< சங்கீதம் 113 >

1 அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.
阿肋路亞!上主的僕人,請一齊讚頌,請一齊讚頌上主聖名!
2 யெகோவாவின் பெயர் இப்பொழுதும், எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.
願上主的名受讚頌,從現在直到永遠無窮!
3 சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
從太陽東升到西落,願上主的聖名受讚頌!
4 யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.
上主高越列國萬邦;上主的光榮凌駕穹蒼;
5 நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?
誰能相似上主我們的天主?祂坐在蒼天之上的最高處。
6 வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
上主必會垂目下視,觀看上天和下地;
7 அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
上主從塵埃裏提拔弱小的人;上主由糞土中舉揚窮苦的人,
8 அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
叫他與貴族的人共席,也與本國的王侯同位;
9 அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
使那不孕的婦女坐鎮家中,成為多子的母親快樂無窮。

< சங்கீதம் 113 >