< ரோமர் 12 >
1 ஆகையால், எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தை மனதிற்கொண்டு, உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறதாவது, உங்கள் உடல்களை உயிருள்ள பலியாகவும், பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமாயிருக்கும்படி ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு.
ତଃବେ ଏ ବାୟ୍ବେଣିମଃନ୍ ମୁୟ୍ଁ ତୁମିମଃନ୍କେ ଇସ୍ୱରାର୍ ଦଃୟାର୍ ଗିନେ ଗଃଉଆରି କଃରୁଲେ; ତୁମିମଃନ୍ ନିଜାର୍ ନିଜାର ଗଃଗାଳ୍କେ ଜିବନ୍ ରିଲାର୍, ପବିତ୍ର ଆର୍ ଇସ୍ୱର୍ ମଃନ୍କଃଲା ହୁଜା ହର୍ ଦଃୟ୍ଦିଆସ୍, ଇରି ତ ତୁମିମଃନାର୍ ଇସ୍ୱର୍ ତଃୟ୍ ଟିକ୍ ସେବା ।
2 இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn )
ତୁମିମଃନ୍ ଇ ଜଃଗତାର୍ ରିତି ହଃର୍କାରେ ଜିବନ୍ କାଟା ନାୟ୍ । ଇସ୍ୱର୍ ତୁମିମଃନାର୍ ମଃନ୍ବାବ୍କେ ବାଦ୍ଲାଅ ଆର୍ ତୁମାର୍ ମଃନ୍ ହୁରାହୁରି ବାବେ ବାଦ୍ଲ । ତଃନ୍ଅୟ୍ଲେକ୍, ଇସ୍ୱରାର୍ ଇଚା କାୟ୍ରି, ତାର୍ ଆକାୟ୍ କୁୟ୍ ସଃବୁ ବିସୟ୍ ସଃତ୍, ମଃନ୍କେ ଗଃଲାର୍ ଆର୍ ସିଦ୍, ଇରି ତୁମିମଃନ୍ ଜାଣୁକେ ହାରାସ୍ । (aiōn )
3 இறைவன் எனக்களித்த தன் கிருபையின்படி, உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்கிறதாவது: அளவுக்கதிகமாய் உங்களைக்குறித்து உயர்வாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறைவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவின்படியே, மனத்தெளிவுடன் உங்களைக்குறித்து மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.
ବଃଲେକ୍ ମକ୍ ଦିଲା ଦଃୟା ଗିନେ ମୁୟ୍ଁ ତୁମାର୍ ବିତ୍ରେ ରିଲା ସଃବୁ ଲକ୍କେ କଃଉଁଲେ, ଅଃହ୍ଣାର୍ ବିସୟେ ଜଃନ୍କଃରି ମଃନେ ବାବ୍ତା କଃତା ତାର୍ ତଃୟ୍ହୁଣି ନିଜ୍କେ ଅଃଦିକ୍ ବଃଡ୍ ବଃଲି ମଃନେ ନଃକେରା; ମଃତର୍ ଇସ୍ୱର୍ ଜାକେ ଜଃତେକ୍ ବିସ୍ୱାସ୍ ଦିଲା ଆଚେ, ସେ ହର୍ ସଃବୁଲକ୍ ନିଜ୍କେ ବାବା ।
4 நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கிறது, அதில் பல உறுப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை.
ବଃଲେକ୍ ଜଃନ୍କଃରି ଅଃମାର୍ ଗଟେକ୍ ଗଃଗାଳେ ଗାଦେକ୍ ଅଃଙ୍ଗ୍ମଃନ୍ ଆଚେ, ମଃତର୍ ସଃବୁ ଅଃଙ୍ଗ୍ମଃନାର୍ କାମ୍ ଗଟେ ରଃକମ୍ ନାୟ୍ ।
5 அதுபோலவே கிறிஸ்துவுக்குள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே உடலாகின்றோம். நாம் உடலின் பல்வேறு உறுப்புகளாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் சொந்தமாயிருக்கிறோம்.
ସେ ହର୍ ଅଃମି ଅଃନେକ୍ ମଃତର୍ କ୍ରିସ୍ଟର୍ ତଃୟ୍ ଗଟେକ୍ ଅୟ୍ ଜଳି ଅୟ୍ ଆଚୁ, ଅଃମି ଗଟେକ୍ ଗଃଗାଳ୍ ଆର୍ ଗଃଗାଳାର୍ ଅଃଙ୍ଗ୍ମଃନ୍ ହର୍ ଅଃମିମଃନ୍ ଏକ୍ ଆରେକ୍ ସଃଙ୍ଗ୍ ଜଳିଅୟ୍ ଆଚୁ ।
6 நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே, நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கிறோம். இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம்பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும்.
