< ரோமர் 9 >
1 நான் கிறிஸ்துவுக்குள் உண்மையையே சொல்கிறேன், நான் பொய் சொல்லவில்லை; என்னுடைய மனசாட்சியும் பரிசுத்த ஆவியானவரால் இதை உறுதிப்படுத்துகிறது.
ⲁ̅ⲐⲘⲎⲒ ⲠⲈϮϪⲰ ⲘⲘⲞⲤ ϦⲈⲚⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚϮϪⲈⲘⲈⲐⲚⲞⲨϪ ⲀⲚ ⲈⲤⲈⲢⲘⲈⲐⲢⲈ ⲈⲢⲞⲒ ⲚⲈⲘⲎⲒ ⲚϪⲈⲦⲀⲤⲨⲚⲎⲆⲈⲤⲒⲤ ϦⲈⲚⲞⲨⲠⲚⲈⲨⲘⲀⲈϤⲞⲨⲀⲂ.
2 என்னுடைய இருதயத்தில் பெரிதான துக்கமும், ஓயாத துயரமும் இருக்கின்றன.
ⲃ̅ϪⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲚⲒϢϮ ⲚⲘⲔⲀϨ ⲚϨⲎⲦ ⲚⲈⲘⲎ ⲒⲚⲈⲘ ⲞⲨϢⲈⲚϨⲎⲦ ⲘⲠⲀϤⲘⲞⲨⲚⲔ ϦⲈⲚⲠⲀϨⲎ Ⲧ.
3 ஏனெனில் எனது சொந்த மக்களாகிய என்னுடைய யூத சகோதர சகோதரிகள் மீட்படைவதற்காக, முடியுமானால் நானே சபிக்கப்படவும் கிறிஸ்துவிலிருந்து விலக்கப்படவும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
ⲅ̅ⲚⲀⲒⲦⲰⲂϨ ⲄⲀⲢ ⲀⲚⲞⲔ ⲈⲈⲢⲀⲚⲀⲐⲎⲘⲀ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲈϪⲈⲚ ⲚⲀⲤⲚⲎⲞⲨ ⲚⲀⲤⲨⲚⲄⲈⲚⲎⲤ ⲔⲀⲦⲀ ⲤⲀⲢⲜ
4 அவர்கள்தான் இஸ்ரயேல் மக்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட மகன்கள் என்ற உரிமை அவர்களுடையதே; இறைவனுடைய மகிமை, உடன்படிக்கைகள், மோசேயின் சட்டத்தைப் பெற்றுக்கொள்ளுதல், ஆலய வழிபாடுகள், வாக்குத்தத்தங்கள் யாவும் அவர்களுடையதே.
ⲇ̅ⲈⲦⲈ ⲚⲒⲤⲢⲀⲎⲖⲒⲦⲎⲤ ⲚⲈⲚⲎ ⲈⲦⲈ ⲐⲰⲞⲨ ⲦⲈ ϮⲘⲈⲦϢⲎⲢⲒ ⲚⲈⲘ ⲠⲒⲰⲞⲨ ⲚⲈⲘ ⲚⲒⲆⲒⲀⲐⲎⲔⲎ ⲚⲈⲘ ⲠⲒⲤⲈⲘⲚⲈ ⲚⲞⲘⲞⲤ ⲚⲈⲘ ⲠⲒϢⲈⲘϢⲒ ⲚⲈⲘ ⲚⲒⲰϢ.
5 முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். (aiōn )
ⲉ̅ⲚⲎ ⲈⲦⲈ ⲚⲞⲨⲞⲨ ⲚⲈⲚⲒⲒⲞϮ ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲞⲨ ⲞⲚ ⲀⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲒⲈⲂⲞⲖ ⲚϦⲎⲦⲞⲨ ⲔⲀⲦⲀ ⲤⲀⲢⲜ ⲪⲎ ⲈⲦⲬⲎ ϨⲒϪⲈⲚ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲪⲚⲞⲨϮ ⲈⲦⲤⲘⲀⲢⲰⲞⲨⲦ ϢⲀ ⲈⲚⲈϨ ⲀⲘⲎⲚ. (aiōn )
6 இதனால் இறைவனுடைய வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்தல்ல. ஏனெனில் இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே, உண்மையான இஸ்ரயேலர்கள் அல்ல.
