெறுக்கிறவர்களாயும் வாழ்ந்தோம்.
အကြောင်းမူကား ၊ အထက် က ငါ တို့သည် ပညာ မဲ့သောသူ၊ နားမထောင် သောသူ၊ မှားယွင်း သောသူ၊ အထူးထူး အပြားပြားသော တပ်မက် ခြင်း၊ ကာမဂုဏ် ခံစားခြင်း အမှု တို့ကို ဆောင်ရွက်သောသူ၊ မနာလို ခြင်း၊ ငြူစူ ခြင်း၌ ကျင်လည် သောသူ၊ စက်ဆုပ် ရွံရှာဘွယ်သောသူ၊ အချင်းချင်း မုန်း သောသူဖြစ် ကြ၏။
4 ஆனாலும் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் அன்பும் வெளிப்பட்டபோது,
ငါ တို့ကိုကယ်တင် တော်မူသောအရှင်ဘုရားသခင် ၏ စေတနာ တော်နှင့် လူတို့ကိုချစ်တော်မူသော မေတ္တာတော်သည် ပေါ်ထွန်း သောအခါ
5 அவர் நம்மை இரட்சித்தது, நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அல்ல, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் இரட்சித்தார். மறுபிறப்பின் கழுவப்படுதலின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுவாழ்வின் மூலமாகவுமே அவர் நம்மை இரட்சித்தார்.
ငါ တို့ကျင့် သော ဖြောင့်မတ် ခြင်းအကျင့် အားဖြင့် မ ဟုတ်ဘဲ၊ မိမိ သနား ခြင်းကရုဏာတော်နှင့်အညီ ဒုတိယ မွေးခြင်းနှင့်ဆိုင်သော ဆေးကြော ခြင်းအားဖြင့်၎င်း၊သန့်ရှင်း သောဝိညာဉ် တော်၏အသစ် ပြုပြင် ခြင်းအားဖြင့် ၎င်း၊ ငါ တို့ကို ကယ်တင် တော်မူ၏။
6 இறைவன் அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நம்மேல் அளவில்லாமல் ஊற்றினார்.
ငါ တို့ကို ကယ်တင် သော အရှင်ယေရှု ခရစ် အားဖြင့် ငါ တို့အပေါ်သို့ ထို ဝိညာဉ်တော်ကို ကြွယ်ဝ စွာသွန်းလောင်း တော်မူ၏။
7 இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். (aiōnios g166)
အကြောင်းမူကား၊ ငါတို့သည် ဘုရားသခင် ၏ကျေးဇူး တော်အားဖြင့် ဖြောင့်မတ် ရာသို့ရောက်၍ ထာဝရ အသက် ကို မြော်လင့် သည်နှင့်အညီ အမွေခံ ဖြစ် ကြမည်အကြောင်း တည်း။ (aiōnios g166)
8 இது நம்பத்தகுந்த வாக்கு. ஆகவே, நீ இவற்றை வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனை சார்ந்திருக்கிறவர்கள், நன்மை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும்படி கவனமுடையவர்களாய் இருப்பார்கள். இந்தக் காரியங்கள் ஒவ்வொருவருக்கும் நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன.
ဤစကား သည် သစ္စာ စကားဖြစ် ၏။ ဘုရားသခင် ကို ယုံကြည် သောသူ တို့သည် ကောင်း သောအကျင့် တို့ကို အမြဲကျင့်အံ့သောငှာသတိပြု ရကြမည်အကြောင်း ၊ သင် သည် ဤ အရာများကို ကြိုးစား၍ ဟောပြောစေခြင်းငှာငါအလိုရှိ ၏။ ထို အကျင့်တို့သည် ကောင်း သည်သာမက၊ လူ တို့၏အကျိုး ကို ပြုစုတတ်သော အကျင့်ဖြစ် ကြ၏။
9 ஆனால், மோசேயின் சட்டத்தைப்பற்றிய மூடத்தனமான கருத்து வேறுபாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் இவை பயனற்றதும், வீணானதுமே.
