< நீதிமொழிகள் 6 >

1 என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால், நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால்,
Me ba, sɛ woadi akagyinamu ama ɔyɔnko bi, sɛ wode wo biribi asi awowa ama obi,
2 நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய்.
sɛ nea wokae ayi ka ama wo na sɛ wʼano asɛm afiri ayi wo a,
3 என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால், நீ உன்னை விடுவித்துக்கொள்ள நீ போய் உன்னைத் தாழ்த்தி, உன் அயலான் களைப்படையும் வரை வேண்டிக்கொள்.
ɛno de yɛ eyi, me ba, na fa tetew wo ho, sɛ ɔyɔnko nsa aka wo no nti: fa ahobrɛase kɔ nʼanim; na kɔ so pa wo yɔnko no kyɛw!
4 அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே.
Mma wʼani nkum na ntɔ nko.
5 வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு.
Gye wo ho, sɛnea ɔforote guan fi ɔbɔmmɔfo nsam anaa sɛnea anomaa guan fi ofirisumfo afiri mu no.
6 சோம்பேறியே, நீ எறும்பிடம் போய், அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு!
Ɔkwadwofo, kɔ ɔtɛtea nkyɛn; hwɛ nʼakwan, na hu nyansa!
7 அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, அதிகாரியோ இல்லை.
Onni ɔsahene, onni ɔhwɛfo anaa sodifo bi,
8 அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது.
nanso ɔde aduan sie wɔ ahuhurubere mu, ɔboaboa nnuan ano wɔ twabere.
9 சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்?
Wo, ɔkwadwofo, wobɛda akosi da bɛn? Wubenyan bere bɛn?
10 கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால்,
Nna kakra, nkotɔ kakra, nsa a woabobɔw de rehome kakra,
11 வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.
ɛbɛma ohia aba wo so sɛ ɔkwanmukafo na ahokyere atow akyere wo sɛnea okura otuo.
12 வீணனும் கயவனுமானவன், வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான்.
Onipa teta ne ohuhuni a odi atoro kyin,
13 அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து, தனது விரல்களால் சைகை காட்டுகிறான்.
nea obu nʼani, na ɔde ne nan yɛ nsɛnkyerɛnne na ɔde ne nsateaa kyerɛkyerɛ ade,
14 அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்; அவன் எப்பொழுதும் பிரிவினையைத் தூண்டிவிடுகிறான்.
nea ɔde ne koma mu nnaadaa bɔ pɔw bɔne, na ɔde mpaapaemu ba bere biara.
15 அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்; மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான்.
Ɛno nti amanehunu bɛba no so prɛko pɛ; wɔbɛsɛe no mpofirim, a wɔrenya ano aduru.
16 யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு, இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது:
Nneɛma asia na Awurade mpɛ, nneɛma ason na ɛyɛ nʼakyiwade:
17 கர்வமுள்ள கண்கள், பொய்பேசும் நாவு, குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள்,
ani a ɛtra ntɔn, atoro tɛkrɛma, nsa a ɛka mogya a edi bem gu,
18 கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம், தீமைசெய்ய விரையும் கால்கள்,
koma a edwen amumɔyɛ ho, anan a etutu mmirika kɔyɛ bɔne,
19 பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர்.
ɔdansekurumni a odi atoro ne onipa a ɔde mpaapaemu ba anuanom mu.
20 என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், உன் தாயின் போதனையை விட்டுவிடாதே.
Me ba, tie wʼagya ahyɛde na nnyaa wo na nkyerɛkyerɛ mu.
21 அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்; அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.
Fa kyekyere wo koma ho daa; na fa kyekyere wɔ kɔn mu.
22 நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்; நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும்.
Wonantew a, ɛbɛkyerɛ wo kwan; sɛ woda a, ɛbɛwɛn wo; sɛ wunyan a, ɛbɛkasa akyerɛ wo.
23 ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு, இந்த போதனை ஒரு வெளிச்சம், நற்கட்டுப்பாடும் கண்டித்தலும் வாழ்வுக்கு வழி.
Na saa ahyɛde yi yɛ kanea saa nkyerɛkyerɛ yi yɛ hann, na ahohyɛso nteɛso yi yɛ nkwa kwan,
24 இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும், விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும்.
ɛtwe wo fi ɔbea a onni suban pa no ho, fi ɔbeawarefo huhuni tɛkrɛmadɛ ho.
25 நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே.
Mma wo kɔn nnɔ nʼahoɔfɛ, mma nʼani akyideda no ntwetwe wo,
26 ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள்.
efisɛ oguamanfo ma wʼanuonyam yɛ sɛ brodosin, na obi yere gyigye wo kɔ owu mu.
27 ஒருவன் தன் உடைகள் எரியாமல் தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ?
Obi betumi asɔ gya agu ne srɛ so a nhyew nʼatade ana?
28 அல்லது தனது பாதங்கள் எரியாதபடி, ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ?
Obi betumi anantew nnyansramma so a mpumpunnya mmobɔ nʼanan ho ana?
29 அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்; அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான்.
Saa na ɔbarima a ɔne ɔbarima foforo yere da no te; obiara a ɔde ne nsa bɛka no no, remfa ne ho nni da.
30 ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது, தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை.
Nnipa mmu ɔkorɔmfo a wakowia ade animtiaa sɛ ɔkɔm de no na ɔde rekodwudwo ano nti.
31 ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்; அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும்.
Mmom, sɛ wɔkyere no a, ɛsɛ sɛ otua mmɔho ason; sɛ ɛbɛma wahwere ne fi agyapade nyinaa mpo a.
32 ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
Ɔbarima a ɔsɛe aware no nni adwene; obiara a ɔyɛ saa no sɛe ne ho.
33 அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.
Ɔhwe ne animguase na obenya, na nʼahohora rempepa da.
34 ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்; பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான்.
Ninkutwe hwanyan okunu abufuw na sɛ ɔtɔ were a, ahummɔbɔ biara nni mu.
35 அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.
Ɔrennye mpata biara; na ɔbɛpo adanmude, sɛ ɛso sɛ dɛn mpo a.

< நீதிமொழிகள் 6 >