ⲋ̅ⲠⲀⲒⲢⲎϮ ⲆⲈ ⲘⲠⲈ ⲠⲒⲤⲀϪⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ϨⲈⲒ ⲈⲂⲞⲖ ⲞⲨ ⲄⲀⲢ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲀⲚ ⲈⲦⲈ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲤⲖ ⲚⲀⲒ ⲚⲈⲠⲒⲤⲖ.
7 அதேபோல் அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததிகளாக இருப்பவர்கள் எல்லோரும் அவனுடைய உண்மையான பிள்ளைகளும் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.
ⲍ̅ⲞⲨⲆⲈ ϪⲈ ϨⲀⲚϪⲢⲞϪ ⲚⲦⲈⲀⲂⲢⲀⲀⲘ ⲚⲈϨⲀⲚϢⲎⲢⲒ ⲦⲎⲢⲞⲨ ⲚⲈⲀⲖⲖⲀ ϦⲈⲚⲒⲤⲀⲀⲔ ⲈⲨⲈⲐⲀϨⲈⲘ ⲞⲨϪⲢⲞϪ ⲚⲀⲔ.
8 இதிலிருந்து மனித இயல்பின்படி பிறக்கின்ற பிள்ளைகள் இறைவனுடைய பிள்ளைகளல்ல என்பது தெரிகிறது. இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளே ஆபிரகாமுடைய சந்ததிகளாய் எண்ணப்படுகிறார்கள்.
ⲏ̅ⲈⲦⲈ ⲪⲀⲒ ⲠⲈ ϪⲈ ⲚⲒϢⲎⲢⲒ ⲚⲦⲈⲦⲤⲀⲢⲜ ⲀⲚ ⲚⲀⲒ ⲚⲈⲚⲒϢⲎⲢⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲀⲖⲖⲀ ⲚⲒϢⲎⲢⲒ ⲚⲦⲈⲠⲒⲰϢ ⲈⲦⲞⲨⲚⲀⲞⲠⲞⲨ ⲈⲨϪⲢⲞϪ.
9 ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பிவருவேன். அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது.
ⲑ̅ⲠⲀⲒⲤⲀϪⲒ ⲄⲀⲢ ⲪⲀ ⲞⲨⲰϢ ⲠⲈ ϪⲈ ⲔⲀⲦⲀ ⲠⲀⲒⲤⲎⲞⲨ ⲪⲀⲒ ⲈⲒⲈⲒ ⲞⲨⲞϨ ⲈⲢⲈ ⲞⲨϢⲎⲢⲒ ϢⲰⲠⲒ ⲚⲤⲀⲢⲢⲀ.
10 இதுமாத்திரமல்ல நம்முடைய தந்தையாகிய ஈசாக்கின் மூலமாக ரெபெக்காள் இரட்டை பிள்ளைளைப் பெற்றாள்.
ⲓ̅ⲞⲨ ⲘⲞⲚⲞⲚ ⲆⲈ ⲀⲖⲖⲀ ⲚⲈⲘ ⲦⲔⲈⲈⲢⲈⲂⲈⲔⲔⲀ ⲈⲀⲤϬⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨϢⲀⲒⲢⲒ ⲚⲞⲨⲰⲦ ⲚⲦⲈⲒⲤⲀⲀⲔ ⲠⲈⲚⲒⲰⲦ.
11 ஆனால் இந்த இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான் என்று சொல்லப்பட்டது. அவர்கள் எந்தவித நன்மையையும் தீமையையும் செய்வதற்கு முன்னதாகவே, இறைவன் தாம் தெரிந்துகொள்வதன் நோக்கத்தை இவ்வாறு நிலைநிறுத்தினார்:
ⲓ̅ⲁ̅ⲈⲘⲠⲀⲚⲦⲞⲨⲘⲀⲤⲞⲨ ⲄⲀⲢ ⲞⲨⲆⲈ ⲘⲠⲀⲦⲞⲨⲒⲢⲒ ⲚⲞⲨϨⲰⲂ ⲈⲚⲀⲚⲈϤ ⲒⲈ ⲈϤϨⲰⲞⲨ ϨⲒⲚⲀ ϮⲘⲈⲦⲤⲰⲦⲠ ⲈⲦⲀ ⲪⲚⲞⲨϮ ⲐⲀϢⲤ ⲒⲤϪⲈⲚ ϢⲞⲢⲠ ⲚⲦⲈⲤϢⲰⲠⲒ ⲈⲤⲤⲘⲞⲚⲦ.
