< ரோமர் 14 >
1 விசுவாசத்தில் பலவீனமாயிருக்கிறவனை, அவனுடைய கருத்து வேறுபாடுகளைக்குறித்து அவனுடன் வாதாடாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ଦୁର୍ବଳ୍ ବିସ୍ୱାସିକେ ହେଁ ନିଜାର୍ ଦଃଳେ କୁଦା, ମଃତର୍ ତାର୍ ନିଜାର୍ ବିସ୍ୱାସ୍ ବିସୟେ ବିନ୍ବିନ୍ ଅଃଉଆ ନାୟ୍ ।
2 ஒருவனுடைய விசுவாசம், எல்லாவித உணவையும் சாப்பிட அவனை அனுமதிக்கிறது. ஆனால் விசுவாசத்தில் பலவீனமாய் இருக்கிற இன்னொருவனோ, மரக்கறி உணவை மட்டுமே சாப்பிடுகிறான்.
ଜେ ବିସ୍ୱାସେ ଅଃଟୁଆ, ସେ ସଃବୁ କାଦି କଃଉଁକେ ହାରେ, ମଃତର୍ ଜାର୍ ବିସ୍ୱାସ୍ ଅଃଟୁଆ ନାୟ୍ ସେ ଅଃବ୍କା ଡାଳ୍ମାଳ୍ ସାଗ୍ କାଉଅ ।
3 எனவே எல்லாவகை உணவையும் சாப்பிடுகிறவன் அவற்றைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்கிறவனை இகழ்வாகப் பார்க்கக்கூடாது. அதுபோல் எல்லாவகை உணவையும் சாப்பிடாதவனோ எல்லாவகை உணவைச் சாப்பிடுகிறவனில் குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே.
ଜେ ସଃବୁ ରଃକମ୍ କାଦି କାୟ୍ଦ୍, ସେ ନଃକାତା ଲକେ ନିଚ୍ ନଃକେର, ଆରେକ୍ ଜେ ନଃକାୟ୍ ସେ କାତା ଲକେ ବିଚାର୍ ନଃକେର୍; ବଃଲେକ୍ ଇସ୍ୱର୍ ତାକେ ଆଗଳି ଆଚେ ।
4 இன்னொருவனுடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அதற்கு அவனுடைய சொந்த எஜமானரே பொறுப்பாளி. அவன் உறுதியாய் நிற்பான், ஏனெனில் கர்த்தர் அவனுக்கு உறுதியாய் நிற்க ஆற்றலைக் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.
ତୁମିମଃନ୍ କେ ଜେ, ବିନ୍ ଲକାର୍ ଗତିଦଃଙ୍ଗ୍ଳାର୍ ବିଚାର୍ କଃରୁଲାସ୍? ସେ ତାର୍ କାମ୍ କଃତେକ୍ ଦୁରି କଃରୁ ହାରୁଲା କି କଃରୁକେ ନଃହାରୁଲା, ସେରି ତାର୍ ସାଉକାର୍ ବିଚାର୍ କଃରେଦ୍, ସେ ବାୟ୍ଦ୍ରେ ସେରି କଃରୁକେ ହାରେଦ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତାର୍ ସାଉକାର୍ ତାକ୍ ତାର୍ କାମ୍ କଃରାଉଁକ୍ ହାରେ ।
5 ஒருவன் ஒருநாளைவிட, இன்னொரு குறிப்பிட்ட நாள் சிறந்தது என்று எண்ணுகிறான்; ஆனால் இன்னொருவனோ, எல்லா நாட்களையும் ஒரேவிதமாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய மனதில் இவற்றைக்குறித்து உறுதியாகத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
ଗଟ୍ଲକାର୍ ବିସ୍ୱାସେ ବିନ୍ ଦିନ୍ମଃନ୍ ତଃୟ୍ହୁଣି ଗଟେକ୍ ଟିକ୍ ଅଃଦିକ୍ ନିକ । ଆର୍ ବିନ୍ ଲକ୍ ସଃବୁ ଦିନ୍କେ ସଃମାନ୍ ବାବେ ବିଚାର୍ କଃରେଦ୍ । ମଃତର୍ ଜେ ଜୁୟ୍ରି ଟିକ୍ ବଃଲି ବାବେଦ୍ ସେ ସେରି କଃର୍ ।
6 ஒருநாளை சிறப்பான ஒன்றாக எண்ணுகிறவன், கர்த்தருக்காகவே அதைச் செய்கிறான். இறைச்சியைச் சாப்பிடுகிறவனும் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டுச் சாப்பிடுவதனால், அவனும் கர்த்தருக்காகவே அதைச் செய்கிறான்; அப்படியே சிலவற்றைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்கிறவனும், இறைவனுக்கு நன்றி செலுத்துகிறதினால் கர்த்தருக்கென்றே அதைச் செய்கிறான்.
