< சங்கீதம் 37 >
1 தாவீதின் சங்கீதம். தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
Dawid dwom. Nhaw wo ho, nnebɔneyɛfo nti; mma wʼani mmmere wɔn a wɔyɛ bɔne;
2 ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள்.
Wɔte sɛ sare, ɛrenkyɛ na ahyew, wɔte sɛ dua amono, ɛrenkyɛ na awu.
3 யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு.
Fa wo ho to Awurade so na yɛ papa. Tena asase no so na ma wʼani nka asomdwoe adidibea hɔ.
4 யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார்.
Ma wʼani nnye wɔ Awurade mu na wama wo nea wo koma pɛ.
5 யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார்.
Fa wʼakwan hyɛ Awurade nsam; na fa wo ho to no so, na ɔno na ɔbɛyɛ:
6 அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார்.
ɔbɛma wo treneeyɛ ahyerɛn sɛ adekyee, na wʼatɛntrenee ayɛ sɛ owigyinae.
7 யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு; மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும் அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே.
Yɛ komm wɔ Awurade anim na tɔ wo bo ase twɛn no, nhaw wo ho wɔ wɔn a asi wɔn yiye ho efisɛ wɔnam bɔne akwan so.
8 கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும்.
Mma wo bo mmfuw na gyae abufuwhyew; nhaw wo ho, ekowie bɔne nko ara.
9 ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
Wobetwa nnebɔneyɛfo agu, nanso wɔn a wɔn ani da Awurade so no wobenya asase no adi so.
10 இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள்.
Ɛrenkyɛ, nnebɔneyɛfo bɛyera. Wɔbɛhwehwɛ wɔn, nanso wɔrenhu wɔn.
11 ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள்.
Nanso ahobrɛasefo benya asase no adi so na wɔanya asomdwoe mmoroso.
12 கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள்.
Amumɔyɛfo bɔ pɔw bɔne tia atreneefo na wɔtwɛre wɔn se gu wɔn so;
13 ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார்.
nanso Awurade serew amumɔyɛfo, na onim sɛ wɔn nna abɛn.
14 ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும் கொடியவர்கள் வாளை உருவி வில்லை வளைக்கிறார்கள்.
Amumɔyɛfo twe afoa na wokuntun wɔn ta mu sɛ wobekum ahiafo ne mmɔborɔfo, sɛ wobekum wɔn a wɔn akwan teɛ.
15 ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும்.
Nanso wɔn afoa bɛwowɔ wɔn ankasa koma mu, na wɔn ta mu abubu.
16 கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது.
Kakra a atreneefo wɔ no som bo sen amumɔyɛfo bebree ahonya;
17 ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
efisɛ amumɔyɛfo ahoɔden bɛsa nanso Awurade bɛwowaw atreneefo.
18 குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
Awurade nim wɔn a wɔn ho nni asɛm no nna, na wɔn agyapade bɛtena hɔ daa.
19 அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள்.
Ahohiahia bere mu wɔremmrɛ. Ɔkɔm bere mu wobenya ama abu so.
20 ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும், அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள்.
Nanso amumɔyɛfo bɛyera. Awurade atamfo bɛyɛ sɛ nwura mu nhwiren; wobetu ayera sɛ wusiw.
21 கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள்.
Amumɔyɛfo pɛ bosea, na wontua, nanso ɔtreneeni de ahummɔbɔ ma;
22 யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
Wɔn a Awurade ahyira wɔn no benya asase no adi so, na wobetwa wɔn a ɔdome wɔn no agu.
23 ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார்.
Sɛ Awurade ani sɔ onipa akwan a, ɔma nʼanammɔntu si pi.
24 அவன் இடறினாலும் விழமாட்டான்; ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார்.
Sɛ ohintiw a ɔrenhwe ase, efisɛ Awurade kura no wɔ ne nsam.
25 நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை.
Na meyɛ aberante, na mprempren mabɔ akwakoraa, na minhuu ɔtreneeni a Awurade apa nʼakyi anaasɛ ne mma resrɛ aduan.
26 நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Bere biara ɔyɛ adɔe, na ɔde fɛm kwa; na ne mma benya nhyira.
27 தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்.
Twe wo ho fi bɔne ho na yɛ papa na wobɛtena asase no so afebɔɔ.
28 ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம்.
Efisɛ, Awurade pɛ nea ɛteɛ, na ɔrennyaw ne nkurɔfo anokwafo no. Wobenya bammɔ daa nyinaa. Nanso amumɔyɛfo asefo de, wobetwa wɔn agu.
29 நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, அதில் என்றும் குடியிருப்பார்கள்.
Atreneefo benya asase no adi so na wɔatena so afebɔɔ.
30 நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
Ɔtreneeni ano ka nyansasɛm, na ne tɛkrɛma ka nea ɛteɛ.
31 இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை.
Ne Nyankopɔn mmara wɔ ne koma mu; wɔn anan nwatiri.
32 நீதிமான்களைக் கொல்லும்படி, கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள்.
Amumɔyɛfo tetɛw atreneefo hwehwɛ sɛ wobekum wɔn,
33 ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை.
nanso Awurade nnyaa wɔn mma wɔn, na ɔremma wommu wɔn kumfɔ wɔ asennii.
34 யெகோவாவை எதிர்பார்த்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள். நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய்.
Montwɛn Awurade na monhwɛ nʼakwan. Ɔbɛma mo so na moanya asase no adi so; sɛ wotwitwa amumɔyɛfo no gu a, mubehu.
35 கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான்.
Mahu omumɔyɛfo a ɔyɛ basabasa sɛ ɔredi yiye sɛ dua amono a esi asase pa so,
36 ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை.
nanso ankyɛ na nʼawiei bae a wonhu no bio; mehwehwɛɛ no, nanso manhu no.
37 குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
Susuw nea ɔyɛ pɛ ho, na hwɛ nea ɔteɛ; na asomdwoe nipa benya asetena pa daakye.
38 ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.
Nanso wɔbɛsɛe nnebɔneyɛfo nyinaa; na wɔbɛtɔre wɔn asefo ase.
39 நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார்.
Atreneefo nkwagye fi Awurade ɔne wɔn aban wɔ amanehunu bere mu.
40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.
Awurade boa wɔn na ogye wɔn; oyi wɔn fi amumɔyɛfo nsam, na ogye wɔn nkwa, efisɛ wohintaw wɔ ne mu.