< சங்கீதம் 102 >
1 பலவீனமடைந்து யெகோவாவுக்கு முன்பாக புலம்பலை ஊற்றும் ஒரு சிறுமைப்பட்டவனின் மன்றாட்டு. யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; உதவிக்காக என் கதறுதல் உம்மிடம் வந்துசேர்வதாக.
Молитва вбогого, коли він слабне та перед Господнім лицем виливає мову свою. Господи, ви́слухай молитву мою, і блага́ння моє нехай ді́йде до Тебе!
2 நான் துன்பத்தில் இருக்கும்போது உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; நான் கூப்பிடும்போது உமது செவியை என் பக்கமாய்த் திருப்பி, விரைவாய் எனக்குப் பதிலளியும்.
Не ховай від мене обличчя Свого́, в день недолі моєї — схили Своє ухо до ме́не, в день блага́ння озвися неба́вом до мене!
3 என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன; என் எலும்புகள் தகதகக்கும் தணல்கள்போல் எரிகின்றன.
Бо минають, як дим, мої дні, а кості мої — немов ви́сохли в о́гнищі.
4 என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று; நான் என் உணவைச் சாப்பிடவும் மறக்கிறேன்.
Як трава та — поби́те та ви́сохло серце моє, так що я забував їсти хліб свій.
5 என் உரத்த பெருமூச்சினால் நான் எலும்பும் தோலுமானேன்;
Від зо́йку стогна́ння мого прили́пли до тіла мого мої кості.
6 நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்; பாழிடங்களில் உள்ள ஓர் ஆந்தையைப்போல் இருக்கிறேன்.
Уподо́бився я пелика́нові пустині, я став, як той пу́гач руїн!
7 நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்; நான் வீட்டுக்கூரைமேல் தனித்திருக்கும் ஒரு பறவைபோல் ஆனேன்.
Я безсонний, і став, немов пташка само́тня на да́сі.
8 என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்; எனக்கு விரோதமாக வசை கூறுகிறவர்கள் என் பெயரைச் சாபமாகப் பயன்படுத்துகிறார்கள்.
Увесь день ображають мене вороги́ мої, ті, хто з мене кепку́є, заприсяглись проти мене!
9 நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு, என் பானத்தைக் கண்ணீரோடு கலக்கிறேன்.
І по́піл я їм, немов хліб, а напо́ї свої із плаче́м перемі́шую, —
10 உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன். நீர் என்னை தூக்கி, ஒரு பக்கமாய் வைத்துவிட்டீர்.
через гнів Твій та лютість Твою, бо підняв був мене Ти та й кинув мене́.
11 என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது; நான் புல்லைப்போல் வாடிப் போகின்றேன்.
Мої дні — як похи́лена тінь, а я сохну, немов та трава!
12 ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்; உமது கீர்த்தி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும்.
А Ти, Господи, бу́деш повік пробува́ти, а пам'ять Твоя — з роду в рід.
13 நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்; இதுவே நீர் அதற்கு தயை காட்டும் காலம், நியமிக்கப்பட்ட காலமும் வந்துவிட்டது.
Ти встанеш та змилуєшся над Сіо́ном, бо час учини́ти йому милосердя, бо прийшов речене́ць,
14 சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன; அதின் தூசியின்மேலும் அவர்கள் அனுதாபம் கொள்கிறார்கள்.
бо раби Твої покоха́ли й камі́ння його́, і порох його полюбили!
15 நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்; பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது மகிமைக்கு மரியாதை செலுத்துவார்கள்.
І будуть боятись наро́ди Господнього Йме́ння, а всі зе́мні царі — слави Твоєї.
16 யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி, தம் மகிமையில் காட்சியளிப்பார்.
Бо Господь побудує Сіона, поя́виться в славі Своїй.
17 ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்; அவர்களுடைய வேண்டுதல்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.
До молитви забутих зве́рнеться Він, і моли́тви їхньої не осоро́мить.
18 இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி, இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக:
Запишеться це поколі́нню майбу́тньому, і наро́д, який ство́рений буде, хвали́тиме Господа,
19 “யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்; அவர் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கி,
бо споглянув Він із високо́сти святої Своєї, Господь зо́рив на землю з небе́с,
20 அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும், மரணத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களை விடுதலையாக்கவுமே பார்க்கிறார்.”
щоб почути зідха́ння ув'я́зненого, щоб на смерть прироко́ваних ви́зволити,
21 ஆகையால் மக்களும் அரசுகளும் யெகோவாவை வழிபடுவதற்கு கூடிவரும்போது,
щоб розповіда́ти про Йме́ння Господнє в Сіоні, а в Єрусалимі — про славу Його,
22 சீயோனில் யெகோவாவினுடைய பெயரும் எருசலேமில் அவருடைய துதியும் அறிவிக்கப்படும்.
коли ра́зом зберу́ться наро́ди й держа́ви служи́ти Господе́ві.
23 யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்; என் நாட்களையும் குறுகச்செய்தார்.
Мою силу в дорозі Він ви́снажив, дні мої скороти́в.
24 அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது, “இறைவனே, என் வாழ்நாட்களின் இடையிலேயே என்னை எடுத்துக் கொள்ளாதிரும்; உமது வருடங்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கின்றனவே.
Я кажу́: „Боже мій, — не бери Ти мене в половині днів моїх! Твої ро́ки — на вічні віки.
25 நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; வானங்களும் உமது கரங்களின் வேலையாய் இருக்கின்றன.
Колись землю Ти був закла́в, а небо — то чин Твоїх рук, —
26 அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்; உடையைப்போல் நீர் அவைகளை மாற்றுவீர்; அவைகளெல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.
позникають вони, а Ти бу́деш стояти. І всі вони, як оде́жа, загинуть, Ти їх зміниш, немов те вбрання́, — і мину́ться вони.
27 நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர், உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.
Ти ж — Той Самий, а роки Твої не закі́нчаться!
28 உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்; அவர்களுடைய சந்ததியும் உமக்கு முன்பாக நிலைகொண்டிருக்கும்.”
Сини Твоїх рабів будуть жити, а їхнє насіння стоя́тиме міцно перед обличчям Твоїм!“