12 அது செயல்களினால் அல்ல, அழைப்பவரின் அடிப்படையிலே இருக்கவேண்டும் என்பதே. இதனால்தான், “மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்” என்று ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டது.
ⲓ̅ⲃ̅ⲈⲚⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚϨⲀⲚϨⲂⲎⲞⲨⲒ ⲀⲚ ⲦⲈ ⲀⲖⲖⲀ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲈⲦⲐⲰϨⲈⲘ ⲀⲨϪⲞⲤ ⲚⲀⲤ ϪⲈ ⲈⲢⲈ ⲠⲒⲚⲒϢϮ ⲈⲢⲂⲰⲔ ⲘⲠⲒⲔⲞⲨϪⲒ.
13 அதனால்தான், “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டது.
ⲓ̅ⲅ̅ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲤϦⲎⲞⲨⲦ ϪⲈ ⲒⲀⲔⲰⲂ ⲘⲈⲚ ⲀⲒⲘⲈⲚⲢⲒⲦϤ ⲎⲤⲀⲨ ⲆⲈ ⲀⲒⲘⲈⲤⲦⲰϤ.
14 ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை.
ⲓ̅ⲇ̅ⲞⲨ ϪⲈ ⲠⲈⲦⲈⲚⲚⲀϪⲞϤ ⲘⲎ ⲞⲨⲞⲚ ⲞⲨⲘⲈⲦϬ ⲒⲚϪⲞⲚⲤ ϦⲀⲦⲈⲚ ⲪⲚⲞⲨϮ ⲚⲚⲈⲤϢⲰⲠⲒ.
15 ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன். யார்மேல் அனுதாபங்கொள்ள விருப்பமாய் இருக்கிறேனோ, அவர்மேல் அனுதாபங்கொள்வேன்” என்றார்.
ⲓ̅ⲉ̅ϤϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ⲘⲘⲰⲨⲤⲎⲤ ϪⲈ ϮⲚⲀⲚⲀⲒ ⲘⲪⲎ ⲈϮⲚⲀⲚⲀⲒ ⲚⲀϤ ⲞⲨⲞϨ ϮⲚⲀϢⲈⲚϨⲎ ⲦϦⲀ ⲪⲎ ⲈϮⲚⲀϢⲈⲚϨⲎⲦ ϦⲀⲢⲞϤ.
16 எனவே ஒரு மனிதனுடைய விருப்பத்தின்படியோ, அவனுடைய முயற்சியின்படியோ அல்ல, இறைவனுடைய இரக்கத்தின்படியே அவர் மனிதனைத் தெரிந்துகொள்கிறார்.
ⲓ̅ⲋ̅ϨⲀⲢⲀ ⲞⲨⲚ ⲪⲀ ⲠⲈⲐⲞⲨⲰϢ ⲀⲚ ⲠⲈ ⲞⲨⲆⲈ ⲘⲪⲀ ⲠⲈⲦϬⲞϪⲒ ⲀⲚ ⲠⲈ ⲀⲖⲖⲀ ⲪⲀ ⲪⲚⲞⲨϮ ⲈⲐⲚⲀⲒ ⲠⲈ.
17 ஏனெனில் இறைவன் பார்வோனுக்கு, “என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்” என்று சொன்னார் எனறு வேதவசனம் கூறுகிறது.
ⲓ̅ⲍ̅ⲤϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ⲚϪⲈϮⲄⲢⲀⲪⲎ ⲘⲪⲀⲢⲀⲰ ϪⲈ ⲈⲐⲂⲈ ⲪⲀⲒ ⲀⲒⲦⲞⲨⲚⲞⲤⲔ ϨⲒⲚⲀ ⲚⲦⲀⲞⲨⲰⲚϨ ⲚⲦⲀϪⲞⲘ ⲈⲂⲞⲖ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲔ ⲞⲨⲞϨ ⲚⲤⲈⲪⲒⲢⲒ ⲈⲠⲀⲢⲀⲚ ϨⲒϪⲈⲚ ⲠⲔⲀϨⲒ ⲦⲎⲢϤ.
18 எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனை அப்படியே விட்டுவிடுகிறார்.
