< சங்கீதம் 57 >

1 தாவீது சவுலிடமிருந்து தப்பிக் குகைக்குள் ஒளிந்துகொண்டிருந்தபோது, “அழிக்காதே” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது. பேரழிவு கடந்து செல்லுமளவும், நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன்.
Ngihawukela, Nkulunkulu, ngihawukela, ngoba umphefumulo wami uthembela kuwe; yebo, emthunzini wempiko zakho ngizaphephela, zize zedlule incithakalo.
2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும், மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன்.
Ngizakhala kuNkulunkulu oPhezukonke, kuNkulunkulu ongiphelelisela khona.
3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார், என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்; இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார்.
Uzathumela esemazulwini, angisindise, ayangise ofuna ukungiginya. (Sela) UNkulunkulu uzathumela umusa wakhe leqiniso lakhe.
4 நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்; என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்; அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது; அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள்.
Umphefumulo uphakathi kwezilwane, ngilala phakathi kwabavuthayo, amadodana abantu, omazinyo abo ayimikhonto lemitshoko, lolimi lwabo luyinkemba ebukhali.
5 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
Phakama ngaphezu kwamazulu, Nkulunkulu; ubukhosi bakho bube phezu komhlaba wonke.
6 என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள்.
Balungisele izinyathelo zami imbule; umphefumulo wami ukhotheme; bagebhe igodi phambi kwami; bawele phakathi kwalo. (Sela)
7 என் இருதயம் உறுதியாயிருக்கிறது, இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் இசையமைத்துப் பாடுவேன்.
Inhliziyo yami iqinisiwe, Nkulunkulu, inhliziyo yami iqinisiwe. Ngizahlabelela ngihube indumiso.
8 என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! நான் அதிகாலையில் விழித்தெழுவேன்.
Vuka, dumo lwami! Vuka, gubhu lwezintambo lechacho! Ngizavusa ukusa.
9 ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
Ngizakudumisa phakathi kwabantu, Nkosi, ngihlabelele kuwe phakathi kwezizwe.
10 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
Ngoba umusa wakho mkhulu kuze kube semazulwini, leqiniso lakho kuze kube semayezini.
11 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
Phakama ngaphezu kwamazulu, Nkulunkulu; ubukhosi bakho bube phezu komhlaba wonke.

< சங்கீதம் 57 >