< ரோமர் 4 >

1 நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?
ୱାଟିଂ ଗାଗାଡ଼୍‌ ବାବ୍ରେ ମା ଆକର୍‌ ଅବ୍ରାହାମ୍‌ ଇନାକା ପାୟା ଆତାନ୍‌ ଇଞ୍ଜି ଇନାସ୍‌?
2 உண்மையிலேயே ஆபிரகாம் தனது செயல்களின் பொருட்டு நீதிமான் ஆக்கப்பட்டிருந்தால், அவன் பெருமைபாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவன் பெருமைபாராட்ட இடமில்லை.
ଇନାକିଦେଂକି ଅବ୍ରାହାମ୍‌ ଜଦି କିନି କାମାୟ୍‌ନି ଦାର୍ମି ଇଞ୍ଜି ଗାଣା କିୟାତାନ୍‌, ଲାଗିଂ ତା ଗରବ୍‌ କିନାକା ମାନାତ୍‌, ମାତର୍‌ ଇସ୍ୱର୍‌ତି ଲାଗାଂ ହିଲେତ୍ ।
3 வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”
ଇନେକିଦେଂକି ସାସ୍ତର୍‌ ଇନାକା ଇନାତ୍‌? “ଅବ୍ରାହାମ୍‌ ଇସ୍ୱର୍‌ ତାକେ ପାର୍ତି କିତାନ୍‌, ଆରେ ଇ ପାର୍ତି କାଜିଂ ଇସ୍ୱର୍‌ ହେୱାନିଂ ଦାର୍ମି କିଜ଼ି ଇଡ୍‌ତାନ୍‌ ।
4 வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி.
ଇନେର୍‌ କାମାୟ୍‌ କିନାନ୍‌, କୁଲି ଡାବୁଂ ତା ପାୟାନାକା-ଇନେର୍‌ତାଂ ଦାନ୍‌ ଲାକେ ହେୱାନ୍‌ ପାୟା ଆଉନ୍‌ ।
5 ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
ମାତର୍‌ ଇନେର୍‌ କାମାୟ୍‌ ଜପି ପାର୍ତି କିଉନ୍‌, ମତର୍‌ ଦାର୍ମିହିଲାକାନିଂ ଦାର୍ମି ଇଞ୍ଜି ଇନେର୍‌ ଗାଣାକିନାର୍‌, ହେୱାନ୍‌ ତାକେ ପାର୍ତି କିନାନ୍‌, ହେୱାନ୍‌ ପାକ୍ୟାତ ହେୱାନ୍ତି ପାର୍ତି ଦାର୍ମି ଇଞ୍ଜି ଗାଣାନାତ୍‌ ।
6 இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது,
ଇମ୍‌ଣି ମାନାୟ୍‌ତି କାମାୟ୍‌ କାବାଡ଼୍‌ ନିପ ହୁଡ଼୍‌ୱାଦାଂ ଇସ୍ୱର୍‌ ହେୱାନିଂ ଦାର୍ମି ଇଞ୍ଜି ଇଟ୍‌ନାନ୍‌, ହେୱାନିଂ ୱାରିକିୟ୍‌ କିଜ଼ି ଦାଉଦ୍‌ ଇଚାନ୍ନା ।
7 “தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய், தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ଇମ୍‌ଣାକାର୍‌ତି ଅପ୍‌ରାଦ୍‌ ସବୁ କେମା ଆତାତ୍‌ନ୍ନା, ଆରେ ଇମ୍‌ଣାକାର୍‌ତି ପାପ୍‌ ସବୁ କେମା ପାୟାତାନ୍ନା, ହେୱାର୍‌ ଦନ୍ୟ ।
8 ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான்.
ମାପ୍ରୁ ଇମ୍‌ଣାକାରିଂ ଦନ୍ୟ ଇଞ୍ଜି ମାନାୟ୍‌ତି ପାପ୍‌ ଗାଣା କିଉନ୍‌, ହେୱାନ୍‌ ଦନ୍ୟ ।”
9 இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம்.
ଇବେ ଦାଉଦ୍‌ ଇନେରିଂ ଦନ୍ୟ ଇଞ୍ଜି ଇଚାନ୍ନା, ହେୱାର୍‌ ଇନାକା କେବଲ୍‌ ସୁନ୍ନତ୍‌ ଲଗୁ ମାଚାର୍‌? କି, ଅସୁନ୍ନତ୍‌ ଲଗୁ ପା ଦନ୍ୟ ଆଦେଂ ଆଡ୍‌ନାର୍‌ । ଆସ୍‌ ଇନାସା-ଅବ୍ରାହାମ୍‌ ପାର୍ତି ହୁକେ ଦାର୍ମି ଇନ୍ୟା ଆତାନ୍‌ ।
10 அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது.
