< சங்கீதம் 98 >

1 சங்கீதம். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது.
En psalm. Sjungen till HERREN ära en ny sång, ty han har gjort under. Han har vunnit seger med sin högra hand och med sin väldiga arm.
2 யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார்.
HERREN har låtit sin frälsning bliva kunnig, han har uppenbarat sin rättfärdighet för hedningarnas ögon.
3 அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்; பூமியின் எல்லைகள் எல்லாம் நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன.
Han har tänkt på sin nåd och trofasthet mot Israels hus; alla jordens ändar hava sett huru vår Gud frälsar.
4 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.
Höjen jubel till HERREN, alla länder; bristen ut i glädjerop och lovsjungen.
5 யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; யாழோடும், கீதசத்தத்தோடும்,
Lovsjungen HERREN med harpa, med harpa och med lovsångs ljud.
6 எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.
Höjen jubel med trumpeter och med basuners ljud inför HERREN, konungen.
7 கடலும் அதிலுள்ள அனைத்தும், உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக.
Havet bruse och allt vad däri är, jordens krets och de som bo därpå.
8 ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்; மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும்.
Strömmarna klappe i händerna, bergen juble med varandra,
9 அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும், நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.
inför HERREN, ty han kommer för att döma jorden. Han skall döma jordens krets med rättfärdighet och folken med rättvisa.

< சங்கீதம் 98 >