< வெளிப்படுத்தின விசேஷம் 9 >
1 ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅନବ୍ମନ୍ଲୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପନେଡନ୍ ଆପ୍ରେଡେନ୍, ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ ତୁତୁଜନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆରସେଡ୍ଲାଞନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ପାତାଡ଼ନ୍ ଆ କଡ୍ଡା ତନିୟନ୍ ଡେଏନ୍ । (Abyssos )
2 அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. (Abyssos )
ଆନିନ୍ ଜିର୍ରେ ପାତାଡ଼ନ୍ ଇୟ୍ଲେ ରୋଏ, ଆରି ତେତ୍ତେ ସିଲଡ୍ ସୋଡ଼ା ବରାଲ୍ଡାଙ୍କୋଲନ୍ ସିଲଡ୍ ଆଡ୍ରୁଙ୍ତନାଞନ୍ ଆ ଓମୋଡ୍ ଅନ୍ତମ୍ ଓମୋଡନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍, ଆରି ତି ପାତାଡ଼ନ୍ ଆ ଓମୋଡ୍ ଆସନ୍ ଓୟୋଙନ୍ ଡ ରୁଆଙନ୍ ଲୋଙଡାଜେନ୍ । (Abyssos )
3 அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு, பூமியின்மேல் வந்தன. அவைகளுக்கு பூமியிலுள்ள தேள்களுக்குரிய வல்லமையைப் போன்ற, ஒரு வல்லமை கொடுக்கப்பட்டது.
ଆରି, ତି ଆ ଓମୋଡ୍ ସିଲଡ୍ ପପ୍ପରଞ୍ଜି ଡୁଙ୍ଲନ୍ ସମ୍ପରା ପୁର୍ତିନ୍ ଅମ୍ମେଲଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ସନକାବ୍ରେଙନ୍ ଆ ବିସ ଅନ୍ତମ୍ ବୋର୍ସାନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍ ।
4 பூமியிலுள்ள புல்லையோ, செடியையோ, மரத்தையோ சேதப்படுத்த வேண்டாமென்று, அவைகளுக்குச் சொல்லப்பட்டது. தங்களுடைய நெற்றிகளில் இறைவனுடைய முத்திரையைப் பெற்றிராத மனிதர்களை மாத்திரமே சேதப்படுத்தும்படி, அவைகளுக்குச் சொல்லப்பட்டது.
ପୁର୍ତିଲୋଙନ୍ ଅଗାବନ୍, ଆମେଙ୍ନୁବଞ୍ଜି ଡ ଅରାନୁବଞ୍ଜି ଇନ୍ନିଙ୍ ଅଃନ୍ନବ୍ମୋସ୍ସାଲଜି; ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଆଇଡାଡ଼ାଲୋଙ୍ ଇସ୍ୱରନ୍ ଆରବ୍ଜିଡ୍ ଅଃଡ୍ଡକୋଲୋ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଡନଣ୍ଡାୟନ୍ ଆସନ୍ ତି ଆ ପପ୍ପର୍ଜିଆଡଙ୍ ବନରନ୍ ଡେଏନ୍ ।
5 அந்த மனிதர்களைக் கொல்வதற்கான வல்லமை அவற்றிற்குக் கொடுக்கப்படவில்லை. அவர்களை ஐந்து மாதங்களுக்கு சித்திரவதை செய்வதற்கு மாத்திரம், அவைகளுக்கு வல்லமை அளிக்கப்பட்டது. அவர்கள் அனுபவித்த அந்த வேதனை, ஒரு தேள் கொட்டும்போது அனுபவிக்கும் வேதனையைப்போல் இருந்தது.
ଆରି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଏର୍ରନବ୍ବୁନ୍ ମନ୍ଲୟ୍ ଆଙ୍ଗାୟ୍ ଜାୟ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଡନଣ୍ଡାୟନ୍ ଆସନ୍ ପପ୍ପରଞ୍ଜିଆଡଙ୍ ଅଦିକାରନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍, ସନକାବ୍ରେଙନ୍ ରମ୍ରମ୍ଲଙ୍ଲନ୍ ଡେନ୍ ଏଙ୍ଗାଲେ ବତ୍ତାଲଙ୍ତନ୍ ତି ଆ ଡନଣ୍ଡାୟ୍ ନିୟ୍ ତିଅନ୍ତମ୍ ।
6 அந்நாட்களில் மனிதர்கள் சாவைத் தேடுவார்கள், ஆனால் அவர்கள் அதைக் காணமாட்டார்கள். அவர்கள் சாவதற்கு விரும்புவார்கள், ஆனால் சாவோ அவர்களைவிட்டு ஓடிப்போகும்.
