< வெளிப்படுத்தின விசேஷம் 8 >

1 ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதி நிலவியது.
ମେଣ୍ଡାପିଲା ଜେଡେବେଲେ ସାତ୍‌ ତମର୍‌ ସିଲ୍‌ ବାଙ୍ଗାଇଲା, ସେଡ୍‌କିବେଲେ ସର୍‌ଗେ ସମାନ୍‌ ଅଦ୍‌ଗଟା ଜାକ ଚିମ୍‌ରା ଅଇଗାଲା ।
2 இறைவனுக்கு முன்பாக நிற்கும், ஏழு இறைத்தூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
ତାର୍‌ପଚେ ପର୍‌ମେସରର୍‌ ମୁଆଟେ ସାତ୍‌ଟା ଦୁତ୍‌ମନ୍‌କେ ଟିଆଅଇ ରଇଲାଟା ମୁଇ ଦେକ୍‌ଲି । ସେ ମନ୍‌କେ ସାତ୍‌ଟା ମଇରି ଦିଆଅଇ ରଇଲା ।
3 இன்னொரு இறைத்தூதன் வந்து, பலிபீடத்தின் அருகே நின்றான். அவன் ஒரு தங்க தூபக்கிண்ணத்தை வைத்திருந்தான். அரியணைக்கு முன்பாக இருக்கின்ற தங்கப் பலிபீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடனும் சேர்த்து தூபங்காட்டும்படி அவனுக்குப் பெருமளவு நறுமணத்தூள் கொடுக்கப்பட்டது.
ତେଇ ଆରି ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ଆସିକରି ବେଦିଲଗେ ଟିଆ ଆଇଲା । ତାର୍‌ ଆତେ ଗନ୍ଦ୍‌ରସ୍‌ ପଡାଇବା ଗଟେକ୍‌ ସୁନାର୍‌ ଗିନା ରଇଲା । ପର୍‌ମେସରର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ପାର୍‌ତନା ସଙ୍ଗ୍‌ ମିସାଇବାକେ ତାକେ ବେସି ଗନ୍ଦ୍‌ରସ୍‌ ଦିଆଅଇରଇଲା । ତାର୍‌ପଚେ ସେ ସେଟା ବସ୍‍ବା ଜାଗାର୍‍ ମୁଆଟେ ରଇବା ସୁନାର୍‌ ବେଦି ଉପ୍‌ରେ ସରପ୍‌ସି ।
4 அந்தத் தூதனுடைய கையிலிருந்து தூபத்தின் புகை எழுந்து, பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடன் கலந்து, இறைவனுக்கு முன்பாக மேல்நோக்கிச் சென்றது.
ପଡ୍‌ତେରଇବା ଦୁପର୍‌ ଦୁଆଁ ପର୍‌ମେସରର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ପାର୍‌ତନା ସଙ୍ଗ୍‍ ଉପ୍‌ରେ ଗାଲା । ପର୍‌ମେସରର୍‌ ମୁଆଟେ ଟିଆଅଇରଇବା ଦୁତ୍‌ ସେଟା ଦାରିରଇଲା ।
5 பின்பு அந்தத் தூதன் தூபக்கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பினான். அவன் அந்த நெருப்பைப் பூமியின்மேல் வீசி எறிந்தான். அப்பொழுது இடிமுழக்கத்தின் சத்தங்களும், பேரிரைச்சல்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன.
ତାର୍‌ପଚେ ସେ ଦୁତ୍‌ ଦୁପ୍‌ ପଡାଇବା ଅର୍‌କି ନେଇକରି ବେଦିଟାନର୍‌ ଜଇସଙ୍ଗ୍‌ ବର୍‌ତି କଲା । ସେଟା ସେ ଦର୍‌ତନି ଉପ୍‌ରେ ପିଙ୍ଗିଦେଲା । ତେଇ ଗୁଡ୍‌ଗାଡ୍‌ କରି ଗଡ୍‌ଗଡି ମାର୍‌ଲା ଆରି ବିଜ୍‌ଲି ମାରି ଦର୍‌ତନି ଚୁଲ୍‌ବୁଲ୍‌ଲା ।
6 பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைத்தூதர்களும், அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள்.
