< பிலிப்பியர் 1 >
1 கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான பவுலும், தீமோத்தேயுவும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும், அவர்களோடுகூட திருச்சபைத் தலைவர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் எழுதுகிறதாவது:
ಪೌಲತೀಮಥಿನಾಮಾನೌ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ದಾಸೌ ಫಿಲಿಪಿನಗರಸ್ಥಾನ್ ಖ್ರೀಷ್ಟಯೀಶೋಃ ಸರ್ವ್ವಾನ್ ಪವಿತ್ರಲೋಕಾನ್ ಸಮಿತೇರಧ್ಯಕ್ಷಾನ್ ಪರಿಚಾರಕಾಂಶ್ಚ ಪ್ರತಿ ಪತ್ರಂ ಲಿಖತಃ|
2 நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ಅಸ್ಮಾಕಂ ತಾತ ಈಶ್ವರಃ ಪ್ರಭು ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಶ್ಚ ಯುಷ್ಮಭ್ಯಂ ಪ್ರಸಾದಸ್ಯ ಶಾನ್ತೇಶ್ಚ ಭೋಗಂ ದೇಯಾಸ್ತಾಂ|
3 நான் உங்களை நினைக்கும் போதெல்லாம், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ಅಹಂ ನಿರನ್ತರಂ ನಿಜಸರ್ವ್ವಪ್ರಾರ್ಥನಾಸು ಯುಷ್ಮಾಕಂ ಸರ್ವ್ವೇಷಾಂ ಕೃತೇ ಸಾನನ್ದಂ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕುರ್ವ್ವನ್
4 உங்கள் எல்லோருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.
ಯತಿ ವಾರಾನ್ ಯುಷ್ಮಾಕಂ ಸ್ಮರಾಮಿ ತತಿ ವಾರಾನ್ ಆ ಪ್ರಥಮಾದ್ ಅದ್ಯ ಯಾವದ್
5 ஏனெனில் நான் அங்கே வந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை, நற்செய்திப் பணியில் நீங்கள் என்னோடு பங்காளர்களாய் இருக்கிறீர்கள்.
ಯುಷ್ಮಾಕಂ ಸುಸಂವಾದಭಾಗಿತ್ವಕಾರಣಾದ್ ಈಶ್ವರಂ ಧನ್ಯಂ ವದಾಮಿ|
6 இப்படிப்பட்ட நல்ல செயலை உங்களில் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை நடத்தி முடிப்பார் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன்.
ಯುಷ್ಮನ್ಮಧ್ಯೇ ಯೇನೋತ್ತಮಂ ಕರ್ಮ್ಮ ಕರ್ತ್ತುಮ್ ಆರಮ್ಭಿ ತೇನೈವ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ದಿನಂ ಯಾವತ್ ತತ್ ಸಾಧಯಿಷ್ಯತ ಇತ್ಯಸ್ಮಿನ್ ದೃಢವಿಶ್ವಾಸೋ ಮಮಾಸ್ತೇ|
7 உங்கள் எல்லோரையும்பற்றி, இவ்வாறு நான் நினைப்பது சரியானதே. ஏனெனில் எப்பொழுதும் என் இருதயத்தில் நீங்கள் இடங்கொண்டிருக்கிறீர்கள்; நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்தியின் சார்பாகப் பேசி, அதை உறுதிசெய்கிற போதும், நீங்களும் எல்லோரும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிற கிருபையில், என்னுடன் பங்குடையவர்களாய் இருக்கிறீர்கள்.
ಯುಷ್ಮಾನ್ ಸರ್ವ್ವಾನ್ ಅಧಿ ಮಮ ತಾದೃಶೋ ಭಾವೋ ಯಥಾರ್ಥೋ ಯತೋಽಹಂ ಕಾರಾವಸ್ಥಾಯಾಂ ಪ್ರತ್ಯುತ್ತರಕರಣೇ ಸುಸಂವಾದಸ್ಯ ಪ್ರಾಮಾಣ್ಯಕರಣೇ ಚ ಯುಷ್ಮಾನ್ ಸರ್ವ್ವಾನ್ ಮಯಾ ಸಾರ್ದ್ಧಮ್ ಏಕಾನುಗ್ರಹಸ್ಯ ಭಾಗಿನೋ ಮತ್ವಾ ಸ್ವಹೃದಯೇ ಧಾರಯಾಮಿ|
8 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த உருக்கமான அன்போடு, உங்களெல்லோரையும் நான் காண விரும்புகிறேன் என்பதற்கு, இறைவனே சாட்சியாயிருக்கிறார்.
