< வெளிப்படுத்தின விசேஷம் 21 >

1 பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும் கண்டேன்” ஏனெனில், முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இருக்கவில்லை.
অনন্তৰং নৱীনম্ আকাশমণ্ডলং নৱীনা পৃথিৱী চ মযা দৃষ্টে যতঃ প্ৰথমম্ আকাশমণ্ডলং প্ৰথমা পৃথিৱী চ লোপং গতে সমুদ্ৰো ঽপি ততঃ পৰং ন ৱিদ্যতে|
2 அப்பொழுது நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைக் கண்டேன். அது இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்தது; அது தனது கணவனுக்காக அழகாய் அலங்கரிக்கப்பட்ட, ஒரு மணமகளைப்போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
অপৰং স্ৱৰ্গাদ্ অৱৰোহন্তী পৱিত্ৰা নগৰী, অৰ্থতো নৱীনা যিৰূশালমপুৰী মযা দৃষ্টা, সা ৱৰায ৱিভূষিতা কন্যেৱ সুসজ্জিতাসীৎ|
3 அப்பொழுது நான், அரியணையில் இருந்து வருகின்ற, ஒரு பெரும் குரல் இவ்வாறு சொல்வதைக் கேட்டேன்: “இறைவன் தங்குகின்ற இடம், இப்பொழுது மனிதருடன் இருக்கின்றது. அவர் மனிதருடனேயே குடியிருப்பார். அவர்கள் அவருடைய மக்களாயிருப்பார்கள். இறைவன் தாமே அவர்களுடன் இருந்து, அவர்களுடைய இறைவனாயிருப்பார்.
অনন্তৰং স্ৱৰ্গাদ্ এষ মহাৰৱো মযা শ্ৰুতঃ পশ্যাযং মানৱৈঃ সাৰ্দ্ধম্ ঈশ্ৱৰস্যাৱাসঃ, স তৈঃ সাৰ্দ্ধং ৱৎস্যতি তে চ তস্য প্ৰজা ভৱিষ্যন্তি, ঈশ্ৱৰশ্চ স্ৱযং তেষাম্ ঈশ্ৱৰো ভূৎৱা তৈঃ সাৰ্দ্ধং স্থাস্যতি|
4 ‘அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் அவர் துடைப்பார். இனிமேல் மரணம் இருக்காது’ புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இருக்காது. ஏனெனில், பழைய முறைமைகள் எல்லாம் இல்லாமற்போயிற்று” என்றது.
তেষাং নেত্ৰেভ্যশ্চাশ্ৰূণি সৰ্ৱ্ৱাণীশ্ৱৰেণ প্ৰমাৰ্ক্ষ্যন্তে মৃত্যুৰপি পুন ৰ্ন ভৱিষ্যতি শোকৱিলাপক্লেশা অপি পুন ৰ্ন ভৱিষ্যন্তি, যতঃ প্ৰথমানি সৰ্ৱ্ৱাণি ৱ্যতীতিনি|
5 அரியணையில் அமர்ந்திருந்தவர், “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்!” என்றார். மேலும் அவர், “இதை எழுதிவை. ஏனெனில், இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் சத்தியமுமாய் இருக்கின்றன” என்று சொன்னார்.
অপৰং সিংহাসনোপৱিষ্টো জনোঽৱদৎ পশ্যাহং সৰ্ৱ্ৱাণি নূতনীকৰোমি| পুনৰৱদৎ লিখ যত ইমানি ৱাক্যানি সত্যানি ৱিশ্ৱাস্যানি চ সন্তি|
6 பின்பு அவர், என்னிடம் சொன்னதாவது: “அது செய்தாயிற்று. நானே அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன். நானே தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். தாகமாய் இருக்கிறவனுக்கு, வாழ்வுதரும் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாய் குடிக்கக் கொடுப்பேன்.
পন ৰ্মাম্ অৱদৎ সমাপ্তং, অহং কঃ ক্ষশ্চ, অহম্ আদিৰন্তশ্চ যঃ পিপাসতি তস্মা অহং জীৱনদাযিপ্ৰস্ৰৱণস্য তোযং ৱিনামূল্যং দাস্যামি|
7 வெற்றி பெறுகிறவர்கள், இவற்றையெல்லாம் உரிமையாக்கிக்கொள்வார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாயிருப்பார்கள்.