ତାର୍‌ପଚେ ସାତ୍‌ଟା ମଇରି ଦାରିରଇବା ସାତ୍‌ଟା ଦୁତ୍‌ ସେଟା ପୁକ୍‌ବାକେ ତିଆର୍‌ଅଇଲାଇ ।
7 முதலாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது கல்மழையும், இரத்தம் கலந்திருந்த நெருப்பும் வந்தன. அது பூமியின்மேல் வீசியெறியப்பட்டது. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்துபோயிற்று, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்துபோயின, பச்சையான புல் எல்லாமே எரிந்துபோயிற்று.
ପର୍‌ତୁମର୍‌ ଦୁତ୍‌ ତାର୍‌ ମଇରି ପୁକ୍‌ଲା ଆରି ଏଦେ ଦେକା! କାରାପାକ୍‌ନା ଆରି ଜଇ ଜନ୍‌ଟା କି ବନି ସଙ୍ଗ୍‍ ମିସିରଇଲା, ସେଟା ଦର୍‌ତନି ଉପ୍‌ରେ ଡାଲିଅଇଲା । ଦର୍‌ତନି ତିନ୍‌ବାଗ୍‌ ଅନି ଗଟେକ୍‍ ବାଗ୍‌ ପଡିଗାଲା । ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ତିନ୍‌ବାଗେ ଅନି ଗଟେକ୍‌ ବାଗର୍‌ ଗଚ୍‌ମନ୍‌ ଆରି ସବୁ ଗାଁସ୍‌ମନ୍‌ ମିସା ପଡିଗାଲା ।
8 இரண்டாவது இறைத்தூதன், தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது பிரமாண்டமான மலைபோல ஒன்று, தீப்பற்றி எரிகிறதாய் கடலில் எறியப்பட்டது. கடலில் மூன்றிலொரு பங்கு இரத்தமாக மாறியது.
ତାର୍‌ପଚେ ଦୁଇଲମର୍‌ ଦୁତ୍‌ ମଇରି ପୁକ୍‌ଲା । ଆରି ଏଦେ ଦେକା! ଗଟେକ୍‌ ବଡ୍‌ କୁପ୍‌ଲି, ଜନ୍‌ଟା ଜଇ ଲାଗ୍‌ତେରଇଲା, ସେଟା ସମ୍‌ଦୁର୍‌ ବିତ୍‌ରେ ପିଙ୍ଗା ଅଇଲା । ଆରି ସମ୍‌ଦୁରର୍‌ ପାନି ତିନ୍‌ବାଗେ ଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ବନି ଅଇଗାଲା ।
9 கடலிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்துபோயின; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கும் அழிந்துபோயின.
ଆରି ସମ୍‌ଦୁର୍‌ ବିତ୍‌ରେ ରଇବା ତିନ୍‌ବାଗେଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ଜଁତ୍‌ଜିଆଦ୍‌ ମରିଗାଲାଇ । ଆରି ତିନ୍‌ବାଗେଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ପାନି ଜାଜ୍‌ ମିସା କୁରୁପ୍‌ନାସ୍‌ ଅଇଗାଲା ।
10 மூன்றாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப்போல் எரிந்து வானத்திலிருந்து விழுந்தது. அது ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
୧୦ତାର୍‌ପଚେ ତିନ୍‌ ଲମରର୍‌ ଦୁତ୍‌ ତାର୍‌ ମଇରି ପୁକ୍‌ଲା । ଆରି ଏଦେ ଦେକା! ସେ ଦାପ୍‍ରେସେ ଆକାସେ ଅନି ଜଇଅଲା ପାରା ଲାଗ୍‌ତେରଇବା ଗଟେକ୍‌ ବଡ୍‌ ତାରା ବାଦ୍‌ଲେଅନି ଅଦର୍‌ଲା । ସେଟା ତିନ୍‌ବାଗେଅନି ଗଟେକ୍‌ ବାଗର୍‌ ଗାଡ୍‌ମନ୍‌କେ ଆରି ଜଲାମନର୍‌ ଉପ୍‌ରେ ଅଦର୍‌ଲା ।
11 அந்த நட்சத்திரத்தின் பெயர் கசப்பு என்பதாகும்; தண்ணீரின் மூன்றிலொரு பங்கு கசப்பாக மாறியது. கசப்பாக மாறிய அந்தத் தண்ணீரினால், மனிதர்களில் பலர் இறந்தார்கள்.
