< சங்கீதம் 78 >

1 மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
Lalelani, bantu bami, umthetho wami, libeke indlebe yenu emazwini omlomo wami.
2 நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன்.
Ngizavula umlomo wami ngomfanekiso, ngikhuphe izimfihlakalo zendulo,
3 நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.
esizizwileyo lesizaziyo, obaba abasitshela zona.
4 நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.
Kasiyikuzifihlela abantwana babo, kusizukulwana esilandelayo, silandisa izindumiso zeNkosi, lamandla ayo, lezimangaliso ezenzileyo.
5 அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
Ngoba wamisa ubufakazi koJakobe, wabeka umlayo koIsrayeli, awulaya obaba, ukuze bawazise abantwana babo,
6 அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
ukuze isizukulwana esilandelayo sazi, abantwana abazazalwa, basukume batshele abantwana babo,
7 அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, அவருடைய செயல்களை மறவாமல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள்.
ukuze babeke ithemba labo kuNkulunkulu, bangayikhohlwa imisebenzi kaNkulunkulu, kodwa bagcine imithetho yakhe;
8 அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது.
njalo bangabi njengaboyise, isizukulwana esilenkani lesivukelayo, isizukulwana esingaqondisanga inhliziyo yaso, lesimoya waso ungathembekanga kuNkulunkulu.
9 எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்;
Abantwana bakoEfrayimi, behlomile betshoka ngamadandili, babuyela emuva mhla wempi.
10 அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள்.
Kabasilondolozanga isivumelwano sikaNkulunkulu, bala ukuhamba emlayweni wakhe.
11 அவர்கள் அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
Bakhohlwa izenzo zakhe lezimangaliso zakhe ayebatshengisa zona.
12 அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார்.
Phambi kwaboyise wenza isimangaliso elizweni leGibhithe, egangeni leZowani.
13 அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார்.
Waqhekeza ulwandle, wabachaphisa, wenza amanzi ema njengenqumbi.
14 அவர் பகலில் மேகத்தினாலும், இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
Wabakhokhela ngeyezi emini, lebusuku bonke ngokukhanya komlilo.
15 அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார்.
Waqhekeza amadwala enkangala, wabanathisa kungathi kuvela ezinzikini ezinkulu.
16 அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார்.
Waseveza izifula edwaleni, wenza amanzi ehla njengemifula.
17 ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள்.
Kodwa baphinda futhi ukona kuye, ngokumvukela oPhezukonke enkangala.
18 அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள்.
Bamlinga uNkulunkulu enhliziyweni yabo ngokucela ukudla kwenkanuko yabo.
19 அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, “பாலைவனத்தில் விருந்தளிக்க இறைவனால் முடியுமோ?
Basebekhuluma bemelene loNkulunkulu bathi: UNkulunkulu angalungisa itafula enkangala yini?
20 ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது, நீரோடைகள் நிரம்பி வழிந்தன, ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ? தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள்.
Khangela, watshaya idwala, kwampompoza amanzi, lezifula zagabha; anganika lesinkwa yini? angalungisela abantu bakhe inyama na?
21 யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது; அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது.
Ngakho iNkosi yezwa yathukuthela; umlilo wasubaselwa uJakobe, njalo lolaka lwavukela uIsrayeli,
22 ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை.
ngoba kabakholwanga kuNkulunkulu, kabathembanga esindisweni lwakhe.
23 ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; வானங்களின் கதவுகளைத் திறந்தார்.
Lanxa walaya amayezi ngaphezulu, wavula iminyango yamazulu,
24 அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
wabanisela imana ukuthi badle, wabapha amabele amazulu.
25 இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை இறைவன் அவர்களுக்கு அனுப்பினார்.
Umuntu wadla isinkwa sabalamandla; wabathumela ukudla ukuze basuthe.
26 அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார்.
Wenza umoya wempumalanga wavunguza emazulwini; langamandla akhe waqhuba umoya weningizimu.
27 அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார்.
Wasenisela phezu kwabo inyama njengothuli, lenyoni ezilempiko njengetshebetshebe lolwandle;
28 அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார்.
wazenza zawela phakathi kwenkamba yabo, zagombolozela indawo zabo zokuhlala.