ତିଆଡିଡ୍ ମନ୍ରାଞ୍ଜି ରନବୁନ୍ ସାୟ୍ତଜି, ବନ୍ଡ ଅଃଞାଙେଜି; ଆନିଞ୍ଜି ରବ୍ବୁନେନ୍ ସାୟ୍ତଜି, ବନ୍ଡ ରନବୁନ୍ ଆମଙଞ୍ଜି ସିଲଡ୍ ସଙାୟ୍ତେ ।
7 அந்த வெட்டுக்கிளிகள் யுத்தத்திற்காக ஆயத்தமாக்கப்பட்ட குதிரைகளைப்போல் காணப்பட்டன. அவை தங்களுடைய தலைகளிலே, தங்க கிரீடங்களைப் போன்ற எதையோ அணிந்திருந்தன. அவைகளுடைய முகங்கள் மனித முகங்களைப்போல் காணப்பட்டன.
ଅଲ୍ଜୁଜ୍ଜେନ୍ ଆସନ୍ ଆରବ୍ଜାଡାତେଞ୍ଜି ଆ କୁର୍ତା ଅନ୍ତମ୍ ପପ୍ପରଞ୍ଜି ଗିୟ୍ତାଏଞ୍ଜି; ଆବବ୍ଲୋଙଞ୍ଜି ସୁନାନ୍ ଆ ରନୁବ୍ବବ୍ ଅନ୍ତମ୍ ଆରୁବ୍ରୁବ୍, ଆ ମୁକ୍କାଞ୍ଜି ମନ୍ରାନ୍ ଆ ମୁକ୍କା ଅନ୍ତମ୍ ।
8 அவைகளின் தலைமுடி பெண்களின் தலைமுடியைப்போல் இருந்தது. அவைகளின் பற்கள் சிங்கத்தின் பற்களைப்போல் இருந்தன.
ଆ ଉଉଞ୍ଜି ଆଇମରଞ୍ଜି ଆ ଉଉ ଅନ୍ତମ୍, ଆଜିଞ୍ଜି ସିଅଁକିଡନ୍ ଆଜି ଅନ୍ତମ୍ ଡକୋଏନ୍ ।
9 இரும்பு மார்புக் கவசங்களைப் போன்ற மார்புக்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன. அவைகளின் சிறகுகளின் இரைச்சல், அநேகம் குதிரைகளும், தேர்களும் யுத்தத்திற்கு விரைந்து செல்லும்போது, ஏற்படும் இரைச்சலைப்போல் இருந்தது.
ଆ ମାୟଙ୍ଲୋଙଞ୍ଜି ଲୋଆଙନ୍ ଆ ଡରଙ୍ନେମାଁୟ୍ ଅନ୍ତମ୍, ଆରି ରତ୍ତାନ୍ ଡ ଅଲ୍ଜୁଜ୍ଜେନ୍ ଆସନ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍ କୁର୍ତାଞ୍ଜି ଆରିର୍ତେଞ୍ଜି ଆ ସନଡ୍ଡା ଅନ୍ତମ୍ ଆ କାପ୍ପାଲୋଙଞ୍ଜି ସିଲଡ୍ ସଡ୍ଡାଏନ୍ ।
10 தேள்களுக்கு இருப்பதுபோல் அவைகளுக்கும் வால்களும், கொடுக்குகளும் இருந்தன. அவைகளின் வால்களிலே மனிதர்களை ஐந்து மாதங்களுக்கு துன்புறுத்தக்கூடிய வல்லமை இருந்தது.
ସନକାବ୍ରେଙନ୍ ଅନ୍ତମ୍ ଆନିଞ୍ଜି ଆଲାନ୍ ଡ ସରସ୍ସଡନ୍ ଡକୋ, ମନ୍ଲୟ୍ ଆଙ୍ଗାୟ୍ ଜାୟ୍ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ପନବ୍ରଡନ୍ ଆସନ୍ ଆଲାଲୋଙଞ୍ଜି ବୋର୍ସାନ୍ ଡକୋ ।
11 பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது. (Abyssos )
ପାତାଡ଼ନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍, ଆ ରାଜାଞ୍ଜି; ଆଞୁମନ୍ ଏବ୍ରି ଲଙ୍ଲଙନ୍ ବାତ୍ତେ ଆବଦୋନ୍, ଆରି ଗ୍ରିକ୍ ଲଙ୍ଲଙନ୍ ବାତ୍ତେ ଆପଲିଓନ୍ । (Abyssos )
12 முதலாவது பயங்கரம் கடந்துபோயிற்று; இன்னும் இரண்டு பயங்கரங்கள் வரவிருந்தன.
