< சங்கீதம் 146 >

1 யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
Kaksakin LEUM GOD! Kaksakin LEUM GOD, O ngunik!
2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
Nga fah kaksakin LEUM GOD in moul luk nufon; Nga fah on ac kaksakin God luk ke lusenna moul luk.
3 உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
Nik kom filiya lulalfongi lom fin mwet kol lun faclu. Wangin mwet ku in molikomla.
4 அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
Ke elos misa, elos folokla nu ke kutkut; In len sacnna akoo lalos nukewa wanginla.
5 யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Insewowo mwet se su eis God lal Jacob tuh Elan kasrel, Ac su filiya lulalfongi lal in LEUM GOD lal,
6 அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
Su orala kusrao, ac faclu, ac meoa, Ac ma nukewa loac. El karingin wulela lal pacl e nukewa.
7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
El oru nununku suwohs nu sin mwet su akkeokyeyuk, Ac El sang mwe mongo nu selos su masrinsral. LEUM GOD El tulala mwet kapir,
8 யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
Ac El sang liyaten nu sin mwet kun. El tulokunulosyak su ikori. El lungse mwet suwoswos lal.
9 யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
El karingin mwetsac su muta in facl sesr; El kasru mwet mukaimtal ac katinmas, Ac El usla mwet koluk nu ke kunausten.
10 யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.
LEUM GOD El tokosra ma pahtpat. God lom, O Zion, fah leum ke fwil nu ke fwil. Kaksakin LEUM GOD!

< சங்கீதம் 146 >