< சங்கீதம் 120 >

1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
Кэтре Домнул стриг ын стрымтораря мя, ши Ел м-аскултэ.
2 யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
Доамне, скапэ-мь суфлетул де буза минчиноасэ, де лимба ыншелэтоаре!
3 வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
Че-ць дэ Ел цие, че-ць адуче Ел цие, лимбэ ыншелэтоаре?
4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
Сэӂець аскуците де рэзбойник, ку кэрбунь априншь де енупэр.
5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
Вай де мине кэ локуеск ла Мешек, кэ локуеск ын кортуриле Кедарулуй!
6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
Дестул мь-а локуит суфлетул лынгэ чей че урэск пачя.
7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.
Еу сунт пентру паче, дар де ындатэ че ворбеск еу, ей сунт пентру рэзбой.

< சங்கீதம் 120 >