যো জযতি স সৰ্ৱ্ৱেষাম্ অধিকাৰী ভৱিষ্যতি, অহঞ্চ তস্যেশ্ৱৰো ভৱিষ্যামি স চ মম পুত্ৰো ভৱিষ্যতি|
8 ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” (Limnē Pyr g3041 g4442)
কিন্তু ভীতানাম্ অৱিশ্ৱাসিনাং ঘৃণ্যানাং নৰহন্তৃণাং ৱেশ্যাগামিনাং মোহকানাং দেৱপূজকানাং সৰ্ৱ্ৱেষাম্ অনৃতৱাদিনাঞ্চাংশো ৱহ্নিগন্ধকজ্ৱলিতহ্ৰদে ভৱিষ্যতি, এষ এৱ দ্ৱিতীযো মৃত্যুঃ| (Limnē Pyr g3041 g4442)
9 அப்பொழுது ஏழு கிண்ணங்களில் ஏழு கடைசி வாதைகளை நிறைத்து வைத்திருந்த, ஏழு இறைத்தூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, நான் உனக்கு ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுகிறேன்” என்றான்.
অনন্তৰং শেষসপ্তদণ্ডৈঃ পৰিপূৰ্ণাঃ সপ্ত কংসা যেষাং সপ্তদূতানাং কৰেষ্ৱাসন্ তেষামেক আগত্য মাং সম্ভাষ্যাৱদৎ, আগচ্ছাহং তাং কন্যাম্ অৰ্থতো মেষশাৱকস্য ভাৱিভাৰ্য্যাং ৎৱাং দৰ্শযামি|
10 அப்பொழுது, அந்த இறைத்தூதன் என்னை ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு பெரிய உயர்ந்த மலைக்குக் கொண்டுபோனான். அவன் இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்த, பரிசுத்த நகரமாகிய எருசலேமை எனக்குக் காண்பித்தான்.
১০ততঃ স আত্মাৱিষ্টং মাম্ অত্যুচ্চং মহাপৰ্ৱ্ৱতমেংক নীৎৱেশ্ৱৰস্য সন্নিধিতঃ স্ৱৰ্গাদ্ অৱৰোহন্তীং যিৰূশালমাখ্যাং পৱিত্ৰাং নগৰীং দৰ্শিতৱান্|
11 அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது.
১১সা ঈশ্ৱৰীযপ্ৰতাপৱিশিষ্টা তস্যাস্তেজো মহাৰ্ঘৰত্নৱদ্ অৰ্থতঃ সূৰ্য্যকান্তমণিতেজস্তুল্যং|
12 அந்த நகரத்திற்கு, பெரிய உயர்ந்த மதில் இருந்தது. அந்த மதிலில், பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. பன்னிரண்டு இறைத்தூதர்கள் அந்த வாசல்களில் நின்றார்கள். அந்த வாசல்களில், இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
১২তস্যাঃ প্ৰাচীৰং বৃহদ্ উচ্চঞ্চ তত্ৰ দ্ৱাদশ গোপুৰাণি সন্তি তদ্গোপুৰোপৰি দ্ৱাদশ স্ৱৰ্গদূতা ৱিদ্যন্তে তত্ৰ চ দ্ৱাদশ নামান্যৰ্থত ইস্ৰাযেলীযানাং দ্ৱাদশৱংশানাং নামানি লিখিতানি|
13 அந்த நகரத்தின் கிழக்குப் பக்கத்தில் மூன்றும், வடக்குப் பக்கத்தில் மூன்றும், தெற்குப் பக்கத்தில் மூன்றும், மேற்குப் பக்கத்தில் மூன்றுமாக, வாசல்கள் இருந்தன.