ବାଟିଙ୍ଗ୍‌, ହେଦାଂ ଇମ୍‌ଣି ସମୁ ୱେଡ଼ାଲିଂ ଗିଟାଜ଼ି ମାଚାତ୍‌? ଅବ୍ରାହାମ୍‌ ସୁନ୍ନତ୍‌ ଆନି ପାଚେ ଆକାୟ୍‌, ତା, ଆଗେତାଂ ପାଚେ ଆକାୟ୍‌ ।
11 ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாமல் இருந்தபோதே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகப் பின்பு பெற்றான். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறான். இதனால் அப்படியே அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
ଆରେ, ହେୱାନ୍‌ ସୁନ୍ନତ୍‌ଆୱି ଅବସ୍ତାତ ପାର୍ତି ଇସାବ୍‌ତ ଦାର୍ମି ଗାଣାକିୟାଜ଼ି ହେବେନି ଚିନ୍‌ ଇଟ୍‌ୟାନି ଇସାବେ ସୁନ୍ନତ୍‌ ଚିନ୍‌ ପାୟାତାନ୍‌, ଇନେସ୍‌ ସୁନ୍ନତ୍‌ଆୱି ଅବସ୍ତାତ ମାନି ୱିଜ଼ାର୍‌ ପାର୍ତି କିନାକାର୍‌ ପାକ୍ୟାତ ଦାର୍ମି ଗାଣାକିୟାନି କାଜିଂ ହେୱାନ୍‌ ହେୱାର୍‌ତି ଆବା ଆନାନ୍‌,
12 விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான்.
ଆରେ, ଇନେସ୍‌ ହେୱାନ୍‌ ସୁନ୍ନତ୍‌ ଆତାକାରିଂ ଆବା ଆନାନ୍‌, ଇଚିସ୍‌ ଇମ୍‌ଣାକାର୍‌ ସୁନ୍ନତ୍‌ ପାୟାତାର୍‌, କେବଲ୍‌ ହେୱାର୍‌ତି ଆକାୟ୍‌, ମତର୍‌ ସୁନ୍ନତ୍‌ ଆୱାତାକାର୍‌ତି ସମୁତ ମା ଆବା ଅବ୍ରାହାମ୍‌ତି ଇମ୍‌ଣି ପାର୍ତି ମାଚାତ୍‌, ହେବେନି ପାଦ୍‌ ଚିନ୍‌ ହିଜ଼ି ଇମ୍‌ଣାକାର୍‌ ହାନାର୍‌ ହେୱାର୍‌ତି ଆବା ।
13 உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது.
ଇନେକିଦେଂକି ଅବ୍ରାହାମ୍‌ ବିଦି ପାଲି କିଜ଼ି ମାନି କାଜିଂ ଆକାୟ୍‌ । କେବଲ୍‌ ହେୱାନ୍ତି ପାର୍ତି କାଜିଂ ଇସ୍ୱର୍‌ତି ହୁକେ ଦାର୍ମିଲାକେ ଆଦିକାର୍‌ ପାୟାତାନ୍‌ ଆରି ହେଦାଂ କାଜିଂ ହେୱାନ୍‌ ହେୱାନ୍ତି ଲାତ୍ରାର୍‌ ପୁର୍ତିତ ଆଦିକାର୍‌ ଆନାର୍‌ ଇଞ୍ଜି ରାଣ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌
14 ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது.
ଲାଗିଂ ଜଦି ବିଦି ପାଲି କିତାର୍‌, କେବଲ୍‌ ହେୱାର୍‌ ଜଦି ଇସ୍ୱର୍‌ତି ଦାନ୍‌ ଗାଟାତିସ୍‌, ତେବେ ମାନାୟ୍‌ତି ପାର୍ତି ପଲ୍ୟା, ଇସ୍ୱର୍‌ତି ରାଣ୍‌ ପା
15 ஆனால் மோசேயின் சட்டம் இறைவனின் கோபத்தையே கொண்டுவருகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாத இடத்தில், மீறுதலும் இல்லை.
ଇନାକିଦେଂକି ବିଦି ଉଡ଼ାନି ହୁଦାଂ ମାନାୟ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ରିସାନି ଲଗୁ ଆନାନ୍‌ । ମାତର୍‌ ଇମେତାକେ ବିଦି ହିଲୁତ୍‌, ହେବେ ବିଦି ଉଡ଼ାନାକା ପର୍‌ସନ୍‌ ନିଙ୍ଗୁତା ।
16 ஆதலால் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் வருகிறது. இதனால் இந்த வாக்குத்தத்தம் இலவசமான கிருபையினால், ஆபிரகாமின் சந்ததிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்ற உறுதியையும் காட்டுகிறது. மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் விசுவாசிக்கிறவர்களுக்கும் அது கொடுக்கப்படுகிறது. ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார்.
ଲାଗିଂ ଇ ପାର୍ମାଣ୍‌ ପାର୍ତି କାଜିଂ ପାୟାନାନ୍‌, ଇନେସ୍‌ ହେଦାଂ ଦୟା ଇସାବ୍ରେ ଆନାତ୍‌, ଆରେ ତାପାଚେ ସବୁ ଲାତ୍ରା ପାକ୍ୟାତ, କେବଲ୍‌ ମସାତି ବିଦି ଲାତ୍ରା ପାକ୍ୟାତ ଆକାୟ୍‌, ମତର୍‌ ଅବ୍ରାହାମ୍‌ତି ପାର୍ତି କିନି ଲାତ୍ରା ପାକ୍ୟାତ ପା ହେ ପାର୍ମାଣ୍‌ ତିର୍‌ ମାନାତ୍‌ ।
17 “அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான்.