ಅಪರಮ್ ಅಹಂ ಖ್ರೀಷ್ಟಯೀಶೋಃ ಸ್ನೇಹವತ್ ಸ್ನೇಹೇನ ಯುಷ್ಮಾನ್ ಕೀದೃಶಂ ಕಾಙ್ಕ್ಷಾಮಿ ತದಧೀಶ್ವರೋ ಮಮ ಸಾಕ್ಷೀ ವಿದ್ಯತೇ|
9 என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும்.
ಮಯಾ ಯತ್ ಪ್ರಾರ್ಥ್ಯತೇ ತದ್ ಇದಂ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರೇಮ ನಿತ್ಯಂ ವೃದ್ಧಿಂ ಗತ್ವಾ
10 அப்பொழுது மிகச் சிறந்தது எது என்று நிதானித்தறிய உங்களால் முடியும். கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரைக்கும் தூய்மையுள்ளவர்களாகவும், குற்றம் காணப்படாதவர்களாகவும்,
ಜ್ಞಾನಸ್ಯ ವಿಶಿಷ್ಟಾನಾಂ ಪರೀಕ್ಷಿಕಾಯಾಶ್ಚ ಸರ್ವ್ವವಿಧಬುದ್ಧೇ ರ್ಬಾಹುಲ್ಯಂ ಫಲತು,
11 இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனிகளில், நிறைவுள்ளவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். அது இறைவனுக்கு மகிமையையும், துதியையும் ஏற்படுத்தும்.
ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ದಿನಂ ಯಾವದ್ ಯುಷ್ಮಾಕಂ ಸಾರಲ್ಯಂ ನಿರ್ವಿಘ್ನತ್ವಞ್ಚ ಭವತು, ಈಶ್ವರಸ್ಯ ಗೌರವಾಯ ಪ್ರಶಂಸಾಯೈ ಚ ಯೀಶುನಾ ಖ್ರೀಷ್ಟೇನ ಪುಣ್ಯಫಲಾನಾಂ ಪೂರ್ಣತಾ ಯುಷ್ಮಭ್ಯಂ ದೀಯತಾಮ್ ಇತಿ|
12 பிரியமானவர்களே, எனக்கு நடந்தவைகள் உண்மையிலே நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவியாக இருந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ಹೇ ಭ್ರಾತರಃ, ಮಾಂ ಪ್ರತಿ ಯದ್ ಯದ್ ಘಟಿತಂ ತೇನ ಸುಸಂವಾದಪ್ರಚಾರಸ್ಯ ಬಾಧಾ ನಹಿ ಕಿನ್ತು ವೃದ್ಧಿರೇವ ಜಾತಾ ತದ್ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪಯಿತುಂ ಕಾಮಯೇಽಹಂ|
13 ஏனெனில் நான் கிறிஸ்துவுக்காகவே சிறையில் விலங்கிடப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் எல்லோருக்கும், மற்றவர்களுக்கும்கூட நன்கு தெளிவாகியிருக்கிறது.
ಅಪರಮ್ ಅಹಂ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಕೃತೇ ಬದ್ಧೋಽಸ್ಮೀತಿ ರಾಜಪುರ್ಯ್ಯಾಮ್ ಅನ್ಯಸ್ಥಾನೇಷು ಚ ಸರ್ವ್ವೇಷಾಂ ನಿಕಟೇ ಸುಸ್ಪಷ್ಟಮ್ ಅಭವತ್,
14 நான் விலங்கிடப்பட்டிருப்பதால், கர்த்தரில் இருக்கிற சகோதரர்களில் அநேகர், பயமின்றியும் தைரியத்துடனும் நற்செய்தியைப் பேசுவதற்கு உற்சாகம் கொண்டிருக்கிறார்கள்.
