< எண்ணாகமம் 31 >

1 யெகோவா மோசேயிடம்,
خداوند به موسی فرمود:
2 “இஸ்ரயேலருக்காக மீதியானியரைப் பழிவாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார்.
«از مدیانیان به دلیل اینکه قوم اسرائیل را به بت‌پرستی کشاندند انتقام بگیر. پس از آن، تو خواهی مرد و به اجداد خود خواهی پیوست.»
3 எனவே மோசே மக்களிடம், “மீதியானியருக்கு விரோதமாக யுத்தம் செய்யவும், அவர்களைப் பழிவாங்கும்படியான யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றவும் உங்கள் மனிதரில் சிலருக்கு ஆயுதங்களைத் தரிப்பியுங்கள்.
پس موسی به قوم اسرائیل گفت: «عده‌ای از شما باید مسلح شوید تا انتقام خداوند را از مدیانیان بگیرید.
4 இஸ்ரயேல் கோத்திரம் ஒவ்வொன்றில் இருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்தெடுத்து யுத்தத்திற்கு அனுப்புங்கள்” என்றான்.
از هر قبیله هزار نفر برای جنگ بفرستید.» این کار انجام شد و از میان هزاران هزار اسرائیلی، موسی دوازده هزار مرد مسلح به جنگ فرستاد. صندوق عهد خداوند و شیپورهای جنگ نیز همراه فینحاس پسر العازار کاهن به میدان جنگ فرستاده شدند.
5 எனவே ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும், ஆயிரம்பேராக பன்னிரெண்டாயிரம் ஆயுதம் தரித்த மனிதர் இஸ்ரயேல் வம்சங்களிலிருந்து அனுப்பப்பட்டார்கள்.
6 மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆசாரியன் எலெயாசாரின் மகன் பினெகாசுடன் யுத்தத்திற்கு அனுப்பினான். பினெகாஸ் தன்னுடன் பரிசுத்த இடத்திலிருந்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் செய்வதற்கு எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
7 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் மீதியானியருக்கு எதிராக யுத்தம்செய்து எல்லா மனிதரையும் கொன்றார்கள்.
آنها همان‌گونه که خداوند به موسی فرموده بود با مدیانیان جنگیدند و تمامی مردان مدیان در جنگ کشته شدند.
8 அவர்கள் மீதியானியரின் ஐந்து அரசர்களாகிய ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகன் பிலேயாமையும் வாளினால் வெட்டிக்கொன்றார்கள்.
پنج پادشاه مدیان به نامهای اَوی، راقم، صور، حور و رابع در میان کشته‌شدگان بودند. بلعام پسر بعور نیز با شمشیر کشته شد.
9 இஸ்ரயேலர் மீதியானிய பெண்களையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து, அவர்களுடைய ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்கள் பொருட்களையும் கொள்ளையாக எடுத்துக்கொண்டார்கள்.
آنگاه سپاه اسرائیل تمام زنان و بچه‌ها را به اسیری گرفته، گله‌ها و رمه‌ها و اموالشان را غارت کردند. سپس همهٔ شهرها، روستاها و قلعه‌های مدیان را آتش زدند.
10 மீதியானியர் குடியிருந்த எல்லா பட்டணங்களையும், முகாம்களையும் சேர்த்து அவர்கள் எரித்தார்கள்.
11 பின்பு தாங்கள் சூறையாடிய பொருட்களையும், மக்கள், மிருகங்கள் உட்பட யுத்தத்தில் கைப்பற்றிய பொருட்களையும் எடுத்துக்கொண்டார்கள்.
12 அவர்கள் தாங்கள் சிறைபிடித்தவர்களையும், யுத்தத்தில் கைப்பற்றியவைகளையும், கொள்ளைப்பொருட்களையும் மோசே, ஆசாரியன் எலெயாசார் மற்றும் இஸ்ரயேலிய சமுதாயத்தினர் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள். அப்பொழுது இவர்கள் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகில் மோவாப் சமவெளியில் முகாமிட்டிருந்தார்கள்.