ⲓ̅ⲏ̅ϨⲀⲢⲀ ⲞⲨⲚ ⲠⲈⲦⲈϤⲞⲨⲀϢϤ ϢⲀϤⲚⲀⲒ ⲚⲀϤ ⲪⲎ ⲆⲈ ⲈⲦⲀϤⲞⲨⲀϢϤ ⲀⲚ ϢⲀϤⲈⲐⲢⲈϤⲈⲚϢⲰⲦ.
19 உங்களில் ஒருவன் என்னிடம், “அப்படியானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? யாரால் இறைவனுடைய திட்டத்தை எதிர்க்கமுடியும்?” என்று கேட்கலாம்.
ⲓ̅ⲑ̅ⲬⲚⲀϪⲞⲤ ⲞⲨⲚ ⲚⲎⲒ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ϤϪⲈⲘ ⲀⲢⲒⲔⲒ ⲚⲒⲘ ⲄⲀⲢ ⲈϤϮ ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲈⲚ ⲠⲈϤⲤⲞϬ ⲚⲒ.
20 அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுகிறதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?” என்று கேட்கலாமா?
ⲕ̅ⲘⲈⲚⲞⲨⲚⲄⲈ ⲰⲪⲢⲰⲘⲒ ⲚⲐⲞⲔ ⲚⲒⲘ ⲚⲐⲞⲔ ⲪⲎ ⲈⲦⲈⲢⲞⲨⲰ ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲈⲚ ⲪⲚⲞⲨϮ ⲘⲎ ⲈⲢⲈϢ ⲠⲒⲘⲞⲚⲔ ϪⲞⲤ ⲘⲪⲎ ⲈⲦⲀϤⲘⲞⲚⲔϤ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲀⲔⲐⲀⲘⲒⲞⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
21 ஒரே களிமண்ணைப் பிசைந்து சில பாத்திரங்களை மேன்மையான உபயோகத்திற்கென்றும், சில பாத்திரங்களை சாதாரண உபயோகத்திற்கென்றும் உருவாக்குவதற்குக் குயவனுக்கு உரிமை இல்லையா?
ⲕ̅ⲁ̅ϢⲀⲚ ⲘⲘⲞⲚ ⲚⲦⲈⲠⲒⲔⲈⲢⲀⲘⲈⲨⲤ ⲘⲠⲈⲢϢⲒϢⲒ ⲘⲠⲈϤⲞⲘⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲀⲒⲞⲨⲰϢⲈⲘ ⲢⲰ ⲈⲐⲀⲘⲒⲞ ⲚⲞⲨⲤⲔⲈⲨⲞⲤ ⲞⲨⲀⲒ ⲘⲈⲚ ⲈⲠⲦⲀⲒⲞ ⲔⲈⲞⲨⲀⲒ ⲆⲈ ⲈⲨϢⲰϢ.
22 அதேபோல இறைவனும் எல்லோர்மேலும் தம்முடைய கடுங்கோபத்தைக் காட்டவும், தம்முடைய வல்லமையைத் தெரியப்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், அழிவுக்குரிய தம்முடைய கடுங்கோபத்திற்கு ஆளானவர்களில் தாம் தெரிந்துகொண்டவர்களுடன் மிகவும் பொறுமையோடு இருந்தால் யார் என்ன செய்யக்கூடும்?
ⲕ̅ⲃ̅ⲒⲤϪⲈ ⲆⲈ ⲀϤⲞⲨⲰϢ ⲚϪⲈⲪⲚⲞⲨϮ ⲈϤⲞⲨⲰⲚϨ ⲘⲠⲈϤϪⲰⲚⲦ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲘⲞⲚ ⲈⲦⲈϤϪⲞⲘ ⲀϤⲒⲚⲒ ϦⲈⲚⲞⲨⲚⲒϢϮ ⲘⲘⲈⲦⲢⲈϤⲰⲞⲨ ⲚϨⲎⲦ ⲚϨⲀⲚⲤⲔⲈⲨⲞⲤ ⲚⲦⲈⲠϪⲰⲚⲦ ⲈⲨⲤⲈⲂⲦⲰⲦ ⲈⲠⲦⲀⲔⲞ.
23 இறைவன் தமது மகிமையின் நிறைவைக் காட்டுவதற்காகவே அவ்வாறு அவர்களுடன் பொறுமையாய் இருந்தார். முன் மகிமைக்கு ஆயத்தமாகி தமது இரக்கத்திற்கு உள்ளானவர்களான நமக்கு, மகிமையின் நிறைவைக் காண்பிக்கவே இப்படிச் செய்தார்.