১৩পূৰ্ৱ্ৱদিশি ত্ৰীণি গোপুৰাণি উত্তৰদিশি ত্ৰীণি গোপুৰাণি দক্ষিণদিষি ত্ৰীণি গোপুৰাণি পশ্চীমদিশি চ ত্ৰীণি গোপুৰাণি সন্তি|
14 அந்த நகரத்தின் மதில் பன்னிரண்டு அஸ்திபாரங்களின்மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
১৪নগৰ্য্যাঃ প্ৰাচীৰস্য দ্ৱাদশ মূলানি সন্তি তত্ৰ মেষাশাৱাকস্য দ্ৱাদশপ্ৰেৰিতানাং দ্ৱাদশ নামানি লিখিতানি|
15 என்னுடன் பேசிய தூதன், அந்த நகரத்தையும், அதன் வாசல்களையும், அதன் மதில்களையும் அளப்பதற்கென தங்கத்திலான ஒரு அளவுகோலை வைத்திருந்தான்.
১৫অনৰং নগৰ্য্যাস্তদীযগোপুৰাণাং তৎপ্ৰাচীৰস্য চ মাপনাৰ্থং মযা সম্ভাষমাণস্য দূতস্য কৰে স্ৱৰ্ণময একঃ পৰিমাণদণ্ড আসীৎ|
16 அந்த நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளமும் அகலமும் சம அளவாயிருந்தன. அவன் அந்த அளவுகோலினால் அந்த நகரத்தை அளந்தான். அது 2,200 கிலோமீட்டர் நீளமாய் இருந்தது. அதன் அகலமும் அதன் உயரமும்கூட அதே அளவாகவே இருந்தன.
১৬নগৰ্য্যা আকৃতিশ্চতুৰস্ৰা তস্যা দৈৰ্ঘ্যপ্ৰস্থে সমে| ততঃ পৰং স তেগ পৰিমাণদণ্ডেন তাং নগৰীং পৰিমিতৱান্ তস্যাঃ পৰিমাণং দ্ৱাদশসহস্ৰনল্ৱাঃ| তস্যা দৈৰ্ঘ্যং প্ৰস্থম্ উচ্চৎৱঞ্চ সমানানি|
17 அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். அந்த மதிலின் உயரம் சுமார் 65 மீட்டர் அளவாய் இருந்தது. மனிதர் பயன்படுத்தும் அளவுகோலையே, அந்த இறைத்தூதனும் பயன்படுத்தினான்.
১৭অপৰং স তস্যাঃ প্ৰাচীৰং পৰিমিতৱান্ তস্য মানৱাস্যাৰ্থতো দূতস্য পৰিমাণানুসাৰতস্তৎ চতুশ্চৎৱাৰিংশদধিকাশতহস্তপৰিমিতং |
18 அந்த மதில் படிகைக் கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரம் சுத்த தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கம் கண்ணாடியைப்போல் தூய்மையாய் இருந்தது.
১৮তস্য প্ৰাচীৰস্য নিৰ্ম্মিতিঃ সূৰ্য্যকান্তমণিভি ৰ্নগৰী চ নিৰ্ম্মলকাচতুল্যেন শুদ্ধসুৱৰ্ণেন নিৰ্ম্মিতা|
19 அந்த நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதலாவது அஸ்திபாரக்கல் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல்,
১৯নগৰ্য্যাঃ প্ৰাচীৰস্য মূলানি চ সৰ্ৱ্ৱৱিধমহাৰ্ঘমণিভি ৰ্ভূষিতানি| তেষাং প্ৰথমং ভিত্তিমূলং সূৰ্য্যকান্তস্য, দ্ৱিতীযং নীলস্য, তৃতীযং তাম্ৰমণেঃ, চতুৰ্থং মৰকতস্য,
20 ஐந்தாவது கோமேதகக்கல், ஆறாவது பதுமராகக்கல், ஏழாவது சுவர்ணரத்தினக்கல், எட்டாவது படிகைப் பச்சைக்கல், ஒன்பதாவது புஷ்பராகக்கல், பத்தாவது வைடூரியக்கல், பதினோராவது இந்திர நீலக்கல், பன்னிரெண்டாவது சுகந்திக்கல் ஆகியவைகளாயிருந்தன.