آنها اسیران و غنایم جنگی را پیش موسی و العازار کاهن و بقیهٔ قوم اسرائیل آوردند که در دشت موآب کنار رود اردن، روبروی شهر اریحا اردو زده بودند.
13 மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும், இஸ்ரயேல் சமுதாயத் தலைவர்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமுக்கு வெளியே வந்தார்கள்.
موسی و العازار کاهن و همهٔ رهبران قوم به استقبال سپاه اسرائیل رفتند،
14 யுத்தத்திலிருந்து திரும்பி வந்த இராணுவ அதிகாரிகளான ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்குமான தளபதிகளாய் இருந்தவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
ولی موسی بر فرماندهان سپاه که از جنگ برگشته بودند، خشمگین شد
15 அவன் அவர்களிடம், “பெண்கள் எல்லோரையும் வாழ அனுமதித்தீர்களோ?
و از آنها پرسید: «چرا زنها را زنده گذاشته‌اید؟
16 பிலேயாமின் ஆலோசனையைக் கேட்டு பேயோரில் நடந்த காரியத்தில் இஸ்ரயேலரை யெகோவாவிடமிருந்து வழிவிலகச்செய்ய உடந்தையாக இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அதனால்தானே யெகோவாவின் மக்களைக் கொள்ளைநோய் வாதித்தது.
اینها همان کسانی هستند که نصیحت بلعام را گوش کردند و قوم اسرائیل را در فغور به بت‌پرستی کشاندند و جماعت خداوند را دچار بلا کردند.
17 எல்லா ஆண்பிள்ளைகளையும் இப்பொழுதே கொல்லுங்கள். ஆணுடன் உடலுறவுகொண்ட ஒவ்வொரு பெண்ணையும் கொல்லுங்கள்.
پس تمامی پسران و زنانی را که با مردی همبستر شده‌اند بکشید.
18 ஆனால் ஆண்களுடன் உடலுறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக விட்டுவையுங்கள்.
فقط دخترهای باکره را برای خود زنده نگه دارید.
19 “யாரையாகிலும் கொன்றவனோ அல்லது கொல்லப்பட்ட எவனையாவது தொட்டவனோ ஏழுநாட்களுக்கு முகாமுக்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் நீங்கள் உங்களையும், உங்கள் கைதிகளையும் சுத்திகரிக்கவேண்டும்.
حال، هر کدام از شما که کسی را کشته یا کشته‌ای را لمس کرده، مدت هفت روز از اردوگاه بیرون بماند. بعد در روزهای سوم و هفتم، خود و اسیرانتان را طاهر سازید.
20 உங்களது எல்லா உடைகளையும், தோலினால் அல்லது வெள்ளாட்டு மயிரினால் அல்லது மரத்தினால் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான்.
همچنین به یاد داشته باشید که همهٔ لباسهای خود و هر چه را که از چرم، پشم بز و چوب ساخته شده، طاهر سازید.»
21 ஆசாரியன் எலெயாசார் யுத்தத்திற்குப் போன இராணுவவீரர்களிடம் சொன்னதாவது, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டத்தின்படி செய்யப்பட வேண்டியதாவது:
آنگاه العازار کاهن به مردانی که به جنگ رفته بودند گفت: «قانونی که خداوند به موسی داده چنین است:
22 தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றையும்,
طلا، نقره، مفرغ، آهن، روی، سرب و یا هر چیز دیگری را که در آتش نمی‌سوزد، باید از آتش بگذرانید و با آب طهارت، آن را طاهر سازید. ولی هر چیزی که در آتش می‌سوزد، باید فقط به‌وسیلۀ آب طاهر گردد.
23 நெருப்பினால் எரிந்துபோகாத வேறு எதையும் நெருப்பிலே போடவேண்டும். அப்பொழுது அது சுத்தமாகும். ஆனால் சுத்திகரிக்கும் தண்ணீரினாலும் அது சுத்திகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நெருப்பினால் எரியக்கூடிய எதையும் அந்த நீரினால் சுத்திகரிக்கவேண்டும்.
24 ஏழாம்நாளில் நீங்கள் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் சுத்தமாவீர்கள். பின்பு நீங்கள் முகாமுக்குள் வரலாம்” என்றான்.