ಪ್ರಭುಸಮ್ಬನ್ಧೀಯಾ ಅನೇಕೇ ಭ್ರಾತರಶ್ಚ ಮಮ ಬನ್ಧನಾದ್ ಆಶ್ವಾಸಂ ಪ್ರಾಪ್ಯ ವರ್ದ್ಧಮಾನೇನೋತ್ಸಾಹೇನ ನಿಃಕ್ಷೋಭಂ ಕಥಾಂ ಪ್ರಚಾರಯನ್ತಿ|
15 சிலர் பொறாமையினாலும், போட்டி மனப்பான்மையினாலும், கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் மற்றவர்களோ நல்ல எண்ணத்துடனேயே அதைச் செய்கிறார்கள்.
ಕೇಚಿದ್ ದ್ವೇಷಾದ್ ವಿರೋಧಾಚ್ಚಾಪರೇ ಕೇಚಿಚ್ಚ ಸದ್ಭಾವಾತ್ ಖ್ರೀಷ್ಟಂ ಘೋಷಯನ್ತಿ;
16 இவர்கள் அன்புடனே இதைச் செய்கிறார்கள். நான் இங்கே சிறையில் போடப்பட்டிருப்பது, நற்செய்தியின் சார்பாகப் பேசியதற்காகவே என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
ಯೇ ವಿರೋಧಾತ್ ಖ್ರೀಷ್ಟಂ ಘೋಷಯನ್ತಿ ತೇ ಪವಿತ್ರಭಾವಾತ್ ತನ್ನ ಕುರ್ವ್ವನ್ತೋ ಮಮ ಬನ್ಧನಾನಿ ಬಹುತರಕ್ಲೋಶದಾಯೀನಿ ಕರ್ತ್ತುಮ್ ಇಚ್ಛನ್ತಿ|
17 மற்றவர்களோ உண்மை மனதுடன் அல்லாமல், தன்னல நோக்கத்துடனேயே கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள். நான் விலங்கிடப்பட்டிருக்கையில், எனக்கு இன்னும் கஷ்டத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்துடனே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
ಯೇ ಚ ಪ್ರೇಮ್ನಾ ಘೋಷಯನ್ತಿ ತೇ ಸುಸಂವಾದಸ್ಯ ಪ್ರಾಮಾಣ್ಯಕರಣೇಽಹಂ ನಿಯುಕ್ತೋಽಸ್ಮೀತಿ ಜ್ಞಾತ್ವಾ ತತ್ ಕುರ್ವ್ವನ್ತಿ|
18 ஆனால் நோக்கம் எதுவாயிருந்தால் என்ன? தவறான நோக்கத்துடனோ, உண்மையான நோக்கத்துடனோ, எல்லா வழிகளிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார் என்பதே முக்கியம். இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆம், நான் இனிமேலும் மகிழ்ச்சியடைவேன்.
ಕಿಂ ಬಹುನಾ? ಕಾಪಟ್ಯಾತ್ ಸರಲಭಾವಾದ್ ವಾ ಭವೇತ್, ಯೇನ ಕೇನಚಿತ್ ಪ್ರಕಾರೇಣ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಘೋಷಣಾ ಭವತೀತ್ಯಸ್ಮಿನ್ ಅಹಮ್ ಆನನ್ದಾಮ್ಯಾನನ್ದಿಷ್ಯಾಮಿ ಚ|
19 ஏனெனில் உங்கள் மன்றாட்டினாலும், இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியினாலும், எனக்கு நடந்தவைகள் என் விடுதலைக்கே ஏதுவாகும் என்று அறிவேன்.
ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರಾರ್ಥನಯಾ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾತ್ಮನಶ್ಚೋಪಕಾರೇಣ ತತ್ ಮನ್ನಿಸ್ತಾರಜನಕಂ ಭವಿಷ್ಯತೀತಿ ಜಾನಾಮಿ|
20 நான் எவ்வகையிலும் வெட்கப்படக்கூடாது என்பதும், வாழ்வதாலோ இறப்பதாலோ, இப்பொழுதுபோலவே எப்பொழுதும் கிறிஸ்து என் உடலில் மேன்மைப்படுவதற்கு போதிய அளவு தைரியம் இருக்கவேண்டும் என்பதும், எனது ஆவலும் எதிர்பார்ப்புமாகும்.
ತತ್ರ ಚ ಮಮಾಕಾಙ್ಕ್ಷಾ ಪ್ರತ್ಯಾಶಾ ಚ ಸಿದ್ಧಿಂ ಗಮಿಷ್ಯತಿ ಫಲತೋಽಹಂ ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ನ ಲಜ್ಜಿಷ್ಯೇ ಕಿನ್ತು ಗತೇ ಸರ್ವ್ವಸ್ಮಿನ್ ಕಾಲೇ ಯದ್ವತ್ ತದ್ವದ್ ಇದಾನೀಮಪಿ ಸಮ್ಪೂರ್ಣೋತ್ಸಾಹದ್ವಾರಾ ಮಮ ಶರೀರೇಣ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಮಹಿಮಾ ಜೀವನೇ ಮರಣೇ ವಾ ಪ್ರಕಾಶಿಷ್ಯತೇ|
21 ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே.
ಯತೋ ಮಮ ಜೀವನಂ ಖ್ರೀಷ್ಟಾಯ ಮರಣಞ್ಚ ಲಾಭಾಯ|
22 இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது.
ಕಿನ್ತು ಯದಿ ಶರೀರೇ ಮಯಾ ಜೀವಿತವ್ಯಂ ತರ್ಹಿ ತತ್ ಕರ್ಮ್ಮಫಲಂ ಫಲಿಷ್ಯತಿ ತಸ್ಮಾತ್ ಕಿಂ ವರಿತವ್ಯಂ ತನ್ಮಯಾ ನ ಜ್ಞಾಯತೇ|
23 இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது;
ದ್ವಾಭ್ಯಾಮ್ ಅಹಂ ಸಮ್ಪೀಡ್ಯೇ, ದೇಹವಾಸತ್ಯಜನಾಯ ಖ್ರೀಷ್ಟೇನ ಸಹವಾಸಾಯ ಚ ಮಮಾಭಿಲಾಷೋ ಭವತಿ ಯತಸ್ತತ್ ಸರ್ವ್ವೋತ್ತಮಂ|
24 ஆனால் நான் இந்த உடலில் இருப்பது, அதையும்விட உங்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது.
ಕಿನ್ತು ದೇಹೇ ಮಮಾವಸ್ಥಿತ್ಯಾ ಯುಷ್ಮಾಕಮ್ ಅಧಿಕಪ್ರಯೋಜನಂ|
25 இதை நான் நம்புகிறபடியால், உங்களுடன் நான் இருப்பேன் என்றும், நீங்கள் உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்பேன் என்றும் நான் அறிவேன்.
ಅಹಮ್ ಅವಸ್ಥಾಸ್ಯೇ ಯುಷ್ಮಾಭಿಃ ಸರ್ವ್ವೈಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಅವಸ್ಥಿತಿಂ ಕರಿಷ್ಯೇ ಚ ತಯಾ ಚ ವಿಶ್ವಾಸೇ ಯುಷ್ಮಾಕಂ ವೃದ್ಧ್ಯಾನನ್ದೌ ಜನಿಷ್ಯೇತೇ ತದಹಂ ನಿಶ್ಚಿತಂ ಜಾನಾಮಿ|
26 எனவே நான் மீண்டும் உங்களிடம் வருவதானால், என் நிமித்தம் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி உங்களில் நிரம்பிவழியும்.
ತೇನ ಚ ಮತ್ತೋಽರ್ಥತೋ ಯುಷ್ಮತ್ಸಮೀಪೇ ಮಮ ಪುನರುಪಸ್ಥಿತತ್ವಾತ್ ಯೂಯಂ ಖ್ರೀಷ್ಟೇನ ಯೀಶುನಾ ಬಹುತರಮ್ ಆಹ್ಲಾದಂ ಲಪ್ಸ್ಯಧ್ವೇ|
27 என்னதான் நடந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவிதத்தில் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது நான் வந்து உங்களைப் பார்க்கக்கூடியதாய் இருந்தாலும், வரமுடியாதிருந்து உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி ஒரே மனதுடன் ஒன்றாக நிலைத்து நிற்கிறீர்கள் என்றும்,
ಯೂಯಂ ಸಾವಧಾನಾ ಭೂತ್ವಾ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಸುಸಂವಾದಸ್ಯೋಪಯುಕ್ತಮ್ ಆಚಾರಂ ಕುರುಧ್ವಂ ಯತೋಽಹಂ ಯುಷ್ಮಾನ್ ಉಪಾಗತ್ಯ ಸಾಕ್ಷಾತ್ ಕುರ್ವ್ವನ್ ಕಿಂ ವಾ ದೂರೇ ತಿಷ್ಠನ್ ಯುಷ್ಮಾಕಂ ಯಾಂ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರೋತುಮ್ ಇಚ್ಛಾಮಿ ಸೇಯಂ ಯೂಯಮ್ ಏಕಾತ್ಮಾನಸ್ತಿಷ್ಠಥ, ಏಕಮನಸಾ ಸುಸಂವಾದಸಮ್ಬನ್ಧೀಯವಿಶ್ವಾಸಸ್ಯ ಪಕ್ಷೇ ಯತಧ್ವೇ, ವಿಪಕ್ಷೈಶ್ಚ ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ನ ವ್ಯಾಕುಲೀಕ್ರಿಯಧ್ವ ಇತಿ|
28 உங்களை எதிர்க்கிறவர்களுக்கு எவ்வழியிலும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறியவேண்டும். நீங்கள் பயப்படாமல் இருக்கிறது அவர்கள் அழிந்துபோவதற்கும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும்.
ತತ್ ತೇಷಾಂ ವಿನಾಶಸ್ಯ ಲಕ್ಷಣಂ ಯುಷ್ಮಾಕಞ್ಚೇಶ್ವರದತ್ತಂ ಪರಿತ್ರಾಣಸ್ಯ ಲಕ್ಷಣಂ ಭವಿಷ್ಯತಿ|
29 ஏனெனில் கிறிஸ்துவுக்காக அவரில் விசுவாசமாய் இருப்பதற்காக மட்டுமல்ல, அவருக்காகத் துன்பப்படுவதற்காகவும் உங்களுக்கு ஒரு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது.
ಯತೋ ಯೇನ ಯುಷ್ಮಾಭಿಃ ಖ್ರೀಷ್ಟೇ ಕೇವಲವಿಶ್ವಾಸಃ ಕ್ರಿಯತೇ ತನ್ನಹಿ ಕಿನ್ತು ತಸ್ಯ ಕೃತೇ ಕ್ಲೇಶೋಽಪಿ ಸಹ್ಯತೇ ತಾದೃಶೋ ವರಃ ಖ್ರೀಷ್ಟಸ್ಯಾನುರೋಧಾದ್ ಯುಷ್ಮಾಭಿಃ ಪ್ರಾಪಿ,
30 நீங்கள் எனக்கு ஏற்பட்ட, போராட்டத்தைக் கண்டீர்கள். அதே போராட்டம் உங்களுக்கும் ஏற்படுகிறது. அது எனக்கு இன்னும் உண்டு என்பதையும் இப்பொழுது கேள்விப்படுகிறீர்கள்.
ತಸ್ಮಾತ್ ಮಮ ಯಾದೃಶಂ ಯುದ್ಧಂ ಯುಷ್ಮಾಭಿರದರ್ಶಿ ಸಾಮ್ಪ್ರತಂ ಶ್ರೂಯತೇ ಚ ತಾದೃಶಂ ಯುದ್ಧಂ ಯುಷ್ಮಾಕಮ್ ಅಪಿ ಭವತಿ|