< வெளிப்படுத்தின விசேஷம் 20 >

1 பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos g12)
ತತಃ ಪರಂ ಸ್ವರ್ಗಾದ್ ಅವರೋಹನ್ ಏಕೋ ದೂತೋ ಮಯಾ ದೃಷ್ಟಸ್ತಸ್ಯ ಕರೇ ರಮಾತಲಸ್ಯ ಕುಞ್ಜಿಕಾ ಮಹಾಶೃಙ್ಖಲಞ್ಚೈಕಂ ತಿಷ್ಠತಃ| (Abyssos g12)
2 அவன் அந்த பூர்வகாலத்துப் பாம்பாகிய இராட்சதப் பாம்பைத் துரத்திப் பிடித்து, ஆயிரம் வருடங்களுக்குக் கட்டி வைத்தான். இந்த இராட்சதப் பாம்பே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்டது.
ಅಪರಂ ನಾಗೋ ಽರ್ಥತಃ ಯೋ ವೃದ್ಧಃ ಸರ್ಪೋ ಽಪವಾದಕಃ ಶಯತಾನಶ್ಚಾಸ್ತಿ ತಮೇವ ಧೃತ್ವಾ ವರ್ಷಸಹಸ್ರಂ ಯಾವದ್ ಬದ್ಧವಾನ್|
3 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos g12)
ಅಪರಂ ರಸಾತಲೇ ತಂ ನಿಕ್ಷಿಪ್ಯ ತದುಪರಿ ದ್ವಾರಂ ರುದ್ಧ್ವಾ ಮುದ್ರಾಙ್ಕಿತವಾನ್ ಯಸ್ಮಾತ್ ತದ್ ವರ್ಷಸಹಸ್ರಂ ಯಾವತ್ ಸಮ್ಪೂರ್ಣಂ ನ ಭವೇತ್ ತಾವದ್ ಭಿನ್ನಜಾತೀಯಾಸ್ತೇನ ಪುನ ರ್ನ ಭ್ರಮಿತವ್ಯಾಃ| ತತಃ ಪರಮ್ ಅಲ್ಪಕಾಲಾರ್ಥಂ ತಸ್ಯ ಮೋಚನೇನ ಭವಿತವ್ಯಂ| (Abyssos g12)
4 நான் நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் அமர்ந்திருந்த, அரியணைகளைக் கண்டேன். பின்பு நான், இயேசுவுக்காக சாட்சி கொடுத்ததற்காகவும், இறைவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டதற்காகவும், தலைவெட்டுண்டு இறந்தவர்களின் ஆத்துமாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த மிருகத்தையோ, அவனுடைய உருவச்சிலையையோ வணங்கவில்லை. அவனுடைய அடையாளத்தைத் தங்கள் நெற்றியிலோ, அல்லது தங்கள் கைகளிலோ அவர்கள் பெற்றுக்கொள்ளவும் இல்லை. அவர்கள் உயிர்பெற்றவர்களாய் எழும்பி, கிறிஸ்துவுடனே ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்தார்கள்.
ಅನನ್ತರಂ ಮಯಾ ಸಿಂಹಾಸನಾನಿ ದೃಷ್ಟಾನಿ ತತ್ರ ಯೇ ಜನಾ ಉಪಾವಿಶನ್ ತೇಭ್ಯೋ ವಿಚಾರಭಾರೋ ಽದೀಯತ; ಅನನ್ತರಂ ಯೀಶೋಃ ಸಾಕ್ಷ್ಯಸ್ಯ ಕಾರಣಾದ್ ಈಶ್ವರವಾಕ್ಯಸ್ಯ ಕಾರಣಾಚ್ಚ ಯೇಷಾಂ ಶಿರಶ್ಛೇದನಂ ಕೃತಂ ಪಶೋಸ್ತದೀಯಪ್ರತಿಮಾಯಾ ವಾ ಪೂಜಾ ಯೈ ರ್ನ ಕೃತಾ ಭಾಲೇ ಕರೇ ವಾ ಕಲಙ್ಕೋ ಽಪಿ ನ ಧೃತಸ್ತೇಷಾಮ್ ಆತ್ಮಾನೋ ಽಪಿ ಮಯಾ ದೃಷ್ಟಾಃ, ತೇ ಪ್ರಾಪ್ತಜೀವನಾಸ್ತದ್ವರ್ಷಸಹಸ್ರಂ ಯಾವತ್ ಖ್ರೀಷ್ಟೇನ ಸಾರ್ದ್ಧಂ ರಾಜತ್ವಮಕುರ್ವ್ವನ್|
5 இறந்துபோன மற்றவர்கள், அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்வரை, உயிர்பெற்று எழுந்திருக்கவில்லை. இதுவே முதலாவது உயிர்த்தெழுதல்.
