< வெளிப்படுத்தின விசேஷம் 22 +

1 பின்பு அந்தத் தூதன் ஜீவத்தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அந்த ஆறு, பளிங்கைப்போல் தெளிவாய் இருந்தது. அது இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது.
ଅନନ୍ତରଂ ସ ସ୍ଫଟିକୱତ୍ ନିର୍ମ୍ମଲମ୍ ଅମୃତତୋଯସ୍ୟ ସ୍ରୋତୋ ମାମ୍ ଅଉର୍ଶଯତ୍ ତଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ମେଷଶାୱକସ୍ୟ ଚ ସିଂହାସନାତ୍ ନିର୍ଗଚ୍ଛତି|
2 அது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக பாய்ந்து ஓடியது. அந்த ஆற்றின் இருபுறமும் ஜீவ மரம் நின்றது. அது மாதம் ஒரு முறையாக, பன்னிரண்டு முறை பழங்களைக் கொடுத்தது. அந்த மரத்தின் இலைகள், மக்களுக்கு சுகம் கொடுப்பதற்கானவை.
ନଗର୍ୟ୍ୟା ମାର୍ଗମଧ୍ୟେ ତସ୍ୟା ନଦ୍ୟାଃ ପାର୍ଶ୍ୱଯୋରମୃତୱୃକ୍ଷା ୱିଦ୍ୟନ୍ତେ ତେଷାଂ ଦ୍ୱାଦଶଫଲାନି ଭୱନ୍ତି, ଏକୈକୋ ୱୃକ୍ଷଃ ପ୍ରତିମାସଂ ସ୍ୱଫଲଂ ଫଲତି ତଦ୍ୱୃକ୍ଷପତ୍ରାଣି ଚାନ୍ୟଜାତୀଯାନାମ୍ ଆରୋଗ୍ୟଜନକାନି|
3 இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள்.
ଅପରଂ କିମପି ଶାପଗ୍ରସ୍ତଂ ପୁନ ର୍ନ ଭୱିଷ୍ୟତି ତସ୍ୟା ମଧ୍ୟ ଈଶ୍ୱରସ୍ୟ ମେଷଶାୱକସ୍ୟ ଚ ସିଂହାସନଂ ସ୍ଥାସ୍ୟତି ତସ୍ୟ ଦାସାଶ୍ଚ ତଂ ସେୱିଷ୍ୟନ୍ତେ|
4 அவர்கள் அவருடைய முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கும்.
ତସ୍ୟ ୱଦନଦର୍ଶନଂ ପ୍ରାପ୍ସ୍ୟନ୍ତି ଭାଲେଷୁ ଚ ତସ୍ୟ ନାମ ଲିଖିତଂ ଭୱିଷ୍ୟତି|
5 இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். (aiōn g165)
ତଦାନୀଂ ରାତ୍ରିଃ ପୁନ ର୍ନ ଭୱିଷ୍ୟତି ଯତଃ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରସ୍ତାନ୍ ଦୀପଯିଷ୍ୟତି ତେ ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ରାଜତ୍ୱଂ କରିଷ୍ୟନ୍ତେ| (aiōn g165)
6 அந்தத் இறைத்தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன. இறைவாக்கினரின் ஆவிகளுக்கு இறைவனாயிருக்கிற கர்த்தர், சீக்கிரமாய் நிகழவிருக்கும் காரியங்களைத் தம்முடைய ஊழியர்களுக்குக் காண்பிக்கும்படி, தமது தூதனை அனுப்பினார்” என்றான்.
ଅନନ୍ତରଂ ସ ମାମ୍ ଅୱଦତ୍, ୱାକ୍ୟାନୀମାନି ୱିଶ୍ୱାସ୍ୟାନି ସତ୍ୟାନି ଚ, ଅଚିରାଦ୍ ଯୈ ର୍ଭୱିତୱ୍ୟଂ ତାନି ସ୍ୱଦାସାନ୍ ଜ୍ଞାପଯିତୁଂ ପୱିତ୍ରଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନାଂ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରଃ ସ୍ୱଦୂତଂ ପ୍ରେଷିତୱାନ୍|
7 “இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கைக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”
ପଶ୍ୟାହଂ ତୂର୍ଣମ୍ ଆଗଚ୍ଛାମି, ଏତଦ୍ଗ୍ରନ୍ଥସ୍ୟ ଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟାନି ଯଃ ପାଲଯତି ସ ଏୱ ଧନ୍ୟଃ|
8 யோவானாகிய நானே, இந்த வார்த்தைகளைக் கேட்டேன். இந்தக் காரியங்களைக் கண்டேன். நான் இவைகளைக் கண்டு, கேட்டபோது, இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன்.