မိုက်မဲ သောပုစ္ဆာ အမေးတို့ကို၎င်း ၊ ဆွေစဉ်မျိုးဆက် စာရင်းတို့ကို၎င်း၊ ပညတ် တရားကြောင့် ရန်တွေ့ ခြင်း၊ တိုက်လှန် ခြင်းတို့ကို၎င်း ရှောင် လော့။ အကြောင်းမူကား ၊ ထိုအရာတို့သည် အကျိုး မရှိ၊ အချည်းနှီး သက်သက်ဖြစ် ကြ၏။
10 பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்களை ஒருமுறை எச்சரிக்கை செய். பின்பு இரண்டாவது முறையும் எச்சரிக்கை செய். அதற்குப் பின்பு, அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
၁၀သင်းခွဲ သောသူ ကို နှစ် ကြိမ်မြောက်အောင်ဆုံးမ ပြီးမှ ပယ်ရှား နှင်ထုတ်လော့။
11 அப்படிப்பட்டர்கள் சீர்கெட்டவர்களும், பாவத்தில் வாழ்கிறவர்களும், தன்னைத்தானே தண்டனைக்குள் ஆக்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள் என்று நீ நிச்சயமாக அறிந்துகொள்.
၁၁ထိုသို့သော သူသည် ကိုယ့် အပြစ်ကိုသိ လျက်ပင် အပြစ် ပြု၍ မှောက်လှန် သောစိတ် ရှိ သောသူ ဖြစ်သတည်း။
12 அர்த்தொமாவையோ அல்லது தீகிக்குவையோ நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நீ புறப்பட்டு நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் இயன்ற முயற்சியைச் செய். ஏனெனில் குளிர்க்காலத்தை அங்கே கழிக்கவே நான் தீர்மானித்திருக்கிறேன்.
၁၂အာတေမ သော်၎င်း ၊ တုခိတ် သော်၎င်း၊ သင့် ဆီသို့ ငါစေလွှတ် သောအခါ နိကောပလိ မြို့တိုင်အောင် ငါ့ ထံသို့ လာ ခြင်းငှာကြိုးစား လော့။ ဆောင်း ကာလပတ်လုံး ထိုမြို့ ၌ ငါနေမည်ဟုအကြံရှိ ၏။
13 சட்ட அறிஞரான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் அவர்களுடைய தேவைகளை ஒரு குறைவுமில்லாமல் பார்த்து அவர்களை அனுப்பிவை.
၁၃ကျမ်း ဆရာဇေန နှင့် အာပေါလု ၌ အဘယ် အရာမျှမလို စေခြင်းငှာ ကြိုးစား ၍လမ်း၌ ပို့လော့။
14 நமது மக்களும், அன்றாட அவசிய தேவைகளை பிறருக்குக் கொடுத்து உதவத்தக்கதாக நற்செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளவார்களாக. அவர்கள் ஒரு பயனற்ற வாழ்க்கையை வாழக்கூடாது.
၁၄ငါ တို့၏လူ များသည်လည်း အသီး မဲ့သောသူမ ဖြစ် ၊ ကိုယ်သုံးစရာဘို့ရှိရမည်အကြောင်း ၊ ကောင်း သောအကျင့် တို့ကိုအမြဲကျင့်အံ့သောငှာသင် ကြစေ။
15 என்னுடன் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். விசுவாசத்திற்குள்ளாக நம்மில் அன்பாய் இருக்கிறவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல். கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.
၁၅ငါ့ ထံမှရှိသောသူ အပေါင်း တို့သည် သင့် ကိုနှုတ်ဆက် ကြ၏။ ယုံကြည် ခြင်းနှင့်တကွ ငါ တို့ကိုချစ် သောသူ များကို နှုတ်ဆက် လော့။ သင် တို့အပေါင်း ၌ ကျေးဇူး တော်ရှိ စေသတည်း။ အာမင်။

< தீத்து 3 >