< வெளிப்படுத்தின விசேஷம் 3 >

1 “சர்தை பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: இறைவனுடைய ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறவருடைய வார்த்தைகள் இவையே. உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன்; நீ உயிருடன் இருக்கிறாய் என்று பெயர் பெற்றிருக்கிறாய், ஆனால் நீ இறந்துவிட்டாய்.
অপৰং সাৰ্দ্দিস্থসমিতে ৰ্দূতং প্ৰতীদং লিখ, যো জন ঈশ্ৱৰস্য সপ্তাত্মনঃ সপ্ত তাৰাশ্চ ধাৰযতি স এৱ ভাষতে, তৱ ক্ৰিযা মম গোচৰাঃ, ৎৱং জীৱদাখ্যো ঽসি তথাপি মৃতো ঽসি তদপি জানামি|
2 விழித்தெழு! சாகும் தருவாயில், மீதியாயிருக்கிறவைகளைப் பெலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை.
প্ৰবুদ্ধো ভৱ, অৱশিষ্টং যদ্যৎ মৃতকল্পং তদপি সবলীকুৰু যত ঈশ্ৱৰস্য সাক্ষাৎ তৱ কৰ্ম্মাণি ন সিদ্ধানীতি প্ৰমাণং মযা প্ৰাপ্তং|
3 ஆகையால், நீ பெற்றுக் கொண்டவைகளையும், கேட்டவைகளையும் நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து, மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் திருடனைப்போல் வருவேன். நான் எந்த நேரம் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியமாட்டாய்.
অতঃ কীদৃশীং শিক্ষাং লব্ধৱান্ শ্ৰুতৱাশ্চাসি তৎ স্মৰন্ তাং পালয স্ৱমনঃ পৰিৱৰ্ত্তয চ| চেৎ প্ৰবুদ্ধো ন ভৱেস্তৰ্হ্যহং স্তেন ইৱ তৱ সমীপম্ উপস্থাস্যামি কিঞ্চ কস্মিন্ দণ্ডে উপস্থাস্যামি তন্ন জ্ঞাস্যসি|
4 ஆனால், தங்களுடைய உடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர், சர்தை பட்டணத்தில் இன்னும் உன்னிடம் இருக்கிறார்கள். அவர்கள் தகுதியுடையவர்களானபடியால் வெள்ளை உடை அணிந்தவர்களாய் என்னுடனே நடப்பார்கள்.
তথাপি যৈঃ স্ৱৱাসাংসি ন কলঙ্কিতানি তাদৃশাঃ কতিপযলোকাঃ সাৰ্দ্দিনগৰে ঽপি তৱ ৱিদ্যন্তে তে শুভ্ৰপৰিচ্ছদৈ ৰ্মম সঙ্গে গমনাগমনে কৰিষ্যন্তি যতস্তে যোগ্যাঃ|
5 வெற்றி பெறுகிறவர்களுக்கு வெள்ளை உடைகள் அணிவிக்கப்படும். ஜீவப் புத்தகத்திலிருந்து ஒருபோதும் நான் அவர்களுடைய பெயரை அழித்துப்போடமாட்டேன். என்னுடைய பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும், அவர்களுடைய பெயரை அறிக்கையிடுவேன்.
যো জনো জযতি স শুভ্ৰপৰিচ্ছদং পৰিধাপযিষ্যন্তে, অহঞ্চ জীৱনগ্ৰন্থাৎ তস্য নাম নান্তৰ্ধাপযিষ্যামি কিন্তু মৎপিতুঃ সাক্ষাৎ তস্য দূতানাং সাক্ষাচ্চ তস্য নাম স্ৱীকৰিষ্যামি|
6 பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.
যস্য শ্ৰোত্ৰং ৱিদ্যতে স সমিতীঃ প্ৰত্যুচ্যমানাম্ আত্মনঃ কথাং শৃণোতু|
7 “பிலதெல்பியா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை வைத்திருக்கிறவரும். ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும் ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாகியவர் சொல்லுகிற வார்த்தைகள் இவையே.
অপৰঞ্চ ফিলাদিল্ফিযাস্থসমিতে ৰ্দূতং প্ৰতীদং লিখ, যঃ পৱিত্ৰঃ সত্যমযশ্চাস্তি দাযূদঃ কুঞ্জিকাং ধাৰযতি চ যেন মোচিতে ঽপৰঃ কোঽপি ন ৰুণদ্ধি ৰুদ্ধে চাপৰঃ কোঽপি ন মোচযতি স এৱ ভাষতে|
8 நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். இதோ பார், நான் உனக்கு முன்பாக திறக்கப்பட்ட ஒரு கதவை வைத்திருக்கிறேன். யாராலும் அதை மூடமுடியாது. உன்னிடம் சிறிதளவே வலிமை உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனால், நீ என்னுடைய வார்த்தையைக் காத்துக்கொண்டாய். நீ என்னுடைய பெயரை மறுதலிக்கவுமில்லை.
