< சங்கீதம் 75 >
1 “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
Nǝƣmiqilǝrning bexiƣa «Ⱨalak ⱪilmiƣaysǝn» degǝn aⱨangda oⱪulsun dǝp tapxurulƣan, Asafning küy-nahxisi: — Sanga tǝxǝkkür eytimiz, i Huda, tǝxǝkkür eytimiz! Qünki naming bizgǝ yeⱪindur; Buni, ⱪilƣan karamǝtliring ispatlap jakarlaydu.
2 இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன்.
[Mǝnki Pǝrwǝrdigar]: — «Mǝn bekitkǝn waⱪitni ihtiyarimƣa alƣinimda, Adalǝt bilǝn soraⱪ ⱪilimǝn;
3 பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
Yǝr ⱨǝm yǝrning üstidǝ turuwatⱪanlar tǝwrinip tursimu, Uning tüwrüklirini turƣuzƣuqi Ɵzümdurmǝn» — dedi. (Selaⱨ)
4 அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
Mahtanƣanlarƣa: — «Mahtanmanglar», Ⱨǝm rǝzillǝrgǝ «Münggüzüngni kɵtürmǝ» — dedim;
5 உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார்.”
«Münggüzüngni yuⱪiri kɵtürmǝ; Boynungni ⱪattiⱪ ⱪilip ƣadiyip sɵzlimǝ!»
6 கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
Qünki kɵtürülüx xǝrⱪtin yaki ƣǝrbtin ǝmǝs, Yaki jǝnubtinmu kǝlmǝydu;
7 ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
Qünki Huda sotqidur; U birsini kɵtüridu, birsini qüxüridu.
8 யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
Qünki Pǝrwǝrdigarning ⱪolida bir ⱪǝdǝⱨ turidu; Uningdiki xarab kɵpüklixiwatidu; U ǝbjǝx xarab bilǝn toldi; Huda uningdin tɵkidu; Dǝrwǝⱪǝ yǝr yüzidiki barliⱪ rǝzillǝr uning duƣini ⱪoymay iqiwetidu;
9 நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
Mǝn bolsam, mǝnggügǝ guwaⱨliⱪ berimǝn: — Yaⱪupning Hudasiƣa küylǝrni eytimǝn.
10 “கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.
«Mǝn rǝzillǝrning münggüzlirining ⱨǝmmisini kesip taxlaymǝn; Biraⱪ ⱨǝⱪⱪaniylarning münggüzliri kɵtürülidu!».