୧୧ସେ ତାରାର୍‌ ନାଉଁ ଅଇଲାନି ଲାଗ୍‌ଦଣାତିକ୍‌ତତା । ତାରା ଅଦର୍‌ଲାକେ ତିନ୍‌ବାଗେ ଅନି ଗଟେକ୍‌ବାଗ୍‌ ପାନି ପିତା ଅଇଗାଲା । ସେ ପିତା ପାନି କାଇକରି ବେସିଲକ୍‌ମନ୍‌ ମରିଗାଲାଇ ।
12 நான்காவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்படைந்தது. சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கும் பாதிப்படைந்தன. இதனால், அவைகளில் மூன்றில் ஒரு பங்கும் இருளடைந்தன. பகலின் மூன்றிலொரு பங்கும், இரவின் மூன்றிலொரு பங்கும் வெளிச்சம் இல்லாமல் போயின.
୧୨ତାର୍‌ପଚେ ଚାର୍‌ ଲମରର୍‌ ଦୁତ୍‌ ତାର୍‌ ମଇରି ପୁକ୍‌ଲା । ଆରି ଏଦେ ଦେକା! ବେଲର୍‌ ତିନ୍‌ବାଗେଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌କେ ମାଡ୍‌ ଅଇଲା । ସେନ୍ତାରିସେ ଜନର୍‌ ତିନ୍‌ବାଗେଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌, ଆରି ତାରା ମନର୍‌ ତିନ୍‌ବାଗେ ଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ନସ୍‌ଟ ଅଇଗାଲା । ତେବର୍‌ ପାଇ ଜନ୍‌ ଆରି ତାରାମନର୍‌ ଉଜଲ୍‌ ଦେବାଟା ତିନ୍‌ବାଗେଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ଉନା ଅଇଗାଲା । ତାର୍‌ପଚେ ଦିନ୍‌ମିସା ତିନ୍‌ବାଗେ ଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ଆରି ରାତି ମିସା ତିନ୍‌ବାଗେ ଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ଉଜଲ୍‌ ନ ରଇଲା ।
13 பின்பு நான் பார்த்தபொழுது, நடுவானத்திலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு, உரத்த சத்தமிடக்கேட்டேன்: “ஐயோ! ஐயோ! பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு, மற்ற மூன்று இறைத்தூதர்களினாலும் ஊதப்படப்போகிற எக்காள சத்தங்களினால், ஐயோ, கேடு வரப்போகிறதே!” என்றது.
୧୩ତାର୍‌ପଚେ ମୁଇ ଆରି ଦେକ୍‌ଲି ଆରି ଏଦେ ଦେକା! ଗଟେକ୍‌ ଗିଦ୍‌ ବେସି ଉପ୍‌ରେ ଉଡ୍‌ତେରଇଲା । ଆରି ଆଉଲି କଇତେରଇଲା, “କାଇ ଇନସ୍‌ତା, କାଇ ଇନସ୍‌ତା । ଜେଡେବେଲେ ବାକି ତିନ୍‌ଟା ଦୁତ୍‌ମନର୍‌ ମଇରି ଟାନେଅନି ସବଦ୍‌ ଆଇଲାବେଲେ, ଦର୍‌ତନି ଟାନେ ରଇବା ସବୁ ଲକ୍‌ମନର୍‌ ପାଇ କେତେକ୍‌ ଇନସ୍‌ତା ଅଇସି ।”

< வெளிப்படுத்தின விசேஷம் 8 >