روز هفتم باید لباسهای خود را شسته، طاهر شوید و پس از آن به اردوگاه بازگردید.»
25 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
خداوند به موسی فرمود:
26 “நீயும் ஆசாரியன் எலெயாசாரும், மக்கள் சமுதாயத்திலுள்ள குடும்பத்தலைவர்களும், கைப்பற்றப்பட்ட மக்களையும், மிருகங்களையும் கணக்கிடவேண்டும்.
«تو و العازار کاهن و رهبران قبایل اسرائیل باید از تمام غنایم جنگی، چه انسان و چه حیواناتی که آورده‌اید، صورت برداری کنید.
27 யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவவீரர்களுக்கும், மக்கள் சமுதாயத்தில் மீதியாய் இருப்பவர்களுக்கும் இடையில் கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பங்கிடவேண்டும்.
بعد آنها را به دو قسمت تقسیم کنید. نصف آن را به سپاهیانی بدهید که به جنگ رفته‌اند و نصف دیگر را به بقیهٔ قوم اسرائیل.
28 அத்துடன் யுத்தத்தில் சண்டையிட்ட போர்வீரர்களிடமிருந்து எல்லாவற்றிலும் ஐந்நூறில் ஒரு பங்கை யெகோவாவுக்கான அன்பளிப்பாக வேறுபிரித்து வைக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அவை ஒதுக்கப்படவேண்டும்.
از همهٔ اسیران، گاوها، الاغها و گوسفندهایی که به سپاهیان تعلق می‌گیرد، یک در پانصد سهم خداوند است.
29 இராணுவவீரர் பெற்றுக்கொண்ட அரைப்பங்கிலிருந்து இந்த அன்பளிப்பை எடுத்து, யெகோவாவின் பங்காக ஆசாரியன் எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.
این سهم را به العازار کاهن بدهید تا آن را به عنوان هدیهٔ مخصوص به خداوند تقدیم نماید.
30 அதேபோல் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்பட்ட மற்ற அரைப்பங்கிலிருந்து எல்லாவற்றிலும் ஐம்பதில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அல்லது வேறுமிருகங்களானாலும் அவற்றிலிருந்து தெரிவு செய்யவேண்டும். அவற்றை யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்குப் பொறுப்பாயிருக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
همچنین از تمامی اسیران، گاوها، الاغها و گوسفندهایی که به قوم اسرائیل داده شده است یکی از پنجاه بگیرید و آن را به لاویانی که مسئول خیمهٔ عبادت خداوند هستند بدهید.»
31 மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
پس موسی و العازار همان‌طور که خداوند دستور داده بود عمل کردند.
32 இராணுவவீரர் கைப்பற்றிய கொள்ளைப்பொருட்களில் எஞ்சியவை: 6,75,000 செம்மறியாடுகள்,
همهٔ غنایم (غیر از چیزهایی که سربازان برای خود نگه داشته بودند) ۳۲٬۰۰۰ دختر باکره، ۶۷۵٬۰۰۰ گوسفند، ۷۲٬۰۰۰ گاو و ۶۱٬۰۰۰ الاغ بود.
33 72,000 மாடுகள்,
34 61,000 கழுதைகள் ஆகியவற்றுடன்,
35 ஆணுடன் உறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் 32,000 பேருமாகும்.
36 யுத்தத்தில் சண்டையிட்டவர்களுக்குரிய அரைப்பங்காக இருந்தவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்;
نصف کل غنیمت، که به سپاهیان داده شد، از این قرار بود: ‏ ۱۶٬۰۰۰ دختر (۳۲ دختر به خداوند داده شد)، ‏ ۳۳۷٬۵۰۰ رأس گوسفند (۶۷۵ رأس از آن به خداوند داده شد)، ‏ ۳۶٬۰۰۰ رأس گاو (۷۲ رأس از آن به خداوند داده شد)، ‏ ۳۰٬۵۰۰ رأس الاغ (۶۱ رأس از آن به خداوند داده شد).