ଜେ ଗଟ୍ ଦିନ୍କେ ଅଃଦିକ୍ ନିକ ବଃଲି ମାନେଦ୍, ସେ ମାପ୍ରୁ ଜଃଜ୍ମାନ୍ ଗିନେ ସେରି କଃର; ଆର୍ ଜୁୟ୍ ଲକ୍ ଜାୟ୍ରି ହେଁ କାଉଁକେ ହାରେ, ସେ ମାପ୍ରୁର୍ ଜଃଜ୍ମାନ୍ ଗିନେ କାଅ, ବଃଲେକ୍ ସେ ଇସ୍ୱର୍କେ ଦନ୍ୟବାଦ୍ ଦଃୟ୍ଦ୍; ଆରେକ୍ ଜୁୟ୍ ଲକ୍ କାୟ୍ କାଦି କାଉଁକେ ନଃଚେ, ସେ ମାପ୍ରୁର୍ ଜଃଜ୍ମାନ୍ ଗିନେ ସେରି କଃର, ଆର୍ ଇସ୍ୱର୍କେ ଦନ୍ୟବାଦ୍ ଦେଉଅ ।
7 ஏனெனில் நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே வாழ்வதுமில்லை, நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே மரிப்பதுமில்லை.
କେହେଁ ନିଜାର୍ ହାଁୟ୍ ନଃବଚେ, ଆର୍ ନିଜାର୍ ହାଁୟ୍ ନଃମେରେ ।
8 நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கிறோம்; நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்றே மரிக்கிறோம். எனவே நாம் வாழ்ந்தாலும் மரித்தாலும் கர்த்தருடையவர்கள்.
ଜଦି ଅଃମିମଃନ୍ ବଚୁଆଁ, ତଃବେ ମାପ୍ରୁର୍ ଗିନେ ବଚୁଆଁ, ନୟ୍ଲେକ୍ ଜଦି ମଃରୁଆଁ ତଃବେ ମାପ୍ରୁର୍ ହାଁୟ୍ ମଃରୁଆଁ । ତଃବେ ଜଦି ଅଃମିମଃନ୍ ବଚୁଆଁ କି ମଃରୁଆଁ, ଅଃମିମଃନ୍ ମାପ୍ରୁର୍ ଲକ୍ ।
9 கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும் உயிருடன் இருக்கிறவர்களுக்கும் ஆண்டவராய் இருக்கவேண்டுமென்கிற காரணத்திற்காகவே மரித்து, உயிருடன் எழுந்தார்.
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ କ୍ରିସ୍ଟ ମଃରି ଜିବନ୍ ହାୟ୍ ଉଟ୍ଲାକ୍ ସେ ମଃଲା ଲକ୍ମଃନାର୍ ଆର୍ ଜିବନ୍ ଲକ୍ମଃନାର୍ ମାପ୍ରୁ ଅୟ୍ଆଚେ ।
10 இப்படியிருக்க நீ ஏன் உன் சகோதரனை நியாயந்தீர்க்கிறாய்? ஏன் உன் சகோதரனை உதாசீனம் செய்கிறாய்? ஏனெனில் நாம் எல்லோரும் இறைவனுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்போம்.
ତଃବେ ତୁମି କାୟ୍ତାକ୍ ବିନ୍ ବିସ୍ୱାସି ବାୟ୍ର୍ ବିଚାର୍ କଃରୁଲାସ୍? ତୁମି କାୟ୍ତାକ୍ ବିନ୍ ବିସ୍ୱାସି ବାୟ୍କ୍ ଇନ୍ମାନ୍ କଃରୁଲାସ୍? ଅଃମିମଃନ୍ ସଃବୁଲକ୍ ତ ଇସ୍ୱରାର୍ ବିଚାର୍ କଃର୍ତା ଟାଣେ ଟିଆ ଅଃଉଁନ୍ଦ୍ ।
11 எழுதப்பட்டிருக்கிறபடியே: “‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்; ஒவ்வொரு நாவும் இறைவனை அறிக்கையிடும் என்பதும் நிச்சயம்’” என்று கர்த்தர் சொல்கிறார்.
ବଃଲେକ୍ ଦଃର୍ମ୍ସାସ୍ତରେ ଲେକା ଆଚେ, “ମାପ୍ରୁ କଃଉଁଲା, ଅଃମି ଜିବନ୍ ମାପ୍ରୁ, ତଃବାର୍ ଗିନେ, ସଃବୁଲକ୍ ମର୍ ମୁଏଁ ମାଣ୍ଡିକୁଟା ଟେସ୍ତି, ଆର୍ ମକ୍ ଇସ୍ୱର୍ ବଃଲି ସଃବୁ ଲକ୍ ମାନ୍ତି ।”
12 எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மைக்குறித்து இறைவனுக்குக் கணக்குக் கொடுப்போம்.