29 அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார்.
Ngakho badla basutha kakhulu, ngoba wabalethela isiloyiso sabo.
30 ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே,
Kabehlukananga lenkanuko yabo; ukudla kusesemlonyeni wabo,
31 இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார்.
ulaka lukaNkulunkulu lwaselubavukela, wabulala kwabakhulupheleyo babo, watshaya abakhethiweyo bakoIsrayeli.
32 இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்; அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை.
Kulokhu konke bajinga besona, njalo kabakholwanga ngenxa yezimangaliso zakhe.
33 ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார்.
Ngakho waziqeda izinsuku zabo ngeze, leminyaka yabo ovalweni.
34 இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள்.
Lapho ebabulala, bamdinga, baphenduka, bamdingisisa uNkulunkulu.
35 இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள்.
Bakhumbula ukuthi uNkulunkulu ulidwala labo, loNkulunkulu oPhezukonke ungumhlengi wabo.
36 ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள்.
Kodwa bamyenga ngomlomo wabo, baqamba amanga kuye ngolimi lwabo.
37 அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை.
Ngoba inhliziyo yabo yayingaqondanga kuye, njalo bengathembekanga esivumelwaneni sakhe.
38 ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; அவர் அவர்களை அழித்துவிடாமல் அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார். அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை, அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
Kodwa yena elesihawu wathethelela ububi babo, kababhubhisanga; yebo, kanengi walunqanda ulaka lwakhe, kakuvusanga konke ukuthukuthela kwakhe.
39 அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார்.
Ngoba wakhumbula ukuthi bayinyama, umoya odlulayo, ongabuyiyo.
40 அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; பாழ்நிலத்திலே அவரைத் துக்கப்படுத்தினார்கள்.
Kanengi kangakanani bemvukela ehlane, bemdabukisa enkangala.
41 அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்; அவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தினார்கள்.
Yebo baphenduka bamlinga uNkulunkulu, bamdabukisa oNgcwele kaIsrayeli.
42 அவர்கள் அவருடைய வல்லமையையும், ஒடுக்கியவனிடமிருந்து அவர் தங்களை மீட்ட நாளையும் நினைவில்கொள்ளவில்லை.
Kabasikhumbulanga isandla sakhe, usuku abahlenga ngalo esitheni.
43 அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும், சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார்.
Ukuthi wamisa njani izibonakaliso zakhe eGibhithe, lezimangaliso zakhe emmangweni weZowani,
44 அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்; அவர்களுடைய நீரோடைகளிலிருந்து அவர்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை.
lokuthi waphendula imifula yabo yaba ligazi, lezifula zabo, ukuze banganathi.
45 அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின. அவர் தவளைகளை அனுப்பினார், அவைகள் அவர்களைப் பாழாக்கின.
Wathumela phakathi kwabo umtshitshi wezibawu, ezabadlayo, lamaxoxo ababhubhisayo.
46 அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும், அவர்களுடைய விளைச்சல்களை வெட்டுக்கிளிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
Wasenika imihogoyi isivuno sabo, lomsebenzi wabo isikhonyane.
47 அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார்.
Wabulala ivini labo ngesiqhotho, lemikhiwa yabo yesikhamore ngongqwaqwane.
48 அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும், அவர்களுடைய மந்தை மிருகங்களை மின்னல் தாக்கத்திற்கும் ஒப்புக்கொடுத்தார்.
Wasenikela izifuyo zabo esiqhothweni, lemihlambi yabo kuyo imibane.
49 அவர் தமது கடுங்கோபத்தையும், சினத்தையும், எதிர்ப்பையும், இன்னலையும் அழிவின் தூதர் கூட்டமாக அவர்கள்மேல் கட்டவிழ்த்தார்.
Waphosela phezu kwabo ukuvutha kolaka lwakhe, ukuthukuthela, lokucunuka, lokuhlupheka, ngokuthuma izithunywa zobubi.
50 அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்; அவர் அவர்களை மரணத்திலிருந்து தப்பவிடாமல், கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
Walungisela ulaka lwakhe indlela, kanqandanga umphefumulo wabo ekufeni, kodwa wanikela impilo yabo kumatshayabhuqe wesifo.