ⲕ̅ⲅ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲞⲨⲰⲚϨ ⲚϮⲘⲈⲦⲢⲀⲘⲀⲞ ⲚⲦⲈⲠⲈϤⲰⲞⲨ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ϨⲀⲚⲤⲔⲈⲨⲞⲤ ⲚⲚⲀⲒ ⲈⲦⲈ ⲚⲎ ⲚⲈⲈⲦⲀϤⲈⲢϢⲞⲢⲠ ⲚⲤⲈⲂⲦⲰⲦⲞⲨ ⲈⲨⲰⲞⲨ.
24 இறைவன் யூதர்களிடமிருந்து மாத்திரமல்ல, யூதரல்லாதவர்களிடமிருந்தும் நம்மை அழைத்தார்.
ⲕ̅ⲇ̅ⲈⲦⲈ ⲀⲚⲞⲚ ⲠⲈ ϦⲀ ⲚⲎ ⲈⲦⲀϤⲐⲀϨⲘⲞⲨ ⲞⲨ ⲘⲞⲚⲞⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲀⲖⲖⲀ ⲚⲈⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲔⲈⲈⲐⲚⲞⲤ.
25 இதைப்பற்றியே ஓசியாவின் புத்தகத்திலே, “நான் என்னுடைய மக்கள் அல்லாதவர்களை ‘என்னுடைய மக்கள்’ என்றும்; அன்பில்லாத ஒருத்தியை, ‘எனக்கு அன்பானவள்’ என்றும் அழைப்பேன்.”
ⲕ̅ⲉ̅ⲘⲪⲢⲎϮ ⲞⲚ ⲈⲦⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲤⲒⲈ ϪⲈ ϮⲚⲀⲘⲞⲨϮ ⲈⲪⲎ ⲈⲦⲈ ⲠⲀⲖⲀⲞⲤ ⲀⲚ ⲠⲈ ϪⲈ ⲠⲀⲖⲀⲞⲤ ⲞⲨⲞϨ ⲐⲎ ⲈⲦⲈ ⲘⲠⲞⲨⲘⲈⲚⲢⲒⲦⲤ ϪⲈ ⲀⲨⲘⲈⲚⲢⲒⲦⲤ.
26 மேலும், “‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள். இது நிகழும் என்று இறைவன் சொல்லுகிறார்” என்று எழுதப்பட்டுள்ளது.
ⲕ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲈⲤⲈϢⲰⲠⲒ ϦⲈⲚⲠⲒⲘⲀ ⲈⲦⲀⲨϪⲞⲤ ⲚⲰⲞⲨ ⲘⲘⲞϤ ϪⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲠⲀⲖⲀⲞⲤ ⲀⲚ ⲘⲠⲒⲘⲀ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲈⲨⲈⲘⲞⲨϮ ⲈⲢⲰⲞⲨ ϪⲈ ⲚⲈⲚϢⲎ ⲢⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲈⲦⲞⲚϦ.
27 இறைவாக்கினன் ஏசாயாவும் இஸ்ரயேலரைக் குறித்து, “இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை கடற்கரையின் மணலைப்போல் இருக்கிறது. ஆனால், மீதியாயிருக்கும் மக்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள்.
ⲕ̅ⲍ̅ⲎⲤⲀⲎⲀⲤ ⲆⲈ ⲈϤⲰϢ ⲈⲂⲞⲖ ⲈϪⲈⲚ ⲠⲒⲤⲖ ϪⲈ ⲈϢⲰⲠ ⲈⲢⲈ ⲦⲎⲠⲒ ⲚⲦⲈⲚⲈⲚϢⲎⲢⲒ ⲘⲠⲒⲤⲖ ⲈⲤⲞⲒ ⲘⲪⲢⲎϮ ⲘⲠⲒϢⲰ ⲚⲦⲈⲪⲒⲞⲘ ⲠⲤⲰϪⲠ ⲈϤⲈⲚⲞϨⲈⲘ.
28 ஏனெனில் கர்த்தர் பூமியின்மேல் விரைவாகவும், மனத்திடத்தோடும் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.”
