< சங்கீதம் 146 >
1 யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
Monkamfo Awurade. Me kra, kamfo Awurade!
2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
Mɛkamfo Awurade me nkwanna nyinaa; mɛto ayeyi dwom ama me Nyankopɔn, sɛ mete ase yi.
3 உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
Mommfa mo ho nto mmapɔmma so, adesamma a wɔrentumi nnye nkwa.
4 அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
Sɛ wɔn honhom tu kɔ a, wɔsan kɔ dɔte mu, saa da no ara wɔn nsusuwii nyinaa yɛ ɔkwa.
5 யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Nhyira ne nea ne boafo ne Yakob Nyankopɔn, nea nʼanidaso wɔ Awurade, ne Nyankopɔn mu.
6 அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
Ɔno ne ɔsoro ne asase Yɛfo, po ne biribiara a ɛwɔ mu nyinaa Awurade a ɔyɛ nokwafo daa no.
7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
Odi ma wɔn a wɔhyɛ wɔn so, na ɔma wɔn a ɔkɔm de wɔn aduan. Awurade gyaa nneduafo,
8 யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
Awurade ma anifuraefo hu ade. Awurade ma wɔn a wɔakom no so, Awurade dɔ atreneefo.
9 யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
Awurade hwɛ ahɔho so, na ɔwowaw ayisaa ne akunafo, na amumɔyɛfo akwan de, ɔdan ani.
10 யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.
Awurade di hene daa daa, Ao, Sion, wo Nyankopɔn, wɔ awo ntoatoaso nyinaa so. Monkamfo Awurade.