ଯୋହନହମ୍ ଏତାନି ଶ୍ରୁତୱାନ୍ ଦୃଷ୍ଟୱାଂଶ୍ଚାସ୍ମି ଶ୍ରୁତ୍ୱା ଦୃଷ୍ଟ୍ୱା ଚ ତଦ୍ଦର୍ଶକଦୂତସ୍ୟ ପ୍ରଣାମାର୍ଥଂ ତଚ୍ଚରଣଯୋରନ୍ତିକେ ଽପତଂ|
9 ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்” என்றான்.
ତତଃ ସ ମାମ୍ ଅୱଦତ୍ ସାୱଧାନୋ ଭୱ ମୈୱଂ କୃରୁ, ତ୍ୱଯା ତୱ ଭ୍ରାତୃଭି ର୍ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିଭିରେତଦ୍ଗ୍ରନ୍ଥସ୍ଥୱାକ୍ୟପାଲନକାରିଭିଶ୍ଚ ସହଦାସୋ ଽହଂ| ତ୍ୱମ୍ ଈଶ୍ୱରଂ ପ୍ରଣମ|
10 பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்தின் இறைவாக்கு வார்த்தைகளை மூடி முத்திரையிடாதே. ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது.
ସ ପୁନ ର୍ମାମ୍ ଅୱଦତ୍, ଏତଦ୍ଗ୍ରନ୍ଥସ୍ଥଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟାନି ତ୍ୱଯା ନ ମୁଦ୍ରାଙ୍କଯିତୱ୍ୟାନି ଯତଃ ସମଯୋ ନିକଟୱର୍ତ୍ତୀ|
11 அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும்; சீர்கெட்டு இருக்கிறவன், தொடர்ந்து சீர்கெட்டு இருக்கட்டும்; நியாயம் செய்கிறவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும்; பரிசுத்தமாய் இருக்கிறவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.”
ଅଧର୍ମ୍ମାଚାର ଇତଃ ପରମପ୍ୟଧର୍ମ୍ମମ୍ ଆଚରତୁ, ଅମେଧ୍ୟାଚାର ଇତଃ ପରମପ୍ୟମେଧ୍ୟମ୍ ଆଚରତୁ ଧର୍ମ୍ମାଚାର ଇତଃ ପରମପି ଧର୍ମ୍ମମ୍ ଆଚରତୁ ପୱିତ୍ରାଚାରଶ୍ଚେତଃ ପରମପି ପୱିତ୍ରମ୍ ଆଚରତୁ|
12 “இதோ, நான் வெகுவிரைவாய் வருகிறேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கிறது. ஒவ்வொருவனுக்கும், அவனுடைய செயலுக்கு ஏற்றபடியே, நான் பரிசு கொடுப்பேன்.
ପଶ୍ୟାହଂ ତୂର୍ଣମ୍ ଆଗଚ୍ଛାମି, ଏକୈକସ୍ମୈ ସ୍ୱକ୍ରିଯାନୁଯାଯିଫଲଦାନାର୍ଥଂ ମଦ୍ଦାତୱ୍ୟଫଲଂ ମମ ସମୱର୍ତ୍ତି|
13 நானே அல்பாவும், ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன்.
ଅହଂ କଃ କ୍ଷଶ୍ଚ ପ୍ରଥମଃ ଶେଷଶ୍ଚାଦିରନ୍ତଶ୍ଚ|
14 “தங்களுடைய ஆடைகளைத் துவைத்துக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே, ஜீவ மரத்தின் பழத்தைச் சாப்பிடும் உரிமை உண்டு. வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்ல அவர்கள் உரிமைபெறுவார்கள்.
ଅମୁତୱୃକ୍ଷସ୍ୟାଧିକାରପ୍ରାପ୍ତ୍ୟର୍ଥଂ ଦ୍ୱାରୈ ର୍ନଗରପ୍ରୱେଶାର୍ଥଞ୍ଚ ଯେ ତସ୍ୟାଜ୍ଞାଃ ପାଲଯନ୍ତି ତ ଏୱ ଧନ୍ୟାଃ|
15 நகரத்திற்கு வெளியேயோ, நாய்களைப்போல் சீர்கெட்டவர்கள், மந்திரவித்தைக்காரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், கொலைகாரர், சிலைகளை வணங்குவோர், பொய்யானவற்றை நேசித்து கைக்கொள்வோர் ஆகியோர் இருக்கிறார்கள்.