ଆର୍ ଅଃମିକ୍ ଦିଆ ଅୟ୍ଲା ଦଃୟା ହଃର୍କାରେ ଅଃଲ୍ଗା ଅଃଲ୍ଗା ଦାନ୍ ହାୟ୍ ଆଚୁ, ତଃବେ ସେ ଦାନ୍ ଜଦି ବାବ୍ବାଣି ଅୟ୍ଦ୍ ଆସା ଅଃମିମଃନ୍ ବିସ୍ୱାସ୍ ହଃର୍କାରେ କାମ୍ କଃରୁଆଁ;
7 அப்படியே சேவைசெய்கிறவன் சேவை செய்வதிலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
ସେରି ଜଦି ସେବା କାମ୍ ଅୟ୍ଲେକ୍ ଆସା ଅଃମିମଃନ୍ ସେବା କାମେ ଲାଗି ରେଉଅ । ଜେ ସିକ୍ୟା ଦଃୟ୍ଦ୍ ସେ ସିକ୍ୟା ଦେଉଁକେଅଃୟ୍ଦ୍ ।
8 உற்சாகப்படுத்துகிறவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகிறவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் கவனத்தோடு நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும்.
ଆର୍ ଜେ ଉପ୍ଦେସ୍ ଦଃୟ୍ଦ୍ ସେ ଉପ୍ଦେସ୍ ଦେଉଁକେ କାମେ ଲାଗି ରେଉଅ, ଜେ ଦାନ୍ ଦଃୟ୍ଦ୍ ସେ ସଃର୍ଦା ମଃନେ ଦେଅ, ଜାର୍ ସଃବୁ ବୁଜ୍ତାର୍ ଦାୟ୍ତ୍ ଆଚେ ସେ ଜଃତୁନେ ସଃବୁ କାମ୍ କଃର; ଜେ ଦଃୟା କଃରେଦ୍ ସେ ସଃର୍ଦା ମଃନେ ସେରି କଃର୍ ।
9 உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்கவேண்டும். தீமையை வெறுத்து விடுங்கள்; நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள்.
ଲାଡ୍ ମଃନ୍ ବିତ୍ରାର୍ ଅଃଉଅ ଜାୟ୍ରି ମଃନ୍ଦ୍ ସେତାକ୍ ଗିଣ୍ କଃରା; ଜୁୟ୍ରି ନିକ ସେତି ମଃନ୍ ଦିଆସ୍ ।
10 ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள், ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம்பண்ணி நடவுங்கள்,
କ୍ରିସ୍ଟ ବିସ୍ୱାସି ବାୟ୍ବେଣି ହର୍ ଏକ୍ଆରେକ୍କେ ଲାଡ୍ କଃରା ଆର୍ ଏକ୍ଆରେକ୍କେ ମାୟ୍ନ୍ କଃରୁକେ ଇଚା କଃରା ।
11 ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
ଅଃଳ୍ସିଆ ନଃୟ୍ ମାପ୍ରୁର୍ କାମେ କଃବାଳି ଅଃଉଆ, ଆତ୍ମାୟ୍ ହୁରୁଣ୍ ଅଃଉଆ; ମଃନ୍ ହଃରାଣେ ମାପ୍ରୁର୍ ସେବା କଃରା ।
12 எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாக இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள்.
ମଃନେ ଆସା ରଃକି ସଃର୍ଦା କଃରା; ଦୁକ୍କଃସ୍ଟ୍ ବଃଳ୍ ସାସ୍ ଦଃରା, ସଃବୁ ବଃଳ୍ ପାର୍ତ୍ନାୟ୍ ଲାଗି ରିଆ ।
13 தேவையிலிருக்கிற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
କ୍ରିସ୍ଟ ବିସ୍ୱାସିମଃନାର୍ ଅକେଟ୍ ଦୁର୍ କଃରା, ଗତ୍ୟାମଃନାର୍ ସେବାକାରି ଅଃଉଆ ।
14 உங்களைத் துன்புறுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; சபிக்காதிருங்கள்.
ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ତୁମିକେ ତାଳ୍ନା କଃର୍ତି ସେମଃନ୍କେ ଆସିର୍ବାଦ୍ କଃରା, ଆସିର୍ବାଦ୍ କଃରା ସାୟ୍ପ୍ ଦିଆସ୍ ନାୟ୍ ।
15 மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ସଃର୍ଦା କଃର୍ତି ସେମଃନାର୍ ସଃଙ୍ଗ୍ ମିସି ସଃର୍ଦା କଃରା; ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ଦୁକ୍ କଃର୍ତି ସେମଃନାର୍ ସଃଙ୍ଗ୍ ମିସି ଦୁକ୍ କଃରା ।
16 ஒருவரோடு ஒருவர் ஒருமனதுள்ளவர்களாய் வாழுங்கள். பெருமைகொள்ளாமல், தாழ்ந்தவர்களுடனும் நட்புறவு கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனப் பெருமிதம் கொள்ளாதிருங்கள்.
ସଃବ୍କେ ସଃମାନ୍ ଆକାୟ୍ ଦଃକା, ବଃଡ୍ହାଣ୍ୟା ନଃଉଆଁ, ବାଙ୍ଗିହଃଳ୍ଲା ଲକ୍ମଃନାର୍ ସଃଙ୍ଗ୍ ଅଃଉଆ । ନିଜଃକେ ଗିଆନି ବଃଲି ବାବାନାଁୟ୍ ।
17 யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அதற்குப் பதிலாக, நீங்களும் தீமை செய்யவேண்டாம். எல்லா மனிதருடைய பார்வையிலும் சரியானதையே செய்யும்படி கவனமாயிருங்கள்.
ମଃନ୍ଦ୍ ବାଦୁଲେ କାର୍ ମଃନ୍ଦ୍ କଃରା ନାୟ୍, ସଃବାର୍ ଆକାୟ୍ ଜାୟ୍ରି ନିକ, ସେରିସଃବୁ କଃରା ।
18 இயலுமானால் உங்களால் முடிந்தவரை எல்லோருடனும் சமாதானமாக இருங்கள்.
ସଃବୁଲକାର୍ ସଃଙ୍ଗ୍ ସୁସ୍ତାୟ୍ ରେଉଁକ୍ ହାରୁସଃକାତ୍ ଚେସ୍ଟା କଃରା ।
19 என் அன்பானவர்களே, பழிக்குப்பழி வாங்கவேண்டாம், இறைவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடங்கொடுங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்” என்று எழுதியிருக்கிறதே.
ଏ ଲାଡାର୍ ବାୟ୍ବେଣିମଃନ୍ ତୁମିମଃନ୍ ନିଜେ ନିଜେ କାର୍ ବାଦ୍ଲା ନିଆ ନାୟ୍ । ଇସ୍ୱରାର୍ ଡଃଣ୍ଡାର୍ ଲକ୍ ଅଃଉତା ହାୟ୍ଁ ତାକେ ଚାଡି ଦିଆସ୍ । ବଃଲେକ୍ ସାସ୍ତରେ ଲେକାଆଚେ, “ମାପ୍ରୁ କଃଉଁଲା, ମୁୟ୍ଁ ତାର୍ ନ୍ୟାୟ୍ ବିଚାର୍ କଃରିନ୍ଦ୍ ।
20 எனவே, “உங்கள் பகைவன் பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடுங்கள்; தாகமாயிருந்தால், அவனுக்கு குடிக்கக் கொடுங்கள். இவ்விதம் செய்வதனால் நீங்கள் அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பீர்கள்.”
ଆରେକ୍ ହେଁ ଜଦି ତୁମାର୍ ସଃତ୍ରୁ ବୁକେ ଆଚେ, ତଃବେ ତାକେ କାଉଁକେ ଦିଆସ୍; ଜଦି ସସେ ଆଚେ, ତାକେ ସୁରାଉଆ; ବଃଲେକ୍ ଇହର୍ କଃଲେକ୍ ସେ ଲାଜେ ମୁଣ୍ଡ୍ ତଃଳେ କଃରେଦ୍ ।”
21 தீமை உங்களை மேற்கொள்ள இடங்கொடுக்க வேண்டாம். தீமையை நன்மையினால் மேற்கொள்ளுங்கள்.
କଃରାବ୍ କାମେ ଆରି ନଃକେରି, ନିକକାମେ କଃରାବ୍ କାମ୍କେ ଆରାଉଆ ।