ତଃବେ ଅଃମିମଃନ୍ ସଃବୁ ଲକ୍ ଇସ୍ୱରାର୍ ଚଃମେ ନିଜାର୍ ନିଜାର୍ କାମାର୍ ଇସାବ୍ ଦେଉଁକ୍ ଅୟ୍ଦ୍ ।
13 ஆகவே நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை நிறுத்துவோம். உங்கள் சகோதரர்களுடைய வழியில் அவர்கள் தடுக்கி விழக்கூடிய தடைக்கல்லையோ, இடையூறையோ போடாதிருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ତଃବେ ତୁମି ଏକ୍ ଆରେକାର୍ ବିଚାର୍ କଃରା ନାୟ୍ । ଆର୍ ଇରଃକମ୍ ହେଁ କାୟ୍ କାମ୍ କଃରା ନାୟ୍, ଜୁୟ୍ତାର୍ ଗିନେ କି ତୁମାର୍ ବାୟ୍ ଜଟ୍ୟାୟ୍ ଅୟ୍ ହାହ୍ କଃରେଦ୍ ।
14 கர்த்தராகிய இயேசுவில் இருக்கிற ஒருவனாகிய நான், எந்த உணவும் தன்னிலேயே அசுத்தமானது அல்ல என்பதை திடமாய் நம்புகிறேன். ஆனால் யாராவது எந்த உணவையும் அசுத்தமானது என நம்பினால், அது அவனுக்கு அசுத்தமானதாகவே இருக்கும்.
ମୁୟ୍ଁ ଜାଣି ଆଚି ଆର୍ ମାପ୍ରୁ ଜିସୁର୍ ତଃୟ୍ ବାୟ୍ଦ୍ରେ ଜାଣୁଲେ ଜେ, କାୟ୍ ହେଁ କାଦି ବିଟାଳ୍ ନୟ୍, ମଃତର୍ ଜୁୟ୍ଲକ୍ କାୟ୍ କାଦିକ୍ ବିଟାଳ୍ ବଃଲି ମଃନେ କଃରେଦ୍ ତାର୍, ଗିନେ ସେରି ବିଟାଳ୍ ।
15 நீ சாப்பிடுகிற உணவின் காரணமாக உன் சகோதரன் மனத்தாங்கல் அடைந்தால், நீ அவனில் அன்பு காட்டுகிறவனாய் நடந்துகொள்ளவில்லை. நீ சாப்பிடும் உணவினால் எந்த சகோதரனுக்காக கிறிஸ்து மரித்தாரோ அந்த சகோதரனை நீ அழித்துப்போட வேண்டாம்.
ତୁମି କାୟ୍ କାଦି କାୟ୍ଲେକ୍ ତୁମାର୍ ବାୟ୍ ଜଦି ଦୁକ୍ ହାଉଁଲା, ତଃବେ ତୁମି ତାକ୍ ଲାଡ୍ ଚାଲାଚାଲ୍ତି ନଃକେରୁଲାସ୍ । ଜୁୟ୍ ବାୟ୍ର୍ ଗିନେ କ୍ରିସ୍ଟ ମଃଲା, ତୁମିମଃନ୍ ତୁମାର୍ ମଲ୍ ନୟ୍ଲା କାଦି ଗିନେ ତାକେ ନାସ୍ କଃରା ନାୟ୍ ।
16 நீங்கள் நன்மை என எண்ணுகிறதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்.
ତୁମି ଜାୟ୍ରି ନିକ ବଃଲି ବାବୁଲାସ୍, ସେ କାମ୍କେ ବିନ୍ ଲକ୍ମଃନ୍ ଲିନ୍ଦା ନଃକେରତ୍ ।
17 ஏனெனில் இறைவனுடைய அரசு சாப்பிடுவதையும் குடிப்பதையும் பற்றியதுமான விஷயமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான சந்தோஷம் என்பவைகளைப் பற்றியதே.
ବଃଲେକ୍ ଇସ୍ୱରାର୍ ରାଇଜ୍ କାତାର୍ ହିଉତାର୍ ନାୟ୍, ମଃତର୍ ପବିତ୍ର ଆତ୍ମା ଦିଲା ଦଃର୍ମି, ସୁସ୍ତା ଆର୍ ସଃର୍ଦା ।
18 ஏனெனில் இவ்விதம் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவன் இறைவனுக்குப் பிரியமாய் இருப்பான். அவன் மனிதரால் நன்மதிப்பையும் பெறுவான்.