ಕಿನ್ತ್ವವಶಿಷ್ಟಾ ಮೃತಜನಾಸ್ತಸ್ಯ ವರ್ಷಸಹಸ್ರಸ್ಯ ಸಮಾಪ್ತೇಃ ಪೂರ್ವ್ವಂ ಜೀವನಂ ನ ಪ್ರಾಪನ್|
6 முதலாவது உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். இரண்டாம் மரணத்திற்கு, அவர்கள்மேல் வல்லமை இல்லை. அவர்கள் இறைவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய ஆசாரியராயிருந்து, கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்வார்கள்.
ಏಷಾ ಪ್ರಥಮೋತ್ಥಿತಿಃ| ಯಃ ಕಶ್ಚಿತ್ ಪ್ರಥಮಾಯಾ ಉತ್ಥಿತೇರಂಶೀ ಸ ಧನ್ಯಃ ಪವಿತ್ರಶ್ಚ| ತೇಷು ದ್ವಿತೀಯಮೃತ್ಯೋಃ ಕೋ ಽಪ್ಯಧಿಕಾರೋ ನಾಸ್ತಿ ತ ಈಶ್ವರಸ್ಯ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಚ ಯಾಜಕಾ ಭವಿಷ್ಯನ್ತಿ ವರ್ಷಸಹಸ್ರಂ ಯಾವತ್ ತೇನ ಸಹ ರಾಜತ್ವಂ ಕರಿಷ್ಯನ್ತಿ ಚ|
7 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது, சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.
ವರ್ಷಸಹಸ್ರೇ ಸಮಾಪ್ತೇ ಶಯತಾನಃ ಸ್ವಕಾರಾತೋ ಮೋಕ್ಷ್ಯತೇ|
8 அவன் பூமியின் நான்கு பக்கங்களிலும் இருக்கின்ற, மக்களை ஏமாற்றும்படி போய், அவர்களையும், கோகு, மாகோகு என்பவர்களையும் யுத்தத்திற்காகக் கூட்டிச் சேர்ப்பான். அவர்கள் எண்ணிக்கையில் கடற்கரை மணலைப்போல் இருப்பதை நான் கண்டேன்.
ತತಃ ಸ ಪೃಥಿವ್ಯಾಶ್ಚತುರ್ದಿಕ್ಷು ಸ್ಥಿತಾನ್ ಸರ್ವ್ವಜಾತೀಯಾನ್ ವಿಶೇಷತೋ ಜೂಜಾಖ್ಯಾನ್ ಮಾಜೂಜಾಖ್ಯಾಂಶ್ಚ ಸಾಮುದ್ರಸಿಕತಾವದ್ ಬಹುಸಂಖ್ಯಕಾನ್ ಜನಾನ್ ಭ್ರಮಯಿತ್ವಾ ಯುದ್ಧಾರ್ಥಂ ಸಂಗ್ರಹೀತುಂ ನಿರ್ಗಮಿಷ್ಯತಿ|
9 அவர்கள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் கடந்து, அணிவகுத்து வந்து, இறைவனுடைய மக்களின் முகாமையும், இறைவன் அன்பாயிருக்கின்ற நகரத்தையும் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வானத்திலிருந்து நெருப்பு வந்து, அவர்களைச் சுட்டெரித்துப்போட்டது.
ತತಸ್ತೇ ಮೇದಿನ್ಯಾಃ ಪ್ರಸ್ಥೇನಾಗತ್ಯ ಪವಿತ್ರಲೋಕಾನಾಂ ದುರ್ಗಂ ಪ್ರಿಯತಮಾಂ ನಗರೀಞ್ಚ ವೇಷ್ಟಿತವನ್ತಃ ಕಿನ್ತ್ವೀಶ್ವರೇಣ ನಿಕ್ಷಿಪ್ತೋ ಽಗ್ನಿರಾಕಾಶಾತ್ ಪತಿತ್ವಾ ತಾನ್ ಖಾದಿತವಾನ್|
10 அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
ತೇಷಾಂ ಭ್ರಮಯಿತಾ ಚ ಶಯತಾನೋ ವಹ್ನಿಗನ್ಧಕಯೋ ರ್ಹ್ರದೇ ಽರ್ಥತಃ ಪಶು ರ್ಮಿಥ್ಯಾಭವಿಷ್ಯದ್ವಾದೀ ಚ ಯತ್ರ ತಿಷ್ಠತಸ್ತತ್ರೈವ ನಿಕ್ಷಿಪ್ತಃ, ತತ್ರಾನನ್ತಕಾಲಂ ಯಾವತ್ ತೇ ದಿವಾನಿಶಂ ಯಾತನಾಂ ಭೋಕ್ಷ್ಯನ್ತೇ| (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
11 பின்பு நான், பெரிய வெண்மையான அரியணையொன்றைக் கண்டேன். அதில் அமர்ந்திருக்கிறவரையும் நான் கண்டேன். பூமியும் வானமும் அவர் முன்னிலையிலிருந்து விலகி ஓடின. அவற்றிற்கு இடம் ஒன்றும் இருக்கவில்லை.