ଇ ବିସ୍ରେ ସାସ୍ତର୍‌ତ ଲେକାମାନାତ୍‌, “ନିଂ ଆପ୍‌ ବେସି ଜାତିନି ଆବା କିଦ୍‌ନାପ୍‌,” ଇସ୍ୱର୍‌ତି କାଣ୍‌କୁତ ଇ ପାର୍ମାଣ୍‌ ହାତ୍‌ପା ମାଚାତ୍‌, ଇନେକିଦେଂକି ଇମ୍‌ଣି ଇସ୍ୱର୍‌ତିଂ ଅବ୍ରାହାମ୍‌ ପାର୍ତି କିଜ଼ି ମାଚାନ୍‌, ହେୱାନ୍ତି ବଚନ୍‌ ହାକିତିଂ ଜିବୁନ୍‌ କିନାତ୍‌ ଆରି ୱାରାକାଦ୍‌ଲିଙ୍ଗ୍‌ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ଉବ୍‌ଜାୟ୍‌ କିନାତ୍‌ ।
18 “உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான்.
“ଆହା କିନି କାଜିଂ ଇମ୍‌ଣାକା ପା କାରଣ୍‌ ହିଲ୍‌ୱିତିସ୍‌ ପା ଅବ୍ରାହାମ୍‌ ପାର୍ତି କିଜ଼ି ଆହାଲାବ୍‌ଡ଼ି ଆତାନ୍‌ । ଲାଗିଂ ହେୱାନ୍‌ ବେସି ଜାତିନି ଆବା ଆତାନ୍‌, ଇନେକିଦେଂକି ସାସ୍ତର୍‌ ଇସାପ୍ରେ ହେୱାନିଂ ପାର୍ମାଣ୍‌ ଗାଟାଜ଼ି ମାଚାତ୍‌;
19 அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை.
ଅବ୍ରାହାମ୍‌ ବୟସ୍‌ ପାଞ୍ଚ୍‌କଡ଼ି ବାର୍ହୁ ଆତିଲେ ହେୱାନ୍‌ ଜାର୍‌ ଗାଗାଡ଼୍‌ତିଂ ଜିବୁନ୍‌ ପାଗ୍‌ନାକା ଆରି ସାରାତି ପଟତିଂ ହାକି ଇଞ୍ଜି ବାବି କିତାର୍‌ ପା ପାର୍ତିତ ନାଦାର୍‌ ଆୱାତାର୍‌,
20 இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான்.
ଇଚିସ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ପାର୍ମାଣ୍‌ କାଜିଂ ହୁଡ଼୍‌ଜି ପାର୍ତି କିୱାକା ହୁକେ ପାର୍ତି କିୱାତାନ୍‌, ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍‌ତିଂ ଜାଜ୍‌ମାଲ୍‌ କିତାର୍‌ ।
21 தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான்.
ମାତର୍‌ ଇସ୍ୱର୍‌ ଇନାକା ପାର୍ମାଣ୍‌ କିତାନ୍‌ନା, ହେଦାଂ ମାନି କିଦେଙ୍ଗ୍‌ ପା ହେୱାନ୍‌ ଜେ ଆଡ୍‌ନାନ୍‌, ହେୱାନ୍‌ ପୁରା କିନାନ୍‌ ଇଞ୍ଜି ପାର୍ତିତ ବାଡ଼୍‌କାସ୍‌ ଆତାନ୍‌ ।
22 இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.
ଇଦାଂ କାଜିଂ ପା ଇଦାଂ ହେୱାନ୍‌ତି ପାକ୍ୟାତ ଦାର୍ମି ଇଞ୍ଜି ଗାଣା କିୟାତାନ୍‌;
23 அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
ତା ପାକ୍ୟାତ ଜେ ଗାଣା କିୟାତାନ୍‌, ଇଦାଂ ଇନାକା ହେୱାନ୍‌ତି କାଜିଂ ଲେକା ଆୱାତାତ୍‌ନା,
24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது.
ମତର୍‌ ମା କାଜିଂ ପା ଲେକା ଆତାତ୍‌ନ୍ନା; ଇନେକିଦେଂକି ଜେ ମା ମାପ୍ରୁ ଜିସୁ ହାତାକାର୍‌ ବିତ୍ରେ ନିଂତାନ୍ନା, ହେୱାନ୍‌ ତାକେ ପାର୍ତି କିନାପା ଜେ ଆପେଂ, ମା ପାକ୍ୟାତ ପା ହେଦାଂ ଗାଣା କିୟାନାତ୍‌;
25 இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார்.
ହେ ଜିସୁ ମା ପାପ୍‌ କାଜିଂ ହେଲାୟ୍‌ କିୟାତାନ୍‌, ଆରେ ଇସ୍ୱର୍‌ତି ଲାଗାୟ୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଦାର୍ମି କିଦେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ଆରେ ନିଂତାନ୍ନା ।”

< ரோமர் 4 >