ଗିୟ୍ବା, ଆମ୍ମୁଙ୍ ଆ ଡଣ୍ଡ ସୁଜ୍ଜେଏନ୍, କେନ୍ ସିଲଡ୍ ଆରି ବାଗୁ ଡଣ୍ଡନ୍ ଅଡ଼ୋତାୟ୍ ।
13 ஆறாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது இறைவனுக்கு முன்பாக இருந்த தங்கப் பலிபீடத்தின் கொம்புகளிலிருந்து வந்த, ஒரு குரலைக் கேட்டேன்.
ଅନବ୍ତୁଡ୍ରୁ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପନେଡନ୍ ଆପ୍ରେଡେନ୍, ଇସ୍ୱରନ୍ ଆମୁକ୍କାବା ସୁନା ତନମ୍ପିଲ୍ଲୋଙନ୍ ଆଡ୍ରକୋଏନ୍ ଉଞ୍ଜି ଆଡେରିଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଞେନ୍ ଅବୟ୍ ସର୍ରଙନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ।
14 அது எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது தூதனிடம், “ஐபிராத்து என்ற பெரிய நதியருகே கட்டி வைக்கப்பட்டிருக்கிற, நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு” என்று சொன்னது.
ତି ଅନବ୍ତୁଡ୍ରୁ ପନେଡନ୍ ଆଞମ୍ଞମନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ପରାତ ସୋଡ଼ା ଅଲଲୋଙନ୍ ଆବଣ୍ଡିନ୍ ଉଞ୍ଜି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ବାଜି ।”
15 அப்பொழுது மனிதரில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படி, அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். அவர்கள் இந்த வேளைக்கென்றும், இந்த நாளுக்கென்றும், இந்த மாதத்திற்கென்றும், இந்த ஆண்டுக்கென்றும், ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
ତିଆସନ୍ ତି ଆ ବର୍ସେଙ୍, ଆଙ୍ଗାଜନ୍, ଡିନ୍ନାନ୍ ଡ ବେଡ଼ା ଇଙନ୍ ସମ୍ପରା ପୁର୍ତିଲୋଙନ୍ ୟାଗି ବନ୍ତା ସିଲଡ୍ ବବନ୍ତା ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ତି ଉଞ୍ଜି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ଅନମ୍ରେଙନ୍ ଡେଏନ୍ ।
16 அவர்கள் இருபது கோடியாயிருந்த குதிரைவீரர்களின் படையை வழிநடத்தினார்கள். அவைகளின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன்.
ଆରି, କୁର୍ତାଲୋଙନ୍ ଆତ୍ରଙ୍କୁମ୍ତେଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍ଜି ବକୁଡ଼ି କୁଟି, ଗାମ୍ଲେ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ।
17 நான் என்னுடைய தரிசனத்தில் குதிரைவீரர்களையும் குதிரைகளையும் இவ்வாறு கண்டேன்: அவர்களுடைய மார்புக்கவசங்கள் நெருப்பு நிறமாகவும், கருநீலமாகவும், கந்தகத்தைப் போன்ற மஞ்சள் நிறமாகவும் இருந்தன. அந்தக் குதிரைகளின் தலைகளோ, சிங்கங்களின் தலைகளைப்போல் காணப்பட்டன. அவைகளின் வாய்களிலிருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளிவந்தன.