২০পঞ্চমং ৱৈদূৰ্য্যস্য, ষষ্ঠং শোণৰত্নস্য, সপ্তমং চন্দ্ৰকান্তস্য, অষ্টমং গোমেদস্য, নৱমং পদ্মৰাগস্য, দশমং লশূনীযস্য, একাদশং ষেৰোজস্য, দ্ৱাদশং মৰ্টীষ্মণেশ্চাস্তি|
21 பன்னிரண்டு வாசல்களும், பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒரு முத்தைக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் பெரிய வீதி தெளிவுள்ள கண்ணாடியைப் போன்ற சுத்தத்தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
২১দ্ৱাদশগোপুৰাণি দ্ৱাদশমুক্তাভি ৰ্নিৰ্ম্মিতানি, একৈকং গোপুৰম্ একৈকযা মুক্তযা কৃতং নগৰ্য্যা মহামাৰ্গশ্চাচ্ছকাচৱৎ নিৰ্ম্মলসুৱৰ্ণেন নিৰ্ম্মিতং|
22 அந்த நகரத்தில், நான் ஆலயத்தைக் காணவில்லை. ஏனெனில், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அந்த நகரத்தின் ஆலயம்.
২২তস্যা অন্তৰ একমপি মন্দিৰং মযা ন দৃষ্টং সতঃ সৰ্ৱ্ৱশক্তিমান্ প্ৰভুঃ পৰমেশ্ৱৰো মেষশাৱকশ্চ স্ৱযং তস্য মন্দিৰং|
23 சூரியனும் சந்திரனும் அந்த நகரத்தில் ஒளிகொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளியைக் கொடுக்கிறது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்காய் இருக்கிறார்.
২৩তস্যৈ নগৰ্য্যৈ দীপ্তিদানাৰ্থং সূৰ্য্যাচন্দ্ৰমসোঃ প্ৰযোজনং নাস্তি যত ঈশ্ৱৰস্য প্ৰতাপস্তাং দীপযতি মেষশাৱকশ্চ তস্যা জ্যোতিৰস্তি|
24 மக்கள் அந்த வெளிச்சத்தினாலே நடப்பார்கள். பூமியின் அரசர் தங்கள் மகிமையை அதற்குள் கொண்டுவருவார்கள்.
২৪পৰিত্ৰাণপ্ৰাপ্তলোকনিৱহাশ্চ তস্যা আলোকে গমনাগমনে কুৰ্ৱ্ৱন্তি পৃথিৱ্যা ৰাজানশ্চ স্ৱকীযং প্ৰতাপং গৌৰৱঞ্চ তন্মধ্যম্ আনযন্তি|
25 அந்த நகரத்தின் வாசல்கள் ஒருநாளும் மூடப்படுவதில்லை. ஏனெனில் அங்கே இரவு இல்லை.
২৫তস্যা দ্ৱাৰাণি দিৱা কদাপি ন ৰোৎস্যন্তে নিশাপি তত্ৰ ন ভৱিষ্যতি|
26 மக்களின் மகிமையும் கனமும் அதற்குள் கொண்டுவரப்படும்.
২৬সৰ্ৱ্ৱজাতীনাং গৌৰৱপ্ৰতাপৌ তন্মধ্যম্ আনেষ্যেতে|
27 அசுத்தமான எதுவும் ஒருபோதும் அதற்குள் செல்லமாட்டாது. வெட்கக்கேடானவற்றைச் செய்கிறவனோ ஏமாற்றுகிறவனோ அதற்குள் செல்லமாட்டான். ஆனால், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில், தங்கள் பெயர்கள் எழுதப்பட்டவர்களாய் இருக்கிறவர்கள் மட்டுமே அதற்குள் செல்வார்கள்.
২৭পৰন্ত্ৱপৱিত্ৰং ঘৃণ্যকৃদ্ অনৃতকৃদ্ ৱা কিমপি তন্মধ্যং ন প্ৰৱেক্ষ্যতি মেষশাৱকস্য জীৱনপুস্তকে যেষাং নামানি লিখিতানি কেৱলং ত এৱ প্ৰৱেক্ষ্যন্তি|

< வெளிப்படுத்தின விசேஷம் 21 >