< உன்னதப்பாட்டு 6 >

1 பெண்களுள் பேரழகியே, உன் காதலர் எங்கே போய்விட்டார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பிப்போனார்? சொன்னால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அவரைத் தேடுவோம்.
မိန်းမ တကာတို့ ထက် အဆင်း လှသောအစ်မ၊ သင် ချစ် ရာသခင်သည် အဘယ် အရပ်သို့ကြွ တော်မူသနည်း။ အကျွန်ုပ်တို့သည် သင် နှင့်အတူ သူ့ ကိုရှာ ရမည် အကြောင်း ၊ သင် ချစ် ရာသခင်သည် အဘယ် အရပ်သို့ လွှဲ သွားတော်မူသည်ကို ပြောပါ။
2 என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும், லில்லிப் பூக்களைச் சேர்ப்பதற்கும், நறுமணச்செடிகளின் பாத்திகளுக்கும் போயிருக்கிறார்.
ငါ ချစ် ရာသခင်သည် ဥယျာဉ် တော်၌ သစ်သီးကို စား ၍ ၊ နှင်းပွင့် ကို ဆွတ်ယူ မည်ဟု၊ ဥယျာဉ် တော်တွင် နံ့သာ တော သို့ ဆင်း သွားတော်မူပေ၏။
3 நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
ငါ ချစ် ရာသခင်သည် ငါ့ ကိုဆိုင် တော်မူ၏။ ငါ သည်လည်း သခင် ကို ဆိုင် ပေ၏။ နှင်း တော၌ ကျက်စား တော်မူ၏။
4 என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், எருசலேமைப்போல வசீகரமானவள், கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள்.
ငါ ချစ် သောနှမ၊ သင် သည်တိရဇ မြို့ကဲ့သို့ လှ ၏။ ယေရုရှလင် မြို့ကဲ့သို့ တင့်တယ် ၏။ စစ် မျက်နှာကဲ့သို့ ကြောက်မက် ဘွယ်ဖြစ်၏။
5 உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; அவை என்னை மயக்குகின்றன. உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது.
သင် ၏မျက်စိ တို့ကို ငါ မှ လွှဲ ပါ။ သူ တို့သည် ငါ့ ကို အောင် ပြီ။ သင် ၏ဆံပင် သည်လည်း၊ ဂိလဒ် တောင်ပေါ်မှ ဆင်း လာသောဆိတ် စု ကဲ့သို့ ဖြစ်၏။
6 உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.
သင် ၏သွား တို့သည်လည်း၊ ရေချိုး ရာမှ တက် လာသော သိုး စု ကဲ့သို့ ဖြစ်ကြ၏။ တကောင်မျှ မလျော့ ၊ အမွှာ သာ ဘွားတတ်ကြ၏။
7 உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.
နားပန်း ဆံကြား မှာ ပါးတို့သည် သလဲ သီးရှက် နှင့် တူ ကြ၏။
8 அறுபது அரசிகளும், எண்பது வைப்பாட்டிகளும்; கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம்.
မိဖုရား ခြောက် ကျိပ်၊ မောင်းမမိဿံ ရှစ် ကျိပ်၊ အပျို တော်အတိုင်း မသိရှိကြ၏။
9 ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், அவள் தன் தாய்க்கு ஒரே மகள், அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை. கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்; அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள்.
ငါ့ ချိုး ၊ ငါ ၏စုံလင် သူသည် ငါ၌တပါး တည်းရှိ၏။ ဘွားမြင် သောမိခင် ၌ အချစ် ဆုံးသောသမီး ဖြစ်၏။ လူမျိုး သမီး တို့သည် သူ့ ကိုမြင် ၍ ကောင်းကြီး ပေးကြ၏။ မိဖုရား များနှင့် မောင်းမမိဿံ များတို့သည် ချီးမွမ်း ကြ၏။
10 சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்?
၁၀လ ကဲ့သို့ တင့်တယ် လျက်၊ နေ ကဲ့သို့ ထွန်းလင်း လျက်၊ စစ် မျက်နှာကဲ့သို့ ကြောက်မက် ဘွယ်ဖြစ်လျက်၊ နံနက် ကဲ့သို့ မျှော်ရှု သော သတို့သမီးကား ၊ အဘယ်သူ နည်း။
11 பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும், மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும் நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
၁၁ချိုင့် ထဲမှာ သစ်သီး များကိုကြည့်ရှု ၍ ၊ စပျစ်နွယ် ပင် သန်သည် မသန်သည်ကို၎င်း၊ သလဲ ပင်ပွင့် သည် မပွင့်သည်ကို၎င်းသိ ခြင်းငှါ ၊ ငါပြုစု သော ဥယျာဉ် သို့ ငါဆင်း သွား၏။
12 நான் புரிந்துகொள்ளும் முன்னமே, என் ஆசை என்னை என் மக்களின் அரச தேர்களுக்கு அழைத்துச் சென்றது.
၁၂သတိ မ ရမှီ ငါ့ ဝိညာဉ် သည် အမိနဒိပ်ရထား ကို စီးသကဲ့သို့ဖြစ်၏။
13 திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே, நாங்கள் உன்னை நன்றாய்ப் பார்க்கும்படி திரும்பி வா, திரும்பி வா! காதலன் இரண்டு அணிகளின் நடனங்களைப் பார்ப்பதுபோல், நீங்கள் ஏன் சூலமித்தியை உற்றுப் பார்க்கிறீர்கள்?
၁၃အိုရှုလမိတ် ၊ ပြန် လာပါ။ ပြန် လာပါ။ အကျွန်ုပ် တို့သည် သင့် ကို ရှုမြင် ရမည်အကြောင်း ၊ ပြန် လာပါ။ ပြန် လာပါ။ ရှုလမိတ် ၌ အဘယ်သို့ သောအရာကို တွေ့မြင် ကြလိမ့်မည်နည်း။ စစ်တပ် နှစ်တပ်ကဲ့သို့ တွေ့မြင်ကြ ပါမည်။

< உன்னதப்பாட்டு 6 >