< சங்கீதம் 136 >

1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்,
הודו ליהוה כי-טוב כי לעולם חסדו
2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்,
הודו לאלהי האלהים כי לעולם חסדו
3 கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்,
הודו לאדני האדנים כי לעולם חסדו
4 அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்;
לעשה נפלאות גדלות לבדו כי לעולם חסדו
5 அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்;
לעשה השמים בתבונה כי לעולם חסדו
6 அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்;
לרקע הארץ על-המים כי לעולם חסדו
7 அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்;
לעשה אורים גדלים כי לעולם חסדו
8 அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்;
את-השמש לממשלת ביום כי לעולם חסדו
9 இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்;
את-הירח וכוכבים לממשלות בלילה כי לעולם חסדו
10 அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்;
למכה מצרים בבכוריהם כי לעולם חסדו
11 அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்;
ויוצא ישראל מתוכם כי לעולם חסדו
12 அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்;
ביד חזקה ובזרוע נטויה כי לעולם חסדו
13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்;
לגזר ים-סוף לגזרים כי לעולם חסדו
14 அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்;
והעביר ישראל בתוכו כי לעולם חסדו
15 ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்;
ונער פרעה וחילו בים-סוף כי לעולם חסדו
16 தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்;
למוליך עמו במדבר כי לעולם חסדו
17 அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்;
למכה מלכים גדלים כי לעולם חסדו
18 அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்;
ויהרג מלכים אדירים כי לעולם חסדו
19 அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்;
לסיחון מלך האמרי כי לעולם חסדו
20 அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்;
ולעוג מלך הבשן כי לעולם חסדו
21 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
ונתן ארצם לנחלה כי לעולם חסדו
22 தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
נחלה לישראל עבדו כי לעולם חסדו
23 அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்;
שבשפלנו זכר לנו כי לעולם חסדו
24 நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்;
ויפרקנו מצרינו כי לעולם חסדו
25 அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்;
נתן לחם לכל-בשר כי לעולם חסדו
26 பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;
הודו לאל השמים כי לעולם חסדו

< சங்கீதம் 136 >