ଜେ କେ ଇ ରଃକମ୍ ବାବେ କ୍ରିସ୍ଟର୍ ସେବା କଃରେଦ୍; ସେ ଇସ୍ୱର୍କେ ସଃର୍ଦା କଃରେଦ୍, ଲକ୍ମଃନାର୍ ତଃୟ୍ ହେଁ ମାୟ୍ନ୍ ହାୟ୍ଦ୍ ।
19 எனவே நாம் சமாதானத்தை நம் மத்தியில் கொண்டுவரும் காரியங்களிலும், ஒருவரையொருவர் பக்தியில் பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபட முயற்சிசெய்வோம்.
ତଃବେ ଆସା, ସଃବାର୍ ବିତ୍ରେ ସୁସ୍ତା ଆଣୁକେ ଆର୍ ସଃକ୍ତି ଜଃନ୍ମାଉଁକେ ଜାୟ୍ରି ସଃବୁ ଦଃର୍କାର୍, ସେ ଉହ୍ରେ ଦିଆନ୍ ଦେଉଁଆ ।
20 உணவுக்காக இறைவனுடைய வேலையை அழித்துப்போட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் சாப்பிடும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் சாப்பிடுவது தீயதுதான்.
ମଲ୍ ନୟ୍ଲା କାଦିର୍ ଗିନେ ଇସ୍ୱର୍ ଜାୟ୍ କାମ୍ କଃଲା ଆଚେ, ସେରି ନଃସ୍ଟ୍ କଃରା ନାୟ୍ । ସଃବୁ କାଦି କାଉଁକେ ହାରୁଆଁ; ଅୟ୍ଲେକ୍ ହେଁ ଜୁୟ୍ କାଦି କାୟ୍ଲେକ୍ ବିନ୍ ଲକାର୍ ବାଦା ଗଃଟେଦ୍, ସେ କାଦି କାତାର୍ ନିକ ନାୟ୍ ।
21 இறைச்சியைச் சாப்பிடுவதோ, திராட்சை இரசத்தைக் குடிப்பதோ, அல்லது வேறு எதைச் செய்வதோ, உனது சகோதரன் பாவத்தில் விழுவதற்குக் காரணமாய் இருக்குமானால், அவற்றைச் செய்யாதிருப்பது நல்லது.
ମାସ୍ କାତାର୍ କି ମଃଦ୍ କାତାର୍ ଆର୍ କାୟ୍ରି କାତାର୍ ଜଦି ତୁମାର୍ ବାୟ୍ର୍ ଜଟ୍ୟାୟ୍ ଅଃଉତାର୍ ଅୟ୍ଦ୍, ତଃବେ ସେରି ନଃକେଲେକ୍ ନିକ ।
22 இந்த விஷயத்தில் நீ கொண்டிருக்கும் விசுவாசம் உனக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கட்டும். தான் சரியென்று ஏற்றுக்கொண்டதைக்குறித்து தனக்குள் குற்ற உணர்வு ஏற்படாதிருப்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
ଇ ବିସୟେ ତୁମାର୍ ନିଜାର୍ ବିସ୍ୱାସ୍ ଅଃବ୍କା ଇସ୍ୱର୍ ଜାଣ । ଜୁୟ୍ ଲକ୍ ପରିକ୍ୟାୟ୍ ଜିଣିଆଚେ ବଃଲି ବିଚାର୍ କଃରି କୁୟ୍ କାମ୍ ହେଁ କଃରେଦ୍, ଆର୍ ସେତାର୍ଗିନେ ହଃଚେ ତାକେ ଦୁକ୍ କଃରୁକେ ନଃହେଳେ ସେ ଲକ୍ ଦନ୍ୟ ।
23 ஆனால், யாராவது தான் சாப்பிடுவதைக்குறித்து அது சரியென்று விசுவாசம் இல்லாதிருந்தால், அவன் தன்னைத்தானே குற்றப்படுத்துகிறான். ஏனெனில் அவன் அதைச் சாப்பிடும்போது விசுவாச வாழ்வின் அடிப்படையில் சாப்பிடவில்லை; விசுவாசத்திலிருந்து வராததெல்லாம் பாவமே.
ମଃତର୍ କାୟ୍ ହେଁ କାଦି କାତାର୍ ନିକ କି ନାୟ୍, ଅଃହ୍ରାତ୍ କଃରି ଜୁୟ୍ଲକ୍ ସେରି କାୟ୍ଦ୍, ଇସ୍ୱରାର୍ ଚଃମେ ସେ ଦସି ଅୟ୍ଦ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ସେରି ତାର୍ ବିସ୍ୱାସ୍ ହଃର୍କାରେ କାମ୍ ନାୟ୍, ଆର୍ ଜାୟ୍ରି ହେଁ ବିସ୍ୱାସେ ଅୟ୍ ନଃକେରେ ସେରି ହାହ୍ ।