< சங்கீதம் 90 >

1 இறைவனின் மனிதனாகிய மோசேயின் மன்றாட்டு. யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.
Худаниң адими болған Мусаниң дуаси: — Я Рәббим, Сән барлиқ дәвирдә бизгә макан болуп келиватисән;
2 மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
Тағлар вуҗудқа кәлмәстин бурун, Сән йәр вә аләмни шәкилләндүрмәстин бурун, Әзәлдин әбәткичә Тәңридурсән.
3 நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர்.
Сән инсанни тупраққа айландуруп: — «Һәй, инсан балилири, қайтиңлар!» — дәйсән.
4 உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன.
Мана, Сениң нәзириңдә миң жил — Өтүп кәткән түнүгүнки бир күн, Түндики бир җесәктур, халас.
5 ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்:
Сән адәмләрни су ташқинидәк елип кетисән, Улар өтүп кәткән бир уйқидәк, Таң сәһәрдә үнүп чиққан от-чөпкә охшайду —
6 அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும்.
Әтигәндә улар көкирип үниду, Кечиси болса кесилип, солишип кетәр.
7 நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம், உமது கடுங்கோபத்தால் திகிலடைகிறோம்.
Чүнки биз ғәзивиң билән йоқаймиз, Қәһриң билән дәккә-дүккидә қалимиз.
8 நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் இரகசிய பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
Сән қәбиһликлиримизни көз алдиңға, Йошурун қилмишлиримизни җамалиңниң нури алдиға қойдуң.
9 எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது; நாங்கள் எங்களுடைய வருடங்களைப் புலம்பலோடே முடிக்கின்றோம்.
Барлиқ күнлиримиз дәрғәзивиң астида өтүп кетиду, Жиллиримизни бир уһ тартиш биләнла түгитимиз.
10 எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே; நாங்கள் பெலனுள்ளவர்களாய் இருந்தால், அது எண்பது வருடங்களாகவும் இருக்கலாம், ஆனாலும் அவை கஷ்டமும் துன்பமும் நிறைந்தவையாகவே இருக்கின்றன; எங்கள் வாழ்நாட்கள் விரைவாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
Өмримизниң жиллири йәтмиш жил, Мағдуримиз бар болса сәксән жил; Бирақ уларниң пәхри җапа вә беһудиликтур; Һаят тезлик билән үзәр, Мана, биз учуп кәттуқ.
11 உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்? உமக்குப் பயப்படத்தக்கதாய் உமது கோபத்தை யார் அறிவார்?
Саңа болған һөрмәт-әйминишниң аз-көплүгигә қарап һесаплинидиған, Аччиғиңниң шиддитини ким билсун?
12 எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும், அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.
Шуңа көңлимизни даналиққа қоюшимиз үчүн, Күнлиримизни санашни бизгә үгәткәйсән!
13 யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும்.
Йенимизға қайтқайсән, и Пәрвәрдигар, Сени қачанғичә...?! Қуллириңға рәһим қилғайсән!
14 காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்; அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி, எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.
Бизни әтигәндә өзгәрмәс муһәббитиң билән қандурғайсән; Ундақта барлиқ күнлиримиздә күйләрни яңритип шатлинимиз.
15 நீர் எங்களைத் துன்புறுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பங்களைக் கண்ட வருடங்களுக்கும் ஈடாக எங்களை மகிழச் செய்யும்.
Сән бизни җапаға чөмгән күнләргә асасән, Күлпәтни көргән жиллиримизға асасән йәнә хурсән қилғин!
16 உமது செயல்கள் உம்முடைய பணியாளர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் காண்பிக்கப்படுவதாக.
Улуқ ишлириң қуллириңға көрүнгәй, Шану-шәвкитиң уларниң оғуллириғиму ашкарә болғай!
17 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவு எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்.
Пәрвәрдигар Худайимизниң шерин мәрһәмити үстимиздә болғай, Қолимизниң ишлирини үстимизгә бәрикәтлик қилғайсән, Бәрһәқ, қолимизниң ишлирини бәрикәтлик қилғайсән!

< சங்கீதம் 90 >