তৱ ক্ৰিযা মম গোচৰাঃ পশ্য তৱ সমীপে ঽহং মুক্তং দ্ৱাৰং স্থাপিতৱান্ তৎ কেনাপি ৰোদ্ধুং ন শক্যতে যতস্তৱাল্পং বলমাস্তে তথাপি ৎৱং মম ৱাক্যং পালিতৱান্ মম নাম্নো ঽস্ৱীকাৰং ন কৃতৱাংশ্চ|
9 தாங்கள் யூதர்கள் அல்லாதிருந்தும், தங்களை யூதர்கள் என்று பொய்யாய் கூறிக்கொள்ளும் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள் உன்னுடைய கால்களில் வந்து விழச்செய்து, நான் உன்னை நேசித்தேன் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வேன்.
পশ্য যিহূদীযা ন সন্তো যে মৃষাৱাদিনঃ স্ৱান্ যিহূদীযান্ ৱদন্তি তেষাং শযতানসমাজীযানাং কাংশ্চিদ্ অহম্ আনেষ্যামি পশ্য তে মদাজ্ঞাত আগত্য তৱ চৰণযোঃ প্ৰণংস্যন্তি ৎৱঞ্চ মম প্ৰিযো ঽসীতি জ্ঞাস্যন্তি|
10 பொறுமையுடன் சகிக்கும்படி நான் உனக்குக் கொடுத்த என் கட்டளையை நீ கைக்கொண்டாய். ஆகவே, பூமியில் உள்ளவர்களைச் சோதிக்கும்படி, முழு உலகத்தின்மேலும் வரப்போகும் உபத்திரவத்திலிருந்து நானும் உன்னைக் காத்துக்கொள்வேன்.
১০ৎৱং মম সহিষ্ণুতাসূচকং ৱাক্যং ৰক্ষিতৱানসি তৎকাৰণাৎ পৃথিৱীনিৱাসিনাং পৰীক্ষাৰ্থং কৃৎস্নং জগদ্ যেনাগামিপৰীক্ষাদিনেনাক্ৰমিষ্যতে তস্মাদ্ অহমপি ৎৱাং ৰক্ষিষ্যামি|
11 நான் சீக்கிரமாய் வருகிறேன். அப்பொழுது, யாரும் உனக்குரிய கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி உன்னிடத்தில் உள்ள வார்த்தையைப் பற்றிப் பிடித்துக்கொள்.
১১পশ্য মযা শীঘ্ৰম্ আগন্তৱ্যং তৱ যদস্তি তৎ ধাৰয কো ঽপি তৱ কিৰীটং নাপহৰতু|
12 வெற்றி பெறுகிறவர்களை என்னுடைய இறைவனின் ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன். அவர்கள் இனி ஒருபோதும் அதைவிட்டு நீங்கிப்போகமாட்டார்கள். நான் அவர்கள்மேல் என்னுடைய இறைவனின் பெயரையும், என்னுடைய இறைவனின் நகரத்தின் பெயரையும் எழுதுவேன். இறைவனிடத்திலிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே இறங்கி வருகிற புதிய எருசலேம் என்னும் எனது இறைவனுடைய நகரத்தின் பெயரையும், என் புதிய பெயரையும், அவர்கள்மேல் நான் எழுதுவேன்.
১২যো জনো জযতি তমহং মদীযেশ্ৱৰস্য মন্দিৰে স্তম্ভং কৃৎৱা স্থাপযিস্যামি স পুন ৰ্ন নিৰ্গমিষ্যতি| অপৰঞ্চ তস্মিন্ মদীযেশ্ৱৰস্য নাম মদীযেশ্ৱৰস্য পুৰ্য্যা অপি নাম অৰ্থতো যা নৱীনা যিৰূশানম্ পুৰী স্ৱৰ্গাৎ মদীযেশ্ৱৰস্য সমীপাদ্ অৱৰোক্ষ্যতি তস্যা নাম মমাপি নূতনং নাম লেখিষ্যামি|
13 பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.
১৩যস্য শ্ৰোত্ৰং ৱিদ্যতে স সমিতীঃ প্ৰত্যুচ্যমানাম্ আত্মনঃ কথাং শৃণোতু|
14 “லவோதிக்கேயா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: வாக்குமாறாதவரும், சத்திய சாட்சியும். இறைவனின் படைப்பை ஆளுகை செய்கிறவரும், ஆமென் என்பவரின் வார்த்தைகள் இவைகளே.
