< சங்கீதம் 113 >

1 அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.
Haleluja! Gloru, sklavoj de la Eternulo, Gloru la nomon de la Eternulo.
2 யெகோவாவின் பெயர் இப்பொழுதும், எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.
La nomo de la Eternulo estu benata De nun kaj eterne.
3 சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
De la leviĝejo de la suno ĝis ĝia malleviĝejo Estas glorata la nomo de la Eternulo.
4 யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.
Alte super ĉiuj popoloj estas la Eternulo; Super la ĉielo estas Lia gloro.
5 நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?
Kiu estas kiel la Eternulo, nia Dio, Kiu sidas alte,
6 வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
Kiu kliniĝas por rigardi La ĉielon kaj la teron,
7 அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
Kiu el la polvo restarigas mizerulon, El la koto levas malriĉulon,
8 அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
Por sidigi lin kun eminentuloj, Kun la eminentuloj de lia popolo?
9 அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
Li donas familion al senfruktulino, Kaj faras ŝin ĝoja patrino de infanoj. Haleluja!

< சங்கீதம் 113 >