କୁକ୍କୁରୈ ର୍ମାଯାୱିଭିଃ ପୁଙ୍ଗାମିଭି ର୍ନରହନ୍ତୃଭି ର୍ଦେୱାର୍ଚ୍ଚକୈଃ ସର୍ୱ୍ୱୈରନୃତେ ପ୍ରୀଯମାଣୈରନୃତାଚାରିଭିଶ୍ଚ ବହିଃ ସ୍ଥାତୱ୍ୟଂ|
16 “இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி, என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்.”
ମଣ୍ଡଲୀଷୁ ଯୁଷ୍ମଭ୍ୟମେତେଷାଂ ସାକ୍ଷ୍ୟଦାନାର୍ଥଂ ଯୀଶୁରହଂ ସ୍ୱଦୂତଂ ପ୍ରେଷିତୱାନ୍, ଅହମେୱ ଦାଯୂଦୋ ମୂଲଂ ୱଂଶଶ୍ଚ, ଅହଂ ତେଜୋମଯପ୍ରଭାତୀଯତାରାସ୍ୱରୂପଃ|
17 ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கிறவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாக இருக்கிற யாரும் வரட்டும்; விரும்புகிற யாரும் ஜீவத்தண்ணீரை இலவச நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளட்டும்.
ଆତ୍ମା କନ୍ୟା ଚ କଥଯତଃ, ତ୍ୱଯାଗମ୍ୟତାଂ| ଶ୍ରୋତାପି ୱଦତୁ, ଆଗମ୍ୟତାମିତି| ଯଶ୍ଚ ତୃଷାର୍ତ୍ତଃ ସ ଆଗଚ୍ଛତୁ ଯଶ୍ଚେଚ୍ଛତି ସ ୱିନା ମୂଲ୍ୟଂ ଜୀୱନଦାଯି ଜଲଂ ଗୃହ୍ଲାତୁ|
18 இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இறைவனும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை அவனுக்குச் சேர்ப்பார்.
ଯଃ କଶ୍ଚିଦ୍ ଏତଦ୍ଗ୍ରନ୍ଥସ୍ଥଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟାନି ଶୃଣୋତି ତସ୍ମା ଅହଂ ସାକ୍ଷ୍ୟମିଦଂ ଦଦାମି, କଶ୍ଚିଦ୍ ଯଦ୍ୟପରଂ କିମପ୍ୟେତେଷୁ ଯୋଜଯତି ତର୍ହୀଶ୍ୱରୋଗ୍ରନ୍ଥେଽସ୍ମିନ୍ ଲିଖିତାନ୍ ଦଣ୍ଡାନ୍ ତସ୍ମିନ୍ନେୱ ଯୋଜଯିଷ୍ୟତି|
19 இந்த இறைவாக்குப் புத்தகத்திலிருந்து யாராவது எந்த வார்த்தைகளையாவது நீக்கிப்போட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிப்போடுவார்.
ଯଦି ଚ କଶ୍ଚିଦ୍ ଏତଦ୍ଗ୍ରନ୍ଥସ୍ଥଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟେଭ୍ୟଃ କିମପ୍ୟପହରତି ତର୍ହୀଶ୍ୱରୋ ଗ୍ରନ୍ଥେ ଽସ୍ମିନ୍ ଲିଖିତାତ୍ ଜୀୱନୱୃକ୍ଷାତ୍ ପୱିତ୍ରନଗରାଚ୍ଚ ତସ୍ୟାଂଶମପହରିଷ୍ୟତି|
20 இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கிறவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகிறேன்” என்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும்.
ଏତତ୍ ସାକ୍ଷ୍ୟଂ ଯୋ ଦଦାତି ସ ଏୱ ୱକ୍ତି ସତ୍ୟମ୍ ଅହଂ ତୂର୍ଣମ୍ ଆଗଚ୍ଛାମି| ତଥାସ୍ତୁ| ପ୍ରଭୋ ଯୀଶୋ, ଆଗମ୍ୟତାଂ ଭୱତା|
21 கர்த்தராகிய இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.
ଅସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାନୁଗ୍ରହଃ ସର୍ୱ୍ୱେଷୁ ଯୁଷ୍ମାସୁ ୱର୍ତ୍ତତାଂ| ଆମେନ୍|

< வெளிப்படுத்தின விசேஷம் 22 +