37 இவற்றில் 675 செம்மறியாடுகள் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
38 36,000 மாடுகள்; இவற்றில் 72 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
39 30,500 கழுதைகள்; இவற்றில் 61 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
40 16,000 மக்கள்; இவர்களில் 32 பேர் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டனர்.
41 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் பங்காக இதை ஆசாரியன் எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.
همان‌طور که خداوند به موسی امر کرده بود، تمامی سهم خداوند به العازار کاهن داده شد.
42 யுத்தம் செய்த மனிதர்களின் அரைப்பங்குபோக இஸ்ரயேலருக்கு மோசே பிரித்துக்கொடுத்த
سهم بقیهٔ قوم اسرائیل که موسی از سهم مردان جنگی جدا کرده بود، با سهم سپاهیان برابر و از این قرار بود: ۱۶٬۰۰۰ دختر، ۳۳۷٬۵۰۰ رأس گوسفند، ۳۶٬۰۰۰ رأس گاو، ۳۰٬۵۰۰ رأس الاغ.
43 மற்ற அரைப்பங்கில் உள்ளவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்,
44 36,000 மாடுகள்,
45 30,500 கழுதைகள்,
46 16,000 மக்களுமே.
47 மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலரின் அரைப்பங்கில் ஒவ்வொரு ஐம்பது மிருகங்களிலிருந்து ஒன்றையும், ஆட்களிலிருந்து ஒருவரையும் இறைசமுகக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்த லேவியருக்குக் கொடுத்தான்.
طبق اوامر خداوند، موسی یک در پنجاه از اینها را به لاویان که عهده‌دار کارهای خیمه بودند، داد.
48 அப்பொழுது ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளுமாயிருந்த இராணுவ அதிகாரிகள் மோசேயினிடத்திற்கு வந்தார்கள்.
بعد فرماندهان سپاه پیش موسی آمده، گفتند: «ما تمام افرادی را که به جنگ رفته بودند شمرده‌ایم. حتی یک نفر از ما کشته نشده است.
49 அவர்கள் மோசேயிடம், “எங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட போர்வீரர்களை உமது பணியாட்களான நாங்கள் கணக்கிட்டோம். ஒருவருமே தவறிப்போகவில்லை.
50 ஆகையால், எங்களில் ஒவ்வொருவனும் கைப்பற்றிய தங்கநகைகளான காப்புகள், கைவளையல்கள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், அட்டியல்கள் ஆகியவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்காக யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யும்படி இவற்றைக் கொண்டுவந்திருக்கிறோம்” என்றார்கள்.
بنابراین از زیورهای طلا، بازوبندها، دست‌بندها، انگشترها، گوشواره‌ها و گردن‌بندهایی که به غنیمت گرفته‌ایم هدیهٔ شکرگزاری برای خداوند آورده‌ایم تا خداوند جانهای ما را حفظ کند.»
51 மோசேயும் ஆசாரியன் எலெயாசாரும் அவர்கள் கொண்டுவந்த தங்கத்தையும் நகைகளாகச் செய்யப்பட்டிருந்தவைகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.
موسی و العازار این هدیه را که فرماندهان سپاه برای خداوند آورده بودند قبول کردند. وزن کل آن حدود دویست کیلوگرم بود.
52 ஆயிரம்பேருக்குத் தளபதிகளிடமிருந்தும், நூறுபேருக்குத் தளபதிகளிடமிருந்தும் மோசேயும் எலெயாசாரும் பெற்றுக்கொண்ட தங்கத்தை அவர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதன் நிறை 16,750 சேக்கலாக இருந்தது.
53 ஒவ்வொரு இராணுவவீரனும் தனக்கென்றும் கொள்ளைப்பொருட்களை எடுத்திருந்தான்.
(سربازان غنایم خود را برای خودشان نگه داشته بودند.)
54 மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் ஆயிரம்பேரின் தளபதிகளிடமும், நூறுபேரின் தளபதிகளிடமும் இருந்து தங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதை யெகோவாவுக்கு முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவந்தார்கள்.
موسی و العازار آن هدیه را به خیمهٔ ملاقات بردند تا آن هدیه در آنجا یادآور قوم اسرائیل در حضور خداوند باشد.

< எண்ணாகமம் 31 >