ತತಃ ಶುಕ್ಲಮ್ ಏಕಂ ಮಹಾಸಿಂಹಾಸನಂ ಮಯಾ ದೃಷ್ಟಂ ತದುಪವಿಷ್ಟೋ ಽಪಿ ದೃಷ್ಟಸ್ತಸ್ಯ ವದನಾನ್ತಿಕಾದ್ ಭೂನಭೋಮಣ್ಡಲೇ ಪಲಾಯೇತಾಂ ಪುನಸ್ತಾಭ್ಯಾಂ ಸ್ಥಾನಂ ನ ಲಬ್ಧಂ|
12 பின்பு நான், இறந்தவர்களைக் கண்டேன். அவர்கள் பெரியோரும், சிறியோருமாய் அந்த அரியணைக்கு முன்பாக நின்றார்கள். புத்தகங்கள் திறக்கப்பட்டன. இன்னொரு புத்தகமும் திறக்கப்பட்டது. இது ஜீவப் புத்தகம். அந்த புத்தகங்களிலே எழுதப்பட்டிருந்தபடி, அவர்கள் செய்தவைகளுக்காக ஏற்ற நியாயத்தீர்ப்பு இறந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
ಅಪರಂ ಕ್ಷುದ್ರಾ ಮಹಾನ್ತಶ್ಚ ಸರ್ವ್ವೇ ಮೃತಾ ಮಯಾ ದೃಷ್ಟಾಃ, ತೇ ಸಿಂಹಾಸನಸ್ಯಾನ್ತಿಕೇ ಽತಿಷ್ಠನ್ ಗ್ರನ್ಥಾಶ್ಚ ವ್ಯಸ್ತೀರ್ಯ್ಯನ್ತ ಜೀವನಪುಸ್ತಕಾಖ್ಯಮ್ ಅಪರಮ್ ಏಕಂ ಪುಸ್ತಕಮಪಿ ವಿಸ್ತೀರ್ಣಂ| ತತ್ರ ಗ್ರನ್ಥೇಷು ಯದ್ಯತ್ ಲಿಖಿತಂ ತಸ್ಮಾತ್ ಮೃತಾನಾಮ್ ಏಕೈಕಸ್ಯ ಸ್ವಕ್ರಿಯಾನುಯಾಯೀ ವಿಚಾರಃ ಕೃತಃ|
13 கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
ತದಾನೀಂ ಸಮುದ್ರೇಣ ಸ್ವಾನ್ತರಸ್ಥಾ ಮೃತಜನಾಃ ಸಮರ್ಪಿತಾಃ, ಮೃತ್ಯುಪರಲೋಕಾಭ್ಯಾಮಪಿ ಸ್ವಾನ್ತರಸ್ಥಾ ಮೃತಜನಾಃ ಸರ್ಮಿಪತಾಃ, ತೇಷಾಞ್ಚೈಕೈಕಸ್ಯ ಸ್ವಕ್ರಿಯಾನುಯಾಯೀ ವಿಚಾರಃ ಕೃತಃ| (Hadēs g86)
14 பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ಅಪರಂ ಮೃತ್ಯುಪರಲೋಕೌ ವಹ್ನಿಹ್ರದೇ ನಿಕ್ಷಿಪ್ತೌ, ಏಷ ಏವ ದ್ವಿತೀಯೋ ಮೃತ್ಯುಃ| (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
15 ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
ಯಸ್ಯ ಕಸ್ಯಚಿತ್ ನಾಮ ಜೀವನಪುಸ್ತಕೇ ಲಿಖಿತಂ ನಾವಿದ್ಯತ ಸ ಏವ ತಸ್ಮಿನ್ ವಹ್ನಿಹ್ರದೇ ನ್ಯಕ್ಷಿಪ್ಯತ| (Limnē Pyr g3041 g4442)

< வெளிப்படுத்தின விசேஷம் 20 >