ଆରି ତନାଲ୍ମଡ୍ଲୋଙନ୍ କୁର୍ତାଞ୍ଜି ଡ କୁର୍ତାଲୋଙନ୍ ଆତ୍ରଙ୍କୁମ୍ତେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆ ମାୟଙଞ୍ଜି ଆ ଡରଙ୍ନେ ତଗୋନ୍ ଅନ୍ତମ୍ ଲୁଲୁଡମ୍, ନିଡ଼ି ଆରି ସାଙ୍ସାଙ୍ଗଡ଼ିର୍ ଡକୋଏନ୍ । କୁର୍ତାଞ୍ଜି ଆବବ୍ ସିଅଁକିଡନ୍ ଆବବ୍ ଅନ୍ତମ୍ ଡକୋଏନ୍, ଆରି ଆ ତଅଡ୍ଗଡଞ୍ଜି ସିଲଡ୍ ତଗୋନ୍, ଓମୋଡନ୍ ଡ ଗନ୍ଦକନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍ ।
18 அவைகளின் வாய்களிலிருந்து வந்த நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளினாலும், மனிதரில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டார்கள்.
ଆରି ଆ ତଅଡ୍ଗଡଞ୍ଜି ସିଲଡ୍ ଆଡ୍ରୁଙ୍ଲନାଞନ୍ ଆ ତଗୋ, ଓମୋଡନ୍ ଡ ଗନ୍ଦକନ୍ ଅନ୍ତମ୍ କେନ୍ ୟାଗି ରୋଗାନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍, କେନ୍ ଆ ରୋଗାଜି ବାତ୍ତେ ୟାଗି ବନ୍ତା ସିଲଡ୍ ବବନ୍ତା ଆ ମନ୍ରାଜି ରନବ୍ବୁନ୍ ଡେଏନ୍ ।
19 அந்தக் குதிரைகளின் வல்லமை, அவைகளின் வாய்களிலும், அவைகளின் வால்களிலும் இருந்தது. அவைகளின் வால்களோ பாம்புகளைப்போல் இருந்தன, அவைகள் தங்கள் தலைகளால் காயத்தை ஏற்படுத்தின.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ କୁର୍ତାଞ୍ଜି ଆ ବୋର୍ସା ଆ ମୁକ୍କାଲୋଙଞ୍ଜି ଡ ଆଲାଲୋଙଞ୍ଜି ଡକୋଏନ୍ । ଆଲାଞ୍ଜି ଜାଆଡନ୍ ଆବବ୍ ଅନ୍ତମ୍, ତି ବାତ୍ତେ ଆନିଞ୍ଜି ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଡଣ୍ଡାୟେଞ୍ଜି ।
20 இந்த வாதைகளினால் கொல்லப்படாமல் மீதியாயிருந்தவர்களோ, தங்கள் செயல்களைவிட்டு இன்னும் மனந்திரும்பாமலேயே இருந்தார்கள்: அவர்கள் பிசாசுகளையும், தங்கம், வெள்ளி, வெண்கலம், கற்கள், மரத்தால் செய்யப்பட்ட மற்றும் பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ முடியாதவைகளை வணங்குவதையும் நிறுத்தவில்லை.
ରୋଗାନ୍ ବାତ୍ତେ ଅଃର୍ରବୁଲଞ୍ଜି ଆଲାଗାମରଞ୍ଜି, ଆ ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ସିଲଡ୍ ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନାବ୍ଡିଡ୍ବୁଡ୍ଡିଲଞ୍ଜି; ଆନିଞ୍ଜି ବୁତନ୍ ଆପୁର୍ପୁର୍, କୋଙ୍ଡାୟ୍ପୁରନ୍, ସୁନାନ୍ ରୁପାନ୍, ତମ୍ୱାନ୍, ଅରେଙନ୍ ଡ ଅରାନ୍ ବାତ୍ତେ ଆତୁବ୍ତୁବନ୍ ଆ କୋଙ୍ଡାୟ୍ପୁର୍ ଅଃନ୍ନମ୍ରେଙ୍ଲଜି । ତିଆତେ ଗିୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି, ଅମ୍ଡଙ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି ଆରି ତଙିୟ୍ଲନ୍ ଅଃର୍ରପ୍ତିଏଜି ।
21 அவர்கள் தங்களுடைய கொலைகளையோ, மந்திர வித்தைகளையோ, பாலியல் முறைகேடுகளையோ, களவுகளையோ, மற்ற எவைகளையும் விட்டு மனந்திரும்பவில்லை.
ଆରି ଆନିଞ୍ଜି ମନ୍ରାନ୍ ଆ ରନବ୍ବୁ, ତନେଜନ୍, ଜୋଣ୍ଡଡ଼ା କାବ୍ବାଡ଼ାନ୍ ଡ ରାଉନେନ୍ ସିଲଡ୍ ଅଃନ୍ନାବ୍ୟର୍ବୁଡ୍ଡିଲଞ୍ଜି ।