< சங்கீதம் 105 >
1 யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
Дякуйте Господу, кличте Ім'я́ Його́, серед наро́дів звіщайте про чи́ни Його!
2 அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
Співайте Йому, грайте Йому, говоріть про всі чу́да Його́!
3 அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
Хваліться святим Його Йме́нням, хай ті́шиться серце шука́ючих Господа!
4 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.
Пошу́куйте Господа й силу Його, лице Його за́вжди шукайте!
5 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.
Пам'ятайте про чу́да Його, які Він учинив, про озна́ки Його та про при́суди уст Його,
6 அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே, அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, நீங்கள் இவற்றை நினைவிற்கொள்ளுங்கள்.
ви, насіння Авраама, раба Його, сини Яковові, вибра́нці Його́!
7 அவரே நமது இறைவனாகிய யெகோவா; அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.
Він — Госпо́дь, Бог наш, по ці́лій землі Його при́суди!
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார், ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும்,
Він пам'ятає наві́ки Свого заповіта, те слово, яке наказав був на тисячу родів,
9 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார்.
що склав Він його з Авраа́мом, і прися́гу Свою — для Ісака.
10 அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது:
Він поставив її за Зако́на для Якова, Ізраїлеві — заповітом навіки,
11 “உங்களுடைய உரிமைச்சொத்தாக, கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.”
говорячи: „Я дам тобі Край ханаа́нський, частину спа́дщини для вас“!
12 அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும், வேற்று நாட்டினராகவும் இருந்தபோது,
Тоді їх було́ невелике число, нечисле́нні були та прихо́дьки на ній,
13 அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள்.
і ходили вони від наро́ду до наро́ду, від царства до іншого лю́ду.
14 அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது:
Не дозво́лив ніко́му Він кри́вдити їх, і за них Він царям докоря́в:
15 “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.”
„Не дото́ркуйтеся до Моїх помаза́нців, а пророкам Моїм не робі́те лихого!“
16 எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்;
І покликав Він голод на землю, всяке хлі́бне стебло́ полама́в.
17 அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை, அவர்களுக்குமுன் எகிப்திற்கு அனுப்பிவைத்தார்.
Перед їхнім обличчям Він мужа послав, — за раба Йо́сип про́даний був.
18 எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது.
Кайда́нами му́чили но́ги його, залізо пройшло в його тіло,
19 அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும், யெகோவாவினுடைய வார்த்தை அவனை உண்மையானவன் என்று நிரூபிக்கும் வரைக்கும் அவ்வாறு நடந்தது.
аж до ча́су випо́внення сло́ва Його, — слово Господнє його було ви́явило.
20 எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான்.
Цар послав — і його розв'яза́в, воло́дар народів — і його був звільни́в.
21 அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி, தன் உடைமைகளுக்கு எல்லாம் அதிபதியாக்கினான்.
Він настанови́в його паном над домом своїм, і воло́дарем над усім маєтком своїм,
22 தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும், ஆலோசகர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவும் அரசன் யோசேப்பை நியமித்தான்.
щоб в'язни́в він його можновла́дців по волі своїй, а старших його умудря́в.
23 அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான்.
І Ізраїль прибув до Єги́пту, і Яків заме́шкав у Ха́мовім кра́ї.
24 யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்; அவர்களுடைய பகைவரைப் பார்க்கிலும், அதிக வலிமை உள்ளவர்களாக்கினார்.
А наро́д Свій Він сильно розмно́жив, і зробив був рясні́шим його від його ворогів.
25 அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும், எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார்.
Він переміни́в їхнє серце, щоб народа Його ненави́діли, щоб брались на хи́трощі проти рабів Його.
26 அவர் தமது அடியானாகிய மோசேயையும், தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.
Він послав був Мойсея, Свого раба, Аарона, що вибрав його,
27 இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள்.
— вони положили були серед них Його ре́чі знаме́нні, та чу́да у Ха́мовім кра́ї.
28 யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக எகிப்தியர் கலகம் செய்தார்கள் அல்லவோ? அதினால் அவர் இருளை அனுப்பி நாட்டை இருளாக்கினார்.
Він темно́ту наслав — і поте́мніло, і вони не проти́вились слову Його.
29 அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது.
Він перемінив їхню воду на кров, і вмори́в їхню рибу.
30 அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன.
Їхній край зарої́вся був жа́бами, навіть в поко́ях царів їхніх.
31 இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன.
Він сказав — й прибули́ рої мух, воші в ці́лому о́бширі їхньому.
32 அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார்.
Він градом зробив їхній дощ, палю́чий огонь — на їхню землю.
33 அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார்.
І Він повибивав виноград їхній та фіґове дерево їхнє, і дереви́ну на о́бширі їхньому повило́млював.
34 அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், பச்சைப்புழுக்களும் வந்தன.
Він сказав — і найшла сарана́ та гу́сінь без ліку, —
35 அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும் அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது.
усю ярину́ в їхнім кра́ї поже́рла, і плід землі їхньої з'їла.
36 பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும், அவர்களுடைய ஆண்மையின் முதற்பேறான மகன்களையும் மரிக்கச் செய்தார்.
I Він повбивав усіх пе́рвістків в їхньому краї, поча́ток усякої їхньої сили.
37 அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார், அவர்களுடைய கோத்திரங்களில் ஒருவரும் தளர்ந்து போகவில்லை.
І Він ви́провадив їх у срі́блі та в золоті, і серед їхніх племе́н не було́, хто б спіткну́вся.
38 இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால், இஸ்ரயேலர் புறப்பட்டபோது எகிப்தியர் அகமகிழ்ந்தார்கள்.
Єгипет радів, коли вийшли вони, бо страх перед ними напа́в був на них.
39 யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்; இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார்.
Він хмару простяг на заслону, а огонь — на осві́тлення ночі.
40 அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்; பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார்.
Зажадав був Ізраїль — і Він перепели́ці наслав, і хлібом небесним Він їх годува́в.
41 அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது; அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது.
Відчинив був Він скелю — й лину́ла вода, потекли́ були ріки в пустинях,
42 ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த, தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைவிற்கொண்டார்.
бо Він пам'ятав за святе Своє слово, за Авраама, Свого раба.
43 அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்; தாம் தெரிந்துகொண்டவர்களை மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு வெளியே கொண்டுவந்தார்.
І Він з радістю вивів наро́д Свій, зо співом — вибра́нців Своїх,
44 அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.
І їм землю наро́дів роздав, і посі́ли вони працю лю́дів,
45 அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு, அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படியாகவே, யெகோவா இப்படிச் செய்தார். அல்லேலூயா.
щоб вико́нували Його за́повіді, та зако́ни Його берегли́! Алілу́я!