51 அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் காமின் கூடாரங்களில் அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார்.
Wasetshaya wonke amazibulo eGibhithe, okokuqala kwamandla emathenteni kaHamu.
52 ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து, அவர்களை மந்தையைப்போல் பாலைவனத்தின் வழியே,
Wasebakhupha abantu bakhe njengezimvu, wabakhokhela enkangala njengomhlambi.
53 பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், அவர்கள் பயப்படாதிருந்தார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது.
Wasebakhokhela bephephile ukuze bangesabi; kodwa ulwandle lwasibekela izitha zabo.
54 இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு, தமது வலதுகரத்தினால் கைப்பற்றியிருந்த மலைநாட்டிற்கு, அவர்களைக் கொண்டுவந்தார்.
Wasebafikisa emkhawulweni wendawo yakhe engcwele, le intaba, isandla sakhe sokunene esayizuzayo.
55 அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி, அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு சொத்துரிமையாகப் பிரித்துக் கொடுத்தார்; அவர் இஸ்ரயேலின் கோத்திரங்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தினார்.
Wasebaxotsha abezizwe phambi kwabo; wababela ilifa ngomzila, wahlalisa izizwe zakoIsrayeli emathenteni azo.
56 ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து, உன்னதமானவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; அவர்கள் அவருடைய நியமங்களைக் கைக்கொள்ளவில்லை.
Kanti bamlinga, bamvukela uNkulunkulu oPhezukonke, kabazigcinanga izifakazelo zakhe.
57 அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள்.
Kodwa babuyela emuva, benza ngokungathembeki njengaboyise, baphanjulwa njengedandili elikhohlisayo.
58 அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்; அவர்கள் தங்களுடைய இறைவனல்லாதவைகளால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்.
Ngoba bamthukuthelisa ngezindawo zabo eziphakemeyo, bavusa umona wakhe ngezithombe zabo ezibaziweyo.
59 இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார்.
UNkulunkulu esizwa wathukuthela, wamenyanya kakhulu uIsrayeli.
60 மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய சீலோவின் இறைசமுகக் கூடாரத்தைவிட்டு அகன்றார்.
Ngakho walitshiya ithabhanekele leShilo, ithente alimisa phakathi kwabantu.
61 அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
Wasenikela amandla akhe ekuthunjweni, lenkazimulo yakhe esandleni sesitha.
62 அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார்.
Wasenikela abantu bakhe enkembeni, waselithukuthelela ilifa lakhe.
63 அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது; அவர்களுடைய இளம்பெண்களுக்குத் திருமணப் பாடல்கள் இல்லாமல் போனது.
Umlilo waqeda amajaha abo, lezintombi zabo kazihlatshelelwanga.
64 அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை.
Abapristi babo bawa ngenkemba, labafelokazi babo kabalilanga.
65 அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார்.
Khona iNkosi yavuka njengobelele, njengeqhawe eliklabalala ngenxa yewayini.
66 அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார்.
Yazitshaya izitha zayo emuva, yazithela ihlazo phakade.
67 அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை.
Yasilahla ithente likaJosefa, kayikhethanga isizwe sakoEfrayimi.
68 ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
Kodwa yakhetha isizwe sakoJuda, intaba yeZiyoni eyithandayo.
69 அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும், நித்தியமாய் தாம் நிலைப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
Yayakha indlu yayo engcwele njengezingqonga, njengomhlaba ewusekeleyo kuze kube nininini.
70 அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து, அவனை செம்மறியாட்டுத் தொழுவங்களிலிருந்து கொண்டுவந்தார்.
Yasikhetha uDavida inceku yayo, yamthatha ezibayeni zezimvu;
71 ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும், தமது உரிமைச்சொத்தான இஸ்ரயேலுக்கும் மேய்ப்பனாக இருக்கும்படியாக அவனைக் கொண்டுவந்தார்.
ekulandeleni izimvukazi ezenyisayo, yamletha ukwelusa uJakobe abantu bayo, loIsrayeli ilifa layo.
72 தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்; கைத்திறமையால் அவர்களை வழிநடத்தினான்.
Njalo wabelusa njengobuqotho benhliziyo yakhe, wabakhokhela ngobugabazi bezandla zakhe.

< சங்கீதம் 78 >