< சங்கீதம் 124 >

1 சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
Ɔsoroforo dwom. Dawid de. Sɛ anka Awurade nni yɛn afa a, ma Israel nka,
2 மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
Sɛ anka Awurade nni yɛn afa bere a nnipa tow hyɛɛ yɛn so,
3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
bere a wɔn abufuw sɔre tiaa yɛn a anka wɔmemenee yɛn anikann;
4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
anka nsuyiri no bebu afa yɛn so, anka ɔhweam no bɛtwe yɛn akɔ,
5 பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
anka nsu a ano yɛ den no bɛpra yɛn kɔ.
6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
Ayeyi nka Awurade a wamma ho kwan amma wɔamfa wɔn se antetew yɛn mu.
7 வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
Yɛaguan sɛ anomaa afi ofirisumfo afiri mu; wɔabubu afiri no, ama yɛaguan.
8 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.
Yɛn mmoa wɔ Awurade din mu, ɔsoro ne asase Yɛfo no.

< சங்கீதம் 124 >