< சங்கீதம் 11 >
1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.
Tôi nương náu mình nơi Ðức Giê-hô-va; Sao các ngươi nói cùng linh hồn ta: Hãy trốn lên núi ngươi như con chim?
2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் இருளிலிருந்து எய்வதற்காக தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.
Vì kìa, kẻ ác gương cung, Tra tên mình trên dây, Ðặng bắn trong tối tăm kẻ có lòng ngay thẳng.
3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
Nếu các nền bị phá đổ, Người công bình sẽ làm sao?
4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.
Ðức Giê-hô-va ngự trong đền thánh Ngài; Ngôi Ngài ở trên trời; Con mắt Ngài nhìn xem, Mí mắt Ngài dò con loài người.
5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, அவர் மனதார வெறுக்கிறார்.
Ðức Giê-hô-va thử người công bình; Nhưng lòng Ngài ghét người ác và kẻ ưa sự hung bạo.
6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
Ngài sẽ giáng xối trên kẻ ác những bẫy, lửa và diêm; Một ngọn gió phỏng sẽ là phần của chúng nó.
7 யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.
Vì Ðức Giê-hô-va là công bình; Ngài yêu sự công bình: Những người ngay thẳng sẽ nhìn xem mặt Ngài.