ⲕ̅ⲏ̅ⲞⲨⲤⲀϪⲒ ⲄⲀⲢ ⲈϤϪⲰⲔ ⲘⲘⲞϤ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲈϤϢⲰⲦ ⲘⲘⲞϤ ⲈⲂⲞⲖ ⲪⲎ ⲈⲦⲈ ⲠϬⲞⲒⲤ ⲚⲀⲀⲒϤ ϨⲒϪⲈⲚ ⲠⲔⲀϨⲒ.
29 ஏசாயா இன்னுமொரு இடத்தில் முன்னறிவித்திருக்கிறார், “எல்லாம் வல்ல கர்த்தர் நமக்கு சந்ததிகளாக சிலரை விட்டுவைக்காதிருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம், நாங்கள் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.”
ⲕ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲞⲚ ⲈⲦⲀϤϪⲞⲤ ⲚϪⲈⲎⲤⲀⲎⲀⲤ ϪⲈ ⲈⲚⲈⲘⲠⲈ ⲠϬⲞⲒⲤ ⲤⲀⲂⲀⲰⲐ ⲤⲰϪⲠ ⲚⲞⲨϪⲢⲞϪ ⲚⲀⲚ ⲚⲀⲚⲚⲀⲈⲢ ⲘⲪⲢⲎϮ ⲚⲤⲞⲆⲞⲘⲀ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲚⲀⲚⲚⲀⲒⲚⲒ ⲚⲄⲞⲘⲞⲢⲢⲀ.
30 அப்படியானால் நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். அது விசுவாசத்தின் மூலமாக வரும் நீதியே;
ⲗ̅ⲞⲨ ϪⲈ ⲠⲈⲦⲈⲚⲚⲀϪⲞϤ ϪⲈ ⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲈⲦⲈ ⲘⲠⲞⲨϬⲞϪⲒ ⲚⲤⲀϮⲘⲈⲐⲘⲎⲒ ⲀⲨⲦⲀϨⲈ ϮⲘⲈⲐⲘⲎ ⲒϮⲘⲈⲐⲘⲎⲒ ⲆⲈ ϮⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲀϨϮ.
31 ஆனால் இஸ்ரயேலரோ, நீதியின் சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சித்தும் நீதியைப் பெறவில்லை.
ⲗ̅ⲁ̅ⲠⲒⲤⲖ ⲆⲈ ⲈϤϬⲞϪⲒ ⲚⲤⲀⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲚⲦⲈϮⲘⲈⲐⲘⲎⲒ ⲘⲠⲈϤⲪⲞϨ ⲈⲠⲒⲚⲞⲘⲞⲤ.
32 அவர்கள் ஏன் அதைப் பெறவில்லை? அவர்கள் அதை விசுவாசத்தின்மூலமாய் அல்ல, தங்கள் செயல்களின் மூலம் கடைப்பிடிக்கவே முயற்சித்தார்கள். அப்படி அவர்கள், தடுக்கி விழப்பண்ணும் கல்லில் தடுக்கி விழுந்தார்கள்.
ⲗ̅ⲃ̅ⲈⲐⲂⲈⲞⲨ ϪⲈ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲀϨϮ ⲀⲚ ⲠⲈ ⲀⲖⲖⲀ ϨⲰⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚϨⲀⲚϨⲂⲎⲞⲨⲒ ⲀⲨϬⲒϬⲢⲞⲠ ⲈⲠⲒⲰⲚⲒ ⲚϬⲢⲞⲠ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲤϦⲎⲞⲨⲦ
33 இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளபடியே நடந்தது: “இதோ, நான் மனிதர்களை இடறச்செய்யும் கல்லையும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையையும் சீயோனிலே வைக்கிறேன்; ஆனால் அவரில் விசுவாசம் கொண்டிருக்கிற எவரும் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள்.”
ⲗ̅ⲅ̅ϪⲈ ϨⲎⲠⲠⲈ ϮⲚⲀⲬⲰ ϦⲈⲚⲤⲒⲰⲚ ⲚⲞⲨⲰⲚⲒ ⲚϬⲢⲞⲠ ⲚⲈⲘ ⲞⲨⲠⲈⲦⲢⲀ ⲚⲤⲔⲀⲚⲆⲀⲖⲞⲚ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲚⲀϨϮ ⲈⲢⲞϤ ⲚⲚⲈϤϬⲒϢⲒⲠⲒ.