< சங்கீதம் 69 >
1 “லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது.
Dawid dwom. Ao, Onyankopɔn, gye me nkwa na nsu no abɛdeda me kɔn mu.
2 கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்; ஆழமான வெள்ளத்தில் நான் அகப்பட்டு விட்டேன்; வெள்ளம் என்னை மூடுகிறது.
Meremem wɔ dontori a mu dɔ mu, wɔ baabi a mʼanan nnya sibea. Madu bun mu na nsu abu afa me so.
3 சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்; என் தொண்டையும் வறண்டுபோயிற்று; என் இறைவனைத் தேடி என் கண்கள் மங்கிப்போயின.
Mafrɛ abrɛ rehwehwɛ mmoa. Me mene mu ayow. Mʼani so ayɛ kusuu, na merehwehwɛ me Nyankopɔn.
4 காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள் என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்; அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்; அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள். நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறேன்.
Wɔn a wɔtan me kwa no dɔɔso sen me ti so nwi; wɔn a wɔtan me kwa no dɔɔso, wɔn a wɔhwehwɛ sɛ wɔbɛsɛe me no. Wɔhyɛ me sɛ mennan nea minnwiae no mma.
5 இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்; என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை.
Wo, Onyankopɔn, nim me nkwaseasɛm; mʼafɔdi nhintaw wo.
6 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக; இஸ்ரயேலின் இறைவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக.
Awurade, Awurade Tweduampɔn, mma wɔn a wɔn ani da wo so no, anim ngu ase esiane me nti, Awurade, Asafo Awurade; Israel Nyankopɔn, mma wɔn a wɔhwehwɛ wo no anim ngu ase esiane me nti.
7 உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்; வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது
Wo nti migyina animka ano, na aniwu kata mʼanim.
8 நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும் என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன்.
Mete sɛ ɔhɔho wɔ me nuanom mu, mete sɛ ɔmamfrani wɔ me na mmabarima mu,
9 ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது; உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது.
na wo fi ho mmɔdemmɔ hyɛ me so, wɔn a wɔbɔ wo ahohora no animtiaabu bɛda me so.
10 நான் அழுது உபவாசித்தபோது, அவர்கள் என்னை நிந்தித்தார்கள்.
Sɛ mitwa adwo na midi mmuada a wɔbɔ me ahohora;
11 நான் துக்கவுடை உடுத்தும் போது, அவர்களுக்குப் பழமொழியானேன்.
sɛ mifura atweaatam a nnipa de me yɛ aserewde.
12 நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்; நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன்.
Wɔn a wɔtete ɔpon no ano no serew me, na akɔwensafo de me din to dwom.
13 ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே, நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும்.
Nanso mɛbɔ wo mpae, Awurade, wɔ wʼadom bere mu; wɔ wʼadɔe kɛse no nti, Ao, Onyankopɔn, fa wo nokware nkwagye no gye me so.
14 சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும், என்னை மூழ்கிப்போக விடாதேயும்; என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும் ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும்.
Yi me fi dontori no mu, mma memmem wɔ mu; gye me fi wɔn a wɔtan me no nsam, ne nsu bun mu.
15 வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்; ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்; சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும்.
Mma nsu nnyiri mmfa me anaa bun mmene me anaa amoa nkata me so.
16 யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது; உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும்.
Awurade, gye me so fi wʼadɔe a eye no mu; wʼadom nti, dan bɛhwɛ me.
17 உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும், விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன்.
Mfa wʼanim nhintaw wo somfo; gye me so ntɛm, na mewɔ ɔhaw mu.
18 என்னருகே வந்து என்னைத் தப்புவியும்; என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
Twiw bɛn me na gye me; gye me nkwa, mʼatamfo nti.
19 என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்; என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
Wunim sɛnea wɔkasa tia me, gu mʼanim ase na wotiatia mʼanim; wʼani tua mʼatamfo nyinaa.
20 நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால் நான் களைத்துப் போனேன். நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை; ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை.
Kasatia ahyɛ me koma so ama mayɛ sɛ obi a onni ɔboafo; mepɛɛ awerɛkyekye, nanso mannya bi, mepɛɛ ɔwerɛkyekyefo, nanso manhu bi.
21 அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள்.
Wɔde bɔnwoma guu mʼaduan mu, osukɔm dee me no, wɔmaa me nsa nwenweenwen.
22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும் அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக.
Ma wɔn didipon a esi wɔn anim nyi wɔn sɛ afiri; ma ɛnyɛ akatua ne afide mma wɔn.
23 அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்.
Ma wɔn ani so nyɛ wɔn kusuu na wɔanhu ade, na ma wɔn akyi nkuntun afebɔɔ.
24 உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக.
Hwie wʼabufuwhyew gu wɔn so; na ma wʼabufuw huhuhuhu no mmra wɔn so.
25 அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக; அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக.
Ma wɔn fi nyɛ amamfo; mma obiara ntena wɔn ntamadan mu.
26 ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி, நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள்.
Wɔtaa wɔn a wupira wɔn no, wɔka wɔn a wupira wɔn no yawdi ho asɛm.
27 அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்; அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும்.
Fa amumɔyɛ mu amumɔyɛ ho sobo bɔ wɔn; mma wonnya wo nkwagye mu kyɛfa.
28 வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக; நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக.
Pepa wɔn din fi nkwa nhoma no mu, mfa wɔn din nka atreneefo de ho.
29 நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்; இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக.
Mewɔ ɔyaw ne ahohiahia mu; Onyankopɔn, ma wo nkwagye no mmɔ me ho ban.
30 நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.
Mede dwonto beyi Onyankopɔn din ayɛ na mede aseda ahyɛ no anuonyam.
31 காணிக்கையாகக் கொடுக்கும் கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும்.
Eyi bɛsɔ Awurade ani yiye asen nantwi, asen nantwinini a otua mmɛn na ɔwɔ tɔte.
32 இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்; இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக!
Mmɔborɔni behu na nʼani agye, mo a mohwehwɛ Onyankopɔn no koma benya nkwa.
33 யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்; சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.
Awurade tie wɔn a ade ahia wɔn, na ommu ne nkurɔfo nneduafo animtiaa.
34 வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்; கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.
Ma ɔsoro ne asase nkamfo no, po ne nea ɛkeka ne ho wɔ mu nyinaa,
35 இறைவன் சீயோனை மீட்டு, யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்; அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
efisɛ Onyankopɔn begye Sion nkwa na wakyekye Yuda nkuropɔn no bio. Afei nnipa bɛtena mu na ayɛ wɔn de;
36 அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்; அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.
Nʼasomfo asefo na wɔbɛfa hɔ, na wɔn a wɔdɔ ne din no bɛtena hɔ. Wɔde ma dwonkyerɛfo.