১৪অপৰঞ্চ লাযদিকেযাস্থসমিতে ৰ্দূতং প্ৰতীদং লিখ, য আমেন্ অৰ্থতো ৱিশ্ৱাস্যঃ সত্যমযশ্চ সাক্ষী, ঈশ্ৱৰস্য সৃষ্টেৰাদিশ্চাস্তি স এৱ ভাষতে|
15 நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதையே நான் விரும்புகிறேன்.
১৫তৱ ক্ৰিযা মম গোচৰাঃ ৎৱং শীতো নাসি তপ্তো ঽপি নাসীতি জানামি|
16 ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து உமிழ்ந்துவிடுவேன்.
১৬তৱ শীতৎৱং তপ্তৎৱং ৱা ৱৰং ভৱেৎ, শীতো ন ভূৎৱা তপ্তো ঽপি ন ভূৎৱা ৎৱমেৱম্ভূতঃ কদূষ্ণো ঽসি তৎকাৰণাদ্ অহং স্ৱমুখাৎ ৎৱাম্ উদ্ৱমিষ্যামি|
17 நீயோ, ‘நான் செல்வந்தன்; நான் செல்வத்தைச் சம்பாதித்திருக்கிறேன், எனக்கு எவ்வித தேவையுமில்லை’ என்று சொல்கிறாய். ஆனால் நீயோ அவலமானவன், பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், உடையற்றவன் என்ற நிலையை உணராதவனாய் இருக்கிறாய்.
১৭অহং ধনী সমৃদ্ধশ্চাস্মি মম কস্যাপ্যভাৱো ন ভৱতীতি ৎৱং ৱদসি কিন্তু ৎৱমেৱ দুঃখাৰ্ত্তো দুৰ্গতো দৰিদ্ৰো ঽন্ধো নগ্নশ্চাসি তৎ ৎৱযা নাৱগম্যতে|
18 நீ என்னிடத்திலிருந்து நெருப்பில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை விலைகொடுத்து வாங்கிக்கொள். அப்பொழுது நீ செல்வந்தனாவாய்; அணிந்துகொள்வதற்கு வெள்ளை உடைகளையும் வாங்கிக்கொள், அப்பொழுது உன்னுடைய வெட்கக்கேடான நிர்வாணத்தை நீ மறைத்துக்கொள்வாய். நீ பார்க்கும்படி உன் கண்களுக்குப் பூசிக்கொள்வதற்குத் தைலத்தையும் வாங்கிக்கொள், இதுவே, நான் உனக்குக் கொடுக்கும் ஆலோசனை.
১৮ৎৱং যদ্ ধনী ভৱেস্তদৰ্থং মত্তো ৱহ্নৌ তাপিতং সুৱৰ্ণং ক্ৰীণীহি নগ্নৎৱাৎ তৱ লজ্জা যন্ন প্ৰকাশেত তদৰ্থং পৰিধানায মত্তঃ শুভ্ৰৱাসাংসি ক্ৰীণীহি যচ্চ তৱ দৃষ্টিঃ প্ৰসন্না ভৱেৎ তদৰ্থং চক্ষুৰ্লেপনাযাঞ্জনং মত্তঃ ক্ৰীণীহীতি মম মন্ত্ৰণা|
19 நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, கண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே வைராக்கியம் உள்ளவனாயிருந்து, மனந்திரும்பு.
১৯যেষ্ৱহং প্ৰীযে তান্ সৰ্ৱ্ৱান্ ভৰ্ত্সযামি শাস্মি চ, অতস্ত্ৱম্ উদ্যমং ৱিধায মনঃ পৰিৱৰ্ত্তয|
20 இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னுடைய குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து, அவருடன் சாப்பிடுவேன், அவரும் என்னுடன் சாப்பிடுவார்.
২০পশ্যাহং দ্ৱাৰি তিষ্ঠন্ তদ্ আহন্মি যদি কশ্চিৎ মম ৰৱং শ্ৰুৎৱা দ্ৱাৰং মোচযতি তৰ্হ্যহং তস্য সন্নিধিং প্ৰৱিশ্য তেন সাৰ্দ্ধং ভোক্ষ্যে সো ঽপি মযা সাৰ্দ্ধং ভোক্ষ্যতে|
21 நான் வெற்றி பெற்று, என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பது போல, வெற்றி பெறுகிறவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன்.
২১অপৰমহং যথা জিতৱান্ মম পিত্ৰা চ সহ তস্য সিংহাসন উপৱিষ্টশ্চাস্মি, তথা যো জনো জযতি তমহং মযা সাৰ্দ্ধং মৎসিংহাসন উপৱেশযিষ্যামি|
22 பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.”
২২যস্য শ্ৰোত্ৰং ৱিদ্যতে স সমিতীঃ প্ৰত্যুচ্যমানম্ আত্মনঃ কথাং শৃণোতু|

< வெளிப்படுத்தின விசேஷம் 3 >