< சங்கீதம் 109 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.
Думнезеул лаудей меле, ну тэчя!
2 கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்; பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
Кэч потривничий ау дескис ымпотрива мя о гурэ ря ши ыншелэтоаре, ымь ворбеск ку о лимбэ минчиноасэ,
3 அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள்.
мэ ынконжоарэ ку кувынтэрь плине де урэ ши се рэзбоеск ку мине фэрэ темей.
4 அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள், நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன்.
Пе кынд еу ый юбеск, ей ымь сунт потривничь, дар еу алерг ла ругэчуне.
5 அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்; என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.
Ей ымь ынторк рэу пентру бине ши урэ пентру драгостя мя.
6 என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்; அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக.
Пе врэжмашул меу пуне-л суб стэпыниря унуй ом рэу ши ун пырыш сэ стя ла дряпта луй!
7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.
Кынд ва фи жудекат, сэ фие гэсит виноват ши ругэчуня луй сэ трякэ дрепт ун пэкат!
8 அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.
Пуцине сэ-й фие зилеле ла нумэр ши служба сэ й-о я алтул!
9 அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும், அவன் மனைவி விதவையாகட்டும்.
Сэ-й рэмынэ копиий орфань ши невастэ-са вэдувэ!
10 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.
Копиий луй сэ умбле фэрэ ничун кэпэтый ши сэ чершяскэ, сэ-шь кауте пыня департе де локуинца лор дэрыматэ!
11 கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.
Чел че л-а ымпрумутат сэ-й пунэ мына пе тот че аре ши стрэиний сэ-й жефуяскэ родул мунчий луй!
12 ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக.
Нимень сэ ну май цинэ ла ел ши нимень сэ н-айбэ милэ де орфаний луй!
13 அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக; அவன் பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக.
Урмаший луй сэ фие нимичиць ши сэ ли се стингэ нумеле ын нямул урмэтор!
14 அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக; அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக.
Нелеӂюиря пэринцилор сэй сэ рэмынэ ка адучере аминте ынаинтя Домнулуй ши сэ ну се штяргэ пэкатул мамей луй!
15 ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்; அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.
Домнул сэ-й айбэ тотдяуна ынаинтя окилор, ка сэ ле штяргэ помениря де пе пэмынт,
16 ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; மாறாக ஏழைகளையும், எளியவர்களையும், உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.
пентру кэ ну шь-а адус аминте сэ факэ ындураре, пентру кэ а пригонит пе чел ненорочит ши пе чел липсит, пынэ аколо ынкыт сэ омоаре пе омул ку инима здробитэ!
17 சாபம் இடுவதையே அவன் விரும்பினான்; அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக; ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை, ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக.
Ый плэчя блестемул: сэ кадэ асупра луй! Ну-й плэчя бинекувынтаря: сэ се депэртезе де ел!
18 அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்; அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது.
Се ымбракэ ку блестемул кум се ымбракэ ку хайна луй, ый пэтрунде ка апа ынэунтрул луй, ка унтделемнул ын оасе!
19 சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.
Де ачея, сэ-й служяскэ де вешмынт ка сэ се акопере, де чингэтоаре ку каре сэ фие тотдяуна ынчинс!
20 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும், என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும் இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.
Ачаста сэ фие, дин партя Домнулуй, плата врэжмашилор мей ши а челор че ворбеск ку рэутате де мине!
21 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்; உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும்.
Яр Ту, Доамне Думнезеуле, лукрязэ пентру мине дин причина Нумелуй Тэу, кэч маре есте бунэтатя Та; избэвеште-мэ!
22 ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன், என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது.
Сунт ненорочит ши липсит ши ымь е рэнитэ инима ынэунтрул меу.
23 நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்; ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன்.
Пер ка умбра гата сэ трякэ, сунт изгонит ка о лэкустэ.
24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; என் உடல் மெலிந்து போயிருக்கிறது.
Мь-ау слэбит ӂенункий де пост ши ми с-а слеит трупул де слэбичуне.
25 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்; அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.
Ам ажунс де окара лор; кынд мэ привеск ей, дау дин кап.
26 யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.
Ажутэ-мь, Доамне, Думнезеул меу! Скапэ-мэ прин бунэтатя Та!
27 யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.
Ши сэ штие кэ мына Та, кэ Ту, Доамне, ай фэкут лукрул ачеста!
28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்; ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.
Мэкар кэ ей блестемэ, Ту бинекувынтязэ; мэкар кэ се ридикэ ей ымпотрива мя, вор фи ынфрунтаць, яр робул Тэу се ва букура.
29 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்; ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.
Потривничий мей сэ се ымбраче ку окара, сэ се акопере ку рушиня лор кум се акоперэ ку о манта!
30 நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.
Вой лэуда фоарте мулт ку гура мя пе Домнул, Ыл вой мэри ын мижлокул мулцимий,
31 ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.
кэч Ел стэ ла дряпта сэракулуй ка сэ-л избэвяскэ де чей че-л осындеск.

< சங்கீதம் 109 >