< எண்ணாகமம் 8 >
Chúa Hằng Hữu phán bảo Môi-se dặn A-rôn:
2 “நீ ஆரோனிடம் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நீ அந்த ஏழு விளக்குகளையும் வைக்கும்போது, அவை விளக்குத்தண்டிற்கு முன்னுள்ள பகுதிக்கு வெளிச்சம் கொடுக்கவேண்டும்’ என்று சொல்” என்றார்.
“Hãy sắp xếp bảy ngọn đèn trên chân đèn thế nào cho ánh sáng chiếu thẳng ra phía trước.”
3 ஆரோனும் அப்படியே செய்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் விளக்குத்தாங்கியின் விளக்குகளின் முன்பக்கம் பார்க்கும்படி அவற்றை வைத்தான்.
A-rôn vâng lời, xếp cho đèn chiếu thẳng ra. Như lời Chúa Hằng Hữu phán bảo.
4 அந்த குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்த விதமாவது: அதன் அடிப்பாகத்திலிருந்து நுனியிலுள்ள பூக்கள்வரை அது அடிக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. யெகோவா மோசேக்குக் காட்டிய குத்துவிளக்கின் வடிவத்தைப் போலவே அது செய்யப்பட்டிருந்தது.
Chân đèn làm bằng vàng dát, từ đế cho đến hoa, theo kiểu mẫu Chúa Hằng Hữu cho Môi-se xem.
5 திரும்பவும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
Chúa Hằng Hữu lại phán bảo Môi-se:
6 “நீ மற்ற இஸ்ரயேலருக்குள்ளிருந்து லேவியரைப் பிரித்தெடுத்து, சம்பிரதாய முறைப்படி அவர்களைத் தூய்மைப்படுத்து.
“Hãy biệt riêng người Lê-vi ra khỏi toàn dân Ít-ra-ên và làm lễ thanh tẩy họ,
7 அவர்களைச் சுத்திகரிக்கும்படி செய்யவேண்டியதாவது, நீ சுத்திகரிக்கும் தண்ணீரை அவர்கள்மேல் தெளிக்கவேண்டும். பின் அவர்கள் தங்கள் உடல் முழுவதையும் சவரம்செய்து தங்களது உடைகளைக் கழுவும்படி செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களைச் சுத்தப்படுத்தட்டும்.
lấy nước thanh tẩy rảy trên họ, rồi bảo họ tự cạo sạch mình mẩy và giặt sạch áo xống.
8 ஒரு இளங்காளையையும், அதனுடன் அதற்கான தானிய காணிக்கையாக எண்ணெய் கலந்து பிசைந்த சிறந்த மாவையும் அவர்களை எடுக்கும்படி செய்யவேண்டும். அதன்பின் நீயும், பாவநிவாரண காணிக்கையாக இரண்டாவது காளையை எடுத்துக்கொள்ளவேண்டும்.
Hãy bảo họ đem dâng một bò đực tơ và lễ vật ngũ cốc bột mịn trộn dầu, cùng với một bò đực tơ khác làm sinh tế chuộc tội.
9 நீ லேவியரை சபைக் கூடாரத்திற்குமுன் அழைத்துவந்து, முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் அங்கே கூடிவரச்செய்யவேண்டும்.
Sau đó, hãy dẫn người Lê-vi đến cửa Đền Tạm trước sự chứng kiến của toàn dân.
10 நீ லேவியரை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். இஸ்ரயேலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைக்கவேண்டும்.
Con sẽ trình diện người Lê-vi cho Chúa Hằng Hữu; và người Ít-ra-ên sẽ đặt tay trên họ.
11 ஆரோன், லேவியரை இஸ்ரயேலரின் அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். அப்பொழுது அவர்கள் யெகோவாவின் வேலையைச் செய்வதற்கு ஆயத்த மாவார்கள்.
A-rôn sẽ dâng người Lê-vi cho Chúa Hằng Hữu như một lễ vật của người Ít-ra-ên dâng lên, để thay dân phục vụ Chúa Hằng Hữu.
12 “லேவியர் அக்காளைகளின் தலையில் தங்கள் கைகளை வைக்கவேண்டும். அதன்பின் ஒரு காளையைப் பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவுக்குச் செலுத்தி, இன்னொன்றை லேவியருக்கான பாவநிவிர்த்தி செய்யும்படி, தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
Người Lê-vi sẽ đặt tay trên đầu hai con bò: Một con làm sinh tế chuộc tội, một con làm sinh tế thiêu, dâng lên Chúa Hằng Hữu để chuộc tội cho họ.
13 ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் முன்பாக லேவியரை நிறுத்தி, யெகோவாவுக்கு அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கவேண்டும்.
Xong rồi, người Lê-vi sẽ được giao cho A-rôn và các con A-rôn, giống như một lễ vật dâng lên Chúa Hằng Hữu theo lối đưa qua đưa lại; sau khi dâng, lễ vật thuộc về thầy tế lễ.
14 இவ்விதம் நீ லேவியரை இஸ்ரயேலருக்குள் இருந்து வேறுபிரிக்க வேண்டும். லேவியர் எனக்குரியவர்களாக இருப்பார்கள்.
Như thế, con phân biệt người Lê-vi với những người Ít-ra-ên khác, vì người Lê-vi thuộc về Ta.
15 “நீ லேவியரைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபின், அவர்கள் சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையைச் செய்வதற்கு வரவேண்டும்.
Sau khi được làm lễ thanh tẩy và hiến dâng, người Lê-vi sẽ vào Đền Tạm phục vụ Ta.
16 முழுவதுமாக எனக்காகக் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர் அவர்களே. ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்ணும் பெற்றெடுக்கும் முதற்பேறான ஆண் பிள்ளைகளுக்குப் பதிலாக நான் லேவியர்களை எனக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டேன்.
Họ được dâng cho Ta để thay thế các con trưởng nam Ít-ra-ên, và Ta chấp nhận họ.
17 இஸ்ரயேலின் முதற்பேறான ஒவ்வொரு ஆணும் எனக்குரியவன். மனிதனின் முதற்பேறும், மிருகத்தின் தலையீற்றும் எனக்குரியவை. எகிப்தில் முதற்பேறானவற்றையெல்லாம் நான் அழித்தபோது, அவர்களை எனக்காக நான் வேறுபிரித்தேன்.
Vì vào ngày Ta đoán phạt các con đầu lòng Ai Cập, Ta đã dành cho Ta tất cả con đầu lòng Ít-ra-ên, cả người lẫn gia súc.
18 எனவே நான் இஸ்ரயேலரின் முதற்பேறான எல்லா ஆண்களுக்கும் பதிலாக இப்பொழுது லேவியரை தெரிந்துகொண்டேன்.
Và bây giờ, Ta nhận người Lê-vi thay cho các con trưởng nam Ít-ra-ên.
19 இஸ்ரயேலர் எல்லோருக்குள்ளும் இருந்து நான் லேவியரை பிரித்தெடுத்து, அவர்களை ஆரோனுக்கும், அவனுடைய மகன்களுக்கும் கொடைகளாகக் கொடுத்திருக்கிறேன். லேவியர் இஸ்ரயேலரின் சார்பாக சபைக் கூடாரத்தில் வேலை செய்வதற்காகவும், இஸ்ரயேலர் பரிசுத்த இடத்திற்கு அருகே போகும்போது, அவர்கள் கொள்ளைநோயினால் வாதிக்கப்படாதபடி, அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காகவுமே கொடுத்திருக்கிறேன்” என்றார்.
Ta sẽ giao người Lê-vi cho A-rôn và các con trai (như một món quà tặng), để họ phục vụ trong Đền Tạm thay cho người Ít-ra-ên, và làm lễ chuộc tội cho người Ít-ra-ên; nhờ đó người Ít-ra-ên sẽ không bị tai họa. Vì nếu ai trong người Ít-ra-ên vào nơi thánh, thì người ấy phải mang tai họa.”
20 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும், முழு இஸ்ரயேலின் சமுதாயமும் லேவியருக்கு எல்லாவற்றையும் செய்தார்கள்.
Môi-se, A-rôn, và toàn dân Ít-ra-ên thực hiện mọi lời Chúa Hằng Hữu phán dạy Môi-se về người Lê-vi.
21 லேவியரும் தங்களைச் சுத்திகரித்துத் தங்கள் உடைகளைக் கழுவினார்கள். அதன்பின் ஆரோன் அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
Người Lê-vi tẩy sạch mình, giặt áo xống, và A-rôn dâng họ như tế lễ đưa qua đưa lại trước mặt Chúa Hằng Hữu. A-rôn cũng làm lễ chuộc tội cho họ được thánh sạch.
22 அதன்பின் லேவியர் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய மேற்பார்வையின்கீழ், சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையை நிறைவேற்றுவதற்காக வந்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தார்கள்.
Sau đó, họ vào Đền Tạm giúp A-rôn và các con A-rôn. Mọi việc đều được thực hiện đúng theo lời Chúa Hằng Hữu phán dạy Môi-se.
23 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
Chúa Hằng Hữu phán bảo Môi-se:
24 “இது லேவியர்களுக்குரிய விதிமுறையாகும்: இருபத்தைந்து வயது உடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள், சபைக்கூடார வேலையில் பங்கெடுக்க வரவேண்டும்.
“Mỗi người Lê-vi sẽ bắt đầu cuộc đời công vụ trong Đền Tạm từ tuổi hai mươi lăm,
25 ஆனால் ஐம்பது வயதில் அவர்கள் தங்கள் வழக்கமான பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அதற்குமேல் வேலைசெய்யக்கூடாது.
đến tuổi năm mươi, họ sẽ mãn nhiệm vụ.
26 எனினும் அவர்கள் சபைக் கூடாரத்தில் கடமை செய்வதில் தங்கள் சகோதரர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் அவர்கள் தாங்களாகவே அந்த வேலையைச் செய்யக்கூடாது. இவ்விதமாகவே லேவியர்களின் பொறுப்பை நீ அவர்களுக்கு நியமித்துக் கொடுக்கவேண்டும்.”
Đến tuổi đó, họ có thể phụ giúp anh em mình trong các việc tại Đền Tạm, nhưng chính họ không được đảm trách công việc. Con phải áp dụng luật lệ